நெற்றிக் காசை திருடும் கூட்டம்....!

நாகப்பட்டிணத்தில் கஜா புரட்டி எடுத்த  பகுதிகளை ஒருவழியாக பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு மனிதாபிமனத்தோடு, மனசாட்சிப்படி வழங்கும்.’என்றுஅறிக்கைவிட்டுள்ளார்.
 பழனிசாமியின் மனசாட்சியைத்தான் தூத்துக்குடியில்  துப்பாக்கியால் சுட்டு 16 பேர்கள் ஸ்டெர்லைட்டுக்காக கொலை செய்யப்பட்டபோது அவர் அதை தொலைக்காட்சி மூலம் ரசித்ததை கூறியதன் மூலம் தெரிந்த கொண்டோமே.

புயல் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு சோறு, குடிநீருக்கு நிகராக உடைகளும் அவசியம். 
கூடவே போர்த்திப் படுக்கவும், கடும் குளிரிலிருந்து காத்துக் கொள்ளவும் போர்வைகளும் அவசியம். இந்த அடிப்படையில்  போர்வைகளை மக்களுக்கு வழங்கப்போவதாகக் கூறி போர்வைகள் மொத்தமாக கொள்முதல் செய்கிறது தமிழக அரசு. 
இதில்தான் எழவு வீட்டில் பிணத்தின் நெற்றிக்கஅசைத்திருட்டுவது போல் ஊழல் மலிந்துள்ளது. 
அதாவது அரசு நிறுவனமான கோ ஆப் டெக்ஸ் மூலமோ,ஈரோடு மாவட்டத்தில் கைத்தறி கூட்டுறவு நெசவாளர்களிடம் தரமான போர்வைகளை வாங்காமல், தனியாரிடம் தரம் குறைந்த போர்வைகளை அடிமாட்டு விலைக்கு வாங்குகிறார்கள்.
மொத்தம்  ஏழு லட்சம் போர்வைகள் வாங்கிட முடிவு செய்து இதுவரையில் மூன்றரை லட்சத்துக்கு மேல் வாங்கிவிட்டார்கள்.
 இதில் 90% மேல் தனியாரிடம் தான் வாங்கியுள்ளனர்.  

 அது மட்டுமில்லாமல் போர்வையை மலிவான விலைக்கு வாங்கிவிட்டு அதைவிட சுமார் ஒன்றரை மடங்கு அதிகமாக்கி கூட்டுறவு சங்கங்களிடம் ரசீது வாங்கி அரசு பணத்தை கையாடல் செய்துள்ளார்களாம். ஒரு போர்வை  விலை நூறு என்றால், இவர்களோ நூற்று ஐம்பது முதல் இருநூறு ரூபாய் வரை போலியாகவிலை போட்டு அரசுப்பணத்தை சுருட்டுகிறார்களாம்.

புயல் பதித்த இடங்களுக்கு போர்வை வழங்க அதிமுக அரசிடம் ஒப்பந்தம் எடுத்திருப்பது ஆளுங்கட்சிக் காரர்களே.
 ஒரு போர்வைக்கு ஐம்பது ரூபாயென்றால் ஏழு லட்சம் போர்வைக்கும் சில கோடிகளில் ஊழல் நடக்கிறது. இந்த பணத்தில் அதிகாரிகள் வாயையும் அடைப்பதால் அவர்களும் வாய் மூடி போர்க்கால அடிப்படையில்  விரைவாக பணத்தை வழங்கி ஊக்குவிக்கிறார்கள்.

வெறும் போர்வையில்  மட்டுமல்ல  இந்த சுருட்டல். நிவாரணம் என்ற பெயரில் அரசு வாங்கும் குடிநீர்,அரிசி,பருப்பு,மெழுகுவர்த்தி,சேலை,வேட்டி,எல்லா பொருட்களிலுமே இந்த முறைகேடுகள் நடப்பதாய் தெரிகிறது.


கஜா புயலில் பாதிக்கப்பட்டு வாழ்க்கை எல்லாம் இழந்து கடுமையான சூழலில் வாழும் மக்கள் தற்போது நடை பிணத்துக்கு சமம். 
அவர்களின் பணத்தில் போய் கைவைப்பதென்பது பிணற்றின் நெற்றிக் காசை திருடும் கதையல்லவா?
இப்படிப்பட்ட நிலையில், மத்திய அரசு மட்டும் மனிதாபிமான, மனித நேயம், மனசாட்சி எல்லாம் பார்த்து பார்த்து உருகி நிதியை கொடுக்க வேண்டுமா?

