அமெரிக்காவை விட ஆப்பிள் பெருசு,

ஆயுர் வேதத்தில் நோய் எதிர்ப்பு[ஆண்டிபயாடிக்]மருந்துகள்.                                                           
நோயின் தன்மைக்கு ஏற்ப ஆன்டிபயாடிக் மருந்துகளின் பிரயோகங்களைச் செய்து, உடலில் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள கிருமித் தொற்று மற்றும் அது வளர்வதற்கு சாதகமான சூழ்நிலையை அழிக்க முற்படுவதே நவீன முறை சிகிச்சையின் நோக்கமாகும். இதுபோலவே ஆயுர்வேதத்திலும் நோய்களால் ஏற்படும் பாதகமான சூழ்நிலையை, நோய் எதிர்ப்புக்கு சாதகமாக மாற்றக்
 கூடிய மருந்துகள் பல உள்ளன. அவற்றில் சில -
 குளிர், கடுப்பு, வலி, தலை பாரம், மார்ச்சளி முதலியவற்றுடன் ஏற்படும் காய்ச்சலுக்கு, அதிலும் முக்கியமாகக் குளிருடன் ஆரம்பிக்கும் முறைக் காய்ச்சலுக்கு பத்து கருந்துளசி இலைகளையும் ஐந்து மிளகையும் வாயிலிட்டு மென்று சாப்பிட, ஆரம்ப நிலையிலேயே காய்ச்சல் தவிர்க்கப்பட்டுவிடும். உடல் கனம் குறைந்து வேதனைகள் நீங்கிவிடும். காய்ச்சல் வந்த பின் மிளகையும் துளசியையும் கஷாயமாக்கி தேன் சர்க்கரை கலந்து கொடுக்கலாம். அதுபோல துளசி, மிளகு, பழைய வெல்லம் மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டு, தினமும் காலை ஒரு கொட்டைப் பாக்கு அளவு தொடர்ந்து சாப்பிட்டு வர, மலேரியா, யானைக்கால் காய்ச்சல் வராது. அதிக வீரியமுடைய ஆன்டிபயாடிக் மருந்துகள் இந்த உபாதைகளுக்கு இன்று பெருமளவு கொடுக்கப்பட்டு வருகின்றன. துளசி மற்றும் மிளகை மூலப் பொருட்களாகக் கொண்ட சீதஜ்வராரி எனும் மாத்திரைகளையும் பயன்படுத்திக் குணமடையலாம்.
 ஓமத்தைத் துளசிச் சாற்றில் ஊற வைத்து நிழலில் உலர்த்தித் தூள் செய்து காலையில் வெறும் வயிற்றில் 5-8 கிராம் சாப்பிட, வயிற்றில் அஜீரணத்தாலும், வாயுவாலும் ஏற்படும் பொருமல், உப்புசம், வலி, அஜீர்ண பேதி, கீரைப்பூச்சிகள், பூச்சிகளால் ஏற்படும் பேதி முதலியவற்றுக்கு நல்ல குணம் கிடைக்கும். ஆன்டிபயாடிக் மருந்துகளின் தேவையே இருக்காது. வில்வாதி குளிகை எனும் மாத்திரை மருந்து இதுபோன்ற உபாதைகளில் பயன்படும் ஒரு சிறந்த ஆயுர்வேத ஆன்டிபயாடிக் மருந்தாகும்.
 பறங்கிச் சக்கை எனப்படும் மதுஸ்னுஹீ சூரணம் 2 - 3 ஸ்பூன் உருக்கிய நெய்யையும்விட்டுக் குழைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிட, சேற்றுப் புண், சிரங்கு, சொறி, கிருமி உபாதை போன்றவை நீங்கிவிடும்.
