ஆட்சியாளரை அச்சுறுத்தும் மின்சாரம்.!


                    


 கருணாநிதி ஆட்சியில் பாடாய்படுத்திய மின் வெட்டு ஜெயலலிதாவையும் விட்டு வைக்கவில்லை.அப்போது கருணாநிதியின் கையாலாகாத  ஆட்சிதான் மின்தடைக்குக் காரணம் என்ற ஜெயலலிதா இப்போது யார மீது பழியைப் போடுவது என முழித்துவருகிறார்.
தெலுங்கானா போராட்டத்தையும் காரணமாக்கியாயிற்று.    
 தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மின்வெட்டோடு, அறிவிக்கப்படாமல் பல மணிநேரம் மின்சாரம் தடைபடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகப்பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிலும் இரவு நேரத்தில் ஏற்படும் மின்வெட்டால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.
இந்நிலையில் இரவு நேரத்தில் மின்சாரம் பல மணி நேரம் தடைப்பட்டதால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அரசைக் கண்டித்து நேற்று நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.நேற்று சென்னை வடபழனி பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு வெகு நேரமாகியும் துண்டிக்கப்பட்ட மின்சாரம் சீர்செய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நள்ளிரவு நேரத்திலேயே சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.மேலும், வெளியூர் செல்லும் பேருந்துகள் மொத்தமாக பாதிக்கப்பட்டன. மறியலில் ஈடுபட்ட மக்கள் அனைவரும் மிகுந்த ஆத்திரத்துடன் காணப்பட்டனர்.
மாலை முதல் மின்சாரம் இல்லாததால், வெப்பம் தாங்க முடியாமல் வீதியிலேயே நிற்பதாகவும் கடந்த 3 நாட்களாக மின்சாரம் சரியாக வரவில்லை என்றும், இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டால், அவர்கள் பதில் பேசாமல் தொலைபேசியைக் கீழே வைத்துவிடுவதாகவும் மறியலில் ஈடுபட்டோர் குற்றம்சாட்டினர்.
 . போதாக்குறைக்கு இப்போது, அடிக்கடி மின்தடை செய்யப்படுவது.
 அறிவித்ததை விட பல இடங்களில் பல மணிநேரம் மின்தடை உள்ளது என்பது தான். ஓசைப்படாமல் மணிக்கணக்கில் மின்சாரம் தடை செய்யப்படுவது சில நாளாக வாடிக்கையாகி விட்டது. இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்கள் மாடியில் படுக்க சென்றாலும், அங்கு கொசு தொல்லையால் தூக்கமில்லாமல் தவிக்கின்றனர்.  இதே நிலை தொடருவதால் நகரில் ஆங்காங்கே மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். வீட்டு பாடங்களை முடிக்க முடியாமல் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் திட்டு வாங்கும் நிலை உள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  

 மின்தடையால் தற்போது எழுந்துள்ள புதிய பிரச்னை தான் லோவோல்டேஜ் (குறைந்த அழுத்த மின்சாரம்). இதன் மூலம் வீடுகளில் இருக்கும் டி.வி வெடித்து விடுகிறது. பேன் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் மோட்டார்களின் காயில் கருகிவிடுகிறது. பிரிட்ஜ், ஏசி இயங்குவதில்லை. பிரிட்ஜில் வைத்திருக்கும் காய்,கறிகள், பழங்கள், பால் கெட்டு விடுகின்றன. இரவில் வைத்த பொருட்கள் காலையில் வெந்தநிலையில் இருப்பதால் வெளியில் தூக்கி வீசும் நிலைதான் உள்ளது. இதனால் குறைந்த மின்சாரம் இருக்கும் நேரத்தில், எதையுமே மக்கள் சரியாக பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

