மாமியார் உடைத்தால்......................................,

                          

தமிழக அரசுக்கு 5,600 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்துக்கு வழி காணப்பட்டுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அமைய உள்ளது.புதிய அரசு பொறுப்பேற்ற பின், இந்த நிதியாண்டின் மீதமுள்ள மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 4ம் தேதி காலை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக, இம்மாத துவக்கத்தில் இருந்து தினமும், துறை வாரியான ஆய்வுக் கூட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நடத்தினார். இக்கூட்டங்கள், கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தன.
இக்கூட்டங்களில், துறைகளது செயல்பாடு, ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டங்கள், புதிய திட்டங்கள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் ஒரு மணி நேரமாவது ஒதுக்கி, ஆய்வு செய்யப்பட்டது..

                         
இதனால், அடுத்த பத்து நாட்களில் பட்ஜெட் தயாரிப்பு பணி தீவிரமக நடக்க உள்ளது. பட்ஜெட் வெளியாவதற்கு முன்பே, மதுபானங்கள் மீதானஆயத்தீர்வை மற்றும் சிறப்புக் கட்டணங்களை உயர்த்தி, 1,400 ரூபாய் கூடுதல் வருமானத்துக்கு வழி செய்யப்பட்டுள்ளது. இதேபோல, பல்வேறு பொருட்கள் மீதான, "வாட்' மற்றும் விற்பனை வரி உயர்த்தப்பட்டு, 3,900 கோடி ரூபாய் கூடுதல் வருமானத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பத்திரப்பதிவு கட்டணங்களை உயர்த்தியன் மூலம், கூடுதலாக 300 கோடி ரூபாய் வருமானத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, கூடுதல் வருமானத்துக்கு வழி செய்யப்பட்டுள்ளதால், பட்ஜெட் உரையில் புதிய வரி விதிப்புகள் ஏதும் இருக்காது என்று நம்பப்படுகிறது.

இது உண்மையின் உரைகல் தினமலர் செய்தி.

இரவோடு,இரவாக வாட்-டும் வரிகளை பட்ஜெட்டு அறிவிப்புக்கு முன் நடமுறைகளை மீறி அறிவித்து மக்களை விலைவாசி ஏற்றத்தில் தள்ளிய பின்னர் வெறும் அறிவிப்புகள் வெளியிடுவதற்கு பெயர் பட்ஜெட்டா?

இதில் புதிய வரிகள் இருக்காது என தினமலரின் பாராட்டுகள் வேறு. 

ஏற்கனவேதான் போட வேண்டிய வரிகளை 3900 கோடிக்கு போட்டாகிவிட்டதே.

ஜெயலலிதா போட்ட வரிகளால் மக்களுக்கு வலிகளே கிடையாதாம். காரணம்

அவர் மருந்து பொருட்கள் உட்பட மக்கள் அன்றாட உபயோகப்பொருட்களுக்கு வாட் வரியை உயர்த்தி,மதுபானங்கள் விலை உயர்வு,பத்திரப்பதிவு கட்டணங்களைக் கூட்டி 5600 கோடிக்களுக்கு வருமானத்திற்கு வழி செய்து விட்டாராம் எனவே பட்ஜெட்டில் மக்களை வாட்டும் வரி அறிவிப்புகளே இராதாம்.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட இலவச கால்நடைகள், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் லேப்-டாப்கள் போன்ற திட்டங்களை, செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்படுத்தும் வகையில், அதற்கான நிதி ஒதுக்கீடுகள், பட்ஜெட்டில் செய்யப்படும். அரசு கேபிள் கார்ப்பரேஷன் மூலம், எவ்வாறு கேபிள் இணைப்புகள் மாற்றப்பட உள்ளன என்பதற்கான அறிவிப்பும் மட்டுமே பட்ஜெட்டில் இடம்பெறமாம்.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட இலவச அரிசி, தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்கள் ஏற்கனவே துவக்கப்பட்டுள்ளன. எனவே, மீதமுள்ள அறிவிப்புகளை நிறைவேற்றும் அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற உள்ளன.எனவே, பட்ஜெட்டில் மக்களுக்கு பயனளிக்கும் விஷயங்களே அதிகம் இருக்கும் என்று உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த பட்ஜெட்டில், ஆசிரியர்கள் நியமிக்கப்படும் விதம் பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம்.

ஆக ஜெயலலிதா வரி விதித்தால் அது வருமானத்துக்கு வழி செய்கிறார்.மற்றவர்கள் வரி போட்டால் மக்கள் மீதி விழும் அடியா? 

  நீங்கள் சொல்லும் உண்மையை எந்த கல்லில் போட்டு உரைப்பது என்றுதான் தெரிய வில்லை.

ஏற்கனவே கருணாநிதி ஆட்சிகாலத்தில் பணிவழங்கப்பட்ட 5000 க்கும் அதிகமானவர்களை ஆசிரியர் நியமனம் ஆணை வழங்காமல் வைத்திருந்து விட்டு இப்போது தனக்கு பெயர் வர அதி பட்ஜெட்டில் அறிவிப்பாராம்.

                                                           

இலவசங்கள் இவரை யார் அறிவிக்கக் கூறியது.இலவச்ங்கள் கொடுக்கவே நிதியாதாரம் தேடி வாட்-வரியை அதிகப்படுத்துகிறாராம்.எங்களுக்கு ஒரு இலவசமும் வேண்டாம்.

வாட்டும் வரிகளைக் குறைத்து இந்த ஆட்சிக்காலத்திலாவது கசப்புமருந்து தராமல் ஆட்சி செய்யுங்களேன்.

பாவம்.இந்த அரசு ஊழியர்கள் என்ன பாடுபடப்போகிறார்களோ?அவர்கள் பக்கம் எப்போது அம்மாவின் கடைக்கண் பார்வர் விழப்போகிறதோ? விரைவிலேயே இருக்கும்.காலம் பதில் சொல்லும்.[இது சினிமா பெயர்மட்டுமில்லை.]

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?