பள்ளி, கல்லூரிகளில் மதக்கலவர முயற்சி


அயோத்தியில் சா்ச்சைக்குரிய நிலத்துக்கு உரிமை கோரும் வழக்கு தற்போது தான் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். அனைத்துகட்ட விசாரணையும் நிறைவடைந்த நிலையில், ஒரு மாத காலத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜ.கவினர் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் எனக் கூறி நீதிமன்றத்தை அவமதிக்கும் வேலையைச் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், தந்தேரஸ் பண்டிகைக்கு மக்கள் நகைகள் வாங்காமல் ஆயுதங்கள் வாங்குமாறு பா.ஜ.க தலைவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலங்களில் தீபாவளிக்கு முன்னதாகக் கொண்டாடப்படும் தந்தேரஸ் (Dhanteras) என்ற பண்டிகைக்கு மக்கள் நகைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி பண்டிகையைக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதன்படி இந்தாண்டு அக்டோபர் 25ம் தேதி அந்தப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் டியோபந்த் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.கவின் டியோபந்த் நகர் தலைவர் கஜ்ராஜ் ரானா கலந்துகொண்டார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய கஜ்ராஜ் ரானா, “அயோத்தி வழக்கில் அந்த இடத்தில் ராமர் கோயில் வரவேண்டும் என்பதே மக்களின் ஆசை. இந்தச் சூழலில் அயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பு வரவுள்ளது. அந்த தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்று தீர்ப்பைப் பற்றி பேசி நீதிமன்றத்தை அவமதித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “வரவிருக்கும் தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி, நாம் கொண்டாடும் தந்தேரஸ் பண்டிகைக்கு நீங்கள் ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதற்குப் பதிலாக இரும்பு ஆயுதங்கள், வாள் போன்ற ஆயுதங்களை வாங்கிக் கொள்ளுங்கள்.
அது நல்லது, குறிப்பாக உரிய நேரத்தின்போது அந்த ஆயுதங்கள் நம்முடைய பாதுகாப்பிற்கு உதவும்” எனத் தெரிவித்தார்.
வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பா.ஜ.க தலைவருக்கு கண்டனங்கள் குவிந்துள்ளது. பலரும் தமது கருத்தை பா.ஜ.க தலைவர் திரும்பப் பெறவேண்டும் எனக் கூறிவருகின்றனர்.
 இந்நிலையில், தனது கருத்தைத் திரும்பப் பெறப்போவதில்லை என்றும்  வன்முறையைத் தூண்டி  பேசியுள்ளார்.
 -------------------------------------------------------------------------------------------------------------
தமிழக பள்ளி, கல்லூரிகளில்  இந்து மாணவர் முன்னணி, இந்து இளைஞர் முன்னணி என்ற பெயரில்  சில அமைப்புகள் ஊடுருவியிருக்கின்றன.
 இவ்வமைப்பின் மூலம்  மாணவர்களை மதரீதி யாக பிளவுபடுத்தி மதக்கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி தீவிரமடைந்திருக்கின்றன.

