ஊழலுக்கு எதிராக,,,,,,,,,,,,,,.


ராஜபக்சே கட்சி படுதோல்வி

                            அன்னையை வனங்கும் இலங்கேஷ்வரன்           
.
இலங்கை தமிழர் பகுதியில்  நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய முன்னணி (டிஎன்ஏ) அமோக வெற்றி பெற்றது. ராஜபக்சேவின் ஆளும் கட்சி படுதோல்வி அடைந்தது.
.
இலங்கையில் 2009ல் நடைபெற்ற  உச்சக்கட்ட உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டனர்.  இரண்டு ஆண்டுகள் ஆகியும் தமிழர் பகுதிகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. முகாம்களில்  ஏராளமான தமிழர்கள் இன்னும் அகதிகளாகவே உள்ளனர்.

இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர் பகுதிகள் உள்பட நாடு முழுவதும் நேற்று உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற்றது.இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழர் பகுதி உள்ளாட்சி கவுன்சிலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய முன்னணி (டிஎன்ஏ) அமோக வெற்றி பெற்றது.

டிஎன்ஏ கட்சி 18  கவுன்சில்களை கைப்பற்றி முன்னிலையில் இருந்தது. இன்னொரு தமிழர் கட்சியான டியுஎல்எப் 2 கவுன்சில்களில் முன்னணியில் இருந்தது.அதிபர் ராஜபக்சேயின் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி இடம் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (யுபிஎப்ஏ) தமிழர் பகுதியான வடக்கில் இரண்டு கவுன்சில்களில் தான் வெற்றி பெறும் நிலையில் இருந்தது.

 இதற்கு காரணம் தமிழினத்துரோகியும்-பக்சேயின் அரசில் தமிழ் அமைச்சரான டக்லஸ் தேவானந்தாவின்  ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) ஆகும். யாழ்ப்பாணத்தில் உள்ள வெல்லனைப் பகுதியில் தேவானந்தாவுக்கு செல்வாக்கு இருந்ததால் இந்த கூட்டணி இந்த கவுன்சிலில்  வெற்றி பெற்றது.மற்றபடி சிங்களர் பகுதிகளில் ராஜபக்சேவின் ஆளும் கட்சி மொத்தம் உள்ள 65 கவுன்சில்களில் 45 ல் வெற்றி  அடைந்தது.

ஆளும்கட்சி வடக்கில் அரசின் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, களத்தில் படை பட்டாளத்துடன் இறங்கிப் பிரசாரத்தில் ஈடுபட்ட போதும், மானம் கொண்ட தமிழ் மக்கள் ஜனநாயக வழி முறையில் தகுந்த பதிலடி கொடுத்துத் தலைநிமிர்ந்து நிற்கின்றனர். இவ்வாறு தமிழர் தரப்பு மூத்த அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இலவசப்பரிசுகள், சைக்கிள், வேட்டி, சேலை என்று தமிழகப் பாணியில் இலவசங்களை அள்ளி வழங்கியபோதும் ஈழத்தமிழ்மக்கள் அசைந்து விடவில்லை.

நாட்டின் ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசின் உயர்மட்ட அதிகாரிகள் என முழு அதிகார ஆளணியும் வடக்கில் முகாமிட்டு அடிக்கற்கள் நட்டும், பாடசாலைக் கட்டடங்களைத் திறந்தும், வீதிகளைத் திறந்து வைத்தும், மீள்குடியமர்வுகளைச் செய்த போதும்.சிங்கள நடிகைகள்,தமிழ்நாட்டில் இருந்து காசுக்காக சென்ற பாடகர்கள்,குத்தாட்டங்கள் இருந்தும்அவலங்களை அனுபவித்த ஈழமக்கள்  மனம்மாறவில்லை.

அவர்கள் சரியான வேளையில் தருணம் பார்த்து வாக்குகள் மூலம் பக்சேக்கு சாட்டையடி கொடுத்துள்ளனர்.

பக்சேக் கட்சிகும், வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டடக்ளஸ்.கருணா போன்ற துரோகிகளுக்கும் முகத்தில் அடித்தாற்போன்று பதிலடி கொடுத்துள்ளனர்.