 அவர்கள் உருகி கொடுக்கும் நிதி, இவர்கள் ஊழல் செய்வதற்கா?

தங்களின் எடுபிடி தமிழகஅரசு மத்திய அரசு ஒதுக்கும் 15000 கோடிகளில் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செல்வது கால்வாசிதான் என்பதால் அதை கொடுக்கும்.ஆனால் மோடி அரசோ வெறும் 353 கோடிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது.

அதற்கு எடப்பாடி அரசு மட்டுமே காரணமல்ல.தலை கீழாக நின்று தவமிருந்தாலும்  #கோ பேக் மோடி புகழ்  தமிழகத்தில் தாமரை மலராது என்ற உண்மையும்தான் கரணம்.

இதில் முதல்வர் பழனிசாமி கூறியதை எண்ணிப்பார்ப்போம்.
"கேரளமக்கள் அரசுடன்,முதல்வருடன் ஒத்துழைத்த மனப்பான்மை தமிழக மக்களுக்கு இல்லை."
அது உண்மைதான் கேரளா முதல்வர் பிரனாயி விஜன் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் கதறுகையில் அரசு விழாக்களில் மலர் பாதையில் நடந்து சென்று ,மாமியார் வீட்டில் பிரியாணியை சாப்பிட்டுக்கொண்டு போட்டோ எடுத்துக்கொண்டிருக்கவில்லையே.
களத்தில் மக்களுடன் இருந்தார்.துவண்ட மக்களுக்கு உற்சாக வார்த்தைகளில் ஆறுதல் கூறினார்.
ஆனால் பழனிசாமி ஐந்து நாட்களுக்குப்பின் ஹெலிகாப்பரில் இரண்டு உரை மட்டுமே பார்த்து போனார்.10 நாட்களுக்குப்பின்.ரெயிலில் சென்று சாலைகளில் அஜித் வரப்பட்டவர்கள் வாழ்த்து முழங்க  சென்ற் கடையில்  ஏற்கனவே வாங்கிச்சென்ற தேனீரை கடையில் வாங்கிக்குடிப்பது போல் போட்டோ எடுத்தார் மின்டம் வாழ்த்துப்பாக்கள் ஒலிக்க சென்னை வந்தார்.
தமிழக முதல்வர் கேரளா முதல்வர் போன்று மக்களுக்கான முதல்வராக இல்லையே என்றுதான் பதில் சொல்ல வேண்டியதிருக்கிறது.
 
 ===================================================
சாமியே சரணம் அய்யப்பா !
கேரளத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 39 இடங்களுக்கு நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் 21 இடங்களில் இடது ஜனநாயக முன்னணிக்கு மக்கள்மகத்தான ஆதரவு அளித்துள்ளனர்.
சபரிமலையில் பெரும் ரகளை நடத்திய பாஜகவுக்கு பத்தனம்திட்டையில் வெறும் 7 ஓட்டுகள் மட்டுமே கிடைத் துள்ளது.
கேரள உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் சபரிமலை பிரச்சனையில் மக்களது எண்ண ஓட்டத்தை தெளிவுபடுத்தியுள்ளது.
இடது ஜனநாயக முன்னணியின் நிலைபாட்டுக்கு பெரும் ஆதரவை மக்கள் அளித்துள்ளனர்.
மாறாகபாஜகவால் 2 வார்டுகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்துள்ளது.
யுடிஎப் 11 இடங்களை பிடித்துள்ளது. எஸ்டிபிஐ-2, சுயேச்சைகள் 2 (ஒருவர் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்), கேரளகாங்கிரஸ் 1 (காங்கிரசிலிருந்து வெளியேறியவர்).


சபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டை மாவட்டத்தில் பத்தனம் திட்டை நகராட்சியின் வார்டு கவுன்சிலருக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பி.ஜெனின் வெறும் 7 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார்.

 இங்கு வெற்றி பெற்ற இடதுசாரி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் அன்சர் அகமது 443 ஓட்டுகள் பெற்றுள்ளார்.

