பென்சிலை திருடியிருந்தால் கூட



தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 4 பேர் திடீரென பாஜக-வுக்குத் தாவியுள்ள நிலையில், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறையை ஏவி, பாஜக இவர்களை வளைத்துப் போட்ட உண்மை வெளிவந்துள்ளது .

பாஜகவுக்கு தாவிய தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 4 பேரும் தொழி லதிபர்கள் ஆவர். 
இவர்களில் 2 பேர் சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித் துறை சோதனைகளில் சிக்கியவர்கள்.  

பாஜக எம்.பி.யும் செய்தித் தொடர்பாளருமான ஜி.வி.எல். நர சிம்ம ராவ் கடந்த நவம்பர் மாதம், மாநிலங்களவையின் நடவடிக்கை கமிட்டிக்கு கடிதம் ஒன்றை  எழுதியிருந்தார்.

 அதில், தெலுங்கு தேசம் எம்.பி.க்களான சி.எம். ரமேஷ், ஒய்.எஸ். சவுத்ரி இருவரும் ‘ஆந்திராவின் விஜய் மல்லையாக்கள்..’ என்றும், ‘இவர்கள் இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தி இருந்தார்.

அந்த சி.எம். ரமேஷையும், ஒய்.எஸ். சவுத்ரியையும்தான் பாஜக தற்போது தங்கள் கட்சியில் சேர்ந்து, ‘புனிதவான்களாக’ மாற்றியுள்ளது.
இவர்களில் சி.எம். ரமேஷ், ஒய்.எஸ். சவுத்ரி ஆகியோர் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கப்பிரிவு ரெய்டு மூலம், விசாரணையில் சிக்கியிருப்பவர்கள்.
சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானி இடையேயான மோதலிலும் சி.எம்.ரமேஷ் பெயர் அடிபட்டது.

வங்கிக் கடன் மோசடிகள் தொடர்பாக ஒய்.எஸ். சவுத்ரி ஏற்கெனவே சிபிஐ, அமலாக்கப் பிரிவு விசாரணை வளையத்துக்குள் இருப்பவர் ஆவார். 

இந்நிலை யிலேயே அவர்களை வழக்குகளைக் காட்டி அச்சுறுத்தியே  பாஜக தன்பக்கம்இழுந்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.காரணம் மாநிலங்கவையில் பாஜக பெரும்பாண்மையை  அதிகரிக்கவேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு உள்ளது.

இவ்வாறு தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்களை வளைத்ததன் மூலம், அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவையும் பாஜக பழிவாங்கி இருப்பதாக கூறப்படுகிறது
.
 ஏனெனில், கடந்த ஆட்சியின்போது, மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த கட்சி தெலுங்குதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவா ,சிக்கிம்,திரிபுரா என்று மாற்றுக்கட்சியினரை பாஜகவாக்க மாற்ற அமுலாக்கத்துறை,சிபிஐ,மத்திய புலனாய்வுத்துறை மற்றும் நீதித்துறை என அனைத்தையும் அமித்ஷா அடியாட்களாகப் பயன்படுத்துகிறார்.
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ க்கள்,எம்.பி கள் வாழ்க்கை வரலாறே அலசப்படுகிறது உள்துறையினரால்.

"பள்ளி காலத்தில் பக்கத்துக்கு பையன் புழுக்கைப்பென்சிலை விளையாட்டாகத் திருடியிருந்தால் கூட அதை வைத்து மிரட்டி கட்சிமாறவைக்கிறார்கள் அமித் ஷாக்கள்,"
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
கண்டிப்பாக மராட்டி படிக்கணும்.
மகாராஷ்டிராவில் வாழ்பவர்கள், கல்விகற்பவர்கள் மராத்தி மொழியைக் கற்க வேண்டியது அவசியம் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
இவர்  பாஜக கட்சிக்காரர் .
தேவேந்திர பட்னாவிஸ்


சிபிஎஸ்இ, மற்றும் பன்னாட்டு பாடத்திட்டத்தைக் கொண்டுள்ள ஐபி பள்ளிகள் இது தொடர்பாக மாநில அரசின் வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றி பாடத்திட்டத்தில் மராத்தி மொழியைக் கட்டாயப் பாட மாக்கவில்லை என்றால், கடும் நடவடிக்கைகளைச் சந்திக்க வேண்டியது வரும் என்று பட்னாவிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிவசேனா எம்எல்ஏ நீலம் கோர்ஹே, பன்னாட்டு பாடத்திட்டங்களைக் கொண்ட பள்ளிகள் மராத்திமொழியைப் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டியதையடுத்து பட்னாவிஸ் இந்த கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

“எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படை யில் மராத்தி மொழியை கற்பிப்பதில் பள்ளிகள் சுணக்கம் காட்டி வரு கின்றன.சில பள்ளிகள் இந்தியை கட்டாயமாக்குவதாகவும்,மராத்தி மொழியைப் புறக்கணிப்பதாகவும் எங்க ளுக்குத் தகவல்கள் வருகின்றன; எனவே, இதற்கான சட்டங்கள் இன்னும் வலுவாக்கப்படும்” என்று பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில், இந்தி யைக் கட்டாயப்பாடம் ஆக்கும் மத்திய அரசின் கல்வித்திட்ட முயற்சிக்கு எதிராக, தமிழ்நாடு  மற்றும் தென்மாநிலங்கள் மட்டுமன்றி, பாஜக ஆளும் மகாராஷ்டிரமாநிலத்திலும் போராட்டங் கள் நடைப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த பின்னணியிலேயே தான் பாஜக முதல்வராக இருந்த போதிலும் பட்னாவிஸ், மராத்தி மொழி மீது அக்கறைகாட்டியுள்ளார்.
அதை இங்குள்ள அடிமை வம்ச ஆட்சியினர் உணர்வார்களா?
வேடிக்கை என்னவென்றால் தமிழை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் தமிழ்நாட்டில் உள்ளதாக அதிமுக ஜெயக்குமார் சொல்லியுள்ளார்.
இவருடைய அதிமுகவே அங்கிருந்துதான் வந்தது என்பதையும்,அதில்தான் தான் அமைச்சராக குப்பைக்கொட்டிக்கொண்டிருப்பதையும் மறந்துவிட்டார் ஜெயக்குமார்.
நாற்காலி,ஊழல் மோகம் எப்படியெல்லாம் மனிதர்களை புலம்பவைக்கிறது.?
------------------------------------------------------------------------------------------------------------------------------------

 தன்னைத் தானே.....
தெலுங்கானா மாநிலம் கோஷமகால் தொகுதி எம்எல்ஏ-வாக இருப்பவர் ராஜா சிங். பாஜக-வைச் சேர்ந்த இவர் மத வெறி மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதில் பெயர் போனவர்.

இந்நிலையில், ராஜா சிங் எம்எல்ஏ, ஹைதராபாத் நகரின் ஜுமீரத் பஜார் என்ற பகுதியிலுள்ள முச்சந்தியில், நள்ளிரவு 1 மணிக்கு, யாருக்கும் தெரியாமல் அவந்தி பாய் லோத் என்ற மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்து அரசியின் சிலையை நிறுவுவதற்கு முயன்றுள்ளார்.
 பாஜக-வினரைத் திரட்டி இந்த வேலையைச் செய்துள்ளார்.

 தகவலறிந்து வந்த காவல்துறையினர், அனுமதியின்றி சிலை வைக்கக் கூடாது என்று தடுத்துள்ளனர்.
ஆனால் சிலையை வைத்தே தீருவோம் என்று பாஜக-வினர், காவல்துறையினருடன் தகராறு செய்து, தள்ளு முள்ளுவிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, காவல்துறையினர் தன்னைத் தாக்கி, தலையில் காயம் ஏற்படுத்தியதாக ராஜா சிங் குற்றம்சாட்டினார். தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு மருத்துவமனையிலும் சேர்ந்தார்.
 பாஜக-வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்தார்.

ஆனால், ராஜா சிங் காவல்துறையினரால் தாக்கப்படவில்லை; அவரை அவரே கல்லால் அடித்துக் கொண்டு, மருத்துவமனையில் சேர்ந்திருப்பதாக காவல்துறை ஆணையாளர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கான வீடியோ ஆதாரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
போலீசார் கூறுவது போலவே, அந்த வீடியோவில், ராஜாசிங் அவராகவே கல்லால் அடித்துக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதன்மூலம், சிலைப்பிரச்சனையை வைத்து வன்முறையைத் தூண்டிவிட முயன்ற பாஜக எம்எல்ஏ-வின் சதித்திட்டம் அம்பலமாகி இருக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தத் தேர்தலில் 
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி
 மட்டும் வென்றிருந்தால் 
இந்த விளமபரமே வந்திருக்காது.
  
 முற்றும் திறந்தவரின் யோகா தினம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?