நார்வே புலிகளை ஆதரித்தது ஏன்?


இலக்கையில் மன்னார் படுக்கையில் காணப்படும் எண்ணெய் வளத்தையும், வாயு வளத்தையும் கண்டுபிடிப்பதை தடுத்து நிறுத்தவே நார்வே,விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்து அவர்களைக் காப்பாற்றி வந்ததாக இலங்கை பெட்ரோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த கூறியுள்ளார்.
                       
போரை முடிவுக்குக் கொண்டு வந்திராது போனால் மன்னார் படுக்கையில் மட்டுமல்ல, மன்னார் பக்கமே யாரும் தலை வைத்துப் படுத்திருக்கவே முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
 

மன்னார் படுகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயுவை இன்னும் மூன்று வருடங்களில் மின் உற்பத்திக்கும், போக்குவரத்துக்கும் பயன்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முதலாவது எண்ணெய்க் கிணறு மூலம் ஹைட்ரோ கார்பன் என்ற வாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை உடனடியாகப் பயன்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.இந்த வாயுவை கடல் மட்டத்துக்கு மேல் கொண்டு வந்தால் மின் உற்பத்திக்காகப் பயன்படுத்த முடியும் என்றும் அதன் மூலம் மிகக்குறைந்த செலவுடன் மின் உற்பத்தி செய்ய முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயு சமையலுக்காகப் பயன்படுத்தப்படும் திரவ எரிவாயு அல்ல என்றும், இந்த இயற்கை எரிவாயுவைத் திரவ நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இந்தத் திரவ எரிவாயுவைக் கொண்டே ஜப்பான், கொரியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது மின்உற்பத்தித் தேவையில் 30 வீதத்தைப் பூர்த்தி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
                               
இதை தங்கள் கையில் கொண்டுவரவே இந்தியா,சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவான கொள்கையை கடை பிடிக்கின்றன.   

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?