மின்வாரிய தரப்பில் கேட்டபோது, அதிகாரிகளிடம் சரியான பதில் கிடைக்கவில்லை. சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; விரைவில் சீராகி விடும் என்ற பதில் மட்டும் தான் வருகிறது. அடிக்கடி மின்சாரம் போய்விடுவதால், யாரிடம் புகார் செய்வது என்று தெரியாமல் விழிக்கின்றனர். விவரம் அறிந்தவர்கள், உள்ளூர் பகுதி மின்வாரிய அலுவலகத்துக்கு போன் செய்தாலும் சரியான பதில் இல்லை. இது தொடர்பாக,  மின்வாரியம் முழு விளக்கம் தந்தால், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 
 தமிழ்நாடு தொழில்துறையில் வளர்ந்து வரும் முக்கியமான மாநிலமாக உள்ளது. ஆட்டோமொபைல், ஜவுளித்துறை ஆகியவை முக்கியமான தொழில்களாக உள்ளது. மொத்த ஜவுளிஉற்பத்தியில் 25 சதவீதம் தமிழகத்தில் தான் நடக்கிறது. இதில் லட்சணக்கான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். எனவே தமிழகத்தில் தொழில்களுக்கு மின்தேவை அதிகரித்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் மின்தேவை 20,000 மெ.வாட் ஆக இருக்கும். 
தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு மொத்த மின் தேவை 10,500 முதல் 12,000 மெகாவாட். ஆனால் தற்போது 7500 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தேவையை சமாளிக்க வெளிசந்தையில் இருந்து 2500 மெகாவாட் வாங்கப்படுகிறது. இருந்தும் மின்தடை பிரச்னை பெரிதாகி வருகிறது. 
 வீடுகளுக்கு அந்தந்த பகுதிகளின் துணை மின்நிலையங்கள் மூலமே மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. துணை மின்நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, குறைவான கிலோ வாட் அளவிற்கு மின்சாரம் சேகரித்து வினியோகம் செய்யப்படும். அப்போது எந்த பிரச்னையும் இருக்காது. அதாவது 250 கிலோ வாட் திறன் கொண்ட மின்நிலையத்தில் 170 கிலோ வாட் வரை மட்டுமே சேகரித்து, மின்சாரம் விநியோகம் செய்யும் போது லோவோல்டேஜ், ஹைவோல்டேஜ் பிரச்னை இருக்காது. ஆனால் தற்போது அனைவருக்கும் மின்சாரம் வழங்குகிறோம் என கூறி, துணை மின்நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் 80 சதவீதம் வரை மின்சாரம் சேகரித்து வினியோகம் செய்யப்படுகிறது. அப்போது அதிகமான வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதால் லோவோல்டேஜ் பிரச்னை ஏற்படுகிறது.

அதுபோல் மின்சாரம் விநியோகிக்கும் போது சாதாரணமாக 50 பிரிகியூயன்சி (அலைவரிசை) வரையில் தான் மின்சாரம் இருக்க வேண்டும். இதைவிட அதிகமாக சென்றாலும், குறைவாக சென்றாலும் பிரச்னை தான். குறைவாக செல்வதை தான் லோவோல்டேஜ் என்கிறோம். இதனால் மின்விசிறி,தொலைகாட்சிப்பெட்டிகள் போன்ற மின்சாதனங்கள் பழுதாகும் நிலை ஏற்படும்.

                                       
 உள்ளாட்சித்தேர்தலில் இந்த மின் வெட்டு எதிர்மறையான முடிவுகலை ஆளுங்கட்சிக்கு தந்து விடுமோ? சென்ற சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கு மின்வெட்டும் ஒரு காரணிதான்.இத்தேர்தலுக்கும் காரணியாக அமைந்திடுமோ?                       


                                                   1111111111111111111111111111111111111110000000000000000000111111111111111111111


அச்சுறுத்தும் சீனம்.........................
இந்தியாவின் எல்லைப் பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீர் பகுதியில் 4 ஆயிரம் சீன துருப்புகள் முகாமிட்டுள்ளதாக

 ராணுவ தலைமை தளபதி ஜெனரல் வி . கே.சிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: சீனாவில், சீன மக்கள் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ) என்ற பெயரில் அந்நாட்டு துருப்புகள், இந்தியாவின் எல்லைப்பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அத்துமீறி முகாமிட்டுள்ளனர். ஏறத்தாழ 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் துருப்புக்கள் அங்கு முகாமிட்டு, ராணுவ நிலைகளை அமைப்பதற்கான கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
முன்னதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீரில் சீனதுருப்புக்களின் நடவடிக்கை அச்சுறுத்தலாக உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------------------------------------------------------
ஆப்பிளும் இந்தியாவும்.
                      

