அடங்காத பாக் தீவிரவாதம்

 காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி துணை ராணுவத்தினர் 40 பேரை கொன்றுள்ளனர். இதேபோன்று ஈரானிலும் பாகிஸ்தான் வாலை ஆட்டி வருகிறது.

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் ஈரானில் தாக்குதல் நடத்தி கமாண்டோ வீரர்கள் 27 பேரை கொன்றுள்ளனர். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை  கண்டித்த ஈரான் இதற்கு பழிதீர்ப்போம் என ஈரான் எச்சரித்திருக்கிறது.

பாகிஸ்தான் – ஈரான் எல்லைப் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஈரானைப் பொறுத்தளவில் அந்நாட்டை சுற்றிலும் எதிரிகள் உள்ளனர்.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் ஈரானுக்கு எதிரான செயல்பாட்டில் இருக்கின்றன. இந்த இரு நாடுகளும் பாகிஸ்தானுடன் நல்ல நட்பு பாராட்டி வருகிறது.


அந்த வகையில் பாகிஸ்தான் மூலமாக ஈரானில் இந்த தாக்குல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை ஈரான் ராணுவ தலைமை தளபதி முகம்மது அலி ஜாபரி கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
எதற்காக தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் கொடுக்கிறது?. ஈரான் வீரர்களை கொன்றதற்காக உரிய விலையை பாகிஸ்தான் ராணுவம் கொடுக்க நேரிடும். கடந்த ஆண்டில் மட்டும் 7 தற்கொலைப்படை தாக்குதல்களை தடுத்து நிறுத்தியுள்ளோம்.
சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரத்திற்கு தெரியும் ஈரான் பொறுமை இழந்து விட்டது என்று. இதற்கு பதிலடி கொடுப்போம்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்..
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில், சக்திவாய்ந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்க முயன்றபோது, மேஜர் பதவியில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்துள்ளார்.

ரஜோரி மாவட்டத்துக்குட்பட்ட இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியான நவ்ஷேரா செக்டர் பகுதி பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் சுமார் 1.5 கி.மீ தொலைவில் உள்ளது.

இந்த பகுதியில் வெடிகுண்டு புதைக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இங்கு வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளில் சிலவற்றை செயலிழக்கச் செய்யும் பணியில் ராணுவம் ஈடுபட்டபோது, அதில் ஒரு குண்டு வெடித்ததாகவும் கூறப்படுகிறது.

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்த 48 மணி நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

புல்வாமா தீவிரவாத தாக்குதலில்  40-க்கும் மேற்பட்ட ராணுவ துணை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். 
 
இதில், கேரளாவைச் சேர்ந்த பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த ஹவில்தார் வசந்த குமாரும் உயிரிழந்தார். 
 
இவரது உடல் சொந்த ஊரான வயநாடு அடுத்த லக்கிடிக்கு நேற்று எடுத்துச் செல்லப்பட்டது.
 பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்த குவிந்தனர்.

அப்போது, கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் அல்போன்ஸ் உயிரிழந்த தியாகியின் உடல் முன்பு செல்பி எடுத்துள்ளார்.
 இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுத்தளத்தில் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

இந்த இடத்திலுமா உனக்கு செல்பி ? என்று அமைச்சரை இணையத்தளங்களில்  வறுத்தெடுத்து வருகின்றனர்.
நொந்து போயுள்ளார் மத்தியமைச்சர்  அல்போன்ஸ்.
 என்ன செய்வது தல எப்படியோ வால்களும்  அப்படித்தான் இருக்கிறார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?