கேவலமான நிலை......!



ஆங்கிலத்தில் வாதாடு
குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் புலவர் சுந்தர்ராஜன்.
ஓய்வு பெற்ற தமிழாசிரியரான இவர், தனது புதிய வீட்டிற்கு பிளான் அப்ரூவல் வேண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.
 இதுபோல், மதுரையை சேர்ந்த ஆயிஷா பானு என்ற பெண்மணி மெக்காவில் பரிதவித்துக் கொண்டிருக்கும் தனது கணவரை மீட்டுத்தரக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த இரண்டு வழக்குகளிலும் வழக்கறிஞர் பகத்சிங் கோர்ட்டில் ஆஜராகி வாதாடி வந்தார்.

இந்நிலையில், நேற்று (11ஆம் தேதி) இந்த வழக்குகளின் விசாரணையில் ஆஜரான வழக்கறிஞர் பகத்சிங் தமிழில் வாதாடினார்.
 உடனே நீதிபதி மணிக்குமார் ஆங்கிலத்தில் வாதாடுமாறு கூறினார். வழக்கறிஞர் எனக்கு தமிழில் வாதாடுவதுதான் சுலபமாக இருக்கும். அதேவேளையில் எனது கட்சிக்காரருக்கும் அது புரியும் என்று கூறினார். அதை ஏற்க மறுத்த நீதிபதி அந்த வழக்குகளை தள்ளுபடி செய்தார். இது தமிழ் வழக்கறிஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து வழக்கறிஞர் பகத்சிங்கிடம் கேட்டபோது, ‘’ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடுவதற்கு அனுமதி கோரி, தமிழக சட்டமன்றத்தில் 2006ல் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை அது சம்பந்தமாக நடவடிகை எடுக்கப்படவில்லை.

2010ஆம் ஆண்டு, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராடியதைத் தொடர்ந்து ‘தமிழில் வாதாடலாம். அதற்கு தடையில்லை’ என்று நீதிபதிகள் வாய்மொழி உத்தரவு கொடுத்தனர். 
இதை வைத்து கடந்த 2 வருடங்களாக தமிழில் வாதாடி வருகிறோம். 
இந்த நிலையில் நீதிபதி மணிக்குமார் இவ்வாறு செய்திருப்பது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 
தமிழில் வாதாடுவதற்கு சட்டபூர்வமாக அனுமதி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம்’ என்றார்.
கட்சிக்காரருக்கு தனது வழக்குரைஞர் தனக்காக என்ன வாதாடுகிறார் என்று தெரியாத மொழியில் வாதாடுவது என்ன வழியில் நல்லது.?தாய் மொழியில் வாதாடுவதுதானே வழக்குரை ஞருக்கும் எளிதாக,வசதியாக இருக்கும்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக நடந்தவை எல்லாமே தமிழ் நாட்டில்,தமிழில் பின் எதற்கு மூன்றாம் மொழி?
suran
செந்தமிழன் எங்கே போனார்?
நீதிபதியும் தமிழ் தெரிந்தவர்தானே.
தமிழர்தானே?
தமிழன்னைக்கு சிலை வைப்பது இருக்கட்டும் முதலில் தமிழ நாட்டிலாவது தமிழில் வாதாட ஆணை பிறப்பிக்க வைக்க வேண்டும் .
என்ன ஒரு கேவலமான நிலை .
தமிழ் நாட்டில் நீதிமன்றங்களில் தமிழில் வாதாட போராட வேண்டிய நிலை?
கோவில்களில் தான் தமிழில் வழிபாடு இல்லை என்றால் தமிழர்களே குழுமி இருக்கும் நீதிமன்றத்திலுமா?
கிட்ட தட்ட 20 கோடிகள் மக்கள் தொகை கொண்ட தமிழுக்கு வந்த சோதனை வேதனையை தருகிறது.பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி .
இந்த அழகில் 100 கோடிகளில் தமிழுக்கு சிலையாம்.
விளங்கிடும் ---தமிழ்தான்.!
------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரான்
 
முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரான் (93) வெள்ளிக்கிழமை இரவு மும்பை லீலாவதி மருத்துவமனையில் காலமானார். 
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். 1920, பிப்ரவரி 12-ஆம் தேதி, பழைய தில்லி கோத்காரில் உள்ள பள்ளிமாறன் பகுதியில் பஞ்சாபி குடும்பத்தில் பிரான் பிறந்தார்.
piran
1940-ஆம் ஆண்டு முதல்முறையாக ஹிந்தி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அவர் நடித்த சஞ்சீர், அமர் அக்பர் ஆன்டனி, டான் ஆகிய திரைப்படங்கள் ஸ்டார் நடிகர் அந்தஸ்தை அவருக்கு பெற்றுத்தந்தது.
பாலிவுட்டில் திலீப் குமாரின் ராம் அவுர் ஷியாம் திரைப்படத்தில் வில்லனாக நடித்தது, அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. 50 ஆண்டுகளாக பாலிவுட்டில் 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
பிரானுக்கு, கடந்த மே மாதம் தாதாசாகேப் பால்கே விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.
உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் அவரால் புது தில்லிக்கு சென்று விருதைப் பெற இயலவில்லை.
2001-ஆம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
suran
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆழ்ந்த அஞ்சலி
-----------------------1844ம் ஆண்டில் சாமுவேல் மோர்ஸ் தந்தி அனுப்பும் முறை யைக் கண்டு பிடித்தார். அவர் அவ்வாண்டில் மே 24ந்தேதி யன்று முதல் தந்தியை அனுப்பி னார் என்று கருதப்படுகிறது. அவர் ஆல்பிரட் வைல் என்பவ ருக்கு அனுப்பிய தந்தியில் “கட வுள் எப்படி செய்து விட்டார்” என்று செய்தி அனுப்பியுள்ளார். முதலாம் உலக போரில் தந்தி சேவை முக்கியமான பங்கை வகித் துள்ளது. பாகிஸ்தான் காஷ்மீ ரின் மீது 1947ம் ஆண்டில் படை யெடுத்த போது இந்திய பிரதமர் நேரு உதவி கேட்டு பிரிட்டிஷ் பிரதமர் கிளமண்ட் அட்லிக்கு தந்தி அனுப்பினார். பிரபல எழுத் தாளர் மார்க் ட்வெய்ன் 1897ம் ஆண்டில் லண்டனில் இருந்த போது அவர் இறந்து விட்டார் என்று அமெரிக்காவில் ஒரு பத் திரிகையில் செய்தி வெளியிடப் பட்டது. லண்டனில் இருந்து மார்க் ட்வெயின் அனுப்பிய தந்தி யில் “எனது இறப்பு செய்தி மிக வும் மிகைப்படுத்தப்பட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.
 முதலாவது சோதனை சேவை கொல்கத்தாவுக்கும் அதிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள டயமண்ட் ஹார்பருக்கு இடை யில் நடத்தப்பட்டது. தொடக்க காலத்தில் தந்தி சேவை கிழக் கிந்திய கம்பெனி மட்டுமே சொந் தமாக இருந்தது. 1853ம் ஆண் டுக்குள் இந்தியாவில் கொல் கத்தா தந்தி மூலமாக பெஷாவர், ஆக்ரா, மும்பை, சென்னை, பெங் களூர், உதகமண்டலம் ஆகிய ஊர்களுடன் இணைக்கப்பட் டது. இதற்காக 6400 கி.மீ. நீளத் துக்கு தந்திக்கம்பிகள் போடப் பட்டன. இந்தப் பணியை திறம் பட நிறைவேற்றியவர் ஒரு பொறி யாளர் அல்ல என்பது குறிப்பிட த்தக்கது. மருத்துவராக பணியாற்றி வந்த வில்லியம் ஓ’ சாக்னெஸ்ஸி என்பவரிடம் இப்பணையை கிழக் கிந்திய கம்பெனி ஒப்படைத் திருந்தது. 1854ம் ஆண்டில் தந்தி சேவை மக்களுக்காக திறந்து விடப்பட்டது. அதற்கென தனி துறையும் உருவாக்கப்பட்டது.
மனிதன் தகவல்களைப் பரி மாறிக் கொள்வதற்கு பலவழி களைக் கண்டு பிடித்து வந்துள் ளான். தொடக்க காலத்தில் புகை யை பயன்படுத்தி தகவல்களை அனுப்பியுள்ளான். இன்றும் போப் தேர்தலை புகை மூலமாக அறி விப்பதை இதற்கு உதாரணமாக கூறலாம். 1792ம் ஆண்டில் செம போர்ஸ் லைன் என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கொடி களை அசைப்பதன் மூலம் கப் பல்களுக்கு இடையே, தொலை வில் உள்ள கட்டிடங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் நடந் துள்ளது.1832ம் ஆண்டில் சில் லிங் என்பவரால் முதல் மின் சக்தி மூலமாக தந்தி அனுப்பும் முறை கண்டுபிடிக்கப்பட்டது என்று சாமுவேல் மோர்ஸ் கூறு கிறார். முதலில் கூறிய இரண்டு முறைகளையும் அவர் தந்தி என்று அடையாளம் கூற முடி யாது என்று கூறுகிறார். மோர்சும் அவருடைய நண்பர் ஆல்பிரட் வைலும் மோர்ஸ் குறிகள் மூல மாக தந்தி அனுப்பும் முறையை கண்டுபிடித்தனர்.

1866ம் ஆண்டில் அட்லாண் டிக் கடலடியில் கேபிள்கள் அமைக் கப்பட்டு தந்தி சேவை தொடங் கப்பட்டது.பிரிட்டனும் இந்தியா வும் தந்தி மூலம் 1870ம் ஆண் டில் இணைக்கப்பட்டன.1872ம் ஆண்டில் ஆஸ்திரேலியா இணைக் கப்பட்டது. 1902ம் ஆண்டில் பசி பிக் கடல்வழியே தந்தி சேவை தொடங்கியது. தந்தி சேவையை அடுத்து டெலிபிரிண்டர்கள் உரு வாக்கப்பட்டன. பின்னர் தொலை பேசி பழக்கத்துக்கு வந்தது. அது முதல் தந்தி சேவை தனது முக் கியத்துவத்தை இழக்கத் தொடங் கியது. வானொலி வந்த பின் கம் பியில்லா சேவைகள் தொடங் கின. கணினி காலம் தொடங்கி யவுடன், இமெயில் உருவாக்கப் பட்ட பின் அதன் பயன்பாடு மிக வும் குறையத்தொடங்கியது. செல் போன்கள் பயனுக்கு வந்த பின், உலகில் 80 விழுக்காட்டினர் அதன் வலையில் சிக்கிய பின் தந்தி சேவை தேவையற்றதாக மாறிவிட்டது. அதனால் தந்தி சேவை மூடப்படுவதாக அறிவிக் கப்பட்டுள்ளது.
வழக்கமாக மறைவுக்கு தந்தி கொடுப்பது நம் வழக்கம் . அந்த தந்தியின் மறைவுக்கு என்ன செய்ய?
 நமது ஆழ்ந்த அஞ்சலி .
------------------------------------------------------------------------------------------------------------------------------------
                                                               இயற்கையும்-செயற்கையும் ,
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?