சாதி இரண்டொழிய..,

ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அனுமன் ஒரு தலித் என்றுஉத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அனுமனின் சாதியைக் கண்டுபிடித்தார்.

 ‘பஜ்ரங் பாலி ஒரு தலித்’ என்றுஅவர் கூறினார்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத் தலைவரான நந்த் கிஷோர் சாய், அதற்கு மறுப்பு தெரிவித்து, அனுமன் தலித் அல்ல, “பவன்புத்திரா மற்றும் கேசரிநந்தன் என்று அழைக்கப்படுகின்ற அனுமன், உண்மையில் வனத்தில் வாழ்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்” என்று மற்றொரு தகவலைக் கூறினார்.

இதைக்கேட்டு சண்டைக்கு வந்துவிட்ட மத்திய அமைச்சர் சத்யபால் சிங்,“அனுமன் தலித்தும் அல்ல; பழங்குடியும் அல்ல; அவர் ஆரியன்; ஏனென்றால் அனுமன் காலத்தில் தலித்துக்களே இல்லை” என்று கூறினார்.
இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்தஉத்தரப்பிரதேச மாநில மேலவை உறுப்பினர் புக்கால் நவாப், ‘இந்துக்களின் கடவுளான அனுமன் ஒரு முஸ்லிம்’ என்று கூறி,புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பேட்டி ஒன்றை அளித்துள்ள அவர், “இந்து கடவுள் அனுமான் ஒரு முஸ்லிமாக இருந்திருக்க வேண்டும்;

 ஏனெனில் இஸ்லாமியரின் பெயர்களை போன்றுதான் அனுமன் பெயரும் உள்ளது.
ரஹ்மான், ரம்ஜான், ஃபர்மான், ஜிசான், குர்பாஃன் போன்ற பெயர்கள் இஸ்லாமிய மதத்தில் தான் சூட்டப்படுவது வழக்கம்;
ஹனுமான் என்றபெயரிலிருந்து தான் இந்தப் பெயர்களெல்லாம் சூட்டப்பட்டு இருக்கக்கூடும்” என்று கூறியுள்ளார்.
கண்டுபிடிப்புகளில் புக்கால் கூறியதுவித்தியாசமாக இருக்கிறது.


இந்து கடவுளை முஸ்லிம் என்றது சர்ச்சையை ஏற்படுத்தும் என்றாலும் பாஜக எம்எல்ஏ ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது புதிதாகும்.

இதை அறிந்து தானோ என்னவோபுக்கால் நவாப்பின் ஆராய்ச்சிக்கு,சவால் விடும்வகையில், பாஜகவின்ஹரி ஓம் பாண்டே என்ற நாடாளுமன்ற உறுப்பினரும் சாதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இந்துத்துவா கோட்பாட்டு படி அனுமன் பிராமணர் என்பதை விட்டு கொடுக்க ஹரிஓம் பாண்டே தயாரில்லை.
உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர்நகர் தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் ஹரி ஓம் பாண்டே, அனுமன் ‘பிராமணன்’ என்ற முடிவுக்கே வந்துள்ளார்.

இதில்,விஷேசம் என்னவென்றால், அனுமனோடு நிற்காமல், அனுமனைப் போலவே ராமனின் உதவியாளர்களாக இருந்த சுக்ரீவன், ஜடாயு போன்றவர்களின் சாதியையும் நோண்டி நுணுகிகண்டுபிடித்து ‘சாதனை’ படைத்துள்ளார்.
வானர நாட்டின் தலைவன் சுக்ரீவன் குர்மி;
 அவருடைய அண்ணன் வாலி யாதவர்,
சீதையை ராவணனிடம் இருந்து காப்பாற்ற முற்படும் ஜடாயு ஒரு முஸ்லிம்;
இலங்கைக்கு பாலம்கட்ட உதவிய வானர சேனையை சேர்ந்த நால்நீல் விஸ்வகர்மா என்று கண்டறிந்துள்ளார்.

இதில், சுக்ரீவன் குர்மி எனும்போது, அவரது அண்ணன் வாலி மட்டும் எப்படியாதவர் ஆனார்? என்று கேள்வி வந்தாலும், அதுதொடர்பாகவும் விரைவில் அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவுகளை பாஜக தலைவர்கள் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.


====================================================
ன்று,
டிசம்பர்-22.

 இந்திய கணித தினம்

இந்தோனேஷிய அன்னையர் தினம்

சீக்கிய குரு கோவிந்த் சிங் பிறந்த தினம்(1666)


இந்திய கணிதவியலாளர் ராமானுஜர் பிறந்த தினம்(1887)



  • சீனிவாச ராமானுஜம்

உலகின் மிகச்சிறந்த 'கணித மேதைகளில்' ஒருவர் சீனிவாச ராமானுஜம். இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இவரது பிறந்த தினம் 'தேசிய கணித தினமாக' 2011ல் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.

வாழ்வில் கணிதத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம்.
 இதுதவிர அனைத்து துறைகளிலும் கணிதம் முக்கியமானதாக விளங்குகிறது. உலகின் ஆரம்பகால கணித வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது.
 பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியாதான். 
ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நுாற்றாண்டில் கணிதத்துறையில் இந்தியா பின்தங்கியது. 
இந்நிலையில் ராமானுஜம் மூலம் 20ம் நுாற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது.யார் இவர்?
: ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்ட பெருமை ராமானுஜத்துக்கு உண்டு.
 இவர் 1887 டிச., 22ல், ஈரோட்டில் பிறந்தார் சீனிவாச ராமானுஜன், 3 வயது வரை பேசும் திறனற்றவராக இருந்தார். 
பள்ளியில் சேர்ந்த பின் பேச்சு வந்தது.

