தோல்வி பயம்தான்

 குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம்.ரூ.500க்கு காஸ் சிலிண்டர். சத்தீஸ்கரில் பா.ஜ.க, வாக்குறுதி.

படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான பாஜகவை சேர்ந்தவரும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியாக என்பவர் சுய விளம்பரத்திற்காக பஸ் படிகட்டில் பயணம் செய்த சிறுவர்களை தரக்குறைவாக பேசியும், தாக்கியும், பேருந்து நடத்துனரையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.அதை முழுமையாக படமெடுத்து வலைதனங்களிலும் வெளியிட்டு விளம்பரபடுத்தினார்.இதனால்கல்லூரி செல்ல முடியாத மாணவர்கள்,நடத்துநர்,ஓட்டுநர் பெற்றோர் குற்றசாட்டு புகாரினால் நடிகைமீதுகாவல்துறை 5பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பாஜக நடிகையை கைது செய்தனர்.

சென்னையில் நலம் நடை(ஹெல்த் வாக்) திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

ஆன்லைன் சூதாட்ட'மகாதேவ் ஆப்' நடத்துபவர்கள் மூலம் சட்டீஸ்கர் முதல்வர் ரூ.508 கோடி பெற்றுள்ளார் அமலா குற்றச்சாட்டு.

‘மை லார்ட்’ என்பதை நிறுத்தினால் சம்பளத்தில் பாதியை தருகிறேன்: உச்ச நீதிமன்ற நீதிபதி கோபம்.

கனமழை காரணமாக சென்னை, நெல்லை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

நேபாளத்தில் நள்ளிரவில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 72 பேர் உயிரிழப்பு.

கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் பழைய விதிகள்படி சசிகலா வழக்கு தொடர #முடியாது.இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தரப்பில் ஐகோர்ட்டில் வாதம்.

---------------------------------

தோல்வி பயம்தான் காரணம்.

இந்தியாவில்எதிர்க்­கட்சி எம்.பி.க்களின் செல்­போன்­கள் ஒட்­டுக் கேட்­கப்­ப­டு­வ­தாக ஆப்­பிள் நிறு­வ­னம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. 

ஐபோன் பயன்­ப­டுத்­தும் எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள், பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு ஆப்­பிள் நிறு­வ­னம் அனுப்­பி­யுள்ள செய்­தி­யால் அதிர்ச்சி ஏற்­பட்­டுள்­ளது.

மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் பொதுச் செய­லா­ளர் சீதா­ராம் யெச்­சூரி, சமாஜ்­வாதி கட்­சித் தலை­வர் அகி­லேஷ், காங்­கி­ரஸ் எம்.பி., சசி­த­ரூர், காங்­கி­ரஸ் செய்­தித் தொடர்­பா­ளர் பவன் கேரா, திரி­ணா­முல் காங்­கி­ரஸ் எம்.பி., மகுவா மொய்த்ரா, சிவ­சேனா கட்­சி­யின் உத்­தவ் தாக்­கரே பிரி­வைச் சேர்ந்த பிரி­யங்கா சதுர்­வேதி, ஆம் ஆத்மி கட்­சி­யின் ராகவ் சத்தா எம்.பி. மற்­றும் ராகுல் காந்தி அலு­வ­ல­கத்­தில் பணி­பு­ரி­யும் 3 பேர் உள்­ளிட்­டோ­ருக்கு ஆப்­பிள் போன் நிறு­வ­னம் இது­பற்­றிய எச்­ச­ரிக்­கைக் குறுஞ்­செய்தி அனுப்­பி­யுள்­ளது. 

அர­சி­யல் தலை­வர்­கள் மட்­டு­மின்றி மூத்த பத்­தி­ரி­கை­யா­ளர் சித்­தார்த் வர­த­ரா­ஜன் உள்­ளிட்­டோ­ரின் செல்­போன்­க­ளும் ஒட்­டுக் கேட்­கப் பட்­டுள்­ளன.