 தீப்புண் ஆறிய இடத்திலெல்லாம் சிலருக்குத் தோல் உரிந்து வெள்ளை வெளேரென்று ஆகிவிடும். 15 கிராம் வேப்பம்பட்டையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, 250 மில்லி ஆனதும் வடிகட்டி, அதில் கையிட்டுச் சிலுப்பினால் ஒரு நுரை வரும். அதைப் புண் வடுக்களின் மேல், ஒருநாளில் 3 - 4 முறை தேய்த்துவர, வடுக்கள் நீங்கி, பழைய நிறம் சீக்கிரத்தில் வந்துவிடும். விற்கப்படும் மருந்துகளில், சததெüதகிருதம் எனும் மருந்தையும் பூசலாம். எளிய ஆயுர்வேத ஆன்டிபயாடிக் மருந்தாகும்.
 சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் கிருமித் தொற்றுகளுக்கு வழங்கப்படும் ஆங்கில ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு மாற்றாக, ஏலக்காய் சூரணம், வால் மிளகின் சூரணம், நெரிஞ்சில் முள்ளின் சூரணம் இவற்றைத் தனித்தனியாகவோ, சம அளவில் சேர்த்தோ, இளநீருடன் சாப்பிட, விரைவில் குணம் உண்டாகும்.
 தோல் எரிச்சல், அரிப்பு, நீர்க்கசிவு, புண்ணில் சீழ்ப்பிடித்தல், ஆறாத புண், வாய்ப்புண் போன்ற உபாதைகளில் திக்தகம் அல்லது மஹாதிக்தகம் எனும் கஷாயம் ஆங்கில ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு நிகரான வேலையைச் செய்து குணப்படுத்தும்.
 "கல்யாணக்ஷôரம்' என்று ஓர் ஆயுர்வேத மருந்து இருக்கிறது. ஒரு சிட்டிகை மருந்துடன் சிறிது நெய் குழைத்து, சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். உடல் உட்பகுதிகளில் ஏற்படும் ரத்தக் குழாய் அடைப்பு, மூலம், குடலில் வாயு பந்து போன்று அடைத்திருத்தல், ரத்தசோகை, வயிற்றில் நீர் தங்கும் உபாதை, குடலில் கிருமி உபாதை, சிறுநீர்த்தடை, சிறுநீரகக் கற்கள், உடல்வீக்கம் , இதய உபாதைகள், சர்க்கரை உபாதை, மூச்சிரைப்பு, இருமல் போன்ற உபாதைகளைத் தீர்க்கும் ஒரு சிறந்த ஆயுர்வேத ஆன்டி பயாடிக் மருந்து கல்யாண க்ஷôரம்.
 தொடை இடுக்குகளில் ஏற்படும் கறுப்பு நிறம், அரிப்பு, படை, எரிச்சல் போன்ற உபாதைகளில் நால்பாமராதி தைலம் எனும் ஆயுர்வேத ஆன்டிபயாடிக் பயன்படுத்தலாம்.
 இப்படி எத்தனையோ ஆயுர்வேத ஆன்டிபயாடிக் மருந்துகள் இருந்தாலும் அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்று ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி செய்து கொள்வதுதான் மிகவும் நல்லது.
__________________________________________________________________________________
ஆப்பிளும்-அமெரிக்காவும்
அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் உள்ள ரொக்க இருப்பு அமெரிக்க அரசின் ரொக்க இருப்பை விட அதிகம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்பிள் நிறுவனத்திடம் 75.87 பில்லியன்(ஒரு பில்லியன்=100 கோடி) டொலர் ரொக்க இருப்பு உள்ளது. ஆனால் அமெரிக்க அரசின் கருவூலத்தில் 73.76 பில்லியன் டொலர் மட்டுமே ரொக்க இருப்பு உள்ளது.