 இந்தத் தேர்தலை உலகநாடுகளும்,ஐ.நா,வும் கூர்ந்து கவனித்தபடி இருந்தது. சர்வதேசத்தையும் ஏமாற்றி திசைதிருப்பி தமிழர்கள்தனது பக்கம் இருப்பதாகக் காட்டிவிட அரசு முயற்சிகளைச் செய்தது. அந்த முயற்சிகளையும் அடியோடு முறியடித்துவிட்டனர் ஈழமக்கள்.வாழ்த்துகள்.
=========================================================================
மூலாயம் கூறும் நீதி.............,
பார்லிமென்டில் மத்திய அரசுக்கு ஆதரவாக ஓட்டுப்போடுவதற்காக எம்.பி.,க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியில் இருந்த அமர் சிங், அவரது உதவியாளர் சஞ்சீவ் சக்சேனா, இடைத்தரகராக செயல்பட்ட சுகைல் இந்துஸ்தானி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சஞ்சீவ் சக்சேனா, சுகைல் இந்துஸ்தானி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமர்சிங்கிடம் விசாரணை நடத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துளள சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், அமர்சிங்கிடம் விசாரணை நடத்தப்பட்டது நீதிக்கு எதிரானது என கூறியுள்ளார்.
                                                     
அமர்சிங்-முலாயம் கட்சியினர்,மாயாவதி,லாலு ஆகியோர் இடதுசாரிகளுடன் 3-வது அணி பற்றி பேசிக்கொண்டே அணுச்க்க்தி ஒப்பந்தத்திலும் இடது சாரிகளுடன் சேர்ந்து பேசுவது போல் பேசியே கடைசியில் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவாக மக்களவையில் வாகக்ளித்து இடது சாரிகளை நம்பவைத்து ஏமாற்றினார்கள்.
அன்றைய மன்மோகன் சிங் அரசும் இவர்களை பணத்தாலும்-சி.பி.ஐ,பயத்தாலும்  பணிய வைத்து தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்து ஆதரவு தந்த இடதுசாரிகள் மூஞ்சில் கரியைப் பூசியது.
துரோகம் முலாயம்,அமர்சிங் ,லாலு,மாயாவதிக்கு புதிதல்ல.
இன்று அமர்சிங் கைதாகாமல் விசாரிக்கப் பட்டதே நீதிக்கு முரணானது எனக்கூறும் முலாயம் அது எந்த நீதி எனக் கூறுவாரா?
நாளை தானும் அதில் மாட்டிக்கொள்வோம் என்ற பயம் .இப்போதே முலாயமுக்கு.
பணம் கொடுக்க சொன்னவர்களை இவர்கள் காட்டிக் கொடுக்க வேண்டியதுதானே. அந்த நீதிக்கு தான் எதிரானது இந்த விசாரணை என்கிறாரா? அவர்கள் நீதிக்கு எதிராகும் போது முலாயம் கூட்டத்தாரும் நீதியை மதிக்காமல் தங்களிடம் பணம் கொடுத்து அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக் கூறியவர்களைக் காட்டிக் கொடுப்பதில் தப்பே இல்லை.முலாயம் ,அமர்சிங் கிற்கு அடுத்து விசாரிக்கப் படவேண்டியவர்.
அவருக்குப் பின் மாயாவதி,லாலும் விசாரிக்கப்பட வேண்டியவர்களே.
அவர்களுக்கு பணம் கொடுத்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட வர்கள் இதில் கடுமையாகத்தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.
அதனால்தானே இவ் விசாரணையையே இவ்வளவு நாள் தூங்க வைத்திருந்தார்கள்.
_____________________________________________________________________________________________________________
மராட்டிய மாநில விவசாயி உழும் காட்சி.
மாடில்லா இவர்களின் துன்பம் 3வது பசுமை புரட்சியைக் கொண்டு வரும் துடிப்பில் உள்ள மன்மோகன் சிங் அறிவாரா?
நன்றி:தினமலர்
     விவசாய உணவுப் பொருட்களுக்கு உரிய விலையில் அரசு வாங்குவதில்லை.அம்பானி போன்ற பண முதலைகளின் தொழிலுக்கு வரிச்சலுகைகளை லட்சம்கோடி அளவுக்கு தரும் மத்திய அரசு விவசாயிகளின் உரத்தையும் ,விதைகளையும் சலுகை விலையில் தர மறுக்கிறது.
உள்நாட்டிலேயே உணவுப் பொருள் கோதுமை பொது விநியோகத்திட்டத்தில் பற்றாக்குறை இரிக்கும் போது வேளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடையை நீக்குகிறது. விவசாயிகள் நலனை குழிதோண்டி புதைத்து விட்டு ஒரு நாடு முன்னேறமுடியாது என்பதை நம் பொருளாதாரப் புலிளிகள் முதலில் உணர வேண்டும். 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
   
ஊழல் ... ஊற்றுக்கண் எது?
                               
