பொருளாதார சிக்கல்கள்


                                              அமெரிக்காவின் நியூயார்க்கில்மய்யம் கொண்டு நடந்து வரும் "வால் தெரு கைப்பற்றுவோம்’' போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், உலகப் பொருளாதாரம்முழுக்க இன்றைய அளவில் சீர்கேடு அடையக் காரணமான வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசியல்வாதிகளைக் கண்டித்தும், போராட்டங்கள் உலகளவில் துவங்கியுள்ளன.
                  
"வால் தெரு கைப்பற்றுவோம் இயக்கம்' கடந்த செப்டம்பர் 17ம் தேதி நியூயார்க்கில் துவக்கிய போராட்டம், தற்போது அமெரிக்காவின் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்து வருகிறது.
 நியூயார்க்கில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியுள்ள, தனியாருக்குச் சொந்தமான "ஜூகோட்டி பூங்காவில்' இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றும் நோக்கில், அந்தப் பூங்காவைத் தூய்மைப்படுத்தப் போவதாக, பூங்கா உரிமையாளரான "ப்ரூக்பீல்டு பிராபர்ட்டீஸ்' நிறுவனம் அறிவித்தது.
தூய்மைப்படுத்திய பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் பூங்காவில் மீண்டும் தங்கலாம் எனவும் கூறியது. ஆனால், இதன் மூலம் தங்கள் ஆர்ப்பாட்டத்தை நசுக்க நியூயார்க் போலீசார் முயல்வதாகக் கருதிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர், பூங்காவில் நேற்று திரண்டு, அங்கிருந்து வெளியேற மறுத்து விட்டனர்.
இதனால் அந்நிறுவனம் , பூங்காவை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

 தற்போது வால் தெரு கைப்பற்றுவோம்போன்ற போராட்டம்' உலகம் முழுக்க வேகமாகப் பரவி வருகிறது. தென்னாப்ரிக்கா, தென் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆசியா, தெற்காசியா, ரஷ்யா என உலகம் முழுவதும் போராட்டங்கள்  துவங்கியுள்ள்து.. ,www.15october.net என்ற தனிஇணையதளம் இது போன்ற போராட்டக்காரர்களால்துவக்கப்பட்டுள்ளது. இதில், உலகம் முழுவதும், இந்தியா உள்ளிட்ட 82 நாடுகளில், 951 நகரங்களில் "வால் ஸ்டிரீட் ஆக்குபை' போராட்டம் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
                                                    