அமெரிக்க அரசு தனது கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று குடியரசு, ஜனநாயக கட்சிகள் கோரிவருவதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவின் கருவூலம் அளித்த பதிலில் இருந்து இந்த விவரம் பெறப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசிடம் உள்ள ரொக்க இருப்பு இந்த அளவிற்குத்தான் என்பதால் கடன் உச்ச வரம்பை உயர்த்த முடியாது என்று பதிலளித்துள்ளது.

அமெரிக்க அரசிற்கு தற்போது 14.3 டிரில்லியன்(ஒரு டிரில்லியன்=1000 பில்லியன்) டொலர் உள்ளது. இதற்கு மேலும் கடன் வாங்கினால் அது அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதித்துவிடும் என்று அமெரிக்க கருவூலம் கூறியுள்ளது.

அமெரிக்க அரசி விட ஆப்பிள் அதிக நிதியை கையிருப்பாக வைத்திருப்பதுதான் உலக தாராளமயமாக்களின் வெளிப்பாடு.இன்று அமெரிக்க அதிபர் அரசு கையிருப்பை அதிகமாக்க உதவிட எதிர் கட்சிகளிடம் கெஞ்சுகிறார்.அவரின் பதவிக்கே இப்பிரச்னை ஆபத்தாகிவிட்டது.மங்களம் பாடும் நிலையில் உள்ளார்.
அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி அந்த நாட்டுடன் முடிந்து போவதில்லை.இந்தியா உட்படஉலகுக்கே போருளாதார வீழ்ச்சிஆபத்தை விளைவிக்கும்.அமெரிக்கா அந்த அளவு உலகநாடுகளை ஒவ்வொருவகையில் தன் வலையில் மாட்டி வைத்திருக்கிறது.அதனால்தான் ஐரொப்பிய நாடுகளும் கூட இந்த பொருளாதார வீழ்ச்சியைக்கண்டு ஆடிப் போய் உள்ளன.
   உலக வங்கியின் தலைவரும் உடனே இதற்கு முடிவு காண வேண்டும் என அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே அமெரிக்க பொருளாதார் வீழ்ச்சியினால் இந்தியாவிலும் வேலை வாய்ப்புகள் குறைந்தாலும் இந்தியாவும்-சீனாவும் அதை தாக்குப் பிடித்து நின்றன.ஆனால் அப்போது மத்திய அரசை இடதுசாரிகள் கண்காணித்து பல பொருளாதார முடிவுகளை மாற்ற் வைத்திருந்தினர்.
இப்போதோ கடிவாளம் இல்லாமல் முற்றிலும் அமெரிக்க ஆதரவு நடவடிக்கையில் மன்மோகன் அரசு சென்று விட்டது.எனவே இந்தியாவுக்கும் பாதிப்பு அதிகமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  


அமெரிக்காவின் கடன் பெறும் உச்ச வரம்பை உயர்த்தும் விஷயத்தில் விரைந்து முடிவெடுக்குமாறு அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விஷயத்தில் ஆளும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் இருவேறு கருத்துகளைக் கொண்டுள்ளனர். எனவே இறுதி முடிவை எட்ட முடியவில்லை.

இந்நிலையில் இது குறித்து ஒபாமா சனிக்கிழமை கூறியிருப்பது: இந்த விஷயத்தில் இரு கட்சியினரும் சேர்ந்து விரைவில் இறுதி முடிவுக்கு வர வேண்டும். அமெரிக்காவின் கடன் பெறும் உச்ச வரம்பை உயர்த்தாமல் நிலைமையைச் சமாளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
முன்னதாக ஆளும் ஜனநாயகக் கட்சியினர் அதிகம் உள்ள, பிரதிநிதிகள் அவையில் கடன் உச்ச வரம்பை உயர்த்துவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அதிகம் உள்ள செனட்டில் மசோதா நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அதிபர் ஒபாமா எதிர்க்கட்சியினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த மசோதா நிறைவேற்றப்படாவிட்டால் அமெரிக்காவில் பெரும் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படும்.
_________________________________________________________________________                                       
ஈழப் பிரச்னைக்குத் தீர்வு?  பிரகாஷ் காரத்.