மூன்று ஆப்பிள்கள் உலகையே மாற்றியுள்ளன. ஒன்று ஏவாளின் கையில் கிடைத்த ஆப்பிள். இரண்டாவது நியூட்டனின் கையில் கிடைத்தது. மற்றொன்று தான் ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் ஆப்பிள் தயாரிப்புகள். இன்றைய நிலையில் சமூக வலைதளங்களான டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற இணையங்களில் பரவிக்கிடக்கும் குறுந்தகவல் இது தான்.
உலகை புரட்டிப்போட்ட ஆப்பிள் தயாரிப்பு நாயகனின் ஆரம்ப கட்ட வாழ்க்கையில் இந்தியா ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினால் அது நிச்சயம் உங்களுக்கு வியப்பை அளிக்கும்.
73ம் ஆண்டில் தனது 18வது வயதில் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்ட போது தனது நண்பர் டான் கோட்டிக்குடன் மனநிம்மதி தேடி இந்தியா வந்தார் ஜாப்ஸ். அப்போது தாங்கள் எங்கு தங்கி மன நிம்மதி பெறப்போகிறோம் என்பது கூட அவர்களுக்கு தெரியாது.
இந்தியா குறித்தும், அந்நாட்டின் வளமான தெய்வீகத்தன்மை குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்ட போதனைகளுக்கும், இந்தியாவின் உண்மை நிலைக்கும் உள்ள முரண்பாடுகளை கண்ட ஜாப்ஸ் மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பிச்செல்வதென முடிவு செய்தார். அவர் தேடி வந்த மன நிம்மதி அவருக்கு கிடைக்கவில்லை.
தி பிரைவேட் ஸ்டோரி ஆப் ஆப்பிள் கம்ப்யூட்டர் என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “முதன் முதலாக நான் தாமஸ் ஆல்வா எடிசன் குறித்து உணர ஆரம்பித்தேன். இவ்வுலகை மேம்படுத்த அவர் கார்ல் மார்க்சை விட கரோலி பாபாவை விட, எடிசன் நிறைய செய்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
கரோலி பாபா என்பவர் ஸ்டீவ் ஜாப்சின் குரு. ஆன்மீக மார்க்கத்திற்கு திரும்பவிருந்த ஜாப்சை அறிவியல் மார்க்கத்திற்கு திருப்பியது இந்தியா. ஜாப்ஸ்க்கு தேவையான மனநிம்மதி இந்தியாவில் கிடைத்திருக்குமானால், உலகம் தனது மூன்றாவது ஆப்பிளை இழந்திருக்கும்.
இந்தியாவிலிருந்து கிளம்பி கலிபோர்னியா திரும்பிய ஸ்டீவ் முதற்காரியமாக ஆரம்பித்தது தான் ஆப்பிள் நிறுவனம். எத்தனையோ ஞானிகளை உருவாக்கிய இந்த இந்திய மண் தான், இன்று ஐ-பொருட்களின் தாயகமான ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கவும் காரணமாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க>>
88888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

உலகம் எப்படி அழியும்?.  
                                       


இயற்கைப் பிரளயத்தில் சிக்கி அழியும், தீயில் அழியும் என்பதுதான் நாம் எண்ணுவது.. ஆனால் சால் பெர்ல்மட்டர், பிரையன் ஸ்மிட் மற்றும் ஆடம் ரீஸ் ஆகியோர் கூறும் பதில் உலகம் அப்படியே பனிப் பிரதேசமாக உறைந்து போய் விடும் என்பது. இதற்காகத்தான் அவர்களுக்கு 2011ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு கிடைத்துள்ளது.

இந்த மூன்று அமெரிக்க வி்ஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏன் இந்த மூவருக்குமே கூட தங்களது கண்டுபிடிப்பு பெரும் வியப்பையே அளித்ததாம். அவர்களால் கூட இதை நம்ப முடியவில்லையாம்.

சூப்பர் நோவா எனப்படும் வெடிக்கும் நட்சத்திரக் கூட்டங்களை தொடர்ச்சியாக ஆராய்ந்து அதன் அடிப்படையில்தான் உலகம் கடைசியில் உறைந்து போய் விடும் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லியுள்ளனர் இந்த மூவரும்.

