பொறுத்திருந்து பார்ப்போம்

 20,00,231.நன்றிகள்!

உங்கள்"சுரன்"  வலைத்தளத்தை பார்வையிட்டோர் எண்ணிக்கை. 20,00,231

நாம் வலைப்பூ நடத்தினால் எப்படி வரவேற்பிருக்கும்? என்ற ஆர்வத்தினால் துவக்கப்பட்டது "சுரன்".

இத்தனை ஆண்டுகள் நடத்துவோம்,இவ்வளவு ஆர்வலர்கள் பார்வையிடுவார்கள் என்ற எண்ணமே இல்லாத காலம் அது.

இவ்வளவு நாள எனக் கூற காரணம்.

" சுரன்"துவக்கத்திற்கு முன்னரே கோலோச்சிய வலைப்பூக்கள்,பின்னர் துவக்கப்பட்டு பிரபலமானவை என ஆயிரக்கணக்கான வலைப்பூக்கள் இன்று தொடரவில்லை என்ற நிலைதான்.

வலைப்பூ அலை தமிழில் குறைந்து,மறைய யூடியூப் பக்கம் பலரும் மாறிவிட்டதும் ஒரு காரணம்.

தொடர்ந்து நான் தொடர உங்கள் ஆதரவுதான் ஊக்கம்.

தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டுகிறேன்.

     


                   



என்றும்அன்புடன்

                                          சீ.அ.சுகுமாரன்.

                                          (S.A.Sukumaran.)

----------------------------------------

இதுவரை இல்லாத வகையில் 2022ம் ஆண்டில் உலகளவில் 75 லட்சம் பேருக்கு காசநோய்: உலக சுகாதார நிறுவனம் அறிக்கை.

அமெரிக்க அரசு நிதி நிறுவனம் பெயரில் அதானிக்கு 4,600 கோடி நிதியுதவி.

இஸ்ரேல் குண்டு வீச்சால்  பாதிக்கப்பட்ட வடக்கு காசாவில் இருந்து 3 நாட்களில் 22,000 பாலஸ்தீனர்கள் வெளியேறினர்: ஐ.நா. தகவல்.

வயநாட்டில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள்-போலீஸ் இடையே துப்பாக்கி சண்டை: பெண் உள்பட 2 பேர் கைது.2 பேர் தப்பி ஓட்டம்.

அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை.. ஓபிஎஸ் மேல்முறையீடு - அவசர வழக்காக விசாரணை.

சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார்  அறநிலையத்துறையை கலைக்க முடியாது.இந்துத்துவாவினர் கோவிலை கொள்ளையடித்துவிடுவார்கள்.அதானியிடம் நிர்வாகத்தை ரெயில்வே பிளாட்பாரம்,விமான நிலையங்கள்,துறைமுகங களைப் போல் விற்றுவிடுவார்கள்.- செல்லூர் ராஜூ..

மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்ததில் தகுதியான நபர்களுக்கு வரவு வைக்கும் பணி தொடங்கியது .

கோவை பி.எஸ்.ஜி. இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில் மாணவருக்கு மொட்டையடித்து ஆபாச வீடியோ எடுத்து ராகிங் என்ற பெயரில் கொட்டைப்.7 மாணவர்கள் கைது.

தொடர் கனமழை எதிரொலி... மதுரை,  கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.

---------------------------------

பொறுத்திருந்து பார்ப்போம்!

தமிழ்நாடு, கேரளா, பஞ்­சாப் ஆகிய மாநில அர­சு­க­ளின் சார்­பில் அந்­தந்த மாநில ஆளு­நர்­க­ளின் செயல்­பா­டு­க­ளுக்கு எதி­ராக உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்கு தாக்­கல் செய்­யப் பட்­டுள்­ளது. 

‘மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்­கள் அல்ல நீங்­கள் என்­பதை உண­ருங்­கள்’ என்று ஆளு­நர்­­களுக்கு அறி­வு­றுத்தி இருக்­கி­றது உச்­ச­நீ­தி­மன்­றம். 

இதை விட நெத்­தி­யடி இருக்க முடி­யாது. ‘ரொம்ப ஆடா­தீர்­கள், அடங்­குங்­கள்’ என்­ப­து­தான் இதன் உள்­ள­டக்­கம் ஆகும்.

பார­திய ஜனதா கட்சி, எதிர்க்­கட்­சி­கள் ஆளும் மாநி­லங்­க­ளுக்கு ஆளு­நர்­கள் மூல­மாக குடைச்­சல் கொடுத்து வரு­கி­றது. 

எந்­தத் தகு­தி­யும் இல்­லா­த­வர்­கள் ஆளு­நர்­க­ளாக வரு­வ­தால், அவர்­கள் எஜ­மா­னர்­க­ளின் உத்­த­ர­வுக்கு கட்­டுப்­பட்­டுச் செயல்­ப­டு­கி­றார்­கள். 

