இடுகைகள்

ஜனவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கும்ப மேளாவில்

படம்
  புண்ணிய பலிகள்? மதநம்பிக்கை சார்ந்த பெருங்கூட்டங்களில் பாதுகாப்பு என்பது எப்போதுமே கேள்விக்குறியாக இருக்கிறது.  1992ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடந்த மகாமகத் திருவிழாவில் ஏற்பட்ட நெருக்கடியில் 50க்கும் மேற்பட்டவர்கள் குளத்திலேயே பிணமாகக் கிடந்தார்கள். மீட்கப்பட்ட உடல்களைக் கடந்து, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கணக்கில் வராமலேயே போனது.  அப்போது முதலமைச்சராக இருந்த செல்வி.ஜெயலலிதா தனது தோழியுடன் சென்று மகாமகக் குளத்தில் தனி இட வசதியுடன் புனித நீராடினார். இருவரும் நீராடுவதற்கான ஏற்பாடுகளிலும் பாதுகாப்பிலும் போலீசாரும் மற்ற அதிகாரிகளும் அக்கறையாக இருந்ததால், பொதுமக்கள் அந்தப் பக்கம் நீராட முடியாமல் வேறுபக்கம் செல்லவேண்டியிருந்ததால், இதனால் ஏற்பட்ட நெருக்கடியில்தான் உயிர்கள் பலியாயின. அத்திவரதர் தரிசனம், அண்மையில் ஒரு சாமியாரைப் பார்ப்பதற்காக வந்தவர்களிடம் ஏற்பட்ட நெருக்கடி இவற்றால் பலர் உயிரிழந்ததையும் மறக்க முடியாது.  இந்த நிலையில்தான், உத்தரபிரதேசத்தில் மகா கும்பமேளா நடக்கிறது என்றபோதே அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகள் எழுந்தன. காரணம், உத்தரபிரதேசத்தில் தி...

மீண்டும் இறப்பார்கள்.

படம்
 "யோகி தொடர்ந்து முதல்வராக இருந்தால் கூட்ட நெரிசல் சம்பவத்தில் இந்துக்கள் மீண்டும் இறப்பார்கள் . விபத்து நடந்ததை அப்பட்டமாக மறைத்த யோகி ஒரு பொய்யன்,  சனாதனி அல்ல. யோகி உடனே பதவி விலக வேண்டும்" -  சங்கராச்சார்யாஅவிமுக்தேஸ்வரானந்த். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம். வெளிநாட்டில் வேலை என்று சட்டவிரோத ஆட்சேர்ப்பு.கோவையில் 5 முகவர்கள்  கைது. கும்பமேளாகூட்டநெரிசல்உயிரிழப்பு.உத்தரப் பிரதேச அரசு மீது பொது நல வழக்கு . வாழ்வாதாரம் தேவை! மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) தனது இருபதாம் ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது.  இரு வெவ்வேறு ஆட்சிக் காலங்களையும் கடந்து வந்திருக்கும் இத்திட்டம், கிராமப்புற ஏழை மக்க ளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் முக்கிய திட்டமாக உருவெடுத்துள்ளது. கிராமப்புற வறுமை ஒழிப்பில் இத்திட்டத்தின் பங்களிப்பு மறுக்க முடியாதது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இத் திட்டத்தின் முக்கியத்துவம் மேலும் வெளிப் பட்டது. ஊரடங்கின் போது நகரங்களில் இருந்து கிராமங்களுக்குத் திரும்பிய புலம்பெயர் தொழிலா ளர்களுக்கும், கிராமப்புற தொழிலாளர்க...

அத்துமீறிய அரக்கன்!

படம்
  வக்பு மசோதா கூட்டு   சர்வதிகாரக் குழு   தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஒன்றிய பாஜக அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்தது. எதிர்க்கட்சியி னரின் கடும் எதிர்ப்பையடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பியது.  ஆனால் கூட்டுக் குழு கூட்டங்களையும் அதன் தலைவர் ஜெக தாம்பிகாபால் நாடாளுமன்றத்தைப் போலவே ஒரு தலைப்பட்சமாகவே நடத்தினார். அதன் உச்ச மாக 10 எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடை நீக்கம் செய்து வெளியேற்றவும் செய்தார். நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க முடியாத விஷயங்களை ஆழமாக விவாதித்து ஒருமித்த கருத்துக்களுடன் சட்டமாக்கவே கூட்டுக்குழு அமைக்கப்படும். ஆனால் பாஜக வோ ஏற்கெனவே கருத்து வேறுபாடுகளை மேலும் அதிகரிக்கும் வகையிலும் பாதிப்பை கூடுத லாக்கும் முறையிலும் புதிய புதிய திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறது.  மசோதாவின் அனை த்து 44 பிரிவுகளிலும் திருத்தங்கள் செய்திட விவா திக்க வலியுறுத்திய எதிர்க்கட்சியினரின் கோ ரிக்கைகளும் திருத்தங்களும் ஏற்கப்படவில்லை. ஆனால் பாஜகவினர் விரும்பிய 14 பிரிவுகளில் 32 திருத்தங்கள...