இந்நிலையி லேயே  இதன் ஆபத்தை உணர்ந்து இந்த அமைப்பு களை கண்காணித்து தடுத்து நிறுத்தும்படி கல்வித்துறை சுற்றறிக்கை  அனுப்பியது.
அதனை திடீரென  தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே  தென்மாவட்ட  பள்ளிகளில் சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில்  கையில் வண்ணக் கயிறுகளை கட்டி அதன் மூலம் மாணவர்களிடையே மோதலை உருவாக்க முயன்றனர்.
சில இடங்களில் மோதலும் நடை பெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை  கையில் கயிறு கட்டுவதன் மூலம் சாதியத்தை வெளிப் படுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியது.
உடனே பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கையில் கயிறு கட்டுவது இந்து மத நம்பிக்கை; அதை அகற்ற சொல்வது இந்து விரோத செயல் என  மிரட்டினார்.
 அதைத்தொடர்ந்து தமிழக  பள்ளிக் கல்வித்துறை அமைச்சரோ சுற்றறிக்கை குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியதோடு, கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் போல் அதிலிருந்து நழுவிச்சென்றார்.
தற்போது வரை அந்த சுற்றறிக்கை நடைமுறையில் இருக்கிறதா இல்லையா என்பது கூட தெளிவு படுத்தப்படவில்லை.
ஆனால் நீட் நுழைவு தேர்வின் போது மாணவ, மாணவியரின்  கையில் கட்டியிருந்த கயிற்றை மட்டுமல்ல, கழுத்தில் கடவுள் படத்துடன் அணிந்திருந்த கயிறுகளையும் அகற்றினர்.
மூக்குத்தி, கம்மலையும் கூட விட்டுவைக்க வில்லை. அப்போது அதை ஆதரித்தவர்கள் எச். ராஜா உள்ளிட்ட சங்பரிவார் வகையாறாக்கள் தான்.
இவர்களின் உண்மையான நோக்கம் மதத்தின் பேரில் மக்களை கூறு போட்டு அதில் அரசியல் ஆதாயம் தேடுவதுதான் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
தமிழகத்தின் பல பள்ளி, கல்லூரிகளில் ஆர்எஸ்எஸ் முகாம் என்ற பெயரில்  மதவெறிக்கு தூபம் போடும் நிகழ்வுகள் ஒரு புறம் அரங்கேறி வருகின்றன.
 மறுபுறம் சங்பரிவாரின் இதிகாஸ் சங்களான் சமீதி என்ற அமைப்பிற்கு அரசே ஆசிரியர்களை திரட்டி வரலாற்று திரிபுகளை வர லாறாக சொல்லிக்கொடுக்கும் நிகழ்வு நடை பெற்று வருகிறது. இது தமிழகத்தின் சமூக ஒற்று மைக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
பாஜக ஆளும் குஜராத்தில் மாணவர்களிடம் மகாத்மா காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என கேள்வி கேட்கப்படுகிறது.
 உள்துறை அமைச்சர் அமித்ஷா வரலாறு ‘திருத்தி’ எழுதப்படும் என்கிறார்.
இந்த சூழலில் தான் மாணவர்கள் மாணவிகளுடன் பேசுவது கூட கொலைக்குற்றம் என்று மதரீதியிலான வெறியை  இந்துத்துவா கும்பல் கிளப்பி வருகிறது.
சாதி மற்றும் மதரீதியான அணி திரட்டலை தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில் 
முன்னால்

ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி  (1917)

பிரேசிலில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1930)
ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது(1931)
ஐக்கிய நாடுகள் தினம்(1945)
ஜாம்பியா விடுதலை தினம்(1964)


 மீண்டும்,மீண்டும் தீக்கிரய் .
1260 - பாரீசுக்கு அருகில் சார்ட்ரஸ் நகரில், சார்ட்ரஸ் அன்னை பேராலயம்(கதீட்ரல்), ஒன்பதாம் லூயி அரசர் முன்னிலையில் மறு-அர்ப்பணிப்பு(திறப்பு விழா!) செய்யப்பட்டது.

கதீட்ரல் என்பது கிறித்தவ ஆயரின்(பிஷப்) தலைமைப்பீடம் அடங்கிய தேவாலயம் ஆகும்.
 இருக்கை என்ற பொருள்கொண்ட கதீட்ரா என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து கதீட்ரல் என்ற பெயர் உருவானது.  ஒரு லட்சத்துப் பதினேழாயிரத்துக்கும் அதிகமான சதுர அடிகள் பரப்பில் பிரமாண்டமாக அமைந்துள்ள இந்தப் பேராலயம், கட்டிடக்கலை வரலாற்றின் சாதனைகளுள் ஒன்றாகக் கருதப்படுவது மட்டுமின்றி, மிகப் பெருமளவிற்கு அதன் உண்மையான அமைப்புகளுடன் பாதுகாக்கப்பட்டுள்ள பண்டைய கட்டிடமாகவும் உள்ளது.
இந்தப் பேராலயம் உள்ள இடத்தில் 4ஆம் நூற்றாண்டிலேயே ஒரு பேராலயம் கட்டப்பட்டிருந்து,
743இல் அக்விட்டைன் பகுதியின் சிற்றரசரால்(ட்யூக்) எரிக்கப்பட்டது.
 மீண்டும் கட்டப்பட்ட பேராலயம், 858இல் டென்மார்க் கொள்ளையர்களால் எரிக்கப்பட்டது.
அதன்பின் எழுப்பப்பட்ட பேராலயம், 962இல் ஏற்பட்ட தீவிபத்தில் அழிந்தது.