ஒருநாள் ஆசிரியர் 'பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை' என கூறினார். உடனே, ''பூஜ்யத்திற்கு இடதுபக்கம் 1ஐ சேர்த்தால் 10 வருகிறதே,'' என பதிலளித்தார். அதே போல, 'ஒரு எண்ணை அதே எண்ணால் வகுத்தால் 1 வரும்' என ஆசிரியர் பாடம் நடத்தினார். உடனே ராமானுஜம், ''பூஜ்யத்தை பூஜ்யமால் வகுத்தால் 1 வருமா?'' என கேட்டார். அப்போது அவரது வயது 10 தான். 12வது வயதில் கணித நூல்களை தேடித்தேடி படித்தார். 
விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயற்சி எடுத்தார்.
அப்போது 'மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில்' ராமானுஜத்துக்கு வேலை கிடைத்தது. 
இங்கு ராமானுஜரின் கணித ஆர்வத்தை அறிந்த துறைமுக மேலாளர் எஸ்.என்.அய்யர், அவர் தயாரித்த சில முக்கிய தேற்றங்களையும், நிரூபணங்களையும் இங்கிலாந்துக்கு அனுப்ப ஊக்குவித்தார்; இதற்கு எந்த பதிலும் இல்லை.

இருப்பினும் 1913ல் ராமானுஜம், கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டி என்பவருக்கு சில கணித இணைப்புகளை அனுப்பி வைத்தார். இதை கண்ட ஹார்டி, 'இது சாதாரண மனிதரது அல்ல, ஒரு மேதையின் படைப்பு' என வியந்தார். ராமானுஜத்தை உடனேயே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். 
இதனை ஏற்று 1914ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற ராமானுஜத்தின் திறமை சில நாட்களிலேயே உலகின் கவனத்தை ஈர்த்தது. உணவு பிரச்னை, வீட்டு நினைவு ஆகிய காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்கு ஒத்துவரவில்லை. உடல் நிலை வெகுவாக பாதிக்கப்பட, 1917ல் இந்தியா திரும்பினார். 
1920 ஏப்., 26ல் மறைந்தார்.
====================================================


நரேந்திரமோடி ஆட்சிக்கு ஆர்கனைசர் ஊதிய சங்கு!
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலத் தேர்தல்களிலும் பாஜகதோல்வி அடைந்துள்ளது.

 இது அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கானமுன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மோடி - அமித்ஷா மீதான அதிருப்தியே தோல்விக்கு காரணம் என்று சங்-பரிவாரங்கள் மத்தியில்பேச்சு எழுந்துள்ளது.

மோடியின் இடத் தில், நிதின் கட்காரி, ஆதித்யநாத் ஆகியோரை வைத்துப் பார்ப்பதற்கும் துணிந்து விட்டனர்.

பாஜக-வின் குருபீடமான ஆர்எஸ்எஸ் அமைப்பும், இதேஎண்ணத்தில்தான் இருப்பதாக கூறப்பட்டது.
அதனை ஆர்எஸ்எஸ்-ஸின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘ஆர்கனைசர்’ தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

“அடுத்த 6 மாதங்களுக்கு மோடி அரசால் செயல்படாத நிலை ஏற்படும் என்பது நன்கு தெரிகிறது. 
இதனால் பாஜக-வுக்கு மேலும் பின்னடைவு ஏற்படலாம்.

கடந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியடைந்த பாஜக, வரும் தேர்தலில் பல இடங்களில் தோல்வி அடைந்து, தொங்கு நாடாளுமன்றம் ஏற்படுவதற்கே மிகவும் வாய்ப்புஉள்ளது” என்று ஆர்கனைசர் கூறியுள்ளது.

பாஜக ஆட்சியின் முடிவை, கண்ணில் பார்த்து விட்டது போல, ஆர்கனைசர் ஏடு இவ்வாறு எழுதியிருப்பது, பாஜகதலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


 இந்நிலையில் பீகாரில், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி, பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டது .  அடுத்ததாக ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தியும் வெளியேறலாம் என்று செய்திகள் வெளியாகின. பஸ்வானின் மகன் சிராக் சூசகமாக இதனை தெரிவித்திருந்தார்.

 இதையடுத்து, பாஜக-வின் பீகார் மாநில பொறுப்பாளரான பூபேந் திரா யாதவை, பஸ்வான் வீட்டுக்கு அனுப்பி அமித்ஷா சமாதானம் பேசியுள்ளார்.

அதில், பலனளிக்காததால், கூட்டணியிலிருந்து சென்று விடாதீர்கள் என்று நேரடியாகவே சுமார் ஒருமணி நேரம் பஸ்வானிடம் அமித்ஷா கெஞ்சிக் கூத்தாடியுள்ளார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
உண்மையிலேயே சிறந்த மனிதர் "5 ரூபாய் டாகடர்"ஜெயசந்திரன்.
அவருக்கு பிரதமர் மோடி கதாநாயகன் என்று பாராட்டி இரங்கல் தெரிவித்தற்கு மிகுந்த நன்றிகள் .
ஆனால் இயற்கையாக இறந்த மனிதருக்கு இரங்கல் தெரிவிக்கும் பெரிய மனது படைத்த மோடிக்கு
இந்திய நாட்டின் பிரதமர் என்ற முறையிலாவது கஜா புயல் பேரிடரால் பலியான 63தமிழக விவசாயிகளுக்கு சக இந்தியன் என்ற அளவில் கூட வருத்தம் தெரிவிக்க மனதில்லையே.
தமிழ்நாடும் இந்தியாவில்தான் இருக்கிறது.அங்கும் நாம்தான் பிரதமர் என்ற உணர்வில்லாமல் இருக்கிறார் நரேந்திர மோடி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?