ஆழிப்பேரலை

 புதிதாக மது குடிக்க வரும் நபர்களை கண்டறிந்து கவுன்சிலிங் கொடுக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு சார்பில் சன்மானம். - அமைச்சர் முத்துசாமி .

முதலமைச்சர்மு.க.ஸ்டாலினுக்குவைரஸ் காய்ச்சல் பாதிப்பு.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தமிழகத்தில் ஜிகா வைரஸ் இல்லை.

ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டம்.

வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதை அடுத்து, முதல்கட்ட #வெள்ள அபாய எச்சரிக்கை

"மீனவர்களை மீட்க ஒன்றிய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது" - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

------------------------------------------------

 ஆழிப்பேரலை

விழிப்புணர்வு தினம்.

World Tsunami Awareness Day 2023 :

2004ம் ஆண்டு இந்தியாவை உலுக்கிய சுனாமியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடவே முடியாது.

 அதன் ரணங்களில் இருந்து இருபது ஆண்டுகளை நெருங்கும் வேளையிலும் மீளவே முடியவில்லை என்பதுதான் உண்மை. பல நாடுகளை தாக்கி, பல லட்சம் உயிர்களை கொள்ளைகொண்ட சுனாமி என்ற பெயர் நமக்கு அப்போது மிகவும் புதியது. இந்திய பெருங்கடலையே ஸ்தம்பிக்க வைத்த மகா யுத்தம் என்றே அதை கூறலாம்.

கடலில் ஏற்படுகிற 6ரிக்டர் தாண்டிய நிலநடுக்கத்தால்நீரோட்டம் மாறுவதால் ஏற்படும் தொடர் ராட்சத அலைகள் சுனாமி என்று அழைக்கப்படுகிறது. 

இது கடல் மற்றும் பெருங்கடல் போன்ற மிகப்பெரிய அளவிலான நீர் நிலைகளில் ஏற்படுகிறது.

 எனவே சுனாமி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.

இந்த இயற்கை பேரழிவின் ஆபத்துக்களை கூறி, மக்கள் தங்களையும், தங்கள் உறவினர்களையும் காத்துக்கொள்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம்.

இந்த இயற்கை பேரழிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாள் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.

 இந்தாண்டு இந்த நாளை கடைபிடிக்கும் வேளையில் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சுனாமி விழிப்புணர்வு நாள் நவம்பர் 5ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

 அதற்கானவரலாறு

ஜப்பான் மொழியில், இன்அம்யூரா-நோ-ஹி என்பதன் பொருள், வைக்கோல்களை எரிப்பது என்பதாகும். 

1854ம் ஆண்டு நவம்பர5 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ஒரு விவசாயி ஒரு பேரலை வருவதை பார்த்தார்.

 அது சுனாமி வருவதற்கான தெளிவான அறிகுறியாகும். அவர் பின்னர் தான் அறுவடை செய்த பயிர்களை எரித்து, கிராம மக்களுக்கு அந்த பேரிடர் குறித்து அறிவுறுத்தினார். ஜப்பானின் இந்த கதையை பெருமைப்படுத்தும் வகையில், நவம்பர் 5ம் தேதி, உலக சுனாமி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?