அடுத்த” திகார்” பயணி..?


ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் தயாநிதி தனது அமைச்சர் பதவியைவிட்டு இன்று [07-07-11]பிற்பகல் விலகினார். தயாநிதி விலகல் கடிதம் கொடுத்ததை பிரதமர் அலுவலகமோ, தி.மு.க.,தலைமையோ இதுவரை  அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.  தி.மு.க., தலைவர் கருணாநிதியுடன் தயாநிதி ஆலோசனை நடத்தியதாகவும், இதன் பின்னர் அமைச்சரவையில் இருந்து விலகல்கடிதம் கொடுத்ததாகவும் தெரிகிகிறது.

2004- 2007 ஆம் ஆண்டு கணக்கில் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது ஏர்செல் நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுத்ததாககுற்றச்சாட்டு தயாநிதி மீது உள்ளது.
                           


இதை அடுத்து ஏர்செல் நிறுவனர் சிவசங்கரனிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றது. இதில் தயாநிதி தமக்கு அலைவரிசை ஒதுக்காமல் காலம் தாழ்த்தினார். இதனால் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மாக்ஸிஸ் நிறுவனத்திடம் விற்க வேண்டியதாயிற்று. விற்ற உடன் இந்த நிறுவனத்திற்கு உடனடியாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று கூறியிருந்தார். இந்த காலத்தில்தான் சன் டி.டி.எச்., நிறுவனத்தில்., மாக்ஸிஸ் துணை நிறுவனம் ரூ. 600 கோடியை முதலீடு செய்தது எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., வக்கீல் இது தொடர்பான விசாரணை அறிக்கையை நேற்று தாக்கல் செய்தார். இதில் தயாநிதி மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் தயாநிதி எந்நேரமும்பதவி விலகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.  பிற்பலில் பிரதமரை சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்தார். பிரதமர் இல்லத்தில் இருந்து வெளியே வந்த தயாநிதி பத்திரிகையாளர்களிடம் பேச மறுத்து விட்டு சென்று விட்டார். முன்னதாக  காலையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தயாநிதி பங்கேற்றார்; ஆனால் பாதியிலேயே கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டார்.
இந்த படத்துக்கும் தயாநிதிக்கும் நீங்களாக தொடர்பு படுத்தி எண்ணிக்கொண்டால் ,அதற்கு ‘சுரன்’” பொறுப்பில்லை.


தயாநிதி மாறன் அமைச்சர் பதவிவிலகலைத் தொடர்ந்து சன்டிவியின் பங்குகள் சரிவடைந்துள்ளன. 


மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சன்டிவியின் பங்குகளின் விலையில் 8 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
 மற்றொரு நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்கு விலைகளில் 3 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
இது போதாதென்று செக்ஸ் சாமியார் நித்யானந்தாவும் தனது திருவிளையாடலைத் துவக்கி உள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி நித்யானந்தா தியான பீட தலைவர் ஸ்ரீநித்ய சர்வானந்தா சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.
அவருடன் நித்யானந்தாவின் சீடர்களும் வந்தனர். அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில் கூறியிருப்பதாவது: ”2.3.2010 அன்று சன் டிவியில் இரவு எங்கள் ஆன்மீக குரு சுவாமி நித்யானந்தரும், தமிழ் நடிகையும் இருப்பது போன்ற காட்சியை ஒளி பரப்பியது.
இது உண்மையானதல்ல. போலியாக தயாரிக்கப்பட்ட இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினார்கள். நித்யானந்தர் மீது அவதூறு பரப்பும் வகையில் இந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
இந்து மக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் இவ்வாறு அந்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. சேலம், நாமக்கல், கோவை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ராஜபாளையம், சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர் உள்பட எங்கள் பீடத்தின் கிளைகள் தமிழ்நாடு முழுவதும் உள்ளன.
அங்கு யோகா வகுப்புகளும், ஆன்மீக நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த பீடங்கள் மீது சன் டிவியின் உதவியுடன் குண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
ஆண், பெண் பக்தர்களையும் தாக்கினர். அங்கிருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. குறிப்பாக 3.3.2010 அன்று சேலம் பெரியபுதூர், அழகாபுரம், சீர்காழி, சட்டநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் உள்ள ஆசிரமங்களில் குண்டர்கள் புகுந்து சன் டிவி கேமிராமேன்கள் முன்னிலையில் தாக்குதல் நடத்தினார்கள்.
2ந் தேதியன்று திருவண்ணாமலை மற்றும் ராஜபாளையம் ஆசிரமங்களிலும் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. சன் டிவியின் தூண்டுதலின் பேரில்தான் இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
சன் டிவி மீண்டும் மீண்டும் அந்த காட்சிகளை ஒளிபரப்பியதால் எங்கள் பீடம் மீது மக்களுக்கு தவறான கருத்து உருவாகியது. இந்துக்கள் உணர்வு புண்படுத்தப்பட்டது.
முந்தைய ஆட்சியில் இது குறித்து புகார் செய்யப்பட்டபோது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களுடைய செல்வாக்கு காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே சன் டிவி நிர்வாக இயக்குனரும், தலைவருமான கலாநிதி மாறன், தலைமை செயல் அதிகாரி சக்சேனா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
                                    
                                         
    சாமியாரானாலும் நித்யானந்தா விவரமான ஆள்தான்.தயாநிதி-கலாநிதிக்கு எதிராக ஆடிக்காற்று அடிக்கையில் தானும் தப்பிக்கப் பார்க்கிறாரே?
 அரசியல்வாதிகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டார்.
 இப்போவுள்ள அரசு இவர்பக்கம் கருணை காட்டும் எனத்தெரிகிறது.அவர்களுக்கு காஞ்சி சங்கராச்சாரியாரைத்தானே பிடிக்காது,,,?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?