ஜிஸ்லெபர்ட் என்ற ஆயரால்(பிஷப்) மீண்டும் கட்டப்பட்ட இது, 1020இல் ஒரு தீவிபத்தில் அழிந்துபோனது. அதன்பின் ஃபுல்பர்ட் என்ற ஆயர், ஐரோப்பிய அரச குடும்பங்களிடமிருந்து நிதியுதவிபெற்று, தொடங்கிய கட்டுமானப் பணிகள் 1155வரை தொடர்ந்தன.
இப்பணிகளில் மக்கள் காட்டிய ஆர்வம் ‘கல்ட் ஆஃப் த கார்ட்ஸ்’ என்று வருணிக்கப்பட்டது.
அதாவது,
12-13ஆம் நூற்றாண்டுகளில், தேவாலயப் பணிகளுக்காக, வண்டிகளில் மாடுகளுக்குப் பதிலாக எளிய மக்கள் தாங்களே நுகத்தடியில் நுழைந்து இழுத்ததாகக் குறிப்பிடப்படும் நிகழ்வுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இதற்கிடையில் 1134இலும் ஒரு தீவிபத்து ஏற்பட்டு சில பகுதிகள் அழிந்தன.
இந்தப் புதிய பேராலயமும் 1194இல் ஒரு பெரும் தீவிபத்தில் அழிந்து, முகப்பு, கோபுரங்கள், நிலவறை ஆகியவை மட்டுமே மிஞ்சின.
அப்போது, இந்த பேராலயத்தின் கன்னி மேரி மிகவும் புகழ்பெற்றுவிட்டிருந்த நிலையில், ஏராளமான நன்கொடைகள் குவிய, உடனடியாகத் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் 1260இல் நிறைவுற்றன.
430 அடி நீளம், 151 அடி அகலம், 371 அடிவரை உயரம்கொண்ட கோபுரங்கள், வண்ண ஓவியக் கண்ணாடிகள்கொண்ட 176 சாளரங்கள், 200 சிலைகளுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட இவ்வாலயம் அதன்பின், பெரிய மாற்றங்கள் செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டுவருகிறது.

பிரெஞ்சு கோத்திய கட்டிடக்கலையின் உச்சம் என்று இதனைப் புகழ்ந்துள்ள யுனெஸ்கோ, உலகப் பாரம்பரியக் களமாக இதனை அறிவித்துள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

உயிருக்கு ஆபத்தான நிலையிலும் கைது.


திரிபுராவில் இடதுமுன்னணி அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக செய லாற்றிய வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரு மான பாதல் சவுத்ரி, திரிபுரா பாஜக அரசால் அராஜகமான முறையில் பொய் வழக்கு புனையப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத் தான நிலையில் அகர்தலா மருத்துவமனை யில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தோழர் பாதல் சவுத்ரி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலும், அவர் மீதும் அவர் பொறுப்பு வகித்த இடது முன்னணி அரசின் மீதும் திட்டமிட்டு களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடன் பொய்வழக்கு- கைது எனும் அட்டூழியத்தை அரங்கேற்றி யிருக்கிறது திரிபுரா மாநில பாஜக அரசு.

திரிபுராவில் பல்லாண்டு காலம் இடது முன்னணி அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக திறம்பட செயலாற்றியவர் பாதல் சவுத்ரி.