தங்­க­ளுக்கு ஏதோ தகு­தி­கள் வந்து விட்­ட­தைப் போல நினைத்து ஆட்­டங்­கள் போடு­கி­றார்­கள். ஒரு மாநி­லத்­துக்கு ஆளு­ந­ராக வந்­து­விட்­ட­தா­லேயே, அந்த மாநி­லமே தங்­க­ளுக்­குச் சொந்­தம் என நினைத்­துக் கொள்­கி­றார்­கள்.

 மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்பட்ட ஒரு அரசு இருக்­கி­றது என்­ப­தையே மறந்­து­விட்டு, தாங்­கள் ஏதோ மக்­கள் தலை­வர்­க­ளைப் போல நடந்து கொள்­கி­றார்­கள்.

அது­வும் தமிழ்­நாடு ஆளு­ந­ரின் செயல்­பா­டு­கள் என்­பவை அத்­து­மீ­றி­ய­தாக மட்­டு­மல்ல, அரு­வெ­றுப்­பா­ன­வை­யா­க­வும் இருக்­கின்றன. 

மாநி­லத்­தின் நன்­மைக்­கா­கத் துரும்­பைக் கூட நகர்த்­தாத அவர், தமிழ்­நாட்­டுக்­கான கெடு­தல்­களை வரி­சை­யா­கச் செய்து வரு­கி­றார். தமிழ், தமி­ழர், தமிழ்­நாட்­டின் பெரு­மை­க­ளைச் சிதைப்­பது ஒன்­றையே தனது நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளார். 

எதை­யா­வது சொல்லி, மாநி­லத்­தில் குழப்­பம் ஏற்­ப­டுத்­து­வதே அவ­ரது வேலை­யாக இருக்­கி­றது. பா.ஜ.க. மாநி­லத் தலை­வர் அண்­ணா­ ம­லைக்­கும் அவ­ருக்­கும் தான் இப்­போது போட்டி என்று சொல்­லத்­தக்க வகை­யில் ஆளு­நர் செயல்­பட்டு வரு­கி­றார். 

அதே­நே­ரத்­தில், மாநில நிர்­வா­கம் அனுப்­பும் கோப்­பு­களை தாம­தப்­ப­டுத்­தி­யும், தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் நிறை­வேற்றி அனுப்­பும் சட்­டங்­க­ளுக்கு அனு­மதி தரா­ம­லும் தனது அர­சி­யல் சட்­டக் கட­மை­க­ளைக் கூடச் செய்­யா­மல் சதி செய்­கி­றார்.

எத்­த­னையோ முறை -–- எவ்­வ­ளவோ வகை உணர்த்­திய பிற­கும் ஆளு­நர் ரவி, உணர்­வ­தா­கத் தெரி­ய­வில்லை. திருந்­து­வ­தற்­கான அறி­குறி இல்லை. 

இதன் இறு­திக் கட்­ட­மா­கத்­தான் அவர் மீது உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்­குத் தாக்­கல் செய்­தது தமிழ்­நாடு அரசு.

 இதே போலத் தான் கேர­ளா­வின் நிலை­மை­யும், பஞ்­சாப் மாநி­லத்­தின் நிலை­மை­யும்.

பஞ்­சாப் மாநி­லத்­தில் ஆம் ஆத்மி கட்­சி­யின் ஆட்சி நடக்­கி­றது. மாண்­பு­மிகு பக­வந்த் மான், முத­ல­மைச்­ச­ராக இருக்­கி­றார். தமிழ்­நாட்­டில் ஆளு­ந­ராக இருந்த பன்­வா­ரி­லால் புரோ­கித் தான், இப்­போது பஞ்­சாப் மாநி­லத்­தில் ஆளு­ந­ராக இருக்­கி­றார். 

பஞ்­சாப் மாநில அரசு அனுப்பி வைக்­கும் சட்­ட­முன் வடி­வு­க­ளுக்கு அனு­மதி தரா­மல் நிறுத்தி வைத்­தார் ஆளு­நர் பன்­வா­ரி­லால். 

கடந்த அக்­டோ­பர் 20 ஆம் தேதி தாக்­கல் செய்ய வேண்­டிய மூன்று நிதி மசோ­தாக்­களை நிறுத்தி வைத்து விட்­டார் ஆளு­நர். சட்­ட­சபை கூடு­வ­தற்கு முந்­தைய நாள் –- அதா­வது அக்­டோ­பர் 19 ஆம் தேதி­யன்று, மாநில அர­சுக்கு ஆளு­நர் ஒரு கடி­தம் எழு­து­கி­றார். 

அந்த மசோ­தாக்­களை ஆய்வு செய்ய வேண்டி உள்­ளது என்று அதில் குறிப்­பிட்டு இருந்­தார் ஆளு­நர்.

சட்­ட­ச­பை­யைக் கூட்­டக் கூடாது என்­றும் ஆளு­நர் தடை போட்­டார். அத­னால் சபை கூடிய சில மணி­நே­ரங்­க­ளி­லேயே ஒத்தி வைக்­கப்­பட்­டது. 