முதற்கட்டமாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன் நகரங்களிலும், நியூசிலாந்தின் ஆக்லாண்ட், வெல்லிங்டன், கிறிஸ்ட்சர்ச் நகரங்களிலும், தைவான் தலைநகர் தாய்பெய்யிலும், ஜப்பானின் டோக்கியோ,ரோப்போங்கி நகரங்களிலும், தென்கொரியத் தலைநகர் சியோலிலும் போராட்டங்கள் நடந்தன.
 ரோம், ஏதென்ஸ், மாட்ரிட் போன்ற நகரங்களிலும், தென்னாப்ரிக்காவின் டர்பன், கேப்டவுன், ஜோகன்னஸ்பர்க் நகரங்களிலும், ஜெர்மனியின் பிராங்பர்ட்டிலும் போராட்டங்கள் நடந்தேறின. பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்த போராட்டத்தில் "விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் கலந்து கொண்டார். இத்தாலியின் ரோம் நகரில் நடை பெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கார்கள் தீவைக்கப்பட்டன. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
"இந்தியா வரும் ஆக்கிரமிப்பு போராட்டம். ஆக்கிரமிப்பு போராட்டத் தளமான www.15october.net தளத்தில், இந்தியாவில் புனே, ஐதராபாத், மும்பை, கோல்கட்டா மற்றும் டெல்லியில் போராட்டங்கள் நேற்று நடக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நடந்தது போல் தகவல்கள் இல்லை., மும்பையில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள், "ட்விட்டரில்' இம்மாதம் 29ம் தேதி போராட்டம் நடக்கும் என அறிவித்துள்ளனர். 
அமெரிக்கத் தூண்டுதல்,உலக வங்கி கட்டாயப்படுத்தல் மூலம் உலகில் கடை பிடிக்கப் பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை,அந்நியமயமாக்கல்,தாராளமயமாக்கல் ,தனியார் மயமாக்கல் ஆகிய மூன்று ஆக்கங்களை உலக நாடுகள் இந்தியா உட்பட கடை பிடித்ததின் எதிர் விளைவுகள் தான் அமெரிக்க பொருளாதாரம் உட்பட அனைத்து நாடுகளின் பொருளாதார சீரழிவு,வேலைவாய்ப்பின்மை,விலைவாசி கொடூரம் போன்ற ஆக்கங்கள்.
தனது பொருளாதரம் மட்டும் எப்போதும் நல்ல நிலையில் இருக்க அமெரிக்கா கண்டு பிடித்த பொருளாதாரக் கொள்கை இன்று அவர்களை ஆட்டி படைத்ததுடன் மற்றைய நாடுகளையும் ஒரு வழியாக்கிக்கொண்டிருக்கிறது.
இந்தியாவை பொறுத்தமட்டில் சீரழிவு சற்றுக்குறைவு அதற்குக் காரணம் மன்மோகன் சிங் தாராளமயமாக்கக் கொள்கை வேகத்திற்கு மக்களவையில் கடிவாளம் -தடை போட்டு கட்டுப்படுத்தி வந்த இடது சாரிகள்தான்.ஆனால் அதை இந்நேரம் யாரும் கவனத்தில் வைத்திருப்பதாகத் தெரியவில்லை.
  அன்று 63 மக்களவை உறுப்பினரகள் தேவையால் மன்மோகன் தன் செயல் வேகத்திற்கு கட்டுபோடப்பட்டுள்ளதாக புலம்பினார்.இப்போது கட்டு அவிழ்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.அதன் பயன்தான் அணுசக்தி ஒப்பந்தம்,புதிய ஓய்வூதிய வரை நிறைவேற்றம் போன்ற தேச விரோத கொள்கைகளை பா.ஜ.க.ஆதரவோடு நிறைவேற்றியது.
அந்த இடது சாரிகள் கூட்டு இல்லையென்றால் இன்று இந்தியாவிலும் எல்.ஐ.சி,வங்கிகள் தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டு இந்திய பொருளாதாரமும் கண்கானா இடத்திற்கு போய் ஒளிந்து இருந்திருக்கும்.


அது சரி இந்தியாவில் போராட்டத்திற்கு பெயர் என்ன?”                                                          ’தலால் தெருவை கைப்பற்றுவோம்தானே? 
=====================================================================
                                                 பூடான் மன்னர் மணப்போட்டா.
-
                                                      --------------------------------------------------------------
பொருளாதார வல்லுனர்கள் மாநாடு?
                            

இரட்டை இலக்கத்தை தொடும் நிலையில் பணவீக்கம், சரிந்து வரும் பொருளாதார வளர்ச்சியை அடுத்து, பிரதமர் மன் மோகன் சிங், பொருளாதார நிபுணர்களுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
 மத்திய திட்டக் குழுவின் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா, பாரத ரிசர்வ் வங்கியின் ஆளுநர் டி. சுப்பாராவ், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் சி. ரங்கராஜன், மற்றும் உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில் இப்போதைய உலக மற்றும் இந்திய பொருளாதார சூழல் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 "" நடப்பு பொருளாதார சூழ்நிலை குறித்து பிரதமருடன் விவாதிக்க உள்ளோம். இதில் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் குறித்து ஆலோசனை நடத்தப்படும். இது தொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் '' என்று ரங்கராஜன் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.
 வரும் 25ம் தேதி நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி அறிவிக்கவுள்ள நிலையில் இக்கூட்டம் நடைபெற்றுள்ளது.
 உணவுப் பொருள்கள், எரிபொருள், உற்பத்திப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக செப்டம்பர் மாதத்தில் நாட்டின் பண வீக்கம் 9.72 சதவீதமாக உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக உள்ளது. கடந்த 18 மாதங்களில் இதுவே குறைந்த அளவு வளர்ச்சியாகும்.
 கடந்த நிதியாண்டில் ஆண்டு இதே பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருந்தது. நாட்டின் தொழில் துறை உற்பத்தி தொடர்ந்து இரண்டாவது மாதமாக குறைந்துள்ளது. இது 4.1 சதவீத வளர்ச்சியையே கண்டுள்ளது.
 பணவீக்கத்தை கட்டுப்படுத்த, கடந்த 18 மாத காலத்தில் வட்டி விகிதங்களை இது வரை 12 முறை ரிசர்வ் உயர்த்தி உள்ளது. உணவுப் பணவீக்கம், மற்றும் பணவீக்கம் இரட்டை இலக்கங்களை எட்டும் நிலையில் உள்ளதால், வட்டிவிகிதங்கள் மேலும் உயர்த்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று என ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

