பிரபலமானவர் என்றால் விடுதலையா?



  1993ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி மும்பையில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு தொடர் குண்டு வெடிப்பு  13 முக்கிய இடங்களில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்டது.
தாவூத் இப்ராகிம் இதற்கு மூளையாக செயல் பட்டான்.
இந்த குண்டுகள் வெடிப்பில் 257 அப்பாவிகள்  கொல்லப்பட்டனர்.
713 பேர் காயமடைந்தனர்.இப்போது ஊணமுற்றவ்ர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
 நாட்டிலேயே முதன் முறையாக ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பில் அன்றைய மதிப்பில் ரூ.28 கோடி அளவில் சேதம் எற்பட்டது.இது இந்தியா மட்டுமன்றி,உலக அளவில் அதிர்சியையும் பரபரப்பையும் -அனுதாபத்தையும் எற்படுத்தியது.
 இந்தத் தாக்குதலில் தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன் மற்றும் அவரது சகோதரர் அயூப் மேமன் ஆகியோர் முக்கியப் பங்காற்றியது விசாரணையில் வட்ட வெளிச்சமாகியது.. இவர்கள் மூவரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர் .
இந்த குண்டு வெடிப்பின் போதான விசாரணையின் போது நடிகர் சுனில் தத்தின் மகனும் நடிகருமான சஞ்சய்தத் இந்த குண்டு வெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.அவரின் வீட்டில் சோதனை போட்டபோது குற்றவாளிகள் பயன் படுத்திய ஏ.கே.47 துப்பாக்கி, மற்றும் குண்டு வெடிப்புக்கு தேவையான வெடிபொருட்கள்.ஆர்டி எக்ஸ் மருந்து கண்டு பிடிக்கப்பட்டது.அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டை விதிக்கப்பட்டது.மற்றவர்களுக்கு தூக்கு,ஆயுள் வழங்கப்பட்ட போதும் காங்கிரசில் அவரின் தந்தை சுனிதத் உறுப்பினராக இருந்ததாலும் இப்போது போல் அரசியல்,திரையுல தலையீடாலும் மிக குறைந்த பட்ச தண்டனையே வழங்கப்பட்டது.அதில் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் கழித்து பிணையில் வெளியெ வந்துள்ளார்.
இப்போது அந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு  தண்டனை வழங்கப்பட்டு விட்டது.
"முக்கிய குற்றவாளியான யாகுப் அப்துல் ரசாக்கிற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. மேலும் ஏற்கனவே 18பேருக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையில் 16பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதிசெய்தது. இவர்கள் சாகும் வரை சிறையிலேயே தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும்,சஞ்சய் தத்துக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 6 ஆண்டு சிறை தண்டனையை 5 ஆண்டாக குறைத்து ம் . . ஏற்கனவே பிணையில் வெளியே வந்தவர்கள் இன்னும் நான்கு வாரகாலத்தி ற்குள் மீண்டும் சிறையில் முன்னிலையாக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே சஞ்சய் தத் 1.5 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டதால் மீதமுள்ள 3.5 ஆண்டு சிறைவாசம் மேற்கொள்ள இருக்கிறார்.
ஆனால் அவரை வைத்து படம் தயாரிப்பவர்கள் தங்கள் பணம் மோசம் போய்விடும் என்பதால் அவரின் தண்டனையை எப்பாடாவது பட்டு நீக்க முயற்சிக்கிறார்கள்.
அதற்கு இங்குள்ள அரசியல்வாதிகள் குறிப்பாக காங்கிரசு கட்சி மெனக்கெ டுகிறது.
நம்மஊர் நடிகர் ரஜினிகாந்தும்  அறிக்கை விடுகிறார்.

பிரபலமானவர் என்பதாலும் ,நடிகர் என்பதாலும் ஒருவருக்கு தீவிரவாத நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட தண்டனையை நீக்க சொல்வது எவ்வளவு பெரிய தேச விரோதம்.சட்ட விரோதம்.நடிகர் என்ன சினிமாவில் வைக்கும் டம்மி வெடியை வைப்பவர்களுக்கு உதவினாரா?அல்லது இறந்து கிடந்தவர்கள் காட்சி முடிந்ததும் எழுந்து சென்று விட்டார்களா?என்ன இது திரைப்பட பட பிடிப்பு சம்பவமா?இரக்கமற்ற தீவிரவாதம்.பழியானவை அப்பாவி இந்தியர்களின் உயிர்.இது ஒன்றுமே தெரியாமாலா -குண்டு வெடிப்புகள் பற்றியே அறியாமலா தீவிரவாதிகளின் துப்பாகிகளையும் ,வெடி மருந்துகளையும் வாங்கி தனது வீட்டில் மறைத்து வைத்தார் தத்.