இப்­படி பல்­வேறு குழப்­பங்­கள் நடக்­கி­றது பஞ்­சாப் மாநி­லத்­தில். இத­னைத் தடுக்­கவே உச்­ச­நீ­தி­மன்­றத்­துக்கு போனது பஞ்­சாப் அரசு. “சட்­ட­ச­பை­யில் நிறை­வேற்­றப்­பட்ட மசோ­தாக்­க­ளுக்கு ஒப்­பு­தல் வழங்க ஆளு­ந­ருக்கு உத்­த­ர­விட வேண்­டும்” என்று கோரி­யது பஞ்­சாப் அரசு. உடனே, ஆளு­நர் என்ன செய்­தார் தெரி­யுமா? 

நிறுத்தி வைக்­கப்­பட்ட மூன்று நிதி­ம­சோ­தாக் ­க­ளில் இரண்­டைக் கையெ­ழுத்­துப் போட்டு அனுப்பி விட்­டார்.

இதையே உச்­ச­நீ­தி­மன்­றம் கேள்­வி­யா­கக் கேட்­டது. உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­பதி சந்­தி­ர­சூட், நீதி­ப­தி­கள் பர்­தி­வாலா, மனோஜ் மிஸ்ரா அமர்­வில் மாட்­டிக் கொண்­டார் பஞ்­சாப் ஆளு­நர். “சட்­டப்­பே­ர­வை­யில் நிறை­வேற்­றப்­பட்ட மசோ­தாக்­க­ளுக்கு ஒப்­பு­தல் வழங்­கு­மாறு ஆளு­ந­ருக்கு உத்­த­ர­வி­டக் கோரி உச்­ச­நீ­தி­மன்­றத்தை அணுக வேண்­டிய கட்­டா­யத்­துக்கு மாநில அர­சு­கள் தள்­ளப்­பட்டு இருப்­பது கவலை அளிப்­ப­தாக உள்­ளது.

 இப்­பி­ரச்­சினை உச்­ச­நீதி மன்­றத்­துக்கு வந்த பிறகு தான் ஆளு­நர்­கள் செயல்­ப­டு­கி­றார்­கள். இதே போலத்­தான் முன்பு தெலுங்­கானா ஆளு­ந­ரும் நடந்து கொண்­டார். 

மாநில அரசு அனுப்­பும் மசோ­தாக்­களை ஆய்வு செய்­ய­லாம். ஆனால் வழக்கு உச்­ச­நீ­தி­மன்­றத்­துக்கு வரு­வ­தற்கு முன்­பாக ஒப்­பு­தல் தர வேண்­டும்” என்று சொன்ன நீதி­ப­தி­கள்...

“தாங்­கள் மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிர­தி­நி­தி­கள் அல்ல என்­பதை ஆளு­நர்­கள் மறந்­து­வி­டக் கூடாது” என்று எச்­ச­ரிக்­கை­யா­க­வும் கிண்­ட­லா­க­வும் சொல்லி இருக்­கி­றார்­கள். மாநில ஆளு­நர்­க­ளுக்கு முத­லில் அறி­வு­றுத்த வேண்­டி­யது இது­தான். 

இது ஒரு நிய­ம­னப் பதவி. தங்­களை அண்டி இருப்­ப­வர்­களை திருப்­திப்­ப­டுத்து வதற்­கா­கத் தரப்­ப­டும் டம்மி பதவி. ‘இது ஒரு வேஸ்ட்­டான பதவி’ என்று தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஒரு முறை சொன்­னார்­கள். அது­தான் உண்மை. 

‘நீயே அயிரை மீன், உனக்கு ஏன் விலாங்­குச் சேட்டை?’ என்று ஒரு முது­மொழி உண்டு. அதனை ஆளு­நர்­க­ளாக வரு­ப­வர்­கள் உணர்­வது இல்லை.

தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தால் நிறை­வேற்றி அனுப்பி வைப்­பட்ட 14 சட்­ட­முன் வடி­வு­க­ளுக்கு அனு­மதி தரா­மல் ஊர் சுற்­றிக் கொண்டு இருக்­கி­றார் ஆளு­நர் ரவி. இது­போல் 8 மசோ­தாக்­க­ளுக்கு அனு­மதி தரா­மல் கேரள ஆளு­நர் ஆரீப் முக­மது கான் அனு­மதி தர­வில்லை. மேலும் எல்லா மசோதாக்களையும் முதலமைச்சர்  நேரில் கொண்டுவர வேண்டும் எனத் திமிராகவும் கூறியிருக்கிறார்.

இதற்கும் கேரள அரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

வழக்கு போட்ட பிறகு பஞ்­சாப் ஆளு­நர் பன்­வா­ரி­லால் செயல்­ப­டத் தொடங்கி இருக்­கி­றார். இந்த வழக்­கு­கள் அனைத்­தும் மொத்­த­மாக வரும் 10 ஆம் தேதி விசா­ர­ணைக்கு வர இருக்­கின்­றன. இதன்­பி­ற­கா­வது தமிழ்­நாடு ஆளு­நர் திருந்­து­வாரா?இல்லை.சங்கியாகவேத் தொடருவாரா??

பொறுத்திருந்து பார்ப்போம்!

---------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?