பொய்ப் பிரமாணம் எடுத்துள்ள

 கேரள மாநிலம் களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு! 

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

ஆந்திராவில் சிக்னலுக்காக நின்றிருந்தபோது பயங்கரம் 2 #ரயில்கள் மோதி 19 பேர் பலி: 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் .

நெல்லையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம். முதல்வர் மு.க.ஸ்டாலின்அறிவிப்பு.

கேரளாவில் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு.

கொட்டித்தீர்க்கும் மழை. தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கன மழை   வானிலை மையம்  எச்சரிக்கை.

------------------

பொய்ப் பிரமாணம் எடுத்துள்ள ஆளுநர் - 1

வாயைத் திறந்­தாலே பொய்­யும் புளு­கும்­தான் ஆளு­நர் ஆர்.என்.ரவிக்கு வரு­கி­றது. ஒரு சம்­ப­வத்தை வைத்து அவர் நூற்­றுக்­க­ணக்­கான பொய்­க­ளைச் சொல்­லத் தொடங்கி விட்­டார்.

ஆளு­நர் மாளிகை இருக்­கும் சாலை­யில் கடந்த 25 ஆம் தேதி என்ன நடந்­தது?

25.10.2023 அன்று மதி­யம் 3 மணி­ய­ள­வில், கருக்கா வினோத் (42 வயது – - E-–3 தேனாம்­பேட்டை காவல் நிலை­யத்­தின் வழக்­க­மான குற்­ற­வாளி) என்­ப­வர் ஆளு­நர் மாளிகை அருகே தனி­யாக சாதா­ர­ண­மாக நடந்து வந்­தார். பெட்­ரோல் நிரப்­பிய நான்கு பாட்­டில்­க­ளைக் கொண்டு வந்து, அவற்றை ஆளு­நர் மாளிகை அமைந்­துள்ள சர்­தார் படேல் சாலை­யில் எதிர்ப்­பு­றத்­தில் இருந்து எறிய முயன்­றார். 

ஆளு­நர் மாளி­கை­யின் வெளிப்­பு­றத்­தில் பாது­காப்­புப் பணி­யில் இருந்த தமிழ்­நாடு காவல்­துறை போலீ­சா­ரால் தடுக்­கப்­பட்­டார். அப்­போது சம்­பவ இடத்­திற்கு எதிரே சற்று தூரத்­தில் இருந்து இரண்டு பாட்­டில்­களை வீசி­னார். 

அவை ஆளு­நர் மாளி­கை­யின் அருகே சர்­தார் படேல் சாலை­யில் வைக்­கப் பட்­டி­ருந்த தடுப்­ப­ரண்­­களுக்கு அருகே விழுந்­தது. பாது­காப்பு போலீ­சா­ரால் உட­ன­டி­யாக கைது செய்­யப்­பட்­டார். காவல் நிலை­யத்­திற்கு அழைத்­துச் செல்­லப்­பட்டு விட்­டார்.

 இச்­சம்­ப­வத்­தால், பொருட்­க­ளுக்கோ அல்­லது எந்த நப­ருக்கோ எவ்­வித சேதமோ, காயமோ ஏற்­ப­ட­வில்லை.

-– இவ்­வ­ள­வு­தான் நடந்­தது. 

ஆனால் ஆளு­நர் மாளிகை சொல்­லும் பொய், பெட்­ரோல் பாட்­டில்­களை விடப் பெரிய பொய் பாட்­டில்­க­ளாக இருக்­கின்­றன.

•பொய் 1:ராஜ்­ப­வன் மெயின் கேட் எண் 1 வழி­யாக பெட்­ரோல் குண்­டு­களை ஏந்­திய மர்ம நபர்­கள் சிலர் உள்ளே நுழைய முயன்­ற­னர்.

உண்மை:குண்­டு­களை ஏந்­திய மர்ம நபர்­கள் ஏரா­ள­மா­ன­வர்­கள் என அப்­படி யாரும் வர­வில்லை. வினோத் என்ற ஒரே ஒரு நபர் மட்­டும்­தான் வந்­தார். 

அவ­ரும் சாலை­யின் அந்­தப் பக்­கம் இருந்து வாசலை நோக்­கித்­தான் வீசி­னாரே தவிர, உள்ளே நுழைய முயற்­சிக்­க­வில்லை.

நந்­த­னம் சிக்­ன­லில் இருந்து நடந்தே வரு­கி­றார் வினோத். நந்­த­னம் கலைக் கல்­லூரி, சைதாப்­பேட்டை பாலம், சின்­ன­மலை வரை நடந்தே வரு­கி­றார். அவர் தனி ஆளா­கத் தான் நடந்து வரு­கி­றார். 

