பாஜக(E.D.)அரசிய ல்.

 பிப்ரவரி.12-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்.ஆளுநர் உரை, பட்ஜெட்குறித்துமுதல்வரமு.க.ஸ்டாலின்ஆலோசனை.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக ஊழியர் கைது.

பணத்துக்காக அண்ணன் மகளை  பாலியல் தொழிலில் தள்ளிய அத்தை உட்பட 3 பெண்கள் கைது

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்- அமைச்சர் நிர்மலா .

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி  பயணித்த கார் ஆற்றில் கவிழ்ந்தது.ஓட்டுநர் உயிரிழப்பு.வெற்றியைக் காணவில்லை

ஜார்க்கண்ட் பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு .

அதானியின் மிகப் பெரிய தாமிர உற்பத்தி ஆலை.மார்ச்சில் செயல்பாடு ஆரம்பம்.

வாயுக்கசிவு ஏற்படுத்திய எண்ணூர் தொழிற்சாலை மீது சட்ட நடவடிக்கை: ரூ.5.92 கோடி இழப்பீடு வசூலிக்க தமிழக அரசு உத்தரவு.


ஜார்கண்ட்

பாஜக(E.D.)அரசியல்.

ஜார்­கண்­டில் ஒரு ஜன­நா­ய­கப் படு­கொ­லையை நடத்தி இருக்­கி­றது பா.ஜ.க. இது எதற்­குமே தொடர்பு இல்­லா­த­வ­ரைப் போல இருக்­கி­றார் மோடி!

மக்­களை நேரிய வழி­யில் சந்­தித்து வாக்­கு­க­ளைப் பெற முடி­யாத பா.ஜ.க., பல்­வேறு மாநி­லங்­க­ளில் குறுக்கு வழி­யில், கொல்­லைப்புறம் வழி­யாக ஆட்­சி­யைப் பிடித்­துள்­ளதை அதி­கம் விவ­ரிக்­கத் தேவை­யில்லை. நாடும் நாட்டு மக்­க­ளும் அறிந்­தவை தான் அவை. 

கட்­சி­களை உடைப்­பது, எம்.எல்.ஏ.க்களை இழுப்­பது அதன் மூல­மாக பா.ஜ.க. ஆட்­சி­யையோ, அல்­லது பா.ஜ.க.வின் அடிமை ஆட்­சி­யையோ அமைப்­பது அவர்­க­ளது பாணி­யா­கும். அத­னைத்தான் ஜார்­கண்­டி­லும் பார்க்க நினைத்­தார்­கள். ஆனால் அது நடக்­க­வில்லை.

நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நெருங்கி வரு­கி­றது. தனக்கு எதி­ரியே இல்லை என்ற இறு­மாப்­பு­டன் செயல்­பட்டு வந்­தது பா.ஜ.க.

 ஆனால் ‘இந்­தியா’ என்ற வலு­வான கூட்­ட­ணியை அமைத்து விட்­டார்­கள் எதிர்க்­கட்சி­கள். இதில் அகில இந்­தி­யக் கட்­சி­கள், பல்­வேறு மாநி­லக் கட்­சி­கள் இடம்­பெற்­றுள்­ளன. பா.ஜ.க.வை வீழ்த்த வேண்­டும் என்ற இலட்­சி­யத்­து­டன் இக்­கட்­சி­கள் ஒன்று சேர்ந்­துள்­ளன.

 ‘இந்­தியா’ என்று கூட்­ட­ணிக்கு பேர் வைத்­ததே பா.ஜ.க.வுக்கு திகி­லைக் கிளப்­பி­யது. ‘இந்­தியா’ என்று சொல்­லா­மல், ‘பார­தம்’ என்று புலம்­பத் தொடங்­கி­னார்­கள்.

அடுத்­த­தாக இந்­தி­யா கூட்­ட­ணித் தலை­வர்­களை வேட்­டை­யா­டத் தொடங்­கி­னார்­கள். ஆம் ஆத்மி கட்­சித் தலை­வ­ரும் டெல்லி முத­ல­மைச்­ச­ரு­மான அர­விந்த் கெஜ்­ரி­வா­லுக்கு சம்­மன் மேல் சம்­ம­னாக கொடுத்­துக் கொண்டு இருக்­கி­றார்­கள். 

டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்­பாக முத­ல­மைச்­சர் அர­விந்த் கெஜ்­ரி­வா­லுக்கு இது வரை 5 முறை சம்­மன் அனுப்பி இருக்­கி­றார்­கள். 5 சம்­ம­னை­யும் அர­விந்த் கெஜ்­ரி­வால் புறக்­கணித்­தார். 

அவ­ரது ஆட்­சி­யைக் கவிழ்க்­கும் வேலை­களை பா.ஜ.க. தொடங்கி விட்­டது. இதனை அர­விந்த் கெஜ்­ரி­வாலே ஊட­கங்­க­ளில் அம்­ப­லப்­ப­டுத்­தி­னார்.

‘ஆம் ஆத்மி கட்­சி­யில் இருந்து வெளி­யே­ற­வும், டெல்­லி­யில் உள்ள ஆம் ஆத்மி கட்சி ஆட்­சி­யைக் கவிழ்க்­க­வும் எங்­கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஏழு பேருக்கு தலா 25 கோடி ரூபாய் தர பா.ஜ.க. பேரம் பேசி உள்­ளது. 

ஆப­ரே­ஷன் தாமரை 2.0 என்ற திட்­டத்தை தொடங்கி இருக்­கி­றார்­கள்’ என்று டெல்லி முத­ல­மைச்­சர் அர­விந்த் கெஜ்­ரி­வால் பகி­ரங்­க­மாகக் குற்­றம் சாட்­டி­னார். 

இந்த எம்.எல்.ஏ.க்களின் பெயர்­களை வெளி­யி­டுங்­கள் என்று அர­விந்த் கெஜ்­ரி­வா­லுக்கு நெருக்­கடி கொடுத்து வரு­கி­றார்­கள். 

டெல்லி காவல் துறை­யின் குற்­றப்­பி­ரிவு போலீ­ஸார், நோட்­டீஸ் கொடுத்து இருக்­கி­றார்­கள்.

பீகா­ரில் துணை முத­ல­மைச்­ச­ராக இருந்த தேஜஸ்­வியை பல்­வேறு வகை­க­ளில் நெருக்கி வரு­கி­றார்­கள். 

இதன் தொடர்ச்­சி­யாக ஜார்­கண்ட் முக்தி மோர்ச்சா தலை­வ­ரும் ஜார்­கண்ட் முத­ல­மைச்­ச­ரு­மான ஹேமந்த் சோரனை வளைத்­தார்­கள்.

அரசு நிலங்­களை தனி­யா­ருக்கு விற்­ற­தான ஒரு வழக்கை அம­லாக்­கத்­துறை மூல­மாக தூசி தட்டி எடுத்து அவரை விசா­ர­ணைக்கு வரு­மாறு அழைத்­தது அம­லாக்­கத்­துறை. தன்னை எப்­ப­டி­யும் கைது செய்­யப் போகி­றார்­கள் என்­பதை அறிந்து அவர் தனது முத­ல­மைச்­சர் பத­வியை விட்டு வில­கி­னார்.

 ஹேமந்த் சோர­னைக் கைது செய்து ஜார்­கண்­டில் முக்தி மோர்ச்சா ஆட்­சி­யைக் கவிழ்ப்­பதுதான் பா.ஜ.க.வின் சதி­யாக இருந்­தது. ஆனால் கட்சி உறு­தி­யாக ஹேமந்த் பின்­னால் நின்று விட்­டது.

 ஹேமந்த் கைது செய்­யப்­பட்­ட­தும் உடனே கூடிய முக்தி மோர்ச்சா கட்சி தனது அடுத்த முத­ல­மைச்­ச­ராக சம்­பாய் சோரனை தேர்ந்­தெ­டுத்­தது. 

