காலில் காயம்

 அரபிக்கடலில்  அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்.தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது - வானிலை ஆய்வு மையம்.

இந்திய கம்யூ. கட்சியின் கேரளமாநிலச் செயலர் கானம் ராஜேந்திரன் காலமானார்.

கனமழைக்கு திமுக அரசே முழு பொறுப்பு:டிச. 26ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு. இபிஎஸ் .

சென்னையில் 8 ஆவின் மையங்களில் 24 மணி நேரமும் விற்பனை!- அமைச்சர் அறிவிப்பு.

முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு.

புயல் நிவாரண நிதியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவர்.

வாச்சாத்தி வழக்கின் குற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுப்பு: -உச்ச நீதிமன்றம்

திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம்.ஒன்றியபிரதமர் மோடி மற்றும் அதானி நிறுவனத்துக்கு எதிராக மக்களவையில் மஹுவா மொய்த்ரா  தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்ததால்

 ஒரு தொழிலதிபரிடம்  பணம் மற்றும் பரிசுகளை பெற்றுக்கொண்டு  மக்களவையில் கேள்வி எழுப்புவதாக   'மக்களவை நெறிமுறைக் குழு'  தாக்கல் செய்த அறிக்கையின்படி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்தார்.

தெலங்கானாவில் பெண்கள், திருநங்கைகள் அனைவரும் நாளை முதல் அரசுப் பேருந்துகளில் பயணிக்க கட்டணம் இல்லை: அம்மாநில முதல்வர் ரேவந்த்ரெட்டி அறிவிப்பு.

சென்னையில் மீண்டும் மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது - சிவ்தாஸ் மீனா 

காலில் காயம்
கொட­நாடு கொலை, கொள்ளை வழக்­கில் நீதி­மன்­றத்­தில் ஆஜ­ரா­வ­தில் இருந்து விலக்­க­ளிக்க தெரி­விக்­கும் கார­ணங்­கள் ஏற்­றுக் கொள்­ளும்­ப­டி­யாக இல்லை என்று அ.தி.மு.க. பொதுச் செய­லா­ளர் எடப்­பாடி பழ­னி­சா­மியை சென்னை உயர்­நீ­தி­மன்­றம் கண்­டித்­துள்­ளது.

ஜெய­ல­லி­தா­வின் கொட­நாடு பங்­களா கொலை, கொள்ளை வழக்­கில் தன்னை தொடர்­பு­ப­டுத்தி வீடியோ வெளி­யிட்ட டெல்­லியைச் சேர்ந்த பத்­தி­ரி­கை­யா­ளர் மேத்யூ சாமு­வேல், வழக்­கில் குற்­றம்­சாட்டப் பட்­டுள்ள சயான் மற்­றும் வாளை­யார் மனோஜ் ஆகி­யோ­ருக்கு எதி­ராக 2019ஆம் ஆண்டு எடப்­பாடி பழ­னி­சாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடர்ந்­தி­ருந்­தார்.

வழக்­கில் சாட்­சி­யங்­களை பதிவு செய்­வ­தற்­காக மாஸ்­டர் நீதி­மன்­றத்­தில் ஆஜ­ராக எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு விலக்கு அளித்து தனி நீதி­பதி உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தார். இதை எதிர்த்து மேத்யூ சாமு­வேல் மேல்­மு­றை­யீடு செய்­துள்­ளார். இதன்­மீ­தான விசா­ரணை சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் நீதி­ப­தி­கள் முன்பு நடை­பெற்­றது.

அப்­போது, எடப்­பாடி பழ­னி­சாமி தரப்பை நோக்கி, எத­ன­டிப்­ப­டை­யில் ஆஜ­ரா­வ­தில் இருந்து விலக்­குக் கோரு­கி­றீர்­கள்? என நீதி­ப­தி­கள் கேள்வி எழுப்­பி­னர். இதற்கு பதி­ல­ளித்த எடப்­பாடி பழ­னி­சாமி தரப்பு, காலில் ஏற்­பட்­டுள்ள காயம் மற்­றும் பாது­காப்பு கார­ணங்­கள் ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாக கொண்டு விலக்கு கோரு­கி­றோம் எனத் தெரி­வித்­த­னர்.