 இதே மாவட்டத்தில் உள்ள பந்தளம்நகராட்சி வார்டில் எஸ்டிபிஐ வேட்பாளர் ஹசீனா 276 ஓட்டுகளுடன் வெற்றிபெற்றுள்ளார். இங்கு பாஜக வேட்பாளர் ரஜனி பெற்ற ஓட்டுகள் 12.

கொல்லம் மாவட்டத்தில் விசித்திரமாக காங்கிரஸ்-பாஜக கூட்டணி அமைத்துக்கொண்டது.

அதுவும் பாஜக வேட்பாளராக கடந்தமுறை விளக்குடி ஊராட்சியில் போட்டியிட்ட லீனாராணி இம்முறை காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார்.
தனது வேட்பாளரை நிறுத்தாமல் பாஜக அவருக்கு ஆதரவளித்தது.

 கடந்தமுறை போட்டியிட்டஎஸ்டிபிஐயும் தனது வேட்பாளரை நிறுத்தாமல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளித்தது. காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் தன்னிடமிருந்த 5 இடங்களை தற்போது இழந்துள்ளது.
பொன்ராதாகிருஷ்ணன் சபரி மலையில் நடத்திய  அழுகை நாடகத்துக்கு பயனில்லை.

=====================================================
ன்று,
டிசம்பர்-02.

லாவோஸ் தேசிய தினம்

 அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு செயல்பட துவங்கியது(1970)

அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய், உம் அல் குவைன் ஆகியன இணைக்கப்பட்டு  அரபு அமீரகம் என்ற ஒரே நாடாக்கப்பட்டது((1971)

 அரபு அமீரகம் தேசிய தினம்(1971)

=====================================================
 ஐக்கிய அரபு அமீரகம் 1971ம் ஆண்டு டிசம்பர் 2ம் நாள் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன் மற்றும் புஜைரா ஆகிய ஆறு மாகாணங்கள் இணைந்து உருவாக்கப்பட்டது. 1972ம் ஆண்டு ராசல் கைமா ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்தது.

பின்வரும் 7 சிறிய நாடுகளை அமீரகம்  கொண்டுள்ளது: இவை கூட்டமைத்த நாள் தான் தேசிய தினமாக கொண்டாப்படுகிறது.

1.‪‎அபுதாபி‬ ,2.‪‎துபாய்‬ 3.‪‎சார்ஜா‬,4.‎அஜ்மான்‬ 5.‪ராஸ் அல் கைமா‬ 6.‪உம் அல் குவெய்ன்‬ 7.‪புஜெய்ரா‬ ஆகியவை இணைந்துதான் அமீரகம் .
 அபுதாபி‬ தான் தலை நகர்.

ஐக்கிய அரபு அமீரகம்,மத்திய கிழக்கில், ஓமான் வளைகுடா, பாரசீக வளைகுடா என்பவற்றை எல்லையாகக் கொண்டு, ஓமானுக்கும் ,சவுதி_அரேபியா‬’வுக்கும் இடையே அமைந்துள்ளது.
இது ஏற்ற இறக்கங்களுடன் கூடிய பெரிய பாலைவனத்துடன் கலக்கும், மட்டமான கரையோரத் தரிசு நிலங்களையும், கிழக்கில் மலைகளையும் கொண்டது. ‪ஹோர்முஸ்‬ நீரிணையின் தென் அணுகுபாதையோடு அமைந்துள்ள இதன் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம், உலக கச்சா எண்ணை  இடை மாற்றுப் பகுதியாக இதனை ஆக்கியுள்ளது.

1960களின் தொடக்கத்தில் அபுதாபியில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
இது கூட்டமைப்பு உருவாக்கும் கோரிக்கைக்கு வழி வகுத்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் செல்வம், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 33% ஐக் கொண்ட எண்ணெய், எரிவாயு என்பவற்றின் உற்பத்தியைச் சார்ந்துள்ளது. வளைகுடாவில், சவுதி அரேபியா,‪ஈரான்‬ என்பவற்றுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு இதுவாகும்.

1973 இலிருந்து, பாலைவன சிறு நாடுகளைக்கொண்ட ஏழ்மைப் பிரதேசம் என்ற நிலையிலிருந்து, உயர் வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நவீன நாடாக மாற்றம் பெற்றுள்ளது.

 







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?