தண்ணீர் அரசியல்

2000ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தி ஹேக் நகரில் நடத்தப்பட்ட இரண்டாவது உலக நீர் மன்ற மாநாட்டில், ‘நீர் ஒரு வணிகப் பொருள்’ என்ற கருத்து அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று வருத்தப்பட்டது உலகவங்கி. 
இக்கூட்டத்தில்தான் நீரானது ‘உரிமை’ என்பதற்கு மாறாக அது ஒரு ‘தேவை’ என்று வரையறை செய்யப்பட்டது. உரிமை என்றால் நீரை மக்களுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமையாக மாறிவிடும். தேவை என்றால் அந்த கட்டாயமில்லை.
பிறகு கியாட்டோ நகரில் நடந்த மூன்றாவது மாநாட்டின் ஓர் அறிக்கையை  சர்வதேச நிதி நிறுவனத் தலைவர் மிச்சேல் காம்டெஸ்ஸஸ் கொண்டுவந்தார். அவ்வறிக்கை, ஒரு நாட்டில் தனியார் வணிகத்தில் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஈடுப்பட்டிருக்கும்போது அந்த நாட்டின் அரசியல் சிக்கல்களாலொ, வேறு ஏதாவது காரணங்களாலொ அந்நாட்டின் பணமதிப்பு குறையும்போது தங்களுடைய இலாபத்தை உறுதிப்படுத்த டுக்ஷகு வேண்டும் என வலியுறுத்தியது. (பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டும் நிறுவனத்தின் வாங்கப்படாத பங்குகளை வாங்கிக் கொண்டு திரட்ட வேண்டிய தொகையைப் பெற உதவும் வசதி) அதாவது பொதுநிதியை பயன்படுத்தாமல் இத்தனியார் தண்ணீர் நிறுவனங்கள் இயங்காது எனபதுதான் செய்தி.
 மொத்தத்தில் ஒரு நாட்டின் தண்ணீர் இறையாண்மையை அடிமைப்படுத்திக் கொள்வதே இதன் நோக்கம்.
2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலக மேம்பாட்டு இயக்கம்  ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் உலகின் நான்கு முதன்மையான பொது நீர் விநியோக அமைப்புகளில் இரண்டாவதாக தமிழ்நாடு இடம் பெற்றிருந்தது. 
இத்தகையப் பெருமையை இன்று தமிழ்நாடு இழக்க விரும்புகிறதா என்பதுதான் கேள்வி. ‘இல்லை, நாங்கள் உலக வங்கியின் பிடியில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை’ என்றால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது.
இலத்தின் அமெரிக்க நாடுகள் வட அமெரிக்க நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் ஒன்று இருக்கிறது.  இந்த ஒப்பந்தத்தின்படி பார்த்தால் கடல்நீரைத் தவிர மற்ற நீர் அனைத்தும் வணிகப்பொருளாக பட்டியலிடப்பட்டுள்ளது. 
மேலும் நாஃப்டாவிலுள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் மற்ற நாட்டின் நீரை வணிகரீதியில் பயன்படுத்திக் கொள்ளவும் உரிமையுண்டு. 
அதேபோல் ஒரு நாடு மற்றொரு உறுப்பு நாட்டுக்கு நீரை ஏற்றுமதி செய்ய தொடங்கிவிட்டால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என்று தெரிந்தாலும்கூட அந்த ஏற்றுமதியை நிறுத்தும் உரிமை அதற்கு கிடையாது. அவ்வாறு நிறுத்திவிட்டால் நீர் ஏற்றுமதியை நிறுத்தும் நாடு இறக்குமதி செய்யும் நாட்டுக்கு இழப்பீடு தர வேண்டும். இங்கு பெரும்பானமையான நீரை இறக்குமதி செய்யும் நாடு அய்க்கிய அமெரிக்காதான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. 
இவ்வளவு கடுமையான விதிமுறைகள் கொண்ட இந்த ஒப்பந்தத்திலிருந்துக்கூட மே 2007ஆம் ஆண்டு மூன்று நாடுகள் விலகும் முடிவை அறிவித்தன. பொலிவியா, வெனிசுலா, நிகரகுவா ஆகியவையே அந்த நாடுகள்.
இந்த நாஃப்டா ஒப்பந்தத்தின்படி நீர்க்குறித்த எந்த சிக்கலும் நீதிமன்றத்துக்கு செல்லாது. மாறாக இந்த உலக வட்டிக்கடை அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு கட்ட பஞ்சாயத்து அமைப்பு ஒன்றை வைத்திருக்கிறது. 
அதற்கு முதலீட்டு சிக்கல் தீர்வைக்கான உலக வங்கியின் சர்வதேச நடுவம்என்று பெயர். தனியார் தண்ணீர் விநியோக ஒப்பந்தங்களை ரத்து செய்த நாடுகளிடம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரும் தனியார் தண்ணீரி நிறுவனங்கள் இந்த மையத்தை பயன்படுத்திக் கொண்ட முறையை பார்த்து அதிலிருந்து விலகுவதாக இந்த நாடுகள் அறிவித்தன. 