அங்­கி­ருந்து சைதை நீதி­மன்­றம் வழி­யாக நடந்து சென்­றுள்­ளார். இது ஆளு­நர் மாளி­கைக்கு எதிர்­பு­றம் உள்ள சாலை­யா­கும். இந்த சாலை­யைக் கடந்­தால்­தான் ஆளு­நர் மாளிகை வாச­லுக்கு செல்ல முடி­யும். சாலையை வினோத் கடக்­க­வில்லை. ஆளு­நர் மாளி­கைக்கு எதிரே நின்று ஆளு­நர் மாளிகை முன்பு வீச முயற்­சித்­துள்­ளார்.

 அங்கு பணி­யில் இருந்த ஐந்து காவ­லர்­கள் உடனே அவரை தடுத்து அப்­பு­றப்­ப­டுத்­தும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். இவை அனைத்­தும் வீடியோ காட்­சி­க­ளாக உள்­ளன.

•பொய் 2:பாது­காப்­புப் பணி­யா­ளர்­கள் தாக்­கு­த­லைக் கட்­டுப்­ப­டுத்த முயன்ற போதும், மற்­றொரு பெட்­ரோல் குண்டு வீசப்­பட்­டது. இத­னால் பிர­தான நுழை­வா­யி­லுக்கு பலத்த சேதம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

உண்மை:பிர­தான நுழை­வா­யி­லில் பலத்த சேத­மும் ஏற்­படவில்லை. 

சிறு சேத­மும் ஏற்­ப­ட­வில்லை. பாட்­டில் வீசப்­பட்­டது பிர­தான வாச­லில் இருந்து 30 மீட்­டர் தூரத்­தில் -– பேரி­காட் தாண்டி சாலை­யில்­தான் விழுந்­துள்­ளது. எனவே நுழை­வா­யி­லில் எந்த சிறு சேத­மும் கிடை­யாது.

•பொய் 3 :வினோத்­து­டன் நிறை­யப் பேர் வந்­துள்­ளார்­கள்.

உண்மை:கண்­கா­ணிப்­புக் கேமரா பதி­வு­களை ஆராய்ந்­த­தில், மேற்­படி நபர் நந்­த­னத்­தில் இருந்து சம்­பவ இடம் வரை தனி­யா­கவே வந்­துள்­ளார்.

•பொய் 4: அந்த நபரை தப்­பிக்க விட்டு விட்­டார்­கள்.

உண்மை:உட­ன­டி­யாக அவர் கைது செய்­யப்­பட்­டார். சரி­யா­கச் சொல்­வ­தாக இருந்­தால் சம்­பவ இடத்­தி­லேயே கைது செய்­யப்­பட்­டார்.

•பொய் 5: அவர் மீது வழக்கு பதி­யவே இல்லை.

உண்மை:அன்­றைய தினமே J--–3 கிண்டி காவல் நிலை­யத்­தில் அவர் மீது வழக்­குப் பதிவு செய்­யப்­பட்டு, புலன் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டது. உட­ன­டி­யாக அவர் IV-–வது பெரு­ந­கர குற்­ற­வி­யல் நடு­வர் அவர்­கள் முன்பு ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு, 09.11.2023 வரை சிறை­யில் வைக்­கப்­பட்­டார்.

•பொய் 6: ஆளு­நர் அவர்­க­ளுக்கு எதி­ராக பகி­ரங்க மிரட்­டல், அவ­தூ­றுப் பேச்சு மற்­றும் தாக்­கு­தல் போன்ற பல்­வேறு சம்­ப­வங்­கள் நிகழ்ந்­துள்­ள­தால் இந்த பாட்­டில் வீச்சு சம்­ப­வம் தொடர்­பாக காவல்­து­றையி­னர் நியா­ய­மான முறை­யில் முதல் தக­வல் அறிக்­கையை பதிவு செய்­ய­வில்லை.

உண்மை:குற்­ற­வாளி கைது செய்­யப்­ப­டு­கி­றார். நீதி­மன்­றத்­தில் நிறுத்­தப்­ப­டு ­கி­றார். சிறை­யில் அடைக்­கப்­பட்­டு­கி­றார். 

ஆளு­நர் மாளி­கைக்­கான பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­ப­டு­கி­றது. இதற்கு பின்­னால் சதி ஏதா­வது இருக்­குமா என காவல் துறை விசா­ரிக்­கி­றது. இதற்கு மேல், மேல் நட­வ­டிக்கை என்ன எடுக்க முடி­யும் என்று எதிர்­பார்க்­கி­றார்­கள்.

•பொய் 7: உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

உண்மை:உட­ன­டி­யா­கவே நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

•பொய் 8: ஏப்­ரல் 19, 2022 அன்று மயி­லா­டு­துறை சென்ற போது ஆளு­ந­ரின் வாக­னம் தாக்­கப்­பட்­டது. இது சம்­பந்­த­மாக காவல்­து­றை­யில் புகார் தெரி­விக்­கப்­பட்­டும் முதல் தக­வல் அறிக்கை பதிவு செய்­யப்­ப­ட­வில்லை.

