விஜய் மீது மேலும்ஒரு குற்றசாட்டு.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜய்-க்கு இது போதாத காலம். அதனால்தான், அவர் மீது புகார்கள் குவிகின்றன. அ.தி.மு.க-வில் உள்ள சீனியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்காமல், கட்சிக்குப் புதிதாக வந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளதாக, அமைச்சர் விஜய் மீது ஏற்கெனவே எழுந்த புகார் இன்னும் ஓயவில்லை. அதற்குள், 'அவருக்கு சொந்தமான மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தவறாக நடத்தப்பட்டது. இதனால் ஒரு ஏழைக் குடும்பம் பாதிக்கப்பட்டுத் தவிக்கிறது’ என்று ஒரு பூதம் கிளம்பி இருக்கிறது!
அமைச்சர் மீது புகார் கூறியுள்ள சுரேஷை சந்தித்தோம். ''காட்பாடிக்குப் பக்கத்தில் இருக்கும் தாமரைக்குளத்தில் குடியிருக்கிறோம். என் அப்பா கிருஷ்ண சாமி, தெருக்கூத்துக் கலைஞர். எனக்கு இரண்டு தம்பிகள், மூன்று தங்கைகள். வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கோயில் திருவிழாக்களில் தெருக்கூத்து நடத்தி எங்களைக் காப்பாற்றி வந்தார் அப்பா. அவரை நம்பி 20 குடும்பங்கள் இருக்கு. ஒரு கூத்து நடத்தினால்,
இந்தக் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் விஜய்யிடம் பேசினோம். ''அந்த பேஷன்ட் 2005-ல் என் மருத்துவமனைக்கு வந்தது உண்மைதான். அவருக்கு ஆபரேஷன் செய்ததும் உண்மைதான். ஆனால், அந்த ஆபரேஷனை நான் செய்யவில்லை; எங்க மருத்துவமனையில் வேலை செய்யும் டாக்டர்கள்தான் செய்தார்கள். அதை நான் கண்காணித்தேன். நாங்கள் செய்த ஆபரேஷனால் அவருக்கு கால்கள் செயலிழக்க வாய்ப்பு இல்லை. அதற்கான சர்ட்டிஃபிகேட் எல்லாம் என்னிடம் இருக்கிறது. அதை மீறி இவர் புகார் சொல்வதற்குக் காரணம், முன்னாள் அமைச்சர் துரைமுருகன்தான். மேடையில் அவரை நான் திட்டுவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தவறான ஆட்களை இப்படித் தூண்டிவிடுகிறார். நான் குற்றவாளி இல்லை என்று நிரூபிப்பேன்!'' என்று பதற்றத்துடன் பேசினார்.
யார் சொல்வது உண்மை என்று விசாரணையில் தெரிந்துவிடும்!விசாரணை ஒழுங்காக நடக்க வேண்டுமே?இவர்கள் சண்டையில் துரைமுருகன் ஏன் வருகிறார்.
நன்றி:தேடிப்பார்