ஆரம்பம் .வடகிழக்கு பருவமழை

நான்கு மாதங்களாக கொட்டிய தென்மேற்கு பருவமழை, இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

 தமிழகத்தின் முக்கிய மழை ஆதாரமான, வடகிழக்கு பருவமழை, நாளை துவங்குகிறது. 'இயல்பான அளவான, 44 செ.மீ., மழை பெய்யலாம். பல மாவட்டங்களில், மழை வெளுத்து வாங்கலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள், வறட்சியில் தத்தளித்த நிலையில், நாட்டின் முக்கிய மழை ஆதாரமாக திகழும், தென்மேற்கு பருவமழை, ஜூனில் துவங்கியது. நான்கு மாதங்களாக நாடு முழுவதும் பரவி, மழையை கொட்டியது. அனைத்து நீர்நிலைகளையும் நிரப்பியதுடன், விவசாயத்துக்கும், குடிநீருக்கும் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தையும் போக்கியது. 

 நாட்டை செழிப்பின் பாதைக்கு எடுத்துச் சென்ற தென்மேற்கு பருவமழை, இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு, மழை ஆர்வலர்கள் பிரியாவிடை கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, 'தமிழகத்தின் முக்கிய மழை ஆதாரமான, வடகிழக்கு பருவமழை நாளை துவங்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம், மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 
இதற்கு முன்னோட்டமான மழை, தமிழகம் முழுவதும் நேற்று துவங்கியது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, ஈரோடு என, தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில், பரவலாக மழை பெய்துள்ளது. 
நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில், 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. 
இந்த மழை இன்றும் தொடரும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி: இந்திய பெருங்கடலின் பெரும்பாலான பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை விலகத் துவங்கி விட்டது; இன்றைக்குள் முழுவதும் விலகி விடும். இதைத் தொடர்ந்து, நாளை வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. 
 தமிழகம் மற்றும் தமிழகத்தை ஒட்டிய தெற்கு ஆந்திரா, ராயலசீமா, தெற்கு கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில், நாளை முதல், வட கிழக்கு பருவமழை பெய்யத் துவங்கும்.

இன்றைய வானிலையை பொறுத்தவரை, தமிழகத்தின் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில், பல இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், இடியுடன் கூடிய திடீர் மழை பெய்யலாம்.
 மன்னார் வளைகுடா, குமரி கடல், லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய கடற்பகுதிகளில், சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது. 
மணிக்கு, 45 முதல், 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிக்குள், நாளை முதல், இரண்டு நாட்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். 

ஆண்டுதோறும், அக்டோபர் முதல், டிசம்பர் வரை, வடகிழக்கு பருவமழை பெய்யும். இந்த மழை, இயல்பான அளவில் சராசரியாக, 44 செ.மீ., பெய்ய வேண்டும்.
 2018ல், 34 சதவீதம் குறைவாக பெய்ததால், தமிழகத்தில், விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது. 
 இந்த ஆண்டு, ஏற்கனவே, தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்துள்ளதால், வட மாவட்டங்களைத் தவிர, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நீர்நிலைகள் மற்றும் அணைகள் நிரம்பியுள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்ய, அதிக வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 தனியார் வானிலை கணிப்பாளர்களும், 'இயல்பான மழை பெய்யும்' என, கூறியுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை முடியவுள்ள நிலையில், பல அணைகளில், நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. மேட்டூர், முல்லை பெரியாறு, பவானிசாகர் உள்ளிட்ட, 15 முக்கிய அணைகள், மொத்தம், 198 டி.எம்.சி., கொள்ளளவு உடையவை. 
இவற்றின் வாயிலாக மாநிலத்தின் பாசனம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தியாகின்றன. பெரும்பாலான அணைகள், ஜூனில் வறண்டிருந்தன. தென்மேற்கு பருவமழையால், அணைகளுக்கு, ஜூலையில் நீர்வரத்து துவங்கியது. 
கர்நாடகாவில் திறக்கப்பட்ட நீரும், மேட்டூர் அணைக்கு கிடைத்தது. மழையால், அணைகளின் நீர் இருப்பு தொடர்ந்து உயர்ந்து வந்தது.