”இலங்கைத் தமிழர்களுக்கு சமஉரி மையும் சம வாய்ப்பும் வழங்கவேண் டும் என்ற முக்கியமான கோரிக்கை எழுந்துள்ள நிலைமையில் இந்த மாநாடு நடைபெறுவது குறிப்பிடத் தக்கது. இலங்கையில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் தமிழ்மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. இலங்கை யில் இனப் பிரச்சனையால் ரத்த ஆறு ஓடியதும், அதனால் ஆயிரக்கணக் கான மக்கள் கொல்லப்பட்டதும் நாமறிவோம். இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக அந்த நாட்டில் நீடித்து வரும் பிரச்சனையாகும். இலங்கை யின் வரலாற்றை நாம் உற்று நோக்கிப் பார்த்தால் அந்த நாட்டில் சுதந்திரத் திற்கு பின்னர் சிங்களர், தமிழர் என இரு பிரிவு மக்கள் வசித்து வந்தாலும் தமிழர்களுக்கு சமவாய்ப்பும் சம உரி மையும் வழங்கப்படவில்லை. தமிழர் களின் சமூக கலாச்சார உரிமைகள் மறுக்கப்பட்டே வந்துள்ளன.

இலங்கை நாடு ஒன்றுபட்டு இருக்கவேண்டும் என்றால் அங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் குறிப் பாக தமிழ்மக்களுக்கு சம வாய்ப்பும் சம உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தமிழர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய வடக்கு மற்றும் வட கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவேண் டும். அப்பகுதிகளுக்கு அதிகபட்ச சுயாட்சி வழங்கப்படவேண்டும் என்று பல ஆண்டுகளாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால் இலங்கை அரசு இதை செய்யமறுத்து வருவதால் தான் நமது அண்டை நாடான இலங்கை யில் ஆயுத மோதல் ஏற்பட்டது. ஜன நாயக முறைப்படியான கூட்டாட்சி அமைப்பு முறை அங்கு ஏற்படுத்தப் பட்டால் தான் அடிக்கடி எழும் ஆயுத மோதல் பிரச்சனைக்கு முற் றுப்புள்ளி வைக்கமுடியும்.

ராணுவமயமாக்குவதே மையப்பிரச்சனை

2009 ஆம் ஆண்டு ராணுவ மோதல் முடிவுக்கு வந்தபின்னர் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்படும் என்று அதிபர் ராஜபக்சே அறிவித்தார். தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேசி இதற்கு தீர்வு காணப்படும் என்றார். பின்னர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கள் அடங்கிய தெரிவுக்குழு அமைக் கப்படும் என்றும், அந்த குழு அளிக் கும் பரிந்துரைகளை அரசு அப்ப டியே நிறைவேற்றும் என்றும் கூறி னார். ஆனால் இதை அவர் செய்ய மறுத்ததோடு, ஆயுத மோதல் முடி வுக்கு வந்து 2 ஆண்டுகளில் ராணுவத் தின் செயல்பாட்டை தான் வலு வாக்கியுள்ளார். சிங்கள மொழி பேசும் இனவாத அமைப்புகளின் பார் வையில் தமிழர்கள் பிரச்சனையை ராஜபக்சே அரசு அணுகுவதால் தான் தீர்வு இன்னும் ஏற்படவில்லை. அர சியல் ரீதியாக இது ஒரு மக்கள் பிரச் சனை என்பதை அவர் காண மறுக் கிறார். இதுதான் இலங்கை பிரச்சனை தீராமல் இருக்க மூலவேராக உள்ளது.
                          
இலங்கைத் தமிழர் பிரச்சனை நீண்ட காலமாக நீடிப்பதால் அதற்கு விரிவான அணுகுமுறையுடன் தீர்வு காணப்படவேண்டும். ஆனால் அதை செய்யாமல் ராஜபக்சே அரசு அதிகா ரங்கள் முழுவதையும் தன்னிடமே வைத்துக்கொண்டு, வேண்டுமென்றே காலதாமதம் செய்வதால் பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இதனால் சிங்கள இனவாத குழுக்க ளின் பிடிமானமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிங்களர்-தமி ழர் இடையே மோதல் தீவிரமாக தூபமிடப்படுகிறது.
பிரச்சனை குறித்து பேச தமிழர் குழுக்கள் உள்ளன. தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் உள்ளன. இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து பேசலாம். இப்போது கூட இலங்கையின் தமிழர் பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தமிழர் கட்சிகள் பெரும் வெற்றி பெற்றுள்ளன. அவர்களின் பிரதிநிதி களை அழைத்து பேசலாம். ஆனால் அதை செய்ய ராஜபக்சே அரசு தவறிவிட்டது.