                         

 கிராமத்தில் 25ரூபாயிலும்,நகரத்தில் 36ரூபாயீலும் வாழக்கைந டத்தலாம் என்று வறுமைக்கோடுக்கு விளக்கம் தருபவர்கள் எல்லாம் பொருளாதார் வல்லுனர்கள்?இந்தக்கொடுமை இந்தியாவில்தான்.
புதிய போருளாதாரக்கொள்[ளை]கை தாசர் அலுவாலியா திட்ட க்குழுத்தலைமைப் போறுப்பில் இருக்கும்வரை இந்தியா பொருளாதாரம் சரிவை சந்திப்பதை தடுக்க இயலாது.
அவரின் செயல் பாடுகள் அனைத்துமே பகாசுர முதலாளிகள் நலனைபாதுகாக்கவும் ,எளியமக்களுக்கு எதிராகவுமே உள்ளது.அவர் அந்த பதவிக்கு தகுதியானவர் அல்ல.
நாட்டு நலனை விட அமெரிக்கா,முதலாளிகள் நலனையே முதல் தேர்வாக வைத்துள்ளார்.
**************************************888888888888888888888888888888***************************

    

நிதி மூலதனத்தின் கொடுங்கோன்மை
-அசோக் மித்ரா
                  
இருபது ஆண்டு காலத்தில் உலக நிதி மூலதனத்தின் பங்கு : அதன் பேராசையும், தவறான கணிப்புகளுமே, பெருவீழ்ச்சி காலத்திற்குப் பின்னர் அமெரிக்காவை இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளியது.

(இன்சூரன்ஸ் ஊழியர் இயக்கத்தின் மூத்த தலைவர் என்.எம். சுந்தரம் எழுதியிருக்கும் “தகர் நிலையில் உலக நிதி மூலதனம் - முகத்திரை கிழியும் சுதந்திரச் சந்தை முதலாளித்துவம்”என்ற ஆங்கில நூல் குறித்து பொருளாதார நிபுணரும் மேற்குவங்க முன்னாள் நிதி அமைச்சருமான டாக்டர் அசோக் மித்ரா - தி `ஹிந்து நாளிதழ் - 11.10.11)

இந்நூலின் ஆசிரியர் ஒரு பொருளி யல் வல்லுனரோ அல்லது எந்தக் குறிப்பிட்ட துறை குறித்த நிதி ஆய் வாளரோ அல்ல. அவர் தொழிற்சங்க இயக்கத்தில் பழுத்த அனுபவம் கொண் டவர். இந்திய இன்சூரன்ஸ் துறையில், உலக நிதி மூலதனம் ஊடுருவியதை எதிர்த்த இன்சூரன்ஸ் ஊழியர்களின் கடுமையான போராட்டத்தினை தலை மை தாங்கி நடத்தியவர். அந்தப் போராட் டத்தில் முன்வைக்கப்பட்ட அனைத்து அம்சங்களிலும் முழுமையான வெற்றி கிடைக்கவில்லையெனினும், சர்வதேச நிதி மூலதனம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும், அண்மைக் காலங் களில், அமெரிக்காவில் மட்டுமல்லாது, உலகின் பல கண்டங்களிலும் அது எத்த கைய மோசமான விளைவுகளை ஏற் படுத்தியிருக்கிறது என்பது குறித் தெல்லாம் நெருக்கமாக அறிந்து கொள்வ தற்கு அவருக்கு இந்த அனுபவம் உதவி யிருக்கிறது.