14 பில்லியின் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிங் பாங் எனப்படும் மிகப் பெரிய அண்டவெடிப்பு அனைவருக்கும் தெரிந்ததுதான். பிங் பாங்குக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப் பெரிய வெப்பம் படிப்படியாக குளிர்ந்து நட்சத்திரக் கூட்டம், கிரகஙக்ள் உள்ளிட்டவை உருவாகின. பிரபஞ்சமும் தொடர்ந்து விரிவடைந்து வந்தது. அந்த செயல் இன்றும் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த வேகம் அதிகரித்தால் இறுதியில் உலகம் முழுவதும் பனிப் பிரதேசமாகி உறைந்து போய் விடும் என்பதுதான் இந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும்.

இந்த மூவருமே தனித் தனி அணியாக செயல்பட்டு ஆய்வில் ஈடுபட்டிருந்தவர்கள். ஒரு குழுவுக்கு சால் பெர்ல்மட்டர் தலைமை தாங்கினார். இன்னொரு குழுவுக்கு பிரையன் ஸ்மிட் தலைவராக இருந்தார். பெர்ல்மட்டர் தலைமையிலான குழு தனது ஆய்வை 1998ல் தொடங்கியது. பிரையன் தலைமையிலான குழு தனது ஆய்வை 1994ல் தொடங்கியது. இந்தக் குழுவில் முக்கியப் பங்காற்றியவர் ஆடம் ரீஸ்.

தொலைதூர சூப்பர் நோவாவை இவர்கள் கண்டறிந்து அதை ஆய்வு செய்ய ஆரம்பித்தனர். பூமி மற்றும் விண்வெளியிலிருந்து அதி நவீன தொலை நோக்கிகள் மூலம் இந்த ஆய்வு நடந்தது. இதற்காக அதிக சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர்களும் பயன்படுத்தப்பட்டன. இவர்களது ஆய்வுக்குப் பெரும் வரப்பிரசாதமாக வந்தது டிஜிட்டல் இமேஜிங் சென்சார் கருவி. இதைக் கண்டுபிடித்தவருக்கு 2009ம் ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

12க்கும் மேற்பட்ட சூப்பர் நோவாக்களை இவர்கள் ஆய்வு செய்தபோதும் லா சூப்பர்நோவா என்ற ஒன்றை மட்டும் குறிப்பாக தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்த சூப்பர் நோவா, பூமியை விட சிறியது, சூரியனின் எடையை விட அதிகமானது. இந்த ஒரு சூப்பர்நோவா மட்டும் ஒரு முழுமையான கேலக்ஸி வெளிப்படுத்தும் வெளிச்சத்தை விட பல மடங்கு அதிக வெளிச்சத்தை வெளிப்படுத்துவதை இந்த வி்ஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்தது.

இதேபோல மொத்தம் 50 சூப்பர் நோவாக்கள் வரை இவர்கள் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொண்டனர். ஒரு சூப்பர் நோவாவுக்கே இந்த அளவு வெளிச்சம் வரும்போது 50 சூப்பர் நோவாக்களும் சேர்ந்து எவ்வளவு வெளிச்சம் தர வேண்டும்?. ஆனால் அப்படி தரவில்லை. வி்ஞ்ஞானிகள் குழு எதிர்பார்த்த அளவிலான வெளிச்சத்தை அவர்களால் காண முடியவில்லை. இதன் மூலம் பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து வருவதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

பிரபஞ்சத்தின் 5 சதவீத பகுதியில்தான் கிரகங்கள், நட்சத்திரங்கள், பூமி உள்ளிட்டவை உள்ளன. மீதமுள்ள 95 சதவீத பகுதி டார்க் எனர்ஜி எனப்படும் அறியப்படாத சக்தி அடங்கியவை. எனவே தற்போது இந்த மூன்று அமெரிக்க விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துக் கூறியுள்ள தகவல்கள், பிரபஞ்சம் குறித்த ஆய்வுகளுக்கு பெரும் திருப்புமுனையாக அமையும் எனக் கருதப்படுகிறது. மேலும் நம் முன் விரிந்து கிடக்கும், நம்மால் இன்னும் அறியப்படாத பல புதிர்களுக்கு விடை காண இந்த ஆய்வுகள் முதல் படியாக அமையும் எனக் கருதப்படுகிறது
.

############333333333333333333333333333333########################!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


சஞ்சீவ் பட்பற்றி சில குறிப்புகள்.
                                
