பஸ் -முடியாவிட்டால் என்ன?


 காரில் போகலாமே...
                                                                                                        -ப.முருகன்
‘நா ஒரு டிக்கெட் தான   
கேட்டேன். ஏன் ரெண்டு டிக்கெட் தர்றீங்க’ என்று பஸ் கண்டக்டரி டம் ஒரு பயணி கேட்டுக்கொண்டிருந்தார். ‘நா ஒரு டிக்கெட் தாங்க கொடுத்திருக்கேன்’ என்றார் கண் டக்டர். ரெண்டு டிக்கெட் இருக்கே என்றார் பயணி மீண்டும். நல்லா பிரிச்சுப் பாருங்க ரெண்டு, மூன்று ரூபா டிக்கெட், ஒரு டிக்கெட்டுக்காகத்தான் கொடுத்திருக்கேன் என்றார் கண்டக்டர்.


மதுரையில் அண்மைக்காலமாக இதுபோன்ற வாக்குவாதங்கள் பஸ்ஸில் பயணம் செய்பவர் களின் காதுகளில் விழுந்துகொண்டுதான் இருக் கின்றன. காரணம் என்ன?

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நள்ளிரவில் அவசரநிலை பிரகடனம் செய்யப் பட்டது நாட்டில். அதுபோல கடந்த நவம்பர் மாதம் 17ம் தேதி நள்ளிரவு முதல் பஸ் கட்டண உயர்வு அதிரடியாக அமல்படுத்தப்பட்டது தமிழ்நாட்டில்.

ஏற்கெனவே மதுரையில் தமிழகத்தின் பிற பகுதிகளைவிட கூடுதலாக பஸ் கட்டணம் வசூ லிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. காலாவதி யாகிப்போன - காயலான் கடைக்குப் போகவேண் டிய பல பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத் துக் கழக மதுரை கோட்டத்தில் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புதிதாக இறக்கப்பட்ட பேருந் துகளுக்கு சிட்டி எக்ஸ்பிரஸ், சொகுசு பஸ், தாழ்தள பேருந்து என புதிய புதிய பெயர்களை எழுதி கட்டணங்களை அதிகமாக வசூலித்தது மதுரை கோட்ட நிர்வாகம். அதற்கும் முன்னதாக குறைந்த கட்டணமாக ரூ.2 வசூலிக்கப்பட்டபோது எல்எஸ் எஸ் என்று புதிய கலர் பெயிண்ட் அடித்த பஸ் ஸுக்கு ரூ.2.50 வசூலித்தது வேறு கதை. ஆனால் சாதாரண கட்டணம், எல்எஸ்எஸ் கட்டணம் என எல்லா பேருந்துகளும் ஒரேமாதிரிதான் நிறுத்தங் களில் நின்று சென்றன என்பது குறிப்பிடத்தக்கது. 


இதற்கும் கூட முன்னோடியாக முந்தைய அதி முக ஆட்சியில் ‘ஜெ’சர்வீஸ் என்ற பெயரில் கூடு தல் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது. இந்நிலையில்தான் சிட்டி எக்ஸ் பிரஸ், சொகுசு, தாழ்தளம் எல்லாம் கிளம்பின, சாதா ரண ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தலை யில் சுமைகளைத் திணிக்க. சாதாரண 2 ரூபாய் கட்டணம் சிட்டி எக்ஸ்பிர ஸில் 3 ரூபாய் ஆனது. சொகுசு, தாழ்தளத்தில் 5 ரூபாய் ஆனது. அப்படியே கடைசிவரை டிக்கெட் ஏறுமுகமானது. டவுன் பஸ் களில் அதிகபட்சமாக இருந்த ரூ.9 - ரூ.15 ஆனது. மக்களிடம் எதிர்ப்புக் கிளம்பி போராடியபோது கட் டணத்தை உயர்த்தவில்லை என்று அன்றைய தமிழக ஆட்சியாளர்கள் கூறினர். 


முந்தைய அரசு சீரழித்த பொதுத்துறையை காப்பாற்றப் போகிறோம் என்று கூறி, சாதாரண அப்பாவி மக்களின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டது இன்றைய அதிமுக ஆட்சி.