தென்மேற்கு பருவமழை இன்று முடிவுக்கு வரவுள்ள நிலையில், பல அணைகளில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. மேட்டூர் அணையில், அதிக பட்சமாக, 83.8 டி.எம்.சி., - பவானிசாகரில், 25.7; பரம்பிக்குளத்தில், 13.3; சோலையாறு அணையில், 4.97 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.

முல்லை பெரியாறு, வைகை, பாபநாசம், ஆழியாறு அணைகளில் தலா, 3 டி.எம்.சி.,க்கு மேல், நீர் இருப்பு உள்ளது.
இவ்வாறு, 15 அணைகளிலும் சேர்த்து மொத்தமாக, 152 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. இந்த நீரை வைத்து, அடுத்தாண்டு கோடைக் கால குடிநீர் தேவையை சமாளிக்க முடியும்.


"இந்தியப் பொருளாதார வளர்ச்சி மிகமந்தமாக போனதற்கு மத்திய பாஜக அரசே காரணம்"
சொன்னவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் .

பொருளாதாரம் தொடர்பான தெளிவான கொள்கை எதுவும் பாஜக-விடம்இல்லை என்றும் பிரபாகர் விமர் சித்துள்ளார்.பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன் றவை அமல்படுத்தப்படும்போது, ‘இந்தநடவடிக்கைகள் எதிர்காலத்தில் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக் கும்’ என்று எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, பாஜக ஆதரவு பொருளாதார வல்லுநர்களும்கூட எச்சரித்தனர்.
மோடி அரசுஅதனை அப்போது கண்டுகொள்ளவில்லை.

ஆனால், கடந்த 3 ஆண்டுகளில்பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி காரணமாக,நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது.
தொழில்கள் நசிந்து விட்டன. உற்பத்தி, ஏற்றுமதி குறைந்து விட்டது. ரூபாய் மதிப்பு குறைந்து விட்டது.
45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகி இருக்கிறது. 2019-20 நிதியாண்டில், ஜிடிபி 5 சதவிகிதம் வந்தாலே பெரிய விஷயம் என்ற மோசமான நிலைக்குப் போயிருக்கிறது. மோடி அரசோ, இப்போதும் பாதிப்பை ஒப்புக்கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் மீதுபழிபோடுவதும், உண்மை பேசும் பொருளாதார வல்லுநர்களை பழிவாங்குவதுமாக உள்ளது.
பரகலா பிரபாகர்

 இந்நிலையில்தான், இந்தியப் பொருளாதாரம் மீள முடியாத அளவிற்கு சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது, இதற்கு மோடி அரசே காரணம் என்று பிரபல பொருளாதார வல்லுநரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகரே பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

பரகலா பிரபாகர் (60), இது தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில், “பொருளாதாரத்தை வழிநடத்த ஒரு துருவ நட்சத்திரம்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், அவர் மேலும் கூறியிருப்பதாவது:“இந்திய பொருளாதாரம் மோசமடைவது குறித்த அச்சம் வெளிப்படையாக தெரியத் தொடங்கி உள்ளது.
 தற்போதைய அரசு அதை தொடர்ந்து மறுத்து வந்தாலும், பல துறைகள், நாளுக்கு நாள் மோசமான நிலையை அடைந்து வருகின்றன.நேருவின் வெற்றிகரமான பொருளாதார கொள்கையான ‘சமூக சோசலிச கொள்கை’யை புறந்தள்ளிவிட்ட பாஜக அரசு, அதற்கு மாற்றான ஒரு
வெற்றிகரமான பொருளாதார கொள்கையை முன்வைக்கவில்லை.