‘அர­சின் ஏற்­பாட்­டில் செல்­போன்­கள் ஒட்­டுக் கேட்­கப்­ப­டு­வ­தாக’ ஆப்­பிள் நிறு­வ­னத்­தில் இருந்து எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­கள் பயன்­ப­டுத்­தும் ஐ – போன் மற்­றும் மின்­னஞ்­சல்­களை அர­சின் உதவி பெறும் அமைப்­பால் ‘ஹேக்’ செய்ய முயற்சி செய்­யப் பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

இதன்­மூ­லம் பா.ஜ.க.வின் கெட்ட அர­சி­யல் அம்­ப­ல­மாகி உள்­ளது.

ஜன­நா­யக நாட்­டில் சுதந்­தி­ரம் பறிக்­கப்­ப­டு­வ­தாக குற்­றம்­சாட்­டி­யுள்ள அகி­லேஷ், “இப்­படி துப்­ப­றிந்து என்ன சாதிக்­கப் போகி­றீர்­கள்?” எனக் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

 எதிர்க்­கட்­சித் தலை­வர்­க­ளின் செல்­போன்­கள் ஒட்­டுக் கேட்­கப்­­படு­வ­தற்கு கண்­ட­னம் தெரி­வித்­துள்ள காங்­கி­ரஸ் முன்­ன­ணித் தலை­வர் ராகுல் காந்தி, “செல்­போன் ஒட்­டுக்­கேட்­பது நேர்­மை­யா­ன­வர்­கள் செய்­யும் செயல் அல்ல, குற்­ற­வா­ளி­கள் செய்­யும் செயல்” என்று விமர்­சித்­துள்­ளார். 

“எவ்­வ­ளவு ஒட்­டுக்­கேட்­டா­லும் எங்­க­ளுக்கு அச்­ச­மில்லை” என­வும் அவர் கூறி­யுள்­ளார்.

எதிர்க்­கட்­சித் தலை­வர்­க­ளின் செல்­போன்­கள் ஒட்­டுக் கேட்­கப்­ப­டு­வ­தாக ஆப்­பிள் நிறு­வ­னம் தெரி­வித்­துள்ள குற்­றச்­சாட்டு குறித்து விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­டப் பட்­டுள்­ள­தாக ஒன்­றிய அரசு தெரி­வித்­துள்­ளது. 

இப்­பு­கார்­கள் குறித்த விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்­கும்­படி ஆப்­பிள் நிறு­வ­னத்­திற்­கும், எதிர்க்­கட்­சித் தலை­வர்­களுக்­கும் கடி­தம் அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக ஒன்­றிய தக­வல் தொடர்­புத்­துறை அமைச்­சர் அஸ்­வினி வைஷ்­ணவ் கூறி­யுள்­ளார். “இதை விட கேலிக்­கூத்து இருக்க முடி­யாது” என்று தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் விமர்­சித்­துள்­ளார்­கள். 

குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­களே விசா­ரணை நடத்­து­வ­தா­கச் சொல்­வதை அவர் விமர்­சித்­துள்­ளார்.

பா.ஜ.க. அரசு மீது இத்­த­கைய குற்­றச்­சாட்­டு­கள் வரு­வது புதி­தல்ல. 

மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக பெகா­சஸ் பூதம் கிளம்­பி­யதை யாரும் மறந்­தி­ருக்க முடி­யாது.

இஸ்­ரே­லைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறு­வ­னத்­தின் பெகா­சஸ் மென்­பொ­ருள் மூலம் உல­கம் முழு­வ­தும் உள்ள மனித உரி­மைப் போரா­ளி­கள், பத்­தி­ரி­கை­ யா­ளர்­கள், தொழி­ல­தி­பர்­கள், அர­சி­யல்­வா­தி­கள் உள்­ளிட்ட 50 ஆயி­ரம் பேரின் செல்­போன் தக­வல்­கள் திரு­டப்­பட்­டுள்­ள­தாக ‘தி கார்­டி­யன்’, ‘வாஷிங்­டன் போஸ்ட்’ ஆகிய இதழ்­கள் செய்தி வெளி­யிட்டு, 2021 ஆம் ஆண்டு ஜூலை­யில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யன.