திரிபுரா பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும், அகர்தலா உட்பட சமவெளிப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வியல் மேம்பாடு களுக்காகவும், மிகச்சிறப்பாக செயல்பட்ட துறைகளில் ஒன்றாக பாதல் சவுத்ரி பொறுப்பில் இருந்த பொதுப்பணித்துறை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திரிபுராவில் அராஜக மான முறையில் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக அரசு, பொறுப்பேற்றது முதல், இடது முன்னணி தலைவர்கள் மீதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்களை குறி வைத்தும் பொய்வழக்கு, கைது, வன்முறை தாக்குதல்கள் உள்ளிட்ட அட்டூழியங்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. இதன் உச்சக்கட்டமாக தற்போது, பாதல் சவுத்ரி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் ரூ.630 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக திட்டமிட்டு பொய் வழக்கினை பதிவு செய்து, அப்போது பொறுப்பிலிருந்த பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரை கைது செய்துள்ள பாஜக அரசு, அமைச்ச ராக இருந்த பாதல் சவுத்ரி மீதும் பொய் வழக்கு புனைந்தது.
 அதன் பேரில் அவரை கைது செய்ய மேற்கு திரிபுரா மாவட்ட காவல்துறை பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்நிலையில் திரிபுரா உயர்நீதி மன்றத்தில் கடந்த திங்களன்று பாதல் சவுத்ரி  தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப் பட்டது.
பாதல் சவுத்ரி தரப்பில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மூத்த தலைவர் களில் ஒருவரும், கொல்கத்தா மாநகராட்சி முன்னாள் மேயருமான பிகாஸ் ரஞ்சன்  பட்டாச்சார்யா ஆஜரானார்.
இந்த மனு மீதான உத்தரவை மறுநாள் அளிப்பதாகக் கூறி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தது.
இதனிடையே, தோழர் பாதல் சவுத்ரி திடீர் மாரடைப்பால் கடுமையாக பாதிக்கப் பட்டு அகர்தலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார், கட்சியின் மாநில செயலாளர் கவுதம் தாஸ் மற்றும் இடதுமுன்னணித் தலைவர்கள் அருகிலிருந்து கவனித்தனர்.
  இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு ஏதும் இல்லாமலேயே, திங்களன்று இரவே மருத்துவமனைக்குள் புகுந்து தோழர் பாதல்  சவுத்ரியை கைது செய்வதாக அறிவித்து, காவல்துறையினரை குவித்துள்ளது பாஜக அரசு.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு திரிபுரா மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர், “முன்னாள் அமைச்சர் பாதல் சவுத்ரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்துள்ளோம். அவர் உடல்நலம் தேறிய பின்னர் அவரை காவலில் எடுத்துக் கொள்வோம்” என்று கூறினார்.

திரிபுரா பாஜக அரசின் இத்தகைய இழி செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது.
இத்தகைய செயல்கள் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு போதும் ஒடுக்கிவிட முடியாது; கட்சி மீது  எந்தக் களங்கத்தையும் கற்பித்துவிட முடியாது; ஏனென்றால் இடதுமுன்னணி அரசாங்கத்தின் ஆட்சி எத்தனை சிறப்பாக இருந்தது என்பதையும் எவ்வளவு நேர்மையான முறையில் நடந்தது என்பதையும் திரிபுரா மக்கள் நன்றாகவே அறிவார்கள்.
 தோழர் பாதல் சவுத்ரி மீது புனையப்பட்டுள்ள வழக்கினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும் உறுதிபட எதிர்கொள்ளும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
 -------------------------------------------------------------------------------------------------------------------------------
 ISRO-ல் உள்ள காலிப்பணியிடங்கள்
Indian Space Research Organisation (ISRO)-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. பணியின் பெயர்: Scientist/ Engineer (Electronics)
காலியிடங்கள்: 131
2. பணியின் பெயர்: Scientist/ Engineer (Mechanical)
காலியிடங்கள்: 135
3. பணியின் பெயர்: Scientist/ Engineer (Computer Science)
காலியிடங்கள்: 58
4. பணியின் பெயர்: Scientist/ Engineer (Electronics)
காலியிடங்கள்: 3
மேற்கண்ட பணிகளுக்கான சம்பளவிகிதம், வயதுவரம்பு, கல்வித்தகுதி விபரம் வருமாறு: 
சம்பளவிகிதம்: ரூ.56,100
வயதுவரம்பு: 4.11.2019 தேதியின்படி 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். EX-SM மற்றும் PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் BE/ B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 12.1.2020.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம்.
எழுத்துத்தேர்வுக்கு தகுதியானவர்கள் குறித்த விபரம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.isro.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 4.11.2019.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
  SAIL நிறுவன காலிப்பணியிடங்கள்
பொதுத்துறை நிறுவனமான SAIL நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Operator - Cum -Technician(Trainee) (OCT-Trainee)
காலியிடங்கள்: 123

சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
2. பணியின் பெயர்: Attendant - Cum -Technician(Trainee) (ACT-Trainee)
காலியிடங்கள்: 53
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
3. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Mining Mate - 30
II) Minig Foreman - 14
III) Surveyor - 4
சம்பள விகிதம்: ரூ.15,830 - 24,110
4. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Jr.Staff Nurse (Trainee) - 21
II) Pharmaist - 7
சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
5. பணியின் பெயர்: Sub Fire Station Officer
காலியிடங்கள்: 8 (UR-5, ST-2, EWS-1)
சம்பள விகிதம்: ரூ. 16,800 - 24,110
6. பணியின் பெயர்: Fireman Cum Fire Engine Driver
காலியிடங்கள்: 36 (UR-14, SC-4, ST-12, OBC-2, EWS-4)
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
வயது வரம்பு: அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். வயதுவரம்பு 15.11.2019 தேதியின்படி கணக்கிடப்படும். வயதுவரம்பில் SC/ ST/ OBC/ PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: SAIL நிறுவனத்தில் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ACT - Trainee, Fireman & Engine Driver, Mining Mate பணிகளுக்கு ரூ.150 செலுத்த வேண்டும். இதர பணிகளுக்கு ரூ.250 செலுத்த வேண்டும். (பொது/ OBC/ EWS பிரிவினர்கள் தவிர இதர பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது) இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sail.co.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.11.2019.
மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 ---------------------------------------------------------------------------------------------------------------------
 இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணி

இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணிக்கான 115 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Security Guard-Cum-Peon
காலியிடங்கள்: (தமிழ்நாடு) 48 (UR-23, OBC-12, SC-9, EWS-4)
சம்பளவிகிதம்: ரூ.9,560 - 18,545
வயதுவரம்பு: 1.7.2019 தேதியின்படி 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் உச்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் முப்படைகளில் ஏதாவதொன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழி அறிவுத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.indianbank.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 8.11.2019.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 முகநூல்
Alagarasan VB பெறுநர் அறிவொளி | WINSPIRATION

இறுதிக்கட்ட போரின்போது ..'பிரபாகரன்' ...தினமும்(!?)
என்னுடன் ...போனில் பேசுவார்! ------------------------- " சீமான் "

கவலையே படாத ..மகனே! ...புலிகள் ..சீக்கிரம் ..
ஒன்ன ..அவுருகூட ..நேர்லயே பேசவைப்பாங்க!
 -------------------------------------------------------------------------------------------------------------------------------
கடும் உழைப்பின் பயன்
'பொய்க்கால் குதிரை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார் நடிகர் சார்லி.

 ஹாலிவுட் நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளினின் நினைவாக தனது இயற்பெயரான மனோகரை சார்லி என மாற்றிக்கொண்டார்.

1983ம் ஆண்டு நகைச்சுவை நடிகராகத் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சார்லி இதுவரை 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சினிமா மட்டுமில்லாது கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்ட சார்லி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை’ என்கின்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டார்.

அதற்கான நடிகர் சார்லிக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.இது முதல்வர் பழனிசாமி முதல்வர் என்பதால் கொடுத்த பட்டம் போன்றதல்ல.
இது கடும் உழைப்பின் பயன் .

 'எடப்பாடிக்கு பட்டம் கொடுத்தீங்களே, கூடவே

மாஞ்சா நூல் கொடுத்தீங்களா? ன்னு கேக்கறாங்க அகராதி புடிச்சவங்க..'

 --------------------------------------------------------------------------------------------------------------------------------
 
                                                       சிறப்பு


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?