உண்மையிலேயே உலக வரலாற்றில் இது ஒரு துணிச்சலான முடிவு.
இந்த புரட்சிகரமான முடிவை எடுத்த வெனிசுலா நாட்டுக்கு துணிவுமிக்க `ஹியூகோ சாவேஸ் என்ற தலைவர் இருந்தார். துணிச்சல், புரட்சி என்பதெல்லாம் வெறும் சொல்லொ, பெயருக்கு முன்னாலான அடைமொழியோ கிடையாது. அது செயல். 
இந்தச் செயலை செய்யும் ஆட்சித் தலைமைகள் நம்மிடம் கிடையாது. 
அப்புரட்சியை மக்கள்தாம் மேற்கொள்ள வேண்டும். 
இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆந்திர உழவர்கள். 
நீர் தனியார்மயத்துக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் ஏற்பாடு செய்திருந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்க உலகவங்கியின் தலைவராக இருந்தஜம்ஸ் கூல்ஃபென்சோன் ஆந்திராவுக்கு வந்தபோது அந்த உழவர்கள் அவரை விரட்டியடித்தனர். 
ஆனால் புறநானூற்று வீரம் பேசுகிற தமிழர்க் கூட்டமாகிய நாம் இன்னும் புண்ணாக்கு மூட்டையாக கிடக்கிறோம்.
தண்ணீர் குறித்த முடிவுகள் என்பது உள்ளூர் மக்களால் எடுக்கப்பட்ட நிலையிலிருந்து மாறி இன்று உலகவங்கியால் எடுக்கப்படும் அளவுக்கு மாறிவிட்டது. 
இந்நிலைத் தொடர்ந்தால் நமது நீரையெல்லாம் தொழிற்சாலைக் கழிவுகளால் பாழாக்கிவிட்டு சாக்கடை நீராக்கி விடுவார்கள். பிறகு அந்த சாக்கடை நீரை தூய்மைச் செய்து அதை நம்மையே குடிக்க வைப்பார்கள் இது மிகைப்படுத்தப்பட்ட சொற்கள் அல்ல. 
ஆஸ்திரேலியாவில் நடக்கும் அப்பட்டமான உண்மை.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பிரதமர் பீட்டர் பீட்டி கழிவுநீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை கொண்டு வந்தார். இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தபோது அவர் ஆணவமாக, “ இவை அசிங்கமான முடிவுகள்தான், 
வேறு வழியில்லை; நீங்கள் குடிக்க வேண்டும் அல்லது சாக வேண்டும்” என்றார். ஆனால் இதே பிரதமர் தான் அருந்துவதற்கு சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட புட்டிநீரை பயன்படுத்துகிறார். இதுதான் அரசியல்.
இந்த அரசியலை பொது மக்கள்தான் மாற்ற முடியும். 
கொச்சபம்பாவில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியான ஒலிவேரா தண்ணீர் தனியார்மயத்துக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியதுப் போல் குயின்ஸ்லாந்தில் குழாய் பழுது பார்ப்பவரான லொரி n
ஜான்ஸ் கழிவுநீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
இன்று நம்நாட்டில் மட்டுமல்ல உலகளவிலும் தண்ணீர் ஓர் உரிமை என்பதை வலியுறுத்தும் போராட்டங்களும் சட்டத்திருத்தங்களும் தேவைப்படுகின்றன. 
இது ஒன்றும் நடக்கவே இயலாத ஒன்றல்ல. உலகின் சிறிய நாடுகளில் ஒன்றான உருகுவே நாடு இதனை சாதித்துக் காட்டியுள்ளது. 
2004 அக்டோபர் 31, தண்ணீர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய நாள். அன்றுதான் உருகுவே நாடு உலக நாடுகளிலேயே முதலாவது நாடாக தண்ணீர் என்பது ஓர் உரிமை என்ற சட்டத்தை நிறைவேற்றியது. 
இதனால் அந்நாட்டிலிருந்த தனியார் தண்ணீர் நிறுவனங்கள மூட்டைக் கட்டிக் கொண்டு ஓட வேண்டியதாயிற்று. 
உலக வட்டிக் கடையால் வெறுமனே வேடிக்கப் பார்க்கத்தான் முடிந்தது.
இவ்வெற்றிக்கு அந்நாட்டு மக்களே அடிப்படைக் காரணம். அவர்கள் ஒன்றுப்பட்டு எழுப்பிய கோரிக்கைகள் மக்களின் இயக்கமாக மாறி இதை செய்துக்காட்டியது. 
தமிழக மக்களாகிய நாமும் இப்படி ஒன்றுப்பட வேண்டிய காலம் கனிந்திருக்கிறது. 
டஹ்ண்ணீர் அரசியலை எதிர்த்து ஒன்றுப்படுவோம். நமது நீரை நமக்கு வேண்டி ஒரே குரலில் முழங்குவோம்.