தனது தந்தை காங்கிரசு மாநிலங்கவை உறுப்பினர்,தான் நடிகர் தனது வீட்டில் சோதனை நடக்காது என்ற தைரியம்தானே?
சஞ்சய்தத் ஏற்கனவே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பிணையில் வந்திருப்பவர் மீது பணம் கட்டி படம் எடுக்கும் தொழிலை செய்பவர்கள் முதலிலேயே அதை சிந்தித்திருக்க வேண்டும் .தெரிந்து தானே இந்த படத் தயாரிப்புகளையே செய்கிறர்கள்.
இதற்கு துணை போன நடிகருக்கு அவரின் பிரபலம் வைத்து விடுதலையா?பிரபலமானவரின் புகழில் தப்பிக்க நினைப்பவர்களுக்கு கடும் தண்டனை அல்லவா வழங்க வே ண்டும்.நடிகன் பிரபலம் என்பதால் குடித்து விட்டு காரை ஒட்டி உயிர்களை பலி வாங்கினாலும்,சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்தாளும்மான் வேட்டை ஆடினாலும்,குடித்து விட்டு பொது இடத்தில் அரசு அலுவலர்களை தரக்குறைவாக பேசினாலும் ஒன்றுமே நடவடிக்கை கிடையாதா?நடவடிக்கை எடுத்தாலும் அதை நீக்க சொல்லுவதா?
அப்போது இது போ ன்று நடந்து கொள்ளும் மற்ற சாமானியர்களுக்கு தண்டனை வழங்க இந்த சட்டத்திற்கும்,நீதிமன்றத்துக்கும் என்ன உரிமை இருக்கிறது?அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது.
கன்றுக்காக தனது மகனின் உயிரையே பறித்த கதை கதையாகி ரொம்ப காலமாகி விட்டதால் பொறுப்பில் இருப்பவர்களுக்கு நீதி என்றால் விருப்பப்படி வளைப்பதற்கு என்ற எண்ணம் உண்டாகி விட்டதோ?மத்திய அமைச்சர் ஷிண்டே இந்த தண்டனையை தவிர்க்க வழி தேடுகிறாராம்.சொல்லுகிறார்.
இது போன்று அப்சல் குருவுக்கும் ,கசாப்புக்கும் தண்டனை தீவிரவாதத்திற்கு வழங்கியது தவறு.அதைத்தானே இந்த சஞ்சய் தத் விவகாரம் வரும் காலங்களில் சொல்லும்.
கசாப்.அப்சல் குருவும் தான் தங்கள் தீவிரவாதம் மூலம் இந்திய புகழ் அடைந்து விட்டார்களே.பிரபலமாகி விட்டார்களே?அவர்களை தெரியாதவர்கள் தற்பொது இந்தியாவில் இருப்பதாகவே தெரியவில்லை.ஏன் அவர்கள் மரணதண்டனை ஆயுள் தண்டனையாகவோ-விடுதளையாகவோ மாற்றப்படவில்லை.
இது சஞ்சய்தத்துக்கு விடுதலை அளித்தால் வரும் காலங்களில் தீவிரவாதிகள் கேட்கும் கேள்வியாகி விடும்.இந்திய அரசியல் சட்டம் மட்டும் அல்ல.அரசி பாதுகாப்பும் கேலிக்குரியதாக்கி விடும்.ஏற்கனவே இத்தாலி க்காரர்கள் இப்போதுதான் கே லிக்கூத்தாக்க எண்ணி பின்னர் போனால் போகிறது என்று இந்தியா வந்துள்ளார்கள்.
நாமே நமது சட்டத்திட்டங்களை ஆளுக்கு தகுந்தாற்போல் வளைத்துஅசிங்கப்படுத்திக்கொள்ள வேண்டாம்.
இத்தாலியில் இருந்து திரும்பி வந்த இரு கொலைக் குற்றவாளிகள் 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
 நோக்கியாவின் புரிந்துணர்வு.....

ரோப்பாவிலுள்ள பின்லாந்து நாட்டைச் சேர்ந்த கைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியா குறித்துப் புதிதாக அறிமுகப்படுத்தத் தேவையில்லை. தமிழக அரசு, பலத்த போட்டிக்கிடையே, பல சலுகைகளை அளித்து, அந்நிறுவனத்தைத் தமிழகத்திற்கு அழைத்து வந்தது. நோக்கியாவின் வருகை சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகவும், தமிழகத்தின் நவீன அடையாளமாகவும் காட்டப்பட்டது. இப்படி ஆளும் கும்பலால் ஒளிவட்டம் போட்டுக் காட்டப்பட்ட நோக்கியா, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ள திருட்டுக் கூட்டம் என்ற உண்மை இப்பொழுது அம்பலமாகியிருக்கிறது.