“இன்சூரன்ஸ் ஒர்க்கர்” மாத இதழில் தொடராக வெளிவந்த 27 கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. சில கருத்துக்கள் மீண்டும் மீண்டும் விவா திக்கப்பட்டிருக்கின்றன. தவிர, அருமை யான விவாதங்களுக்கு இணையாக, சில ஆழமான புள்ளி விவரங்களும் கூடு தலாக இடம்பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

சுந்தரத்தைப் பொறுத்தவரை அவரது தளராத நம்பிக்கைதான் அவரது பலம். நிதி மூலதனத்தின் தன்மை குறித்தும், அது ஒவ்வொரு நாட்டிலும், அதே போல் அந்நாடுகளில் ஒவ்வொரு துறையிலும் அது எப்படி கொள்ளைச் சுரண்டலில் ஈடுபட்டது என்பது குறித்த எதார்த்த நிலைமைகளை அவர் விரிவாகக் குறிப் பிட்டிருக்கிறார். கடந்த இருபது ஆண்டுக் கால அனுபவத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், சர்வதேச நிதி மூலதனம் என்பதற்கே நெருக்கடி என்பதுதான் மற்றொரு பெயராக இருக்க முடியும். அதனால் நெருக்கடியைத் தவிர வேறு ஒன்றையும் தோற்றுவிக்க முடியாது. ஏனெனில், அது அந்த வகையில் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

உடனடி லாபம், மேலும் லாபம், மென் மேலும் லாபம் என்பதே நிதி மூலதனத் தின் தொடரும் வேட்டை. இதற்காக, உலகம் முழுவதும் சுதந்திரமாகச் சுற்றி வருவதற்கான உலக அமைப்பினை அது தனது நீண்ட நெடிய முயற்சியின் மூலம் உருவாக்கியிருக்கிறது. உற்பத்தியில் ஈடுபடுவதை விட ஊகத்தில் ஈடுபடு வதன் மூலமே, அத்தகைய உடனடி கொள்ளை லாபம் சாத்தியமாகிறது. எனவே, ஊக நடவடிக்கைகள் அதனது இயல்பான விருப்பமாக மாறியிருக்கிறது.

பொருத்தமான சூழ்நிலைகள்!

அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பா விலுள்ள பணக்கார நாடுகளிலும் புதிய உயர் தொழில் நுட்பங்கள் காரணமாக, பிற நாடுகளை விட, முதலீடு - உற்பத்தி விகிதம் சாதகமாக மாறியுள்ளது. இந்த நாடுகளில் வருமான வினியோகத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை. எனவே, ஒட்டுமொத்த கிராக்கி நிலைமை களிலும் ஸ்திரத்தன்மை உள்ளது. ஊக நடவடிக்கைகளுக்கு இது வெகுவாகப் பொருந்துகின்ற சூழ்நிலை என்பதால், அவை பன்மடங்கு அதிகரித்துள்ளன.

நிதி மூலதனத்திற்கு அறநெறிகள் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. தனது லாபத்தினைப் பெருக்க வேண்டுமென் றால், அது எவ்வளவு மோசமானது என் றாலும், கிரிமினல் நடவடிக்கை என்றா லும் கூட அதில் ஈடுபடத் தயங்காது. எந்த அமெரிக்கப் பொருளாதாரம் தனக்கு மிகப் பெரும் பலமாக இருந்ததோ, அந்தப் பொருளாதாரத்தினையே இன்று பலவீனப்படுத்துவதில் நிதி மூலதனம் தயக்கம் காட்டவில்லை.

நிதி மூலதனத்தின் கொடுங்கோன் மை, மேற்கு ஐரோப்பாவில் மத்திய தரைக் கடல் ஓரங்களில் இருக்கும் சிறிய நாடுகளை வறுமைக்குள்ளாக்கும் நிலை மைக்கு சென்றிருக்கிறது. இந்தியப் பொரு ளாதாரத்தினை எப்படி வேண்டுமா னாலும் வடிவமைத்துக் கொள்ளலாம் என்ற அளவில், அது நிதி மூலதனத்தின் கைகளில் சிக்கித் தவிக்கிறது. பங்குச் சந்தையின் மீதான முழுமையான கட்டுப் பாடு அந்நிய நிதி முதலீட்டாளர்களின் கைகளில் உள்ளது. இந்திய நாடு உருவாக்கி வைத்திருக்கும் தொழில் உற்பத்தித் தளங்களை அழிப்பதற்குமான சக்தியும் இன்று அதனிடம் உள்ளது.

அதனுடைய அழிவு சக்தி ஒரு புறம் இருப்பினும் கூட, நாம் வேறு ஒரு அம்சத் தினை விவாதிக்க முடியும். நிதி மூலத னம் தகர்நிலையினை எட்டிவிட்டது என்பது உண்மையா? கடந்த இருபது ஆண்டு காலத்தில் உலக நிதி மூலதனத் தின் பேராசையும், தவறான கணிப்புக ளுமே, பெருவீழ்ச்சி காலத்திற்குப் பின் னர் அமெரிக்காவை இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளி யிருக்கிறது.

