நினைவுகள்பழசு

எங்கே முறையிடுவது?
 காங் கிரசுஅரசும்- ஊழலும் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. மத்தியில் காங்கிரஸ் தலை மையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. குறுகிய காலமாக இருந்தாலும் ஐ.பி.எல்.,ஏலம் முறைகேடு, ஸ்பெக்ட்ரம் ஊழல், எஸ்-பாண்ட் ஊழல், காமன்வெல்த் விளையாட் டுப் போட்டி, ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், கே.ஜி ஆற்றுப் படுகை ஊழல் என மெகா சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கிராமப்புற தொலைபேசி சேவைக்காக மத் திய அரசு, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஓர் ஒப் பந்தம் செய்திருந்தது. அதன்படி ரிலையன்ஸ் நிறுவனம் கிராமப்புற சேவையை செய்யாமல் ஒப் பந்த விதிமுறைகளை மீறி பாதியில் நிறுத்திக் கொண்டது. இதையடுத்து மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.650 கோடி அபராதம் விதித்தது. இந்த அபராதத் தொகையை சட்டத்துறையின் உதவியுடன் தொலைத்தொடர்புத்துறை வசூலிக்க வேண்டும். ஆனால் மத்திய தகவல்தொடர்புத்துறை அமைச் சர் கபில்சிபல் 650 கோடி ரூபாய் அபராதத்தை ரூ.5 கோடியாக குறைத்து தனது விசுவாசத்தை காட்டியுள்ளார். அதன் மூலம் அரசுக்கு ரூ.645 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு சேர வேண்டிய பணத்தை ரிலையன்ஸூக்கு தூக்கிக் கொடுத்ததன் உள் நோக்கம் என்ன? அதில் கபில்சிபலுக்கு ஏன் அவ்வளவு அக்கறை? அரசு கஜானாவில் சேரவேண்டிய பணம் ரிலை யன்ஸூக்கு மட்டும் திருப்பிவிடப்பட்டதா? அல்லது கபில்சிபல் கணக்கிற்கும் திருப்பி விடப்பட்டிருக்கிறதா? என்ப துள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

ஆனால் இவ்வளவு அப்பட்டமாக நடந்துள்ள மோசடியில் நீதிமன்றம் “இவ்வழக்கில் தலை யிட விரும்பவில்லை எனவும், உத்தரவு ஏதும் பிறப்பிக்க விரும்பவில்லை” எனவும் கூறியிருக் கிறது. இப்படி நீதிமன்றமே ரிலையன்ஸ் விஷ யத்தில் ஒதுங்கிக் கொள்வது சரியா? சாமானி யனுக்கு ஒரு நீதி, பெரும் முதலாளிக்கு ஒரு நீதியா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் ஏட்டில் மட்டும்தானா? என்ற கேள்வி எழுகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் இவ்வளவு தூரம் அம்பலப்படுத்தியதில் உச்ச நீதிமன்றத்திற்கும் முக்கிய பங்குண்டு. ஸ்பெக்ட் ரம் வழக்கில் உச்சநீதிமன்றம் எடுத்த நிலையை ரிலையன்ஸ் நடத்தி வரும் மோசடி விஷயங்களி லும் எடுத்தால் மத்திய அரசின் முக்கிய அமைச் சர்கள் மட்டுமல்ல; பிரதமர் கூட தப்புவது கடினமே!

ஏற்கனவே வெளிநாட்டு அழைப்புகளை லோக்கல் அழைப்புகளாக மாற்றி ரிலை யன்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது. அப்போதும் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

அதே போல் கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக் கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு அரங் கேற்றப்பட்டது. ரிலையன்ஸூக்காக அரசின் விதிமுறைகளை ஏன் இவ்வளவு மோசமாக வளைக்கிறீர்கள் என்று தணிக்கைத் துறை கூட கேள்வி எழுப்பியிருந்தது. தொழிலதிபர்களும் அரசும் சேர்ந்து தேசத்தின் சொத்தை கொள் ளையடிப்பதை 
நீதிமன்றம் தட்டிக்கழித்தால் யாரிடம் போய் நியாயம் கேட்பது?

  2ஜியில் மட்டும் அப்படி என்ன நியாயம் பொங்குகிறது.அம்பானி என்றால் ஒரு நீதி, கனிமொழி,ராசா என்றால் ஒரு நீதியா?

நாட்டில் நடக்கும் முறைகேடுகள் முழுக்க அம்பானிகள் மட்டும் செய்யலாம் என அரசாணை ஏதும் மத்தியில் காங்கிரசு அரசு வெளியிட்டுள்ளதா?

தணிக்கைத்துறைக்கு இருக்கும் உணர்வும் -நாணய உணர்வும் நீதித்துறைக்கு இல்லையா?

 ஒரு பெரிய குற்றத்தைக்கொண்டுவந்தால் அதை விசாரிக்க மாட்டேன் .இதில் தலையிடமாட்டேன்.கருத்து சொல்ல மாட்டேன் என்று ஒரு தேசத்துரோகிக்கு துணைபோனால் அதுவும் தேசத்துரோகம்தானே?

2ஜி முறைக்கேட்டில் பாய்ந்து.பாய்ந்து அடிக்கும் நீதித்துறை அம்பானி என வந்ததுமே வாளை சுருட்டி உறையில் போட்டது ஏன்?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?