பணம் தந்தலரை சொல்ல முடியாது?

 கேள்வித்தாள்களை மாற்றி வழங்கியதாக தேர்வர்கள் புகார்.சிவில் நீதிபதி மெயின் தேர்வில் குளறுபடி.

வெளிப்படையாக அல்லது மறைமுக கட்டணமாக வந்தாலும் சரி அதிமுக, பாஜவுக்கு எந்த தொகுதியிலும் டெபாசிட் கிடைக்கக்கூடாது: வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சித் பாசறை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் உடல் நலக் குறைவால் காலமானார்.

விழுப்புரம் அருகே இன்று காலை வெடிமருந்து வெடித்து சிதறியது பைக், கடை எரிந்து சேதம்.

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை.

ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றபோது பணம் வராமலேயே பணம் எடுத்ததற்கான எஸ்எம்எஸ் வந்ததால் ஆத்திரம்.ஏடிஎம் எந்திரத்தை தாக்கியவர்கள் கைது.

தேனி வராக நதியில் கடும் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை.

அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக வருமானவரி சோதனை.

திருப்பூரை திவாலாக்கியபாஜக மோடி அரசு! DEMONETIZATION, GST என திருப்பூரை அழித்துவிட்டு, கோடி கோடியாய் T-SHIRT களை திருப்பூரில் வாங்காமல் முஸ்லீம் நாடு பங்களாதேசிலிருந்து இறக்குமதி செய்யும் பாஜக அரசு.


பணம் தந்தலரை சொல்ல முடியாது?

“எங்­க­ளுக்கு யார் நன்­கொ­டை­கள் வழங்­கி­யது என்­பதை மக்­கள் தெரிந்து கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மில்லை” – என்ற ‘ஊழல் மலிந்த’ பதிலை ஒன்­றிய பா.ஜ.க. அரசு உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் சொல்லி இருக்­கி­றது. இது­தான் பா.ஜ.க. அர­சின் உண்­மைத்­தன்மை ஆகும்.இதற்கு தேர்தல் ஆணையம் ஒத்தூதுவது வேதனை தரும் வேடிக்கை.

தேர்தல் நேம் பணம் இவ்வளவுதான் கொண்டு செல்ல வேண்டும் என கண்டுகாட்டும் தேர்தல் ஆணையம்தான் பாஜக வின் தேர்தல் பத்திர முறைகேடுகளுக்குத் துணை போகிறது.

தேர்­தல் பத்­தி­ரங்­க­ளுக்கு எதி­ரான வழக்கு விசா­ரணை உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­பதி எஸ்.ஏ. சந்­தி­ர­சூட் தலை­மை­ யி­லான 5 நீதி­ப­தி­கள் அடங்­கிய அர­சி­யல் சாசன அமர்வு முன் நடை­பெற்­றது.

வழக்­க­றி­ஞர் கபில் சிபல் உள்­ளிட்­டோர், தேர்­தல் பத்­தி­ரம் மூலம் நன்­கொடை பெரும் அர­சி­யல் கட்­சி­கள் அதனை தேர்­த­லுக்கு மட்­டுமே பயன்­ப­டுத்த வேண்­டும் என்ற விதி­முறை இல்லை என்­றும், அதனை எதற்கு வேண்­டு­மா­னா­லும் செலவு செய்­யும் நிலை உள்­ள­தாக தெரி­வித்­த­னர். 

தேர்­தல் பத்­திர நடை­மு­றையை முழு­மை­யாக ரத்­து­செய்ய வேண்­டும் என்று அவர்­கள் வாதிட்­ட­னர்.

ஒன்­றிய அர­சின் சொலி­சிட்­டர் ஜென­ரல் துஷார் மேத்தா அப்­போது என்ன சொன்­னார் தெரி­யுமா?

“நன்­கொடை யார் வழங்­கி­யுள்­ள­னர் என்­பது அத­னைப் பெறும் கட்­சிக்கு மட்­டுமே தெரி­யும். மற்ற கட்­சி­க­ளுக்கு தெரி­யா­மல் ரக­சி­யம் காப்­ப­து­தான் இந்த திட்­டம்” என்று குறிப்­பிட்­டார். அப்­போது, குறுக்­கிட்ட தலைமை நீதி­பதி எஸ்.ஏ.சந்­தி­ர­சூட் தலை­மை­யி­லான அமர்வு, ‘’அப்­ப­டி­யா­னால் வாக்­கா­ளர்­க­ளின் உரிமை என்ன? 

ஏன் நன்­கொடை விப­ரங்­களை வாக்­கா­ளர்­கள் தெரிந்­து­கொள்­ளக் கூடாது?” என்று கேள்வி எழுப்­பி­னர்.

தேர்­தல் ஆணைய வழக்­க­றி­ஞ­ரி­ட­மும் உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­தி­கள் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­னார்­கள்.” தேர்­தல் பத்­திர நடை­ மு­றை­யால் பாதிப்பு எது­வும் உள்­ளதா? அது குறித்து ஆய்­வு­கள் எது­வும் நடத்­தப்­பட்­டதா? இது­வரை பெறப்­பட்­டுள்ள நன்­கொடை தொகை எவ்­வ­ளவு?