                    + மிக கடுமையான நரேந்திர மோடியுடன் மோதி பரபரப்பை ஏற்படுத்திய காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ்பட்டும் சாதாரண ஆள் இல்லை போல் தெரிகிறது.கீழே அவர் மீதான குற்ற சாட்டுகள் தரப்படுகின்றன.
அவை உண்மையானதா?என்பதை நடுநிலையான விசாரிப்பு மூலமே தெரிந்து கொள்ள முடியும். 
சஞ்சீவ் பட்டின் பணிப் பதிவேடு ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. பணிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிந்திருந்த நிலையில் 1990 நவம்பர் 18-ம் தேதி தனிநபர் அளித்த புகார் ஒன்றில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜாம்நகரில் உதவி போலீஸ் எஸ்பியாக இருந்த காலத்தில் அதிகாரத்தை பயன்படுத்தியதாக தடா சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது புகார் கூறப்பட்டது. அதன் விளைவாக ஒருவரின் உயிரிழப்புக்கு அவர் காரணமாக இருந்திருக்கிறார். ஆக ஜனநாயகம் மற்றும் எதிர்ப்பு உரிமை குறித்து தைரியமாகப் பேசிவரும் பட், அந்த இரண்டையும் நசுக்கிய தனது செய்கைகளை வசதியாக மறந்துவிட்டார்.