ஆளு­ந­ரி­டம் அதற்­கான கடி­தத்தைக் கொடுத்­த­தும், அவ­ருக்கு பத­விப் பிர­மா­ணம் செய்து வைத்­தி­ருக்க வேண்­டும். முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ.க்களை உடைக்க முடி­யுமா என்று பார்த்­தார்­கள். 

அத­னால் இழுத்­தார்­கள். ஆனால் எம்.எல்.ஏக்­கள் யாரும் அணி­மா­றத் தயா­ராக இல்லை. வேறு வழி­யில்­லா­மல் சம்­பாய் சோர­னுக்கு பத­விப் பிர­மா­ணம் செய்து வைத்து விட்­டார்­கள்.

81 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட ஜார்­கண்ட் சட்­ட­ச­பை­யில் பெரும்­பான்­மைக்கு 41 உறுப்­பி­னர்­கள் தேவை. 

43 உறுப்­பி­னர்­கள் ஒன்­றாக இருப்­ப­தாக வீடி­யோவை ஜார்­கண்ட் முக்தி மோர்சா கட்சி வெளி­யிட்­டது. 

கூட்­ட­ணி­யாகப் பார்த்­தால் 48 உறுப்­பி­னர்­கள் ஆத­ரவு இந்த அர­சுக்கு இருந்­தது. ஆனா­லும் உட­ன­டி­யாக ஆட்சி அமைக்க இந்தக் கட்­சியை அழைக்­க­வில்லை.

பீகா­ரில் நிதிஷ்­கு­மார் பதவி வில­கி­னார். 15 நிமி­டங்­க­ளில் புதிய அமைச்­ச­ர­வையை அமைக்­க­வும், அதற்­கான உரிமை கோர­வும் அனு­ம­திக்­கப்­பட்­டார். இத்­த­னைக்­கும் அவ­ரது கட்­சிக்கு பெரும்­பான்மை கிடை­யாது.

 பா.ஜ.க. ஆத­ரவு தந்­தால் பெரும்­பான்மை ஆகும். ஆனால் ஜார்­கண்­டில் முக்தி மோர்சா கட்சி பெரும்­பான்மை உள்ள கட்சி ஆகும். ஆனால் அவர்­க­ளது ஆட்­சியை அமைக்க கால அவ­கா­ச­கத்தை நீட்­டித்து -

 பா.ஜ.க.வின் ஜன­நா­யக விரோத விளை­யாட்­டு­களை விளை­யாட நேரம் கொடுத்­தார் ஆளு­நர். பா.ஜ.க. நினைத்­தது நடக்­க­வில்லை. வேறு வழி­யின்றி சம்­பாய் சோர­னுக்கு பதவிப் பிர­மா­ணம் செய்து வைத்து விட்­டார் ஆளு­நர்.

ஜார்­கண்ட் முத­ல­மைச்­ச­ராக இருந்த நிலை­யில் ஹேமந்த் சோரனை பதவி விலக வைத்து அம­லாக்­கத்­துறை மூல­மாக கைது செய்ய வைத்­தி­ருப்­பது மாபெ­ரும் ஜன­நா­ய­கப் படு­கொலை ஆகும். 

தாங்­கள் ஏதோ ஊழ­லுக்கு எதி­ரா­ன­வர்­கள் போலக் காட்­டிக் கொள்­கி­றது பா.ஜ.க. 

மகா­ராஷ்­டி­ரா­வில் 73 ஆயி­ரம் கோடி ஊழல் புகா­ரில் சிக்­கிய அஜித் பவார், பா.ஜ.க. ஆத­ர­வு­டன் துணை முத­ல­மைச்­ச­ராக இருக்­கி­றார். பா.ஜ.க.வில் சேர்ந்­த­தும் அவர் புனி­த­ராகி விட்­டார். 

இப்­ப­டித்­தான் ஹேமந்த் சோர­னை­யும் மிரட்­டப் பார்க்­கி­றார்­கள்.

நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நடந்து, பா.ஜ.க. ஆட்சி முடி­யும் வரை இது போன்ற சதிச்­செ­யல்­கள் நிறைய நடக்­கும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?