குறைந்தது .


கடந்த வாரம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 காசுகள் உயர்த்தியது மத்திய அரசு .பெட்ரோல் விலையைக் குறைக்குமாறு மத்திய அமைச்சர் வயலார் ரவி, பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டியிடம் தற்போதுவலியுறுத்தியுள்ளார். 
 மத்திய அமைச்சர் வயலார் ரவி, பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டிக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். 
அதில் அவர்:
சுரன்

 
எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறிக் கொள்வது உண்மையென்று தோன்றவில்லை. இந்திய எண்ணை நிறுவனங்கள் செய்யும் செலவுகள் மிகவும் அதிகம். அவை நிதியை வீணடிப்பதாகவே தெரிகிறது.மேலும் பெட்ரோலிய நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கொடுக்கும் ஈவுத்தொகையும் ஆயிரம் கோடிகள் கணக்கில் உள்ளன.நட்டத்தை சந்திக்கும் நிறுவனங்கள் இவ்வளவு தொகையை பங்காகக்கொடுப்பது எப்படி? 
எனவே, சமீபத்தில் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையைக் குறைக்க தைரியமான நடவடிக்கையை எடுக்கலாம். இனிமேல், எண்ணை விலையை உயர்த்துவதாக இருந்தால், அதற்கு முன் தீவிர பரிசீலனை அவசியம். 
இவ்வாறு வயலார் ரவி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.மத்திய சோனியா-மன்மோகன் சிங் அரசிலும் மனசாட்சியுடன் சிந்திக்கும் அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
நாம் இதுவரை பல முறை கூறியவைகளையே வயலாரும் கூறியுள்ளார்.
உண்மையிலேயே இப்போதைய தேவை பெட்ரோலிய நிறுவனங்களின் செயல் பாடுகள் வரவு-செலவு பற்றிய வெள்ளை அறிக்கை .இதை மத்திய அரசு கண்டிப்பாக மக்கள் மத்தியில் வெளியிட்டே ஆக வேண்டும்.அப்போதுதான் மத்திய அரசு கூறும் நட்டம் எவ்வளவு.எப்படி வந்தது என்று மக்களுக்கு தெரியும்.அதன் பின் விலை ஏற்றம் நியாயமாக தெரிந்தால் எதிர்ப்பும் கிளம்பாது அல்லவா?
சுரன்

இப்பதிவை இடும் போதே எண்ணை நிறுவனங்களின் இரண்டு ரூபாய் குறைப்பு அறிவிப்பு வெளியாகிவிட்டது.இன்று நள்ளிரவில் நடை முறையாம்.
மக்களை ஏமாளிகளாக்க முதலில் அதிகமாக விலையைக்கூட்டுவதும்.பின் மக்கள் அய்யோ பாவம் என்று கொஞ்சத்தைக்குறைப்பது.ஜெயலலிதாமுதல் ,மன்மோகன் சிங் அரசுவரை ஒரு ஆயுதமாக வைத்துள்ளனர்.
மக்கள் ஏமாளிகளா இல்லையா என்பது வாக்களித்த பின்னர்தான் தெரியும்.ஆனால் அதற்குள் மக்களின் தேசிய வியாதி மறதி வந்து விடுகிறதே,
___________________________________________________________________________________________________________
பிரிட்டிஷ் மன்னரான ஆறாம் ஜார்ஜ்ஜுக்கும் அவர் துணைவியார் எலிசபெத்துக்கும் மூத்த பிள்ளையாக 1926ஆம் ஆண்டு பிறந்தவர் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி.
1952ஆம் ஆண்டு தனது தந்தை காலமான நிலையில் வெறும் 26 வயதிலேயே நாட்டின் ராணியாக இரண்டாம் எலிசபெத் முடிசூடினார்.
மன்னரோ ராணியோ நாட்டின் தலைவராக இருக்கக்கூடிய ஒரு ஜனநாயக நாடு ஐக்கிய ராஜ்ஜியம்.
இங்கு பிரதமர்தான் அரசாங்கத்தின் தலைவர் என்றாலும், நாட்டின் தலைவராகவும் தேசத்தின் தலைவராகவும் விளங்க வேண்டிய கடமைகள் அரியணை ஏறுபவருக்கு உண்டு.
பிரிட்டனில் நூற்றாண்டுகள் காலம் பரிணாம வளர்ச்சிக் கண்டுள்ள அரசியல் சாசன கடமைகளையும் பிரதிநிதித்துவப் பொறுப்புகளையும் ராணி இரண்டாம் எலிசபெத் நிறைவேற்றிவருகிறார்.
கொண்டாட்டங்களின் துவக்கத்தை அறிவிப்பதற்காக இன்று லண்டன், எடின்பரோ, கார்டிஃப் பெல்ஃபாஸ்ட் ஆகிய ராஜ்ஜியத் தலைநகரங்களில் 41 தடவை பீரங்கி வேட்டு தீர்க்கும் இராணுவச் சடங்கு மேற்கொள்ளப்பட்டது.வைர விழா கொண்டாட்டங்கள் ஜூன் 2ஆம் தேதி தொடங்கி 5ஆம் தேதி வரையில் பிரிட்டனில் பல இடங்களில் கொண்டாடப்படுகின்றன.

சுரன்
சனிக்கிழமை லண்டன் அருகேயுள்ள டார்பியில் நடக்கும் குதிரைப் பந்தயத்தில் ராணி குடும்பத்தாரோடு கலந்துகொண்டுள்ளார்.
ராணி முன்னிலையில் பிரிட்டனின் முன்னணி ஓபரா இசைப் பாடகி கேதரின் ஜென்கின்ஸ் எ டே ஐவில் நெவர் ஃபர்கெட் என்ற பிரிட்டனின் தேசிய கீதத்தைப் பாடினார்.
ஞாயிறன்று லண்டனில் ஓடும் தேம்ஸ் நதியில் கடந்த முந்நூற்று ஐம்பது ஆண்டுகளில் இல்லாத ஒரு மாபெரும் படகு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆயிரம் படகுகள் அணிவகுக்கவுள்ள இந்த ஊர்வலத்தில் ராணியும் ஒரு படகில் பயணிக்கவுள்ளார்.
திங்களன்று முன்னணி இசைக்கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கச்சேரி ஒன்று பங்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று இராணுவ அணிவகுப்புடன்கூடிய ஊர்வலத்தில் ராணி பங்கேற்கிறார்.
வைர விழாக் கொண்டாட்டங்களின் அங்கமாக ஐக்கிய அரசிலும் உலகின் வேறு பல இடங்களிலுமாக 4000 ஜோதிகள் ஏற்றப்படவிருக்கின்றன.
கொண்டாட்டங்களின் நிறைவாக பக்கிங்ஹாம் அரண்மனை அருகே வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது.
இந்த கொண்டாட்ட காலம் முழுக்கவும் பிரிட்டனில் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டு, பள்ளிக்கூடங்களும் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன.
ஏராளமான வீதி விருந்துகளும் பொது நிகழ்ச்சிகளுமாக பிரிட்டன் விழாக்கோலம் பூண்டுள்ளது.

சுரன்

சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?