ஒரே மாதத்தில் உடல் எடையைக் குறைக்க....?


‘ஒரே வாரத்தில், ஒரே மாதத்தில் உடல் எடையைக் குறைக்கலாம். கட்டான உடலைப் பெறலாம்’ 
என உணவுகளையும், உபகரணங்களையும் விளம்பரப்படுத்தி மக்களை நம்ப வைக்க களம் இறங்கியிருக்கின்றன சில நிறுவனங்கள். இவையெல்லாம் உடல் எடையைக் குறைத்து விடுமா?
 இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால் உண்மையிலே உடலை இளைக்க வைக்க முடியுமா? 

எடையை குறைக்கும் பெல்ட்.?

டெலி ஷாப்பிங் நிறுவனங்கள் சில மாடல்களைக் காண்பித்து இந்தப் பெல்ட்டை நீங்கள் நிற்கும் போதோ, உட்காரும் போதோ அரை மணி நேரம் வயிற்றில் கட்டி கொண்டாலே போதும். 
தொப்பை குறைந்து 3 வாரங்களிலே அழகான இடையைப் பெறலாம் என்கிறது.
நம் உடலில் பல்வேறு இடங்களில் கொழுப்புத் தேங்கியிருக்கும். அதை மொத்தமாகக் குறைக்க முடியுமே தவிர, குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பெல்ட் அணிந்து கொழுப்பை குறைக்க முடியும் என்பதில் உண்மை இல்லை. வயிற்றைச் சுற்றி கட்டியிருப்பதால் உடல் சூடாவதன் மூலம் வியர்க்குமே தவிரக் கலோரிகளை எரிக்காது.
இதனால் உடல் சூடு, சூடு கட்டிகள், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள்தான் வரும். கொழுப்பு நீங்காது.
பிரசவித்த பெண்களுக்கு இடுப்புக்குக் கீழ் காற்றுப் போகக் கூடாது என்று சொல்லப்படுவதால், அந்த நேரத்தில் மட்டும் பெல்ட்டை அணிவதால் பலனிருக்கும்.
 மற்றபடி கொழுப்பை கரைக்கவோ எரிக்கவோ பெல்ட் பயன்படாது.
கொழுப்பு இல்லாத பால்.?
கடைகளில் வாங்கும் போது கொழுப்பு நீக்கப்பட்ட பால் எனப் பார்த்து பார்த்து வாங்குவோர் உண்டு.
 இந்தக் காலத்தில் இதைப் பயன்படுத்துவது ஒரு கவுரவ அடையாளமாகவே ஆகிவிட்டது. ஆனால், இதில் உள்ள ஆபத்து நம்மைப் புற்று நோயாளியாக மாற்றவும் செய்கிறது.
கொழுப்பை நீக்கிவிட்டு செயற்கையான சில உட்பொருள்களைப் பாலுடன் சேர்கின்றனர். விளைவு வயிற்று போக்கு, மந்தமின்மை உருவாகிறது. நல்லதா என்பது இப்போது புரிந்திருக்கும்.
அடுத்ததாகச் சாதாரணச் சிப்ஸில் கலோரிகள் அதிகமாக உள்ளது என பேக்டு சிப்ஸை விளம்பரப்படுத்துகின்றனர்.
உருளையை 120 டிகிரி வெப்ப நிலையில் பொரிக்கும்போது, அதில் உள்ள சர்க்கரையும், ஆஸ்பராகெனும் (Asparagine) சேர்ந்து அக்கிரலமைட் (Acrylamide) என்ற புற்று நோய் காரணியை உருவாக்கும். இதனால் புற்றுநோய் வர வாய்ப்புண்டு.
சாதாரண சிப்ஸைவிடப் பேக்டு சிப்ஸில் அக்கிரலமைட் அதிகமாக உருவாகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஆரோக்கிய பிஸ்கட்?
இந்த வகைப் பிஸ்கட்டில் வைட்டமின், நார்ச்சத்து, புரோட்டீன் அதிகம் உள்ளதாகச் சொல்கின்றனர். சர்க்கரை நோயாளிகள் இந்தப் பிஸ்கட் சாப்பிடலாம் என்றே பரிந்துரைக்கின்றனர். சாதாரணப் பிஸ்கட்டிலும், ஊட்டச்சத்துகள் நிறைந்த பிஸ்கட்டிலும் சேர்க்கப்படுவது ஒன்றுதான். ரீபைன் மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு, எண்ணெய், வெண்ணெய், சுவையூட்டிகளும் தான். இதில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றாலும், கூடுதலாக முந்திரியும், பாதாமும் மட்டுமே சேர்க்கப்படுகின்றன. கூடுதலாக ஊட்டச்சத்துப் பிஸ்கட்டில் ஹைட்ரோஜினேட்டட் ஆயில், சாச்சுரேட்டட் கொழுப்பு இருப்பதால் உடல் பருமன், சர்க்கரை நோய், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வர அதிக வாய்ப்புகள் உண்டு.