ஒரு நோயாளி கிராமத்திலிருந்து மதுரைக்கு- பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்து செல்வதென்றால் 20 ரூபாய் இருந்தால் போதும். ஆனால் இப்போது அவர் 50 ரூபாய் இல்லாமல் பஸ் ஏறமுடியாது. ஏறி னால் மீண்டும் ஊர்போய்ச் சேரமுடியாது.

ஒரு கட்டுமானத் தொழிலாளி வேலைக்காக பஸ் ஏறினால் குறைந்தது நூறு ரூபாயாவது கொண்டுவரவேண்டும். அவர் வேலைக்குச் செல் வதற்காக மேஸ்திரியோ - காண்டிராக்டரோ - பிரித்துவிடும் இடத்துக்கு அல்லது பட்டறைக்குச் செல்லவேண்டும். பின்பு வேலைத் தளத்துக்குச் செல்ல வேண்டும். பிறகு மாலையில் வேலை முடிந்ததும் முன்போலவே இரண்டு பஸ்கள் ஏற வேண்டியிருக்கும். சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு செலவழிக்கவேண்டிய கட்டாயத்தில் - நிர்ப் பந்தத்தில் நிறுத்தப்பட்டுவிட்டனர்.

இந்த நிலையில்தான் ஒவ்வொரு பயணியி டமும் ரெண்டு டிக்கெட் கொடுக்கும் நிலை.


கண்டக்டருக்கு ஏற்படுகிறது. பழைய கட்டண டிக்கெட்டுகளை கீழே போட முடியாது என்று போக்குவரத்து நிர்வாகம் பயணிகளுக்கு ரெண்டு ரெண்டு டிக்கெட்டாகக் கொடுத்து தீர்க்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதனால்தான் மக் களும் கண்டக்டர்களும் இப்படிப் பேசிக் கொள் கிறார்கள்.

முன்பு மதுரை பெரியார் பேருந்து நிலையத் திலிருந்து அரசரடி செல்வ தென்றால் 5 ரூபாய் (மகபூப்பாளையத்துக்கு 3 ரூபாய்) சிட்டி எக்ஸ்பிரஸ் பஸ்சில். இப்போது அரசரடிக்கு 7 ரூபாய் (மக பூப்பாளையத்துக்கு 5 ரூபாய்) சில காலத்துக்கு முன்பு அரசரடி ஒரு ஸ்டேஜ், அடுத்து பாத்திமா கல்லூரி அல்லது ஆலமரம் ஒரு ஸ்டேஜ் என்று இருந்தது. முந்தைய ஆட்சிக்காலத்தில் போக்கு வரத்து நிர்வாகம் அதை மாற்றித்தான் மக்கள் தலையில் சுமையை ஏற்றியது. அது இப் போதைய ஆட்சியாளர்களுக்கு மிக வசதியாகிப் போய் விட்டது.


நகரத்துக்குள்ளேயே போய் வருபவர்களுக்கு குறைந்த கட்டணம் 3 ரூபாய், முதல் ஸ்டேஜ், 2வது ஸ்டேஜ் இரண்டுக்கும் பொருந்தும். அதற்கடுத்த கட்டணம் 5 ரூபாய், 3வது, 4வது, 5வது ஸ்டேஜ் வரை செல்லும். இப்போதோ முதல் ஸ்டேஜ் உடன் குறைந்தபட்ச ஆரம்பக் கட்டணம் 5 ரூபாய் முடிந்துவிடுகிறது. 2வது, 3வது, 4வது வரை இரண் டாவது ஸ்டேஜ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்படியாக முன்பு வெளியூர் பஸ்களில் சென்று வந் தால்தான் இருபது ரூபாய்க்கு மேல் டிக்கெட் வாங்க வேண்டியிருக்கும். இப்போதோ டவுன் பஸ்ஸி லேயே அத்தகைய டிக்கெட்டுகளை மக்கள் வாங் கிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது, ஏற்படுத்திவிட்டது இன்றைய ஆளும் கட்சி. இப்போது திருமங்கலம், வாடிப்பட்டி, சோழ வந்தான், அலங்காநல்லூர், மேலூர், திருப்புவனம், காரியாபட்டி செல்வது கூட வெளியூர் பயணம் போவதுபோல் ஆகிவிட்டது.

