கடைசியில் வேறு ஆள்.
நிபா பரவல்.மற்றொரு கொரோனா??
கேரளாவில் மிக வேகமாக பரவி வரும் நிபா வைரஸை தடுக்க முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நிபா வைரஸ் தாக்கியவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை உருவாக்கி வருகிறது. இதுவரை அங்கு 2 பேர் நிபா வைரஸுக்கு உயிரிழந்துள்ளனர்.
மேலும், 4 பேருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உருவாகியுள்ளது. இந்த சூழலில், கேரளாவில் பல மாவட்டங்களில் மருத்துவமனைகளில் கடுமையான காய்ச்சலுடன் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அவர்களுக்கு நிபா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோருடன் 750 பேர் அடுத்தடுத்து தொடர்பில் இருந்தது தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து, அவர்களை தனிமைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
,நிபா வைரஸ் பரவலை தடுக்க ஐசிஎம்ஆர் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
"கொரோனாவை போல நிபா வைரஸும் காற்றில் பரவும் தன்மைக் கொண்டது. அதே போல, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது.
எனவே வைரஸ் பரவலை தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
நிபாவால் தாக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கட்டாயம் கையுறையும், கவச உடையும் அணிந்திருக்க வேண்டும்.
நிபா நோயாளிகளின் வியர்வை, ரத்தம், உமிழ் நீர் ஆகியவற்றை தொடக்கூடாது..
நிபா வைரஸ் பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். வவ்வால்களில் இருந்துதான் நிபா பரவுகிறது. அதனால், வவ்வால்களுக்கு தொல்லை கொடுத்து அதனை பறக்க வைக்க வேண்டாம்.
வவ்வால்கள் ஓரிடம் விட்டு ஓரிடம் தொடர்நது நகர ஆரம்பித்தால் பல இடங்களில் நிபா வைரஸ் கிருமிகள் பரவும்"
----------------------------------

- தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் தர கர்நாடகா அரசு மறுப்பு - செப்டம்பர் 18 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
- கொரோனாவை விட ‘நிபா’ வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதம் மிகவும் அதிகம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிர்ச்சி தகவல்
- அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் 75% அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வேன் - போட்டியிடும் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி .அமெரிக்க மோடி.?தோல்வி உறுதி.
- 5வது மக்கள்தொகை உச்சி மாநாட்டில் ஹங்கேரி-பல்கேரியா இடையே இயற்கை எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து
- மசாக்ரே ஆறு பிரச்சினையால் ஹைதி உடனான எல்லைகளை டொமினிக் குடியரசு மூடியது
- வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 778 ஆக உயர்வு.
- https://youtu.be/UOizmT4pVJg?si=dVKCClRnnpihetEf
- -------------------------------------
- கடைசியில் வேறு ஆள்.
- ஆனாலும் மிஸ்ராவை விடவில்லை.!
![]() |
ராகுல் நவீன் |