இந்­தி­யா­வைச் சேர்ந்த இணைய தள செய்தி நிறு­வ­ன­மான ‘தி வயர்’, இந்­தி­யா­வில் 40 பத்­தி­ரி­கை­யா­ளர்­கள், 2 மத்­திய அமைச்­சர்­கள் உட்­பட 300 பேரின் ஸ்மார்ட்­போன் தக­வல்­கள் திரு­டப்­பட்­ட­தா­கத் தெரி­வித்­தது.

 இதில் அமைச்­சர்­கள், எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள், பத்­தி­ரி­கை­யா­ளர்­கள், விஞ்­ஞா­னி­கள், மனித உரி­மைப் போரா­ளி­கள் ஆகி­யோ­ரது ஸ்மார்ட்­போன் எண்­க­ளும் அடங்­கும். இந்­தச் செய்தி வெளி­யா­ன­தும், “நாங்­கள் சட்­டத்­துக்­குப் புறம்­பாக எதை­யும் செய்­ய­வில்லை” என்று ஒன்­றிய அமைச்­சர் அஸ்­வினி அப்­போது மறுத்­தார்.

“அர­சு­க­ளுக்கு மட்­டுமே பெகா­சஸ் மென்­பொ­ருள் விற்­கப்­பட்­டுள்­ளது. சீன அரசோ, பாகிஸ்­தான் அரசோ இந்­தி­யக் குடி­மக்­களை உளவு பார்க்க முடி­யாது. 

இது தேச பாது­காப்பு சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ரம் என்­ப­தால் நாடாளுமன்ற கூட்­டுக் குழு விசா­ரணை வேண்­டும்” என்று எதிர்க்­கட்­சி­கள் அப்­போது கோரிக்கை வைத்­தன.

“தொலை­பேசி ஒட்­டுக் கேட்பு புகார் குறித்து நாடாளு மன்­றத்­தில் உள்­துறை அமைச்­சர் அமித்ஷா விளக்­கம் அளிக்க வேண்­டும். இஸ்­ரேல் நிறு­வ­னத்­து­டன் மோடி அர­சுக்­குத் தொடர்பா? 

இல்­லையா? 

என்­ப­து­பற்றி விளக்க மளித்­தால் நல்­லது. இல்­லா­விட்­டால் அமெ­ரிக்­கா­வின் வாட்­டர்­கேட் ஊழல் போல இது தலை­வ­லி­யாக மாறும்” என்று சுப்­பிர மணி­யன் சுவா­மியே அப்­போது சொன்­னார்.

மென்­பொ­ருள் விற்­ப­னை­யில் முறை­கேடு, அரங்­கே­றி­ய­தா­கக் கூறப்­ப­டு­ வதை மறுத்த என். எஸ்.ஓ. நிறு­வ­னம், “ஜன­நா­ய­கம் இல்­லாத நாடு­க­ளுக்கு அந்த மென்­பொ­ருளை விற்­பனை செய்­வ­தால் எழுந்த விமர்­ச­னங்­க­ளைப் பொருட்­ப­டுத்­தத் தேவை­யில்லை” என்று விளக்­க­ம­ளித்­தது. 

அதா­வது, இவர்­கள் யார் போனை­யும் ஒட்­டுக் கேட்­பார்­கள். அதனை சகித்­துக் கொள்­வ­து­தான் ஜன­நா­ய­கம் என்று இந்­தி­யா­வுக்­குக் கற்­றுக் கொடுக்­கப் பார்த்­தது அந்த நிறு­வ­னம்!

இது­கு­றித்து வழக்­க­றி­ஞர் எம்.எல்.சர்மா என்­ப­வர் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்கு தாக்­கல் செய்­தார். ஓய்வு பெற்ற உச்­ச­நீ­தி­மன்ற நீதி­பதி ஆர்.வி.ரவீந்­தி­ரன் தலை­மை­யில் மூவர் குழுவை உச்­ச­நீ­தி­மன்­றம் அமைத்­தது.

 இக்­குழு 2022 ஆகஸ்ட் 26 அன்று தனது அறிக்­கை­யைத் தாக்­கல் செய்­தது. அதி­லா­வது ஏதா­வது உண்மை வெளி­வந்­ததா என்­றால் இல்லை. 