-மா.அண்ணாதுரை
                                                  
இந்தியாவில் இன்று ஊழல்க ளைப் பற்றி பேசாதவர் எழுதாதவர் இல்லை.

காங்கிரஸ் தலைமையிலான மத் திய அரசாங்கம் ஊழலுக்கு எதிராக இன்று ஏற்பட்டுள்ள நிர்ப்பந்தம் கார ணமாக அனைத்துக்கட்சி கூட்டத் தில் லோக்பால் மசோதா மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வர சம் மதம் தெரிவித்து உள்ளது. வரைவு மசோதாவை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முன்கூட்டியே கொடுத்தால் தான் தேவையான திருத் தங்களையும் ஆலோசனைகளையும் வழங்க முடியும் என மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது. அதே போல் நீதித் துறை ஊழலுக்கு முடிவுகட்ட தேசிய நீதித்துறை ஆணையம் கூடுதல் அதி காரங்களோடு அமைக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
ஊழல் தடுப்புச்சட்டம் அமலில் உள்ளபோதும் ஊழல் சூறாவளி தற்பொழுது இந்தியாவில் நிலை கொண்டுள்ள நிலையில் கூடுதல் அதி காரம் படைத்த லோக்பால் மசோதா உடனடியாகத் தேவை என்ற நிர்ப்பந் தம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா ஓர் முதலாளித்துவ நாடு என்பதும் இங்கு லாபம் ஒன்று தான் இவ்வமைப்பின் குறிக்கோள் என்ப தும் வெள்ளிடைமலை.1991 ம் ஆண்டு மத்திய அரசு தாராள மய பொருளாதா ரக் கொள்கைகளை கடைப்பிடித்து அமல்படுத்திய காரணத்தால் ஊழல் இங்கு நிறுவனமயமாக்கப்பட்டது. இதன் விளைவு தான் நாட்டையே உலுக்கிய ரூ 1.76 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்.இத்துறையின் அமைச்சராக இருந்த ஆ.ராசா மற் றும் மாநிலங்களவை உறுப்பினர் கனி மொழியும் திகார் சிறையில் அடைக் கப்பட்டுள்ளார்கள். மத்திய அமைச் சர் தயாநிதி மாறனும் தற்பொழுது தாக்குப்பிடிக்க முடியாமலும் உச்சநீதி மன்றத்தின் கிடுக்கிப்பிடியின் காரண மாக மத்திய அமைச்சர் பதவியில் இருந்து வெளியேற வேண்டியாகி விட்டது.

காங்கிரஸ் கட்சியின் நேர்மையான வர் என சொல்லிக்கொள்ளும் நமது பிரதம மந்திரியின், அமைச்சரவை யின் சகாவான கல்மாடி காமன்வெல்த் ஊழல் சம்பந்தமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணை முடியும்போது இன்னும் பல பெரும் புள்ளிகள், திகார் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். காங்கிரஸ் கட்சி யின் மகாராஷ்டிரா முதல்வர் கார்கில் ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் காரண மாக முதலமைச்சர் பதவியை இழக்க வேண்டி வந்தது.

அதுபோலவே பிஜேபி ஆளும் கர் நாடகாவில் முதலமைச்சர் எடியூ ரப்பா ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தரமற்ற ஐனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது இன்று அம்பலத்திற்கு வந்துள்ளது. இங்கு நடக்கும் ஊழல்கள் இன்று சட்டமன்றத்திற்கோ நீதி மன்றத் திற்கோ செல்லாமல், கோவிலில் சத்தி யம் செய்யும் ஓர் புதிய லோக்பால் முறையாக உள்ளது. .