ஆயுர்வேத மருந்துகள்?
பாரம்பரியம் என்ற பெயரில் உள்நுழைந்து ஏமாற்றுவதற்கான ஒரு போலி மருந்து மூலிகை பவுடர்.
இயற்கையானது என்று சொல்ல கூடிய பொருட்களின் கவரில் உள்ள பட்டியலை பார்த்தால் உள்ளே இருப்பது இயற்கையா, செயற்கையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
 பழங்கள், கீரைகள், காய்கறிகள் மட்டுமே இயற்கையின் படைப்பு அதை மருந்தாக்குகிறோம் என்ற பெயரில் கலக்கப்படுவதும், சேர்க்கப்படுவதும், பதப்படுத்தப்படுவதும் மூலிகையாகாது.
இதனால் எந்தப் பலனும் இல்லை.
உடல் எடையைக் குறைக்கும் பவுடர்?
புதிய பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுப்பது இந்த உடல் எடையைக் குறைப்பதற்கான பவுடரின் மூலம்தான். தண்ணீரில், இந்தப் பவுடர் கலந்து குடித்தால் கொழுப்பை கரைக்க முடியும் என்கின்றனர்.
 இதுவரையில் எவரேனும் இப்படிக் குடித்து உடல் இளைத்தார்களா என்று பரிசோதித்துப் பார்த்தால், அவருக்கு வேறு ஏதேனும் பிரச்னை இருக்குமே தவிர, இந்தப் பவுடரினால் எந்தப் பலனும் இருக்காது. இந்தப் பவுடர் நீரால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதால், உடலில் உள்ள கொழுப்பு நீங்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கின்றனர்.
ஆனால், உடலில் நீரிழப்பு அதிகமாகி உடல் பலவீனமடையும். எப்போதுமே மயக்க நிலையில் இருப்பது போல உணர்வீர்கள்.
பருமனுக்கு முன்… பருமனுக்குப் பின்…?
எந்த நாளிதழை எடுத்தாலும் முன்பு இருந்த நான், இப்போது உடல் இளைத்து அழகான தோற்றமுடன் இருக்கிறேன் என்று விளம்பரம் செய்கின்றனர்.
 போட்டோ ஷாப் என்ற மென்பொருளால் ஒட்டுமொத்த உருவத்தையே மாற்ற முடியும் என்பதை மறக்க வேண்டாம்.
அப்படி இருக்கும் தொழில்நுட்பங்களை நம்பி உடல் இளைக்கும் மையத்தை நோக்கி செல்வது உடலை இளைக்க வைக்காது. பதிலாகப் பர்ஸ் தான் இளைத்துப் போகும்.
இவையெல்லாம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இருப்போரின் தந்திரம்தானே தவிர உடலுக்கு நன்மை செய்திடாது.
அன்றாட வாழ்க்கை முறையில் சிறு சிறு மாறுதல்களைச் செய்து கொண்டாலே மெலிந்த அழகான, ஆரோக்கியமான கட்டுடலை பெறலாம்.
யோகா, தியானம் கற்றுக் கொள்ளுங்கள். அது மனதையும்-உடம்பை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும்.
இயற்கையாக விளைந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். 
வெளியே ஓட்டல்களில்,விரைவு உணவகங்களில் சாப்பிடுவதை நிறுத்துங்கள்.
சிறிய தூரம் என்றால் வாகனத்தை எதிர்பார்க்காமல் நடந்து செல்லுங்கள். 
9 மணிக்கெல்லாம் தூங்கி, 6 மணிக்கு முன் எழும் பழக்கத்துக்கு மாறுங்கள். 