காந்தியின் சோசலிச கொள்கைகளையும் பாஜக பின்பற்றவில்லை.
அரசியலை வைத்து நேருவை விமர்சிப்பதை மட்டுமே பாஜக தொடர்ந்துசெய்து வருகிறது. பாஜக-வின் தற்போதைய நிதிக் கொள்கையானது, அனைத்தையும் நிராகரிப்பதை மட்டுமே திட்டமாக கொண்டிருக்கிறது. அனைத்து நல்ல பொருளாதார கொள்கைகளையும் பாஜக நிராகரித்து வருகிறது.
இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் பிரச்சனைகுறித்து பாஜக எங்குமே விவாதிக்கவில்லை.
1998-இல் இருந்தே பாஜக பெரியஅளவில் பொருளாதாரம் சார்ந்து யோசிக்கவில்லை.
 2004-இல் பாஜக பொருளாதாரத் திட்டங்களை அறிவித்து தேர்தலில் நின்றது.
அப்போது அது தோல்வி அடைந்தது.
அதனால் தற்போது பொருளாதார திட்டங்களை விட்டுவிட்டு, வலிமை சார்ந்த அரசியல், தேசியம், பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளை கையில் எடுத்துள்ளது.
 இவற்றால்பொருளாதாரம் வளர்ந்து விடாது.இப்போதாவது, மிகத் தீவிரமான பொருளாதார கொள்கைகளை பாஜகஅரசு வகுக்க வேண்டும்.
பாஜகவின் அரசியல் திட்டத்தில் சர்தார் வல்லபாய் படேல் சின்னமாக மாறியது போல, பொருளாதார கட்டமைப்பிற்கு நரசிம்மராவ் ஒரு வலுவான அடித்தளமாக மாறக்கூடும்.
 நரசிம்மராவ் - மன்மோகன்சிங் இவர்களின் பொருளாதாரக் கட்டமைப்பை பாஜக பின்பற்ற வேண்டும்.
இல்லாவிட்டால், தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ் அப்களில் கூச்சலிடும் ஆய்வாளர்களின் சிந்தனைதான் பாஜகவுக்கு தொடர்ந்து கிடைக்கும்.
இவ்வாறு பரகலா பிரபாகர் கூறியுள்ளார்.

லண்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் பட்டம் பெற்ற பரகலா பிரபாகர், ஆந்திரபிரதேசத்தின் தகவல் தொடர்பு ஆலோசகராக பணியாற்றியர் ஆவார்.
மத்திய நிதியமைச்சரின் கணவரே, மத்திய அரசை விமர்சித்திருப்பது பாஜகவட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
ன்னாளில்,
முன்னாள்
உலக உணவு தினம்

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டான்(1799)
வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1923)

Abdul Hameed Sheik Mohamed
 
டெல்லி ஏகாதிபத்தியத்திற்க்கு எதிராக GO BACK என்ற வார்த்தையை திராவிட இயக்கம் 1950களிலேயே பயன்படுத்தியிருக்கிறது என அறிஞர் Rajan Kurai Krishnan ஆதாரத்துடன் நிறுவுகிறார். 
கீழடியில் கண்டெடுக்கபட்ட பானை ஓடுகளிலேயே இந்த GO BACK இடம் பெற்றிருக்க வாய்ப்புள்ளது என்பதுதான் எமது கருத்து

------------------------------------------------------------------------------------------------------------------------------------

 ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதபாளையத்தில் அமைந்துள்ள கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். 
மேலும் கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 சென்னை உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊடகங்கள் அமைதியாக இருந்தால் பயங்கர வாதம் முடிவுக்கு வந்துவிடும் என்று தேசிய பாது காப்பு ஆலோசகர் அஜித் தோவல் புதுதில்லியில் திங்களன்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசி யிருக்கிறார்.

தேசிய புலனாய்வு முகமை ஏற்பாடு செய்தி ருந்த மாநாட்டின் துவக்க நிகழ்வின்போதே அஜித் தோவல் அவ்வாறு பேசியிருக்கிறார்.