சிறீபெரும்புதூரில் அமைந்துள்ள நோக்கியா ஆலையிலும், பெருங்குடியில் அமைந்துள்ள அதன் அலுவலகத்திலும், டெல்லியை அடுத்துள்ள குர்கானில் அமைந்துள்ள அதன் துணை நிறுவனங்களிலும் கடந்த ஜனவரி மாதத்தில் ஒரே சமயத்தில் வருமான வரிச் சோதனை நடத்திய அதிகாரிகள், நோக்கியா, பின்லாந்திலுள்ள அதன் தாய் நிறுவனத்திடமிருந்து மென்பொருளை இறக்குமதி செய்ததில் 3,000 கோடி ரூபாய் முதல் 18,000 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதைக் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளனர். பின்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மென்பொருட்களை, கச்சாப் பொருளாகக் காட்டி இந்த வரிஏய்ப்பை நோக்கியா நடத்தியிருக்கிறது.
நோக்கியாஅரசுக்குச் செலுத்த வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் வரியைக் கட்ட நோக்கியா முன்வருமா? அல்லது நீதிமன்றத்தில் முறையிட்டு, சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து, வோடாஃபோன் நிறுவனம் போல ஏய்த்த வரியைக் கட்டாமல் தப்பித்துக் கொள்ளுமா என்ற சுவாரசியமான காட்சிக்கு நாம் இன்னும் சில காலம் காத்திருக்கத்தான் வேண்டும்.
நோக்கியா நிறுவனம் தமிழகத்தின் சிறீபெரும்புதூர் ஆலையில் போட்டுள்ள மொத்த மூலதனம் 22.5 கோடி அமெரிக்க டாலர்கள். இது (இந்திய ரூபாயில்) இன்றைய மதிப்பின்படி 1,125 கோடி ரூபாய். நோக்கியா நிறுவனம் தனது ஆலையைத் தமிழகத்தில் அமைப்பதற்காக, “அந்நிறுவனம் இந்தியாவினுள் விற்கும் அதனின் கைபேசிகள் மீது விதிக்கப்படும் மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்ட பிற வரிகள் அனைத்தையும் அந்நிறுவனத்திற்கே மானியமாக அளிப்பதாக” ஒப்புக் கொண்டது, தமிழக அரசு. இதன் காரணமாக நோக்கியா சிறீபெரும்புதூர் ஆலையில் உற்பத்தியைத் தொடங்கியதிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு 645.4 கோடி ரூபாயை வரிச் சலுகைகளாகவும் மானியமாகவும் தமிழக அரசிடமிருந்து பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நோக்கியா தொழிலாளர்கள்

இதுவொருபுறமிருக்க, நோக்கியா நிறுவனம் சிறப்புப் பொருளாதார மண்டலமாகக் கருதப்படுவதால், 2005-06 மற்றும் 2006-07 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு மைய அரசு அளித்துள்ள சுங்க வரி மற்றும் உற்பத்தி வரி விலக்குச் சலுகை ஏறத்தாழ 681.38 கோடி ரூபாய். மேலும், 2006-07, 2007-08, 2008-09 ஆகிய மூன்று ஆண்டுகளில் அந்நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட வருமான வரி உள்ளிட்ட நேரடி வரிச் சலுகைகள் மற்றும் ஏற்றுமதி வரிச் சலுகைகள் ஆகியவை காரணமாக அந்நிறுவனம் அடைந்துள்ள மறைமுக இலாபம் ஏறத்தாழ 8,000 கோடி ரூபாய். இவ்வளவு வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருக்கும் அந்நிறுவனத்தை மூடி சீல் செய்திருக்க வேண்டும்; இந்த வரி ஏய்ப்பில் ஈடுபட்ட அந்நிறுவனத்தின் தலைவர், அதிகாரிகள் என்ற கொள்ளைக் கூட்டத்தின் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டிருக்க வேண்டும்.
இவை எதுவுமே நடைபெறவில்லை. ஆனாலும், நோக்கியா உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகள், தங்கள் மீது வருமான வரித் துறை அதிகாரிகள் வேட்டை நாயைப் போலப் பாய்வதாகவும், இது முதலீட்டுச் சூழலைப் பாதிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.