கொடுமையிழைத்தது ராணுவம்

இலங்கையில் ராணுவமோதல் தீவிரமாக இருந்தபோது தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவம் கொடு மைகளை இழைத்தது. அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டன. போர் காலத்தில் பின்பற்றக் கூடிய விதி முறைகளைக்கூட, அந்நாட்டு ராணு வம் மீறியது. மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் என குண்டு வீச தடைசெய்யப்பட்ட பகுதி களில் கூட ராணுவ விமானங் கள் குண்டுகளை வீசின. நிவாரண முகாம் கள் என்ற பெயரில் பொது மக்கள் அடைத்து வைக்கப்பட்டு பட்டினி யால் சாகடிக்கப்பட்டனர். சரண் அடைய வந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் சித்ரவதை செய்யப்பட்டனர். ராணுவ மோதல் தீவிரமாக இருந்தபோது நடை பெற்ற இந்த கொடுமைகளை ஐநா பொதுச் செயலாளர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழு ஆவணப்படுத்தியுள்ளது. இந்த குற்றங்கள் எப்படி நடந்தது? இந்த குற் றத்தை செய்தவர்கள் யார்? அவர் களுக்கு எப்படி தண்டனை பெற்றுத் தரப்போகிறோம் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆனால் இந்த அனைத்து குற்றச்சாட்டுகளை யும் இலங்கை அரசும் அதிபர் ராஜ பக்சேயும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தொடர்ந்து மறுப்பு தெரி வித்து வருகிறார்.

எனவே இந்த கொடுமைகள் குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்படவேண் டும். குற்றமிழைத்தவர்கள் தண் டிக்கப்படவேண்டும். வீடுகளை இழந்து முகாம்களில் வசிக்கும் மக்கள் அவர்களது இருப்பிடங் களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். புனர்வாழ்வு பணிகள் தீவிரமாக நடைபெறவேண்டும். ஆனால் அந்த பணிகள் மிக தாம தமாகவே நடைபெறுகின்றன. மேலும் இலங்கைத் தமிழ் மக்க ளுக்கு வீடுகள் கட்டித் தர இந் திய அரசு அனுப்பிய உதவிகள் போய் சேரவில்லை. உயர் பாது காப்பு மண்டல பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்கள் யார்? அவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை இலங்கை அரசு வெளியிட மறுக்கிறது. எல்டிடிஇ அமைப்போடு தொடர்பு இருப்பவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண் டும்.

30 ஆண்டுகால மோதலுக்குத் தீர்வு 

தமிழ்மக்கள் சுதந்திரமாக வும் கவுரவத்துடனும் வாழ ஏற் பாடு செய்யவேண்டும். அவர்கள் இழந்த அமைதியான வாழ்க்கை யை மீட்டெடுக்க இயல்பு நிலை திரும்ப வழிசெய்யவேண்டும். போர் முடிந்த பிறகும் தமிழர் பகு தியில் ராணுவம் முகாம்களை அமைத்துவருகிறது. இதற்காக அரசு நிலம் மட்டுமல்ல, தனி நபர்களின் நிலமும் கையகப் படுத்தப்படுகிறது. இது பிரச்ச னைக்கு தீர்வுகாணாமல் மீண் டும் மோதல் ஏற்படவே செய் யும். ராணுவமயமாக்கல் நடவ டிக்கை என்பது தமிழ் மக்க ளுக்கு மட்டுமல்லாமல், எதிர் காலத்தில் இலங்கையில் உள்ள அனைத்து மொழிபேசக்கூடிய மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத் தக்கூடியதாகும். எனவே ராணுவ மயமாக்கலை அனைத்து ஜன நாயக சக்திகளும் எதிர்க்கமுன் வரவேண்டும். ராஜபக்சே அர சின் இந்த நடவடிக்கைகள் அர சியல் ரீதியாக தமிழர் பிரச்ச னைக்கு தீர்வு காண தடையாக இருக்கிறது. 30ஆண்டுகளாக நீடித்துவரும் அரசியல் பிரச்ச னைக்கு எப்போது தீர்வு என்ப தும் இப்போதைய முக்கிய கேள் வியாகும்.