‘நமது நீர் – நமது உரிமை’
                                                                                                                                  - நக்கீரன்
===========================================================================================
இன்று,
பிப்ரவரி-25.


  • குவைத் தேசிய தினம்
  • மாதிரி அணு ஆயுதத்தை சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணையான ப்ருத்வி ஏவப்பட்டது(1988)
  • சாமுவேல் கோல்ட், சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்க காப்புரிமத்தை பெற்றார்(1836)
  • தாமஸ் டெவன்போர்ட், மின்சாரத்தில் இயங்கும் மோட்டருக்கான காப்புரிமத்தை பெற்றார்(1837)
============================================================================================

இஞ்சியில்
 உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சியைப் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் 10 ஆண்டுகள் நடத்தலாம் என்று நம்பிக்கை தோன்றும்?
நமது தென்னக சோலை வனப் பயிர்களில் ஒன்றாகிய உயர்ந்த இஞ்சிக்கு தான் சுக்கு என்று பெயர். இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை மூன்றும் சமையல் அறையின் இணைபிரியாத நண்பர்கள்.


இஞ்சி பொதுக் குணம் இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். 
சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. 
கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.

உபயோக முறைகள்


இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்கச் செய்து விடுகிறது.


இஞ்சியின் குணமேதென்றால்இயல்புடன் உரைக்க கேளீர்அஞ்சிடும் கன்னியாவும் அகன்றிடும் பித்த தோடம்நெஞ்சினில் இருமல் கோழை நெகிழ்ந்திடும் கபங்கள் தன்னைமிஞ்சினி வருமேவென்றும் விளம்பிடும் வேதநூலே (ஓலைச் சுவடி)சித்த மருத்துவர்களிடம் ஓர் ரகசியமுண்டு.


எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்வி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். 

பிணிகளும் விரைவில் மிச்சம் மீத இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும். ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது.இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமை! ஊறுகாய் வியாபாரம் மந்தமாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம். 
ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர்! 
அதாவது இஞ்சி ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து அதை மிக்சர்களில் கலந்து செரிப்புண்டாக்க கொடுக்கின்றனர்.
இந்த பிளாக் மார்க்கெட்டை!
இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும்.

 இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் சிவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும்.
இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். 

ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். 

மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே!இஞ்சி முறபாமலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. 
இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். 

இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.
ஆஸ்துமா இருமலுக்குஇஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும்.


அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை.

===============================================================================================

Chandran Veerasamy


பஸ் எரித்த 'விசுவாச' தொண்டன் !

## நிச்சயம்' சீட்'உண்டு ! அய்யா நீதியரசர்களே ,
இதுக்கெல்லாம் தானே முன்வந்து வழக்கு
செய்ய மாட்டீர்களா ?


இறைவனிடம் கையேந்துங்கள் .அதற்காக இப்படியா?


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?