 என்­பது உள்­பட பல கேள்­வி­க­ளுக்கு தேர்­தல் ஆணை­யம் உரிய பதிலை அளிக்­க­வில்லை” என நீதி­ப­தி­கள் தெரி­வித்­த­னர்.

ஒன்­றிய அர­சின் அட்­டர்னி ஜென­ரல் வாதி­டும் போது, “பொது­மக்­கள் எதை வேண்­டு­மா­னா­லும் எதைப் பற்­றி­யும் தெரிந்து கொள்­ளும் நிலை இருக்­கக் கூடாது.

 நியா­ய­மான கட்­டுப்­பா­டு­கள் தேவை” என்று குறிப்­பிட்டு இருக்­கி­றார்.

“சில நிறு­வ­னங்­கள் மொத்த வரு­வா­யை­யும் அர­சி­யல் நன்­கொ­டை­யாக வழங்­கு­வதை அனு­ம­திப்­பது ஏன்? முன்பு நிகர லாபத்­தில் ஒரு­ப­கு­தி­தான் நன்­கொ­டை­யாக வழங்க முடி­யும் என்ற விதி­முறை இருந்­தது. தற்­போது லாபம் இல்­லாத நிறு­வ­னங்­கள் கூட மொத்த வரு­வா­யை­யும் நன்­கொ­டை­யாக வழங்க முடி­யும் என்று மாற்­றப்­பட்­டுள்­ளது. 

நிறு­வ­னம் நடத்­து­வது நன்­கொடை வழங்­கு­வ­தற்­காக அல்ல. இதனை சரி­செய்ய நிறு­வ­னங்­கள் சட்­டத்­தில் திருத்­தம் தேவை. 

இது­போன்ற பிரச்­சி­னை­களை சரி­செய்ய ஒரு சம­நி­லை­யான நன்­கொடை திட்­டத்தை உரு­வாக்­க­லாம். அது எப்­ப­டிப்­பட்­ட­தாக இருக்க வேண்­டும் என்­பதை அர­சும், நாடா­ளு­ மன்­ற­மும்­தான் முடிவு செய்ய வேண்­டும்” என்று உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­தி­கள் தெரி­வித்­த­னர்.

இத­னைத் தொடர்ந்து, கடந்த செப்­டம்­பர் 30 ஆம் தேதி வரை வரை­யி­லான நன்­கொடை மொத்த விப­ரங்­களை தாக்­கல் செய்ய வேண்­டும் என்­றும் அர­சி­யல் கட்­சி­கள் தாக்­கல் செய்த விப­ரங்­கள் முழு­மை­யாக இல்லை என்­றால் இந்­திய ஸ்டேட் வங்­கி­யி­ட­ மி­ருந்து தக­வல்­க­ளைப் பெற்று 2 வாரத்­தில் நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்ய வேண்­டும் என்று நீதி­ப­தி­கள் கூறி­னர்.

அர­சி­யல் கட்­சி­கள் தேர்­தல் செல­வு­க­ளுக்­கான நன்­கொ­டை­கள் பெறு­வ­தற்கு தேர்­தல் பத்­திர விற்­ப­னையை ஒன்­றிய பா.ஜ.க. அரசு 2018 ஆம் ஆண்டு நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது. கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள் தங்­கள் அடை­யா­ளத்தை மறைத்து நன்­கொடை வழங்க இது ஊக்­கப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது என்று குற்­றம் சாட்­டப்­பட்­டது. 

இதனை எதிர்த்து சில அமைப்­பு­கள் உச்­ச­நீ­தி ­மன்­றத்­தில் வழக்கு தாக்­கல் செய்­தது. ஒரு குடி­ம­க­னுக்கு இருக்­கும் தெரிந்து கொள்­ளும் உரி­மையை மீறு­வ­தாக இது உள்­ளது என்­கின்­றன இந்த மனுக்­கள்.

2016 முதல் 2022 வரை­யி­லான ஆண்­டு­க­ளில் பா.ஜ.க. மட்­டும் ரூ.5,272 கோடி நன்­கொடை பெற்­றுள்­ளது. இது மொத்த நிதி­யில் 58 சத­வி­கி­தம் ஆகும். ஜன­நா­யக சீர்­தி­ருத்­தங்­க­ளுக்­கான சங்­கம் என்ற அமைப்பு இதனை ஆய்வு செய்து அறிக்கை அளித்­துள்­ளது. பா.ஜ.க. பெற்­றுள்ள ரூ.5,272 கோடி­யில் 52 விழுக்­காடு தொகை தேர்­தல் பத்­தி­ரங்­கள் மூல­மாக வந்­துள்­ளது என்று குறிப்­பிட்­டுள்­ளது.

இத­னால்­தான் மக்­கள் தெரிந்து கொள்­ளக் கூடாது என்­கி­றது பா.ஜ.க.

-------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?