அந்­தக் குழு தனது அறிக்­கை­யில், “விசா­ர­ணைக்கு ஒன்­றிய அரசு ஒத்­து­ழைக்­க­வில்லை” என்று தெரி­வித்­தது.

மேலும், அந்­தக் குழு­வின் அறிக்கை குறித்து உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­பதி என்.வி.ரமணா , “உளவு மென்­பொ­ருள் பற்றி ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­ட­தில் 29 தொலை­பே­சி­க­ளில்5-–ல் மட்­டுமே உளவு மென்­பொ­ருள் இருந்­தது. 

ஆனால், அவை­யும் பெகா­சஸ் உளவு மென்­பொ­ருள்­தானா என்­பது உறு­தி­யா­க­வில்லை” என்­றார்.

‘அரசு ஒத்­து­ழைக்­க­வில்லை’ என்று நிபு­ணர் குழு கூறி­ய­தைப் பற்றி உச்­ச நீ­தி­மன்ற தலைமை நீதி­பதி சுட்­டிக் காட்டி கண்­ட­னத்­தைத் தெரி­வித்­தார்.

 “இங்கே எப்­படி ஒத்­து­ழைக்க வில்­லையோ அதே­போல் அங்கே விசா­ரணை ஆணை­யத்­தி­லும் மத்­திய அரசு ஒத்­து­ழைக்­க­வில்லை போல” என்­றார். அதற்கு அர­சுத் தரப்பு சொலி­சிட்­டர் ஜென­ரல், ‘அது பற்றி தனக்­குத் தெரி­யாது’ என்று கூறி­னார். 

அத்­தோடு இந்த வழக்கேகிடப்­பில் போடப்­பட்­டது.

இந்த நிலை­யில் இப்­போது, ‘ஆப்­பிள் பூதம்’ கிளம்பி இருக்­கி­றது. இது தொடர்­பான விசா­ர­ணை­யி­லும் உண்மை எது­வும் வெளி­யில் வரப் போவது இல்லை. 

ஆனால், முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் சொன்­ன­தைப் போல, ‘பா.ஜ.க.வின் தோல்வி பயம்’ வெளி­யில் வந்­துள்­ளது.

------------------------------------------------


• உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை ஷாஜகான் கட்டினாரா என்பதை ஆய்வு செய்வது பற்றி பரிசீலனை செய்வதாகத் தொல்லியல் துறை தில்லி உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தாஜ்மகால் முகலாய மன்னர் ஷாஜகானால் கட்டப்படவில்லை என தில்லி உயர்நீதிமன்றத்தில் இந்துசேனா வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

*தேசிய தலைநகரில் காற்றின் தரம் மோச மடைந்து வருவதால் காற்று சுத்திகரிப்பு இயந்திரங்களின் (ஏர் பியூரி பையர்கள்) விற்பனை அதிகரித்துள்ளது. 

*உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில்  உள்ள சரூர்பூர் கலான் கிராமத்தில் மசூதி ஒன்றின் சுவர்கள் மற்றும் கதவுகளில் “ஜெய் ஸ்ரீராம்” வாசகம் எழுதப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*உத்தரப்பிரதேசத்தின் நொய்டா நகரில் நடந்த  பார்ட்டி ஒன்றில் பாம்புகளையும், அவற்றின் விஷத்தையும் போதைக்காகப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் போலீ சார் 5 பேரை கைது செய்துள்ளனர்.

* மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் (ஐஐடி சம்பவம்) கூட  பெண்களுக்கு பாதுகாப்பில்லா சூழல் நிலவிவரு கிறது என காங்கிரஸ் பொதுச்செயலாளார் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

*ஆஸ்கர் விருதுகள் வழங்கும் மற்றும் அதனை மேற்பார்வையிடும் அமைப்பான அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ்  குழுவில் தெலுங்கு நடிகர் ராம்சரண் இணைந்திருக்கிறார்.

*ஒரு நாளில் 20 முறைக்கும் அதிகமாக செல்போ ன்களை பயன்படுத்தும் இளைஞர்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் 21% கூடுதலாக இருப்பதாக புதிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

*உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள தலைமை மருத்துவ அதிகாரி அலுவலக வளாகத்தில் வெள்ளியன்று குளோரின் வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?