2 ஆயிரம் ரூபாய், 3 ஆயிரம் ரூபாய் என குறைந்த சம்பளத்தில் வேலைக்குச் செல்பவர்கள் கம்பெனியோ, கடையோ பஸ்சுக்கு 10 ரூபாய் கொடுப்பதைப் பயன்படுத்துவார்கள். இப்போது கடையோ, கம்பெனியோ எவ்வளவு கொடுக்கும்; மீதிப் பணத்துக்கு என்ன செய்வார்கள்?

மதுரையில் ஒரு வங்கியில் தற்காலிக பணி யாளராக வேலை செய்தவர் தற்போது திருச்சுழியில் உள்ள கிளைக்குச் சென்று வருகிறார். அவரது சொந்த ஊரான அலங்காநல்லூரிலிருந்து பெரியார் பஸ் நிலையம் - அங்கிருந்து காரியாபட்டி - பிறகு திருச்சுழி என்று வேலைக்குச் சென்றால் இப்போது அவர் பேருந்துக்கு மட்டும் ஒரு நாளைக்கு ரூ.140 செலவழிக்கவேண்டும். அவரது தினக்கூலி சம் பளமே ரூ.150 தான். இப்போது அவர் முன் உள்ள கேள்வி, வேலைக்குச் செல்வதா? வேலையை விட்டு விடுவதா? அல்லது திருச்சுழியிலேயே தங்க முடியுமா? தங்கினால் செலவு என்னாகும்? எப்படிச் சமாளிப்பது? மூன்றாண்டு காலமாகிறது. இன்னும் ஓரிரு வருடத்திலாவது பணி நிரந்தரமா கலாம். வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக உள்ள நிலையில் தற்போது இருக்கிற வேலையை விட்டுவிட முடியுமா?


சாதாரண ஏழை, எளிய மக் கள் ரயில் ஏறுவது, விமானம் ஏறுவது போன்ற வற்றை முன்பு லட்சியக் கனவாக நினைப்பார்கள். இன்னும் கொஞ்ச காலத்தில் பஸ் ஏறுவதுகூட வாழ்க்கையின் லட்சியக் கனவாக ஆனாலும் ஆக லாம். பஸ் ஏறமுடியாத நிலையில் மக்கள் இருக் கிறார்கள் என்று யாராவது அம்மாவிடம் கூறினால் (அப்படி கூற ஆள் இருக்கிறார்களா என்று நினைக்க வேண்டாம்). அப்படியா, காரில் ஏறிப்போக வேண் டியது தானே என்று அவர் கூறினாலும் கூறலாம்.
                                                                                                                                                                                        
நன்றி:-தீக்கதிர்,

________________________________________________________________________________________________________
 கைதான குரங்கு.,,,,,,,,,


இந்தியாவில் இருந்து எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் சென்ற குரங்கை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது.


அதற்கு முன் குரங்கைப் பிடிக்க உள்ளூர்வாசிகள் முயன்றனர். அவர்களால் அதைப் பிடிக்க முடியவில்லை. என்று பாகிஸ்தான் பத்திரிகை எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.
பின்னர் கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து அந்தக் குரங்கைப் பிடித்து கைது செய்தனர்.பின் பாஹவல்பூர் வனவிலங்குகள் சரணாலயத்தில் அந்தக் குரங்கு விடப்பட்டது.  அந்த குரங்குக்கு பாபி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டுவதாக விலங்குகள் கைது செய்யப்படுவது இதுதான் முதல்முறையல்ல.
சென்ற ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் பஞ்சாப் எல்லைக்குள் ஒரு புறா பறந்து வந்தது. அதை இந்திய ராணுவ வீரர்கள் உயிருடன் பிடித்து கைது செய்தனர்.
உளவு பார்ப்பதற்காக பாகிஸ்தான் அதிகாரிகள் அதை இந்திய எல்லைக்குள் பறக்க விட்டார்களா என அப்போது விசாரணை நடத்தப்பட்டது .ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை.