நோக்கியா பல்லாயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகைகளையும் பெற்றுக் கொண்டு 18,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்த்திருப்பது மட்டுமல்ல; ஆறே ஆண்டுகளில் அந்நிறுவனம் 25,000 கோடி ரூபாய் அளவிற்கு அதிரடி இலாபம் அடைந்திருப்பதும், அந்த இலாபம் முழுவதும் இந்தியாவிலிருந்து பின்லாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதும் கவனத்திற்குரியதாகும். நோக்கியா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள தனது ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளிக்கு ஆண்டொன்றுக்குத் தரும் சராசரி ஊதியம் 29 இலட்சம் ரூபாய். இது, சென்னையில் உள்ள நோக்கியா ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளிக்குத் தரப்படும் ஆண்டு ஊதியத்தைவிட 45 மடங்கு அதிகம். சட்டபூர்வமாக நடந்துவரும் இந்த உழைப்புச் சுரண்டல்தான் அந்நிறுவனத்திற்கு ஆறே ஆண்டுகளில் 25,000 கோடி ரூபாய் என்ற அளவிற்கு அதிரடி இலாபத்தை அள்ளித் தந்திருக்கிறது.
இந்தியாவைக் கொள்ளையடித்துத்தான் இங்கிலாந்து வளமான நாடாக மாறியது என்பது காலனியக் காலக்கட்டத்தில் நிரூபணமான உண்மை. அன்றிருந்தது கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒரு நிறுவனம்தான். இன்றோ பல நூறு பன்னாட்டு நிறுவனங்கள், தனியார்மயம்-தாராளமயம் என்ற பெயரில் நாட்டைச் சட்டபூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் கொள்ளையடித்து வருகின்றன.
2005-06 நிதியாண்டில் மட்டும் 1,915 பன்னாட்டு நிறுவனங்களுள் 411 நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட உண்மையை நாடாளுமன்றத்திலேயே போட்டு உடைத்தார், நிதித்துறை துணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம். வோடாஃபோன் நிறுவனம் 11,000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்த தகிடுதத்தம் கடந்த ஆண்டு அம்பலமாகியது. இவையன்றி, பெட்ரோலிய நிறுவனமான ஷெல், இணைய தள நிறுவமான கூகுள் ஆகியவையும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது சமீபத்தில் அம்பலமாகியிருக்கும் உண்மைகள். கடந்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 95,000 கோடி ரூபாய் இந்தியாவிலிருந்து அந்நிய நாடுகளுக்குக் கடத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறது, குளோபல் இன்டகிரிட்டி என்ற தன்னார்வ அமைப்பு.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவைக் கொள்ளையடிக்கத்தான் குதித்திருக்கிறார்கள் என்பதையும், உமிகூட கொண்டு வராமல் அவலைத் தின்னும் பகற்கொள்ளைக் கூட்டம்தான் பன்னாட்டு நிறுவனங்கள் என்பதையும் இந்த உண்மைகளிலிருந்து புரிந்துகொள்ளலாம். ஆனால் மன்மோகன் சிங் கும்பலோ, பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் ஏதோ இந்தியாவை வளமாக மாற்றுவதற்கும் இங்குள்ள ஏழைபாழைகளுக்கு வேலை கொடுப்பதற்கும்தான் அமெரிக்க டாலர்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு இங்கு வருவதாகவும், அதைத் தடுப்பது நாட்டின் முன்னேற்றத்தையே தடுப்பதாகும் எனத் திரும்பத்திரும்பப் பச்சையாகப் புளுகி வருகிறார்கள்.
தனியார்மயம்-தாராளமயம் திணித்துள்ள உழைப்புச் சுரண்டலும், அக்கொள்கைகளின் விளைவாக நடந்துவரும் மூலதனக் கடத்தலும்தான் இந்திய மக்கள் வறுமையில் வாடுவதற்கு முதன்மையான காரணமாகும். இவையிரண்டையும் தடுப்பதற்குப் பதிலாக, தொழிற்சங்கச் சட்டங்களை மேலும் தாராளமயமாக்க வேண்டும் எனச் சாமியாடி வருகிறார், மன்மோகன் சிங். இதன் பொருள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இன்னும் கூடுதலாக இலாபம் கிடைக்க வேண்டும் என்பதுதான். ப.சிதம்பரமோ, வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்படவிருந்த வரி ஏய்ப்புத் தடுப்புச் சட்டம் என்ற பூதத்தை நாங்கள் புதைத்துவிட்டோம் என நிதியாதிக்கக் கும்பலிடம் உறுதியளிக்கிறார். இதன் பொருள் வரி ஏய்ப்பைச் சட்டபூர்வமாக்குவதுதான்.

நன்றி;"வினவு" 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ 


யாரென்று தெரிகிறதா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?