இவர்களின் அகில இந்திய கட்சி யும் இங்கு நடக்கும் ஊழலைப்பற்றி கவலைப்படாமல் அதிகாரத்தில் இருப்பது என்பது தானே அவர்கள் கவலையாக உள்ளது. எனவே மத்திய காங்கிரஸ் ஆட்சிக்கு பாரதிய ஐனதா ஓர் மாற்றல்ல.

மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலங்களவை உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி 2008ம் ஆண்டி லேயே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நடவடிக்கை கோரி பிரதம ருக்கு கடிதம் எழுதினார் என்பது குறித்து முதலாளித்துவ ஊடகங்கள் செய்தி வெளியிட தயாராக இல்லை.

அரசு ஓர் திட்டத்தை அறிவிக்கி றது என்றால் அதில் தங்களுக்கு எவ்வ ளவு கிடைக்கும் என்பதைப் பொறுத்தே திட்டங்கள் முடிவு செய்யப்படுகின் றன என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இந்திய நாட்டு முதலாளிகளும் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரி களும் கூட்டுச்சேர்ந்து கொள்ளை யடிப்பதும் அவ்வாறு கொள்ளைய டித்த பல லட்சம் கோடி பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாகவும் அதனை மீட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து குரல் எழுப்பியும் வலியுறுத்தியும் வருகின் றனர்

இது முதலாளித்துவ ஏடுகளில் வருவதில்லை. காரணம், கம்யூனிஸ்ட் களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அவை தெளிவாக உள்ளன.

காங்கிரஸ், பாரதிய ஐனதா ஆகிய அகில இந்திய மற்றும் பல பிராந்திய கட்சிகளும் அதன் தலைவர்களும் ஊழலில் திளைத்து வருகின்றனர் என்பது அவ்வப்பொழுது பத்திரி கைகளில் வெளிவந்து முடை நாற்றம் வீசும் செய்தியாகும்;

இந்திய திருநாட்டில் குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி தவிர மற்றவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந் துள்ளதும் மார்க்சிஸ்ட் கட்சி ஊழ லுக்கு எதிராக தொடர்ந்து போராட் டக்களத்தில் உள்ளதும் குறிப்பிடத் தக்கது. கேரளத்தில் முன்னாள் காங் கிரஸ் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளை மீது ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்க முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தொடர்ந்து போராடி யதால் இன்று அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மார்க்சிஸ்ட் கட்சியினர் ஊழலில் ஈடுபடாதவர்கள் என்பது மட்டுமல்ல ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டக்களத்தில் உள்ளவர்கள் என்பது குறித்து முதலாளித்துவ ஊடகங்கள் அளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

இந்திய நாட்டில் ஊழல் செய்ப வர்கள் மீது வழக்கு தொடுக்க சட்டம் இருந்தும் அதன் மூலம் முழுமையான தீர்வுகாண முடியவில்லை. விளைவு ஊழல் செய்வது அதிகரித்துக் கொண்டு வருகிறது.

ஊழல் குற்றச்சாட்டுக்களில் எத் தனை அரசியல்வாதிகள் மீது வழக் குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின் றன. எத்தனை அரசு ஊழியர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. இவற்றில் எத்தனை வழக்குகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப் பட்டுள்ளது?

ஆய்வுக்கு உட்படுத்தினால் அது பெரிய ஜீரோ என்பது தெரியும். இதற்கு என்ன காரணம்? இங்கு ஊழல் செய்பவர்கள் அரசியல்வாதியாகவும் தொழில் அதிபர்களாகவும் அரசு அதி காரிகளாகவுமே உள்ளனர் என்பது வெளிப்படையான விசயமாகும். சாதா ரணமாக சைக்கிள் வாங்கக்கூட வசதி யில்லாத அரசியல்வாதி, சட்ட மன்ற -நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிவிட் டால் அவர்கள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கார்களில் வலம் வருவதும் சாதாரண வார்டு உறுப்பினர் மட்டுமல்ல கட்சி உறுப்பினராக இருந்தாலே அவர் இதுபோன்ற வசதிகளை அடைய முடியும் என்பதுதானே இன் றைய நிலை. இன்று கல்வி நிறுவனங் களுக்கு அதிபதிகளாக கல்வியின் காவ லர்களாக இருப்பதும் இதுபோன்ற வர்கள் தானே.


கட்டுரையாளர், மாவட்ட வருவாய் அலுவலர் [ஓய்வு]
    

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?