அபாய எச்சரிக்கை.......!

ன்று,
2015ம் ஆண்டு சென்னை மாநகரில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பிற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தான் காரணம் என்று அரசு தரப்பு சாட்சியும் அ.தி.மு.க வழக்கறிஞருமான பரணிதரன் சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். 

கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் விடாமல் மழை கொட்டித் தீர்த்தது. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் திறக்கப்பட்டதால் அடையாறும், கூவம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து நகருக்குள் புகுந்தது. 

இதனால் சென்னை மாநகரம் மிகப்பெரிய சேதத்தை சந்தித்தது. சென்னையை மிகப்பெரிய கனமழை தாக்க உள்ளதாக மத்திய அரசு 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே எச்சரித்ததாகவும், ஆனால் தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும் செம்பரம்பாக்கம் ஏரியை எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி திடீரென ஜெயலலிதா திறக்க உத்தரவிட்டதால் தான் பெருவெள்ளம் ஏற்பட்டதாகவும் ஸ்டாலின் புகார் கூறியிருந்தார். 
இந்த குற்றச்சாட்டு அவதூறு செய்யும் வகையில் இருப்பதாக கூறி அப்போதையே முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்டாலினுக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு தற்போது மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

நேற்றைய விசாரணையின் போது அரசு தரப்பு சாட்சியாக அ.தி.மு.க வழக்கறிஞர் பரணிதரன் கூண்டில் ஏற்றப்பட்டார். 
அவர் தனது சாட்சியத்தை பதிவு செய்யும் போது, 2015ம் ஆண்டு சென்னையில் மிக கனமழை கொட்ட உள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்னரே மத்திய புவியியல் ஆய்வு மையம் தமிழக அரசை எச்சரித்ததாக கூறினார். 


மத்திய அரசிடம் இருந்து வந்த எச்சரிக்கை அப்போதைய வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு தெரியும் என்றும் அரசு தரப்பு சாட்சியான பரணிதரன் ஒரு குண்டை தூக்கி போட்டார். 
மேலும் "கனமழை குறித்த மத்திய அரசின் எச்சரிக்கையை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு , உதயகுமார் சொல்லியதாகத் தெரியவில்லை" பரணிதரன் வாக்குமூலம் அளித்தார். 

அத்துடன் செம்பரம்பாக்கம் ஏரியை திடீரென திறக்க உத்தரவிட்டது வருவாய்த்துறை அமைச்சரான உதயகுமார் தான்  என்றும் பரணிதரன் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். 

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான ஒரு வழக்கில் அரசு தரப்பு சாட்சியான அ.தி.மு.க வழக்கறிஞர் திடீரென அமைச்சர் உதயகுமாருக்கு எதிராக சாட்சியம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
==========================================================================================
ன்று 
அரபிக் கடலில், தென் மேற்கு பகுதியில் இருந்து வீசும், ஈரப்பதம் மிக்க காற்று, அதிக வலுவடைந்துள்ளது. அதனால், கடலில் இன்று இரவு, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில், மிக கன மழை பெய்ய, அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கேரளாவில், ஐந்து நாட்களாக கன மழை கொட்டி வரும் நிலையில், இன்னும் கன மழை தொடரும் என அறிவித்துள்ளதால், அங்கு, மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றும், நாளையும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், இன்று மட்டும், அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளது. 
கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவை ஒட்டிய, தமிழக பகுதிகளில், பெரும்பாலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

அதிக மழை பொழிவுக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திருநெல்வேலி, விருதுநகர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள்.

* வரும், 7ம் தேதி, தமிழகம் மற்றும் கேரளாவில், மிக கன மழை முதல், மிக அதிக கன மழை பெய்யும். தமிழக கடலோர பகுதிகள்,கர்நாடகாவை ஒட்டிய தமிழக பகுதிகள் மற்றும் அந்தமான் தீவுகள் பகுதிகளில், கன மழை பெய்யும்.

அதிக மழைக்கு எச்சரிக்கப்பட்ட  மாவட்டங்கள்: -
துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், 
நீலகிரி, கோவை, தேனி மற்றும் திருநெல்வேலி

* வரும், 8ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒட்டிய கடலோர பகுதிகள், கடலோரத்தை ஒட்டிய உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதி என, அனைத்து மாவட்டங்களிலும், சில இடங்களில், மிக கன மழை பெய்யும்.

அதிக வாய்ப்புள்ள மாவட்டங்கள்: ராமநாதபுரம், நாகை, கடலுார், விழுப்புரம், சென்னை மற்றும் புதுச்சேரி

* வரும், 9ம் தேதி, தமிழக உள் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள் மற்றும் கிழக்கு கடலோர மத்திய மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்புள்ளது.

அதிக வாய்ப்புள்ள மாவட்டங்கள்: மதுரை, திருச்சி, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை.


இதில் குறிப்பிடப்படாத பகுதிகளில், லேசானது முதல் மிதமானது வரை, திடீர் மழை பெய்யலாம்.
7 - 11 செ.மீ., வரை: கன மழை
12 - 20 செ.மீ., வரை: மிக கன மழை
21 செ.மீ., மற்றும் அதற்கு மேல்: மிக அதிக கன மழை

வரும், 7, 8ம் தேதிகளில், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில், மிக அதிக கன மழை பெய்யும்.
இன்று முதல், 7ம் தேதி வரை, பெரும்பான்மையான இடங்களில், மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில், கன மழை பெய்யும். அரபிக் கடலின் தென் கிழக்கு பகுதியில், இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். 

அது, 36 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின், புயலாகவும் வலுப்பெற்று, ஓமன் நாட்டில், கரையை நோக்கி நகரும்.

 மீனவர்கள், குமரி கடல், தெற்கு கேரளா, லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு, இன்று முதல், 8ம் தேதி வரை செல்ல வேண்டாம். 
கடலுக்குள் இருப்பவர்கள், உடனடியாக, கரைக்கு திரும்பி விட வேண்டும். சென்னை மற்றும் புறநகரில், இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
 மற்ற நாட்களில், திடீர் மழைக்கு தான் அதிக வாய்ப்பு.என வானிலை மய்யம் அறிவித்துள்ளது.

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு சிகப்பு எச்சரிக்கை (ரெட் அலார்ட்) விடப்பட்டுள்ளது.
 இந்நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. 

பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதே சமயம் சென்னை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


=======================================================================================
ன்று,
அக்டோபர்-05.
  • உலக  ஆசிரியர்கள் தினம்
  • சிந்தனையாளர் ராமலிங்க அடிகளார்(வள்ளலார்) பிறந்த தினம்(1823)
  • இந்தோனேஷிய ராணுவ தினம் 
========================================================================================
சாது மிரண்டால்?
டெல்லியில் நடந்த விவசாய பேரணியில் காவலர்கள் விவசாயிகளை தாக்கிய போது எதிர்த்து நின்ற பெண் விவசாயி.
  
இந்திய தேசவிரோதி(மக்களை)களைப்பார்க்க முடியாமல் முகத்திரை.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?