அதற்கும் மேலாக, குஜராத்தில் பானஸ்கந்தா எஸ்பியாக பணியாற்றியபோது போதைப்பொருள் வழக்கில் ராஜஸ்தான் வழக்கறிஞர் ஒருவரை தவறாகக் குறிப்பிட்டதால் அந்த மாநில வழக்கறிஞர்களின் கோபத்துக்கும் ஆளாகி இருக்கிறார்.
குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆர்ஆர். ஜெயினின் சகோதரி வீட்டில் குடியிருந்த ராஜ்புரோகித் என்ற வழக்கறிஞரை காலி செய்ய வைக்க சஞ்சீவ் பட் முயன்றுள்ளார். அதற்காக பலன்பூரில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் 1 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை தனது உதவியாளர்கள் மூலம் வைத்துவிட்டு அந்த அறையில் ராஜ்புரோகித் இருந்தது போன்று காட்ட முயன்றார். ஆனால் ராஜ்புரோகித் அப்போது பாலியில் இருந்தார். இதனால் சஞ்சீவ் பட்டின் அறிவுரையின்படி பானஸ்கந்தா போலீசாரால் பாலியில் இருந்து ராஜ்புரோகித் கடத்தி வரப்பட்டு பலன்பூருக்கு கொண்டுசெல்லப்பட்டார். அப்போது அந்த வீட்டைக் காலிசெய்யாவிட்டால் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் வழக்குப் பதிவுசெய்வேன் என்று சஞ்சீவ் பட் அவரை மிரட்டியுள்ளார். அந்த வழக்கறிஞரும் அப்போது அதற்கு ஒப்புக்கொண்டார். இதையடுத்து 7 நாட்கள் காவலுக்கு அனுப்பப்பட்ட ராஜ்புரோகித் 5 நாட்களுக்குப் பின்னர் சஞ்சீவ் பட்டின் உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இதுதொடர்பாக பாலி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சஞ்சீவ் பட்டுக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் அவருக்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு ஒன்றும் பதிவுசெய்யப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது எப்படி ஒருவரை பதவி உயர்த்த முடியும். கறைபடிந்த அரசு ஊழியர்களை பதவி உயர்த்த முடியாது என சட்டம் உள்ளது தெரிந்திருந்தும் அவரது அரசு விரோத மனப்பான்மை புதிரானது.
சஞ்சீவ் பட் பானஸ்கந்தா எஸ்பியாக இருந்தபோது ஆள்சேர்ப்பு நடைமுறையிலும் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றது. அதிலும் சஞ்சீவ் பட்டின் பெயர் சர்ச்சையில் அடிபட்டது.
போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுகளில் வெற்றிபெற்றிருந்த நபர்களின் பதிவேடுகளை பராமரிக்கவில்லை என்பது உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகளை அவர் பின்பற்றவில்லை. ஒருங்கிணைந்த தேர்வுக்காக ஆயுதம் மற்றும் ஆயுதம் அல்லாத கான்ஸ்டபிள்களை தனித்தனியாக தேர்வுசெய்வதில் அவர் சரியான நடைமுறையைப் பின்பற்றவில்லை. இந்த விஷயத்தில் டிஜிபியின் உத்தரவை அவர் மீறியுள்ளார்.
இதனால் தகுதியில்லாத நபர்களுக்கு இரண்டாவது நிலைக்கு செல்ல வாய்ப்பளிக்கப்பட்டது மற்றும் தேர்வு எழுதுபவர்களின் முக்கிய விவரங்கள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் அனைத்தும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது மற்றும் அலட்சியம் ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிடுகிறது.
2002 பிப்ரவரியில் முதல்வரால் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு அங்கு சென்றேன் என பட் கூறுகிறார். இது பொய்யானது என்று மக்கள் மட்டும் கூறவில்லை. அப்போது நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் உண்மையிலேயே பங்கேற்ற 7 அதிகாரிகளும் கூறுகின்றனர்.
2007 இறுதிவரை எஸ்பி அந்தஸ்தில் இருந்த சஞ்சீவ் பட், அப்போது உயர்பதவியில் இல்லாதநிலையில் எப்படி உயர்மட்ட அளவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்றிருக்க முடியும் என கேள்வி எழுப்புகின்றனர்.
சமீபகாலமாகக் கூட பொய்களும், சர்ச்சைகளும் சஞ்சீவ் பட்டை பின்தொடர்கின்றன. குஜராத் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் அவர் தொடர்ந்து தொடர்பு வைத்திருக்கிறார். அவர்களிடம் இருந்து உபகரணங்களை வாங்கியுள்ளார் என்று பட் மீது புகார் கூறப்படுகிறது. மேலும் குஜராத் முதல்வருக்கு எதிராகப் போராட ஒரு கையெழுத்து பிரசாரத்தைத் தொடங்க தனக்கு உதவுமாறு முதல்வருக்கு எதிராக செயல்படும் ஷபனம் ஆஸ்மி மற்றும் ஃபாதர் செட்ரிக் பிரகாஷ் ஆகியோரிடம் சஞ்சீவ் பட் வேண்டுகோள் விடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி சஞ்சீவ் பட் ஜூனாகட்டில் எஸ்ஆர்பி பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால் அங்கு சென்று பணியாற்ற மறுத்ததுடன் அலுவலக வாகனத்தையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். நோட்டீஸ் அளிக்காமல் விடுமுறை எடுப்பது குற்றம் அல்ல எனில் அவர் அப்பாவிதான். ஆனால் உத்தரவுக்கு அரசு ஊழியர்கள் கண்டிப்பாக கட்டுப்பட வேண்டும் என்று சில விதிமுறைகள் உள்ளன. மக்களுக்கு சேவைசெய்ய தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகள் பணிக்கு சென்று ரிபோர்ட் செய்ய மறுத்துவிட்டு அந்த பணிக்கான சலுகைகளை தொடர்ந்து பயன்படுத்துவது துரதிருஷ்டவசமானது. இது பொதுமக்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
இப்போது அவரைக் கைது செய்வதிலும் சில எச்சரிக்கையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2002 வன்முறைகள் தொடர்பாக குஜராத் முதல்வருக்கு எதிராக தவறான பிரமாணப் பத்திரங்களில் கையெழுத்திடுமாறு கான்ஸ்டபிள் ஒருவரை மிரட்டிய செயல் கடுமையான குற்றமாகும். பந்த் அப்போது சஞ்சீவ் பட்டின்கீழ் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது சஞ்சீவ் பட் மீதான பழைய குற்ற சாட்டுகளை மோடி அரசு தூசு தட்டி வருகிறது.பட் மீது தமிழகப் பாணியில் வரிசையாக வழ்க்குகள் பதிவு செய்யப்படும் .அதன் மூலம் அவர் வெளியே வரமுடியாத அள்வு செய்யப்படும் என்றும் தெரிகிறது.
இது போன்ற பெருந்தலைகளுடன் மோதும் முன் தன் மீது எந்த தவறுகளும் சொல்ல முடியாதபடி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் .அது சஞ்சீவ் பட்டுக்கு தெரியாமல் போனது எப்படி?
                               

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?