1930களில், அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், அரசாங்கத் தின் பொதுப்பணிகளின் மூலம் வரு மானத்தையும், வேலைவாய்ப்புக்களை யும் உருவாக்கினார். பற்றாக்குறை பட் ஜெட் (னுநகiஉவை குiயேnஉiபே) மூலம் நிதி நிலைமையினைச் சமாளித்தார்.

அரசியல் செல்வாக்கு!

இன்றைய அமெரிக்காவில் நிதி மூல தனத்தின் அரசியல் செல்வாக்கு, இதற்கு நேர்மாறாக செயல்பட்டிருக்கிறது. பாரக் ஒபாமாவும் பற்றாக்குறை பட்ஜெட்டிற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆனால் மக்களுக் காக அல்ல. திவாலாகும் நிலையிலிருந்த வங்கிகளையும், பெரிய கம்பெனிகளையும் காப்பாற்றுவதற்கான நிர்ப்பந்தம் அது. அவர்களது சொந்தத் தவறுகளின் காரணமாக ஏற்பட்ட நிலைமைகளி லிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற் காக செலவழிக்கப்பட்ட பணம் அது. உலக நிதியங்களுக்கு தலைமை தாங்கிய, கம்பெனி தலைவர்களின் போனஸ் உட்பட அனைத்தும் பாதுகாக்கப்பட்டது.

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் ஒதுக்கிய பணத்தின் ஆகப் பெரும்பகுதி, பெரிய பெரிய கம்பெனிகளின் நலன்களுக் காகவே செலவிடப்பட்டதே தவிர, நடுத் தர வர்க்கம் மற்றும் தொழிலாளி வர்க்கத் தினரின் வாழ்நிலைத் துயரங்களைப் போக்குவதற்கு செலவிடப்படவில்லை.

தேசியப் பொருளாதாரங்கள் பலவற் றை அழித்த பின்னரும் கூட நிதி மூல தனம் ஒரு அச்சுறுத்தும் சக்தியாகவே தொடர்ந்து வருகிறது. அதன் அளவு கடந்த பேராசை அமெரிக்காவில் உற் பத்தி தேக்கத்தினை உருவாக்குமா, அதை விட மோசமான நிலைமைகளை உருவாக்குமா? மேற்கு ஐரோப்பாவில், சமூக நிலைமைகளை புரட்டிப் போடுமா? என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. வியத்தகு வகையில் பலவும் நடக்கக் கூடும். அமெரிக்கப் பொருளாதாரம் நம்பகத்தன்மையினை இழக்குமானால், டாலர் உலகின் ரிசர்வ் நாணயம் என்ற அந்தஸ்தினை இழந்து விடும். அதுவே, நிதி மூலதனத்தின் இறுதி யாத்திரைப் பாடலாக அமையலாம்.

மற்றுமொரு காரணியும் இங்கு கவனத் தில் கொள்ளப்படவேண்டும். நிதி மூலத னத்தினை எதிர்கொள்ளும் சக்தியாக ஏதும் இல்லாததும் நிதி மூலதனத்தின் ஆதிக்கம் தொடர்வதற்குக் காரணமாய் இருக்கிறது.

உலகின் அடிவானத்தைத் தொட்டுப் பார்த்தால், இன்னும் 20 ஆண்டுகளில், சீனா பெரிய அளவில் பொருளாதார மற்றும் இராணுவ பலத்துடன் நிதிமூல தனத்தினை எதிர்கொள்ளும் சக்தியாக உருவாகும் சாத்தியங்கள் உள்ளன. ஆனால் ஒரு நிபந்தனை. ஏற்றுமதியினை பெரிதும் நம்பி நிற்கும் பொருளாதாரம் என்ற நிலைமையிலிருந்து அது விடுபட வேண்டும்.

சுந்தரத்தினுடைய புத்தகம் அவை குறித்த சிந்தனைகளை முன்வைக்கிறது. அவை அனைத்தும் வரவேற்கப்பட வேண்டியவையே. 

                                                                                                                       தமிழில் : இ.எம். ஜோசப்

நன்றி : தி ‘ஹிந்து நாளிதழ் - 11.10.11
                      
               ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
                                

                                                     

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?