அந்த மாநாட்டை துவக்கி வைத்து பேசுவதாக இருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தவிர்க்க முடி யாத காரணங்களால் வரவில்லை. அதனால் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் அந்த மாநாட்டில் அமித்ஷாவுக்கு பதிலாக பேசிய தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டில் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறு வதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன.
 அவற்றை அரசாங்கம் தனது தெளிவான தீர்க்க மான கொள்கை முடிவுகளால், நடைமுறைக ளால்தான் தடுக்கவோ, ஒழிக்கவோ முடியும். அதற்கு ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியது பார பட்சமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஊடகங்கள் இடையூறாக எப்போதும் இருப்பதில்லை.
பயங்கர வாதிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் அப்பா விகளையும், தங்கள் அரசியல் எதிரிகளையும் போலி என்கவுண்ட்டர் நடத்தி கொலை செய்வ தைத்தான் ஊடகங்கள் அம்பலப்படுத்துகின்றன.
இதுபோன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைக ளைத்தான் ஊடகங்கள் நாட்டு மக்களுக்கு தெரி யப்படுத்துவதற்காக உண்மைகளை வெளிக் கொணர்கின்றன.

இஸ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் வழக்கில் அவரது தாய் இனிமேல் இந்த வழக்கை தொடர்வ தில் எந்த பயனும் இல்லை என்று கண்ணீருடன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதை நீதி மன்றத்திற்கும் தெரிவிக்கப் போவதாகவும் கூறியி ருந்தார். இத்தகைய நிகழ்வுகள் பலவும் நாட்டில் தற்போதைய ஆட்சியில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
குற்றவாளிகள் என நன்கு தெரிந்திருந்த வர்கள் கூட பல்வேறு வழக்குகளில் தப்பித்து செல்வ தும் அவர்களுக்கு பல்வேறு பதவிகள் வழங்கப்படு வதும் கூட பாஜக ஆட்சியில் பரவலாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையிலேயே அவற்றையெல்லாம் அம்பலப்படுத்தவும், உண்மைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லவும் ஊடகங்கள் முயற்சிக்கின்றன.
அத்தகைய முயற்சிகளை  மேற்கொள்ளக் கூடாது என்பது தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவ லின் பேச்சில் தொனிக்கிறது.
காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழித்து விடு வோம் என்ற பெயரில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மாநிலத்தையே மயான அமைதியில் வைத்திருக்கிறது மத்திய பாஜக அரசு. அங்கு செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு கூட அனுமதி தரப்படுவதில்லை. அத்துடன் 72 நாட்க ளுக்கு பிறகு செல்பேசிகள் இயங்க அனுமதிய ளித்த சிலமணி நேரத்திலேயே எஸ்எம்எஸ் வசதி மீண்டும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதுதான் அவர்களது  ஊடக சுதந்திரம் மீதான கொள்கை யாகும்.
 அதனால்தான் உலைவாயை மூடினால் ஊர் வாயை மூடமுடியும் என்று நினைக்கிறார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
Shabeer Sumaiya
 
போங்க மோடி, உங்க தொகுதியில் உங்க அலுவலகம் அருகே உள்ள குப்பைகளை சுத்தம் செய்ங்கோ மோடி....
--------------------------------------------------------------------------------- 
நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் இடதுசாரிக் கட்சிகளுக்கு திமுக ரூ.25 கோடி கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எட...

Read more at: https://tamil.asianetnews.com/politics/dmk-donated-25-crore-to-left-parties-for-lok-sabha-polls-issue-who-leaked-out-pzgbu9
நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் இடதுசாரிக் கட்சிகளுக்கு திமுக ரூ.25 கோடி கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எட...

Read more at: https://tamil.asianetnews.com/politics/dmk-donated-25-crore-to-left-parties-for-lok-sabha-polls-issue-who-leaked-out-pzgbu9

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?