குரங்கு உண்மையில் குரங்குதானா?அல்லது குரங்கு வடிவில் உளவாளிகள் பாகிஸ்தானுக்குள் இந்தியாவிலிருந்து சென்றுள்ளாரகளா?
_________________________________________________________________________________________________________

இன்னொரு இடதுசாரி வெற்றி.........,


 யூகஸ்லோவேயாவில் இருந்து பிரிந்து சென்ற ஸ்லோவேனிய நாடாளுமன்றத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் "பாஸிடிவ் ஸ்லோவேனியா' என்ற இடதுசாரி கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆச்சரியம் என்னவெனில், அந்நாட்டின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக வியாபாரியான ஸாரென் ஜான்கோவிக், பாஸிட்டிவ் ஸ்லோவேனியா கட்சியை கடந்த இரு மாதங்களுக்கு முன்தான் ஆரம்பித்தார். இருமாத வயதேயுடைய கட்சி, ஸ்லோவேனியாவில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது அரசியல் பார்வையாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 28.62 சதவீத வாக்குகள் பெற்று பாஸிடிவ் ஸ்லோவேனியா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்த்த எதிர்க்கட்சியான ஸ்லோவேனிய டெமாக்ரடிக் கட்சி மீண்டும் எதிர்க்கட்சியாகவே தொடரும் வகையில் வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால் ஆளுங்கட்சியான சோஷியல் டெமாக்ரடிக் கட்சி படுதோல்வியைச் சந்தித்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

 ஆட்சியைப் பிடித்துள்ள பாஸிடிவ் ஸ்லோவேனியக் கட்சியின் தலைவர் ஜான்கோவிக் 2006 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் தலைநகர் லுஜுபுல்ஜானாவின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், மக்கள் திறமை மிகுந்த மாற்றம் ஒன்றை விரும்பியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் கடந்த ஆட்சியாளர்களிலிருந்து மாறுபட்டு நாட்டை ஒரு நிறுவனத்தைப் போல் நிர்வகிக்கப் போவதாகத் தெரிவித்த அவர், நாட்டை நிர்வகிக்க சிறந்த வியாபாரியே இப்போது தேவைப்படுவதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஏற்கனவே ரஷ்யாவில் இடதுசாரிகட்சியான கம்யூனிஸ்ட் கட்சி அதிக  இடங்களைக்கைப்பற்றி புடினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இப்போது இருநாடுகளால  பிரிந்த முன்னாள் கம்யூனிஸ்ட் நாடான யுகஸ்லோகியாவிலும் தலையை காட்டியுள்ளது குறிப்பிடதக்கது.

இன்னொன்று



தென் ஐரோப்பிய நாடான குரோஷியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அந்நாட்டின் எதிர்க்கட்சிக் கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது

 முன்னாள் யுகோஸ்லோவியக் கூட்டரசிலிருந்து தனி நாடாகப் பிரிந்தது குரோஷியா. அந்நாட்டை 1990-களிலிருந்து (2001-03 தவிர்த்து) கன்சர்வேடிவ் கட்சியே ஆட்சி செய்து வருகிறது.
 இந்நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திங்கள்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், இடதுசாரி 
களைக்கொண்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணி "குக்குரிக்கு'  62சதவீதத்துக்கும் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

 எதிர்க்கட்சியாக இருந்தாலும், நாட்டுக்காக எங்கள் கட்சி பாடுபடும் என்று தெரிவித்தார் பதவியிறங்கவுள்ள பிரதமர் ஜத்ரங்கா கோசோர்.

 வெற்றி பெற்றுள்ள இடதுசாரிக்கூட்டணியின் சார்பில் ஸோரன் மிலியநோவிக் பிரதமராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரோஷியா 2013-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியனுடன் இணையவுள்ளது.
 
________________________________________________________________________________

--------------------------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?