உண்மை:ஆளு­ந­ரின் வாக­னம் மற்­றும் கான்­வாய் அப்­ப­கு­தியை கடந்து சென்ற பின்­னர் அங்கு கூடி­யி­ருந்­த­வர்­க­ளில் சிலர் கருப்­புக்­கொ­டி­களை சாலை­யில் வீசி­னர். 

அக்­கொ­டி­கள் ஆளு­ந­ரின் வாக­னம் மற்­றும் கான்­வாய் முழு­மை­யாக சென்­ற­பின் பின்­னால் வந்த வாக­னங்­கள் மீது விழுந்­தன. இச்­சம்­ப­வம் தொடர்­பாக மயி­லா­டு­துறை காவல் நிலை­யத்­தில் வழக்­குப் பதிவு செய்­யப்­பட்டு 73 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். மேற்­படி வழக்கு புலன் விசா­ர­ணை­யில் உள்­ளது.

ஆளு­ந­ரின் கான்­வாய் மீது கற்­கள் மற்­றும் கட்­டை­கள் வீசப்­பட்­டன என்­பது முற்­றி­லும் உண்­மைக்கு புறம்­பா­ன­தா­கும்.



அடிப்படை அறிவற்ற வெளியுறவு 

இதுவரை இல்லாத மோசமான நிலை பாட்டை, பாலஸ்தீன விவகாரத்தில் மேற் கொண்டிருக்கிறது மோடி அரசு. 

அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை துவக்கியவுடனே, இந்தியாவின் நீண்ட கால வெளியுறவு கொள்கையை ஒரு நொடியில் தகர்த்தெறிந்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவு தெரி வித்து டுவீட் வெளியிட்டார். 

சர்வதேச அரங்கில் பாலஸ்தீனத்திற்கு எதிரான நிலைபாட்டை எடுத்ததன் மூலம் விமர்சன கணைகள் எழுந்த பின்னணியில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் சால்ஜாப்பு அறிக்கை மூலமாகவும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் முகமது அப்பாசுடன் பிரதமர் மோடியின் தொலைபேசி உரையாடலின் மூலமாகவும் சமாளிப்பு முயற்சி களை மேற்கொண்டது மோடி அரசு. 

ஆனால் இவையனைத்தும் வெறும் நாடகம் என்பதை, அக்.28 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, இஸ்ரேல் உடனடியாக போர் நிறுத்தம் அறி விக்க வேண்டும் என வலியுறுத்துகிற தீர்மானம் வந்தபோது, அதற்கு எதிராக, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்த நிலைபாட்டின் மூலமாக நிரூபித்துவிட்டது மோடி அரசு. 

அகண்ட இஸ்ரேலை உருவாக்குவோம் எனக் கொக்கரிக்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு. அகண்ட பாரதத்தை உருவாக்குவோம் என்ற ஆர்எஸ்எஸ்-பாஜக வின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுடன்  ஆட்சி நடத்துகிறார் இந்திய பிரதமர் மோடி.  இரண்டு அதிதீவிர வலதுசாரி பிற்போக்கு மதவாத மற்றும் இனவெறி பிடித்த ஆட்சியாளர்களும் ஒரே சிந்தனை போக்குடையவர்கள்; எதிரி களை, மாற்றுக் கருத்து கொண்டவர்களை அழித்தொழித்தல் எனும் கொடிய, பாசிச தன்மை கொண்ட சித்தாந்தத்தை தங்களது ஆட்சியின் கொள்கையாகவே அமல்படுத்துகிறார்கள்.

பாலஸ்தீனத்திற்கு எதிரான, இஸ்ரேலுக்கு ஆதரவான மோடி அரசின் நிலைபாடு இதை அப்பட்டமாக உணர்த்துகிறது. மோடி அரசு இந்த நிலைபாட்டை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பாலஸ்தீன மக்களின் நீண்டகால போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். 

இஸ்ரேல், காசா மீதும் பாலஸ்தீனம் மக்கள்  மீதும் ஒரு கொடூரமான இனப் படுகொலையை அரங்கேற்றி வருகிறது. 22 லட்சம் மக்கள் வாழ்கிற காசா நகரத்தையே கிட்டத்தட்ட நிர்மூலமாக்கி விட்டது. உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டும். உலக நாடுகள் இன்னும் வலுவாக குரல் கொடுக்க வேண்டும். இஸ்ரேலையும் அதை இயக்கும் அமெரிக்க ஏகாதிபத்தி யத்தையும் வலுவாக நிர்ப்பந்திக்க வேண்டும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?