இலங்கையில் ராணுவ மோதல் தீவிரமாக இருந்தபோதும் பல ஆண்டுகளாகவும் அவசர நிலை அமலில் இருந்தது. மோதல் முடிந்த பிறகும் அவசர நிலை முழுவதுமாக விலக்கிக்கொள் ளப்படவில்லை. எனவே இலங்கை அரசின் எதேச்சதிகார நடவடிக் கையை இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் இலங்கையில் அமைதியை விரும் பும் சக்திகளும் இணைந்து எதிர்க்க முன்வரவேண்டும்.

இந்தியா- இலங்கை உடன் படிக்கையின் முக்கிய அம்ச மான, தமிழர்களுக்கு அதிக அதி காரங்கள் வழங்கும் 13வது அர சியல் சட்ட திருத்தத்தை அந் நாட்டு அரசு அமல்படுத்தவில்லை. இதுகுறித்து அரசு அளித்த உறுதி மொழியில் இருந்து விலகி விட்டது. இந்தியாவில் மாநிலங் களுக்கு அதிக தன்னாட்சி இல்லை என்றாலும், இருக்கிற அதிகார வரம்புப் படி சட்டம்- ஒழுங்கு என்பதும் காவல்துறை யும் மாநில அரசின் அதிகாரத் தில் உள்ளன. ஆனால் இலங்கை அதிபர் சமீபத்தில் அளித்த பேட் டியில் காவல் துறையும் நிலம் தொடர்பான அதிகாரங்களும் தேசிய அரசாங்க கட்டுப்பாட்டி லேயே இருக்கும் என்று கூறியுள் ளார். இது அதிகார பரவலுக்கு தேவையான நடவடிக்கைகளை நீர்த்துப்போகச் செய்யும். இது போன்ற நடவடிக்கைகள் சிங் களர்- தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண உதவாது. இலங்கை யில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்துப் பேசினால் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனை குறித்த புரிதல் ஏற் படும். அவர்களுக்கு அதிகார பர வல் ஏன் வழங்கவேண்டும் என் பதை உணர்ந்து கொள்ளவும் அது உதவும். அத்தகைய பேச்சு வார்த்தை தான் பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய அர்த்த முள்ள தீர்வாக இருக்கும். இதை முதலில் இலங்கை அரசு செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, குடியிருப்பு களை இழந்துள்ள மக்கள் அனை வரையும் அவர்களது பகுதியில் மறுகுடியமர்த்தம் செய்ய வேண் டும். மூன்றாவதாக, ராணுவ மோதலின் போது தமிழர் களுக்கு இழைக்கப்பட்ட கொடு மைகள்- சித்ரவதைகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப் படவேண்டும். நான்காவதாக, வடக்கு மற்றும் வட கிழக்கு பகு திகளில் நிர்வாகத்தில் ராணு வத்தின் தலையீட்டை நிறுத்த வேண்டும். அவசர கால சட்டத்தை திரும்பப் பெறவேண்டும். தமிழர் பகுதியில் ஜனநாயக முறை திரும்பி இயல்பு நிலை ஏற்பட வேண்டும். தமிழ் மக்கள் அதிக அதிகாரத்துடனும் சுதந்திரமாக வும் கவுரவமாகவும் வாழ வழி வகை காண வேண்டும். இதை செய்தால் தான் இலங்கைத் தமி ழர் பிரச்சனைக்கு அர்த்தமுள்ள தீர்வை காண முடியும்.”



ஜுலை30 - சென்னை ஈழத்தமிழர் அரசியல் தீர்வு மாநாட்டில்பேசியது.
_____________________________________________________________________________________________________________
 இதே போல் ஈழத்தில் சிங்கள-தமிழர் ஒற்றுமை வருமா?
      புலிக்குட்டிக்கு பால் கொடுக்கும் சிம்பன்சி                                                                       

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?