விளக்க வேண்டும்!

படம்
  அறிவுக்கு பொருந்தாத, வெறுப்பையும், சாதிய வெறியினையும் தூண்டி விடும் வன்மம் வடியும் விஷமத்தனக் கருத்துக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார். இதற்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது என அக்கட்சியில் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- சகஜானந்த அடிகளாரின் 135வது பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வரலாற்று அறிவு சூனியத்தை வெளிப்படுத்தியுள்ளார். கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு புத்தாயிரம் தொடங்கிய போது, ​​அறிஞர்களின் தலைசிறந்த பேரறிவாளர் காரல் மார்க்ஸ் என்பதை உலகம் ஒப்புக்கொண்ட வரலாற்று உண்மையை அறியாதவர் ஆளுநர் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். சமூக இயக்கத்தின் தோற்றம் தொடங்கி, பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தை பகுத்தாய்ந்து, சமூக இயக்கவியல் விதிகளின் அறிவியல் அடிப்படைகளை நிறுவி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் காரல் மார்க்ஸ். சமூக புல்லுருவியாக உருவான புரோகிதக் கும்பல், ஆதிக்க சக்திகளை வசப்படுத்தி, தங்களை நிலைநிறுத்திக் கொள்ள, மனுவின் வர்ணாசிரம கருத்தியலில்...

ஒரு குடிமகனின் சோகம்?

படம்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை காவல் ஆணையர் அருண் மீதான உயர் நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை.  அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை பிப். 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆணை. பள்ளிக் கல்வித்துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அரசாணை வெளியீடு. குடிமகன் சோகம்? நாட்டின் 76வது குடியரசு தின விழா நேற்று (26.01.2025) கோலாகலமாக நடைபெற்றது. இந்தியத் தலைநகரான டெல்லியில் குடியரசுத் தலைவர்  செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  அதை தொடர்ந்து, நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும், தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.  இந்த நிலையில், அரசு பள்ளி ஒன்றில் குடிபோதையில் தேசியக் கொடியை ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார், மாநிலம், முசாபர்பூர் மாவட்டம், மினாபூர் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளியில், நேற்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டது....

அமெரிக்காவை அலறவைத்த

படம்
  டீப்    சீக் சீன AI ஸ்டார்ட்அப் நிறுவனமான   DeepSeek , அமெரிக்காவின் Meta மற்றும் OpenAI-க்கு போட்டியாக மிகப் பெரிய இயற்றறிவு மாதிரியை (Large language model) குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.  அதன் மொபைல் செயலி 1.6 மில்லியன் பதிவிறக்கங்களைப் பெற்று, பல நாடுகளில் App Store தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், உலக சந்தையில் விலை நிர்ணய உத்திகள் குறித்து அமெரிக்க AI நிறுவனங்களுக்கு பெருத்த கவலைகளை எழுப்பியுள்ளது. Meta மற்றும் OpenAI நிறுவனங்களின் பெரிய இயற்றறிவு மாதிரியை (LLM) போன்று செயல்திறனை வழங்கும் இந்த  DeepSeek, முன்னணி AI நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு சவாலாக உருவெடுத்துள்ளது. DeepSeek-இன் இலவச செயலி அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள Apple App Store-ன் தரவரிசையில் ChatGPT-ஐ முந்தியுள்ளது. DeepSeek என்பது சீன ஹெட்ஜ் நிதி நிறுவனமான High-Flyer நிறுவனர் Liang Wenfeng-க்கு சொந்தமானது.  கடந்த 2023-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட DeepSeek, கடந்த மாதம்  ‘V3’  என்கிற அதன்...

வெள்ளை அறிக்கை

படம்
100 நாள் வேலை திட்டத்துக்கு ஒன்றிய அரசுநிதிஒதுக்காததால்ஊழியர்களுக்கு2மாதமாக  ஊதியம் வழங்குவதில் சிக்கல். கொலம்பியா பொருட்களுக்கு இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தினார் அமெரிக்க அதிபர் டிரம்ப். தெற்கு ரயில்வே, நடப்பு நிதியாண்டில், 9,170 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் எவ்வளவு? வெள்ளை அறிக்கை வெளியிட எடப்பாடி வலியுறுத்தல். சைமனுக்கு பிரபாகரனை நல்லா தெரியும். ஆனா பிரபாகரனுக்கு சீமான தெரியவே தெரியாது.-ஒளிப்பதிவாளர் சந்தோஷ் நியூஸ்18ல். டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு. தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். “இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 34 தமிழக மீனவர்களை விடுவிக்கவும் தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். டாவோஸ் மாநாடு தொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதில் அளித்துள்ளார். டி.ஆர்.பி...