எனி­னும் சட்­டத்­தின் முன் அனை­வ­ரும் சமம் என்­றும், நீதி­மன்­றத்­தில் ஆஜ­ரா­வ­தில் இருந்து விலக்­குக் கோர எடப்­பாடி பழ­னி­சாமி தெரி­விக்­கும் கார­ணங்­கள் ஏற்­றுக் கொள்­ளும் ப­டி­யாக இல்லை என்­றும் நீதி­ப­தி­கள் தெரி­வித்­த­னர்.

இதை­ய­டுத்து, விரி­வாக வாதிட அனு­ம­திக்க வேண்­டு­மென்று எடப்­பாடி பழ­னி­சாமி தரப்பு கோரிக்கை வைத்­தது. இதை­யேற்று விசா­ர­ணையை வரு­கிற 15-ம் தேதிக்கு நீதி­ப­தி­கள் ஒத்­தி­வைத்­த­னர்.

--------------------------------


சென்னையில் மிக்ஜம் புயலுக்குப் பின்னர் பாதிப்புகள் குறித்து பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. எப்போது மழை வந்தா லும் பாதிக்கப்படும் பகுதிகள் என்று வழக்கமாக அறியப்படும் பகுதிகள் இந்த புயலின் போதும் செய்திகளில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளன. 

சென்னையில்  அதிகம் பாதிக்கப் பட்ட பகுதியாக பள்ளிக்கரணை, ஒக்கியம், துரைப்பாக்கம், முடிச்சூர், வரதராஜநகர், பெரும் பாக்கம், சுனாமி குடியிருப்புகள் மற்றும் பக்கிங்காம், அடையாறு, கால்வாயை ஒட்டி யுள்ள பகுதிகள்.




சென்னையில் உள்ள பெரிய நன்னீர் சதுப்பு நில ஏரி பள்ளிக்கரணை. இந்த ஏரி தனது இயற்கையான இருப்பிடத்தை இழந்து இன்று  நான்கில் ஒருபங்காக சுருங்கிவிட்டது.

 காரணம் சென்னை நகர் விரிவடைந்து வருவதால் வீட்டு மனைகளுக்கான தேவை அதிகரித்தது. இதை  பயன்படுத்திக்கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவ னங்கள் ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகளாக மாற்றின.  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள தரமணி மற்றும் பழைய மகாபலி புரம் சாலைக்கு மிக அருகாமையில் இந்த ஏரி உள்ளது. 

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் கடந்த 20 ஆண்டுகளில் அழித்து ஆயிரத்துக்கும் மேற் பட்ட இடங்களில் கட்டடங்கள் கட்டப்பட்டுள் ளன. 

இவை அனைத்தும் பத்திரப்பதிவு துறை யில் போலிப் பத்திரம் தயாரிக்கப்பட்டு நீர்நிலைப் பகுதியை குடியிருப்புப் பகுதியாகப் பதிவு செய்து ரியல் எஸ்டேட் முதலாளிகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டவை.

வேளச்சேரி, மடிப்பாக்கம், முடிச்சூர் உள்ளிட்ட இடங்களும் ஒரு காலத்தில் ஏரிக ளாக இருந்தவை.  

சென்னை நகரின் புறநகர் பகுதிகளாக இருந்த இவை இன்று குடியிருப்புக ளாக மாறிவிட்டன.

  சிட்லப்பாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பான வழக்கில் நீர்நிலைப் பகுதி இடங்களின் மதிப்பை பூஜ்ஜியமாக அறிவிக்க வேண்டும் என 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால், அந்த உத்தரவை அப்போதைய அதிமுக  அரசு கண்டுகொள்ளவில்லை. இத னால் மேலும் ஊக்கமடைந்த ரியல் எஸ்டேட் முதலைகள் அரசு அதிகாரிகள் துணையோடு நீர்நிலைகளை மேலும் ஆக்கிரமித்தன. இந்த நிலை இனியும் தொடரக்கூடாது 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளை எளிதில் பாதிக்கும் பகுதிகளாக அறிவித்து, அங்கு இருக்கும் நீர்நிலைகளின் மீதான மிகப் பெரிய ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். இத னால் 125 டி.எம்.சி நீரை நீர்நிலைகளில் சேமித்து வெள்ள பாதிப்பை தவிர்க்கலாம் என்ற நீரியல் வல்லுநர்களின் யோசனைக்கு செயல் வடிவம் கொடுப்பது பற்றி ஆலோசிக்க வேண்டும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?