பாரம்பரிய வாழ்க்கை முறையை முழுதாகக் கடைபிடிக்க முடியாமல் போனாலும் அதில் பாதியளவு செய்தாலே போதும். 
எடை சீராகும். உடலும் கட்டுக்கோப்பாக இருக்கும்.
- ப்ரீத்தி
ஜெய..ஜெய சங்கர..!
.பணம் வருது கதவைத் திற,,,,,!
----------------------------------------------------------------------------
காஞ்சிபுரம் சங்கர மடத் திற்கு ரூ.3992 கோடி ரூபாய் வங்கிகளில் வைக் 
கப்பட்டுள்ளது. 
இந்தப் பண வருவாய்க்கான விவரங்கள் இல்லை; கணக்கில் 
வராத இந்தக் கருப்புப் பணம் குறித்து விசாரணை தொடங்கப் படுகிறது.

2011_2012 ஆம் ஆண் டில் சங்கர மடத்திற்கு ரூபாய் 3992 கோடி நன் 
கொடையாக வந்த விவரம் குறித்து மத்தியப் புலனாய் வுத்துறை
 விசாரணையைத் துவங்கியுள்ளது. தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில் 
காஞ்சி சங்கராச்சாரியாரைத் தலை வராகக் கொண்டு காஞ்சி காமகோடி மடம்
 செயல் பட்டு வருகிறது. இம்மடத் திற்கு சொந்தமான வங்கிக் கணக்கில்
 2011_2012 ஆம் ஆண்டிற்கான வரவாக ரூபாய் 3992 கோடி வைப்பு நிதியாக 
செலுத்தப்பட் டது. இதை காஞ்சி மடத் தின் தலைமைக் கணக் காளர் 
எஸ்.சிறீதர் உறுதி செய்தார்.
இதுகுறித்து மத்திய வருமான ஆய்வுக்குழுத் தலைவர் அசோக்குமார் 
என்பவருக்கு காஞ்சி சங் கரமடம் எழுதிய கடிதத் தில் 2011_2012 ஆம் ஆண்டு
 எங்களுக்கு நன்கொடை மூலம் ரூ.3992 கோடி வரு வாய் வந்துள்ளது என்று
 குறிப்பிட்டுள்ளது. 
இந்த ரூபாயை காஞ்சி மடத்தின் மூன்று வங்கிக் 
கணக்கில் 
செலுத்தப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு சரியான வரு வாய் ஆதாராமுமின்றி 3992 கோடி ரூபாய் வரவு 
வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறையில் புகார் 
கொடுக்கப்பட்டது. 
அதில், ”காஞ்சி சங்கர மடத்தின் நன்கொடையா ளர்கள் 
பட்டியலில் 100 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையில் நன்கொடை
 கொடுத்தவர்களின் பெயர் தான் உள்ளது.
இதில் யாரும் லட்சங்கள்கூட கொடுக்கவில்லை. ”
மேலும் கடந்த இரண்டு ஆண்டு களாக மடத்தின் கணக்கில் 15 கோடி ரூபாய் 
மட்டுமே வருவாய் காட்டப்பட்டுள் ளது.
ஆனால், திடீரென 2011_2012 ஆம் 
ஆண்டில் சங்கரமடத்தின்சார்பில் 
ஆக்ஸிஸ் வங்கி, அய்.சி
. அய்.சி.அய் வங்கி மற்றும் சிட்டி 
யூனியன் 
வங்கிக் கணக்கில் 3992 கோடி 
ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. 
குறிப்பிட்ட தொகைக்கு மேல்
 நேரடியாக நன் கொடை பெற இயலாத நிலையில் சங்கரமடம் எப்படி
 கோடிக்கணக்கில் அதுவும்  ஓர் ஆண்டிற்குள் நன்கொடையாக பெற்றி ருக்க
 முடியும்? 
இந்த நன் கொடையாகப் பெற்ற பணம் யாரிடமிருந்து வந்தது
 என்பதையும் சரிவர கணக்கில் காட்டவில்லை என்று புகாரில் கூறப்பட் 
டுள்ளது. இப்புகாரைக் குறித்து விசாரணை செய்து வரும் மத்திய புலனாய்வுத் 
துறை யின் இணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) அபிசேக் கோயல் 
கூறும்போது,
சங்கரமடத்தில் நடந்த இந்தப் பண மோசடி தொடர்பாக தனிப்பிரிவு அமைத்து 
விசாரணை செய்து வருகிறோம்.
ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள நீலகண்டாச்சாரியா ஸ்வாமிகள் மற்றும்
 எட்டு நபர்கள் எங்களின் விசா ரணை வளையத்திற்குள் வந்துள்ளனர்.
  பெங்களூரு மற்றும் சென்னையில் பல் வேறு இடங்களில் சோதனை
 நடத்தியுள் ளோம். இது தொடர்பாக விஜயநகர் காவல்நிலை யத்தில் 15
 பேர்மீது பண மோசடி மற்றும் தவறான வழியில் பணம் சேர்த்தல் தொடர்பான
 குற்றப்பிரி வில் வழக்கு பதிவு செய் துள்ளோம்.
சங்கர மடத்தில் நடக்கும் இந்த பண மோசடி சில கருப்புப் பண
 முதலைகளுக்கு தங்களது பணத்தை வெள்ளையாக்க உதவி புரிந்துள்ளது
. அத்துடன் சங்கரமடத்திற்கும் தரகுத் தொகைக் கிடைத்துள்ளது.
இதுகுறித்து மேலும் விரிவான விசாரணை நடந்து வருகிறது, என்று கூறினார்.
============================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?