எதிர்கட்சினரை மோசடி என அமுலாக்கத்துறையை வைத்து கைது செய்கிறது பா.ஜ.க.
ஆனால் பா.ஜ.க வினர தான் அதிக அளவு மோசடி,முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
பாஜக சட்ட மன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் 100கோடி பத்திரப் பதிவு மோசடியில் சிக்கியுள்ளார்.அடும்து பா.ஜ.க வழக்குரைஞர் முதியோர்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து தனது சொந்த வீடு என ஒத்திக்கு விட்டு பலகோடிகள் முறைகேட்டில் மாட்டியுள்ளார்.
சென்னை அடையார் பரமேஸ்வரி நகரை சேர்ந்தவர் பவானி (52).
இவருக்கு விருகம்பாக்கம் கம்பர் தெருவில் 1200 சதுர அடி கொண்ட தனி வீடு உள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞரான சிவ அரவிந்தன் என்பவர் பவானியை அணுகியுள்ளார்.
அப்போது அடையாறில் தான் சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும், தங்களது வீட்டை வாடகைக்கு கொடுத்தால் இங்கு நிறுவனத்தை நடத்திக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய பவானி அட்வான்ஸ் ஒரு லட்சம் ரூபாய் எனவும் மாதந்தோறும் வாடகை 20,000 என ஒப்பந்தம் செய்து வீட்டை வாடகைக்கு சிவ அரவிந்தனுக்கு கொடுத்துள்ளார்.
பின்னர் ஆறு மாதம் சரியாக வாடகை தந்த சிவ அரவிந்தன், அதன் பிறகு சரியாக வாடகை பணம் தராததால் பவானி நேரில் சென்று வீட்டை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அந்த வீட்டை சிவா அரவிந்தன் தனது வீடு எனக் கூறி இரண்டு பேருக்கு தலா 8 லட்சம் என லீசுக்கு கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பவானி இதுகுறித்து சிவ அரவிந்தனிடம் கேட்டபோது தகாத வார்த்தையால் , பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, பவானி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட விருகம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், வழக்கறிஞரான சிவ அரவிந்தன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாஜக கட்சியில் முன்னாள் வழக்கறிஞர் பிரிவு செயலாளராக இருந்துள்ளார்.
இதே போல சிவா அரவிந்தன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராஜேந்திரனிடம் ஏழு லட்ச ரூபாயும், அடையாறில் லீனா பெர்னேண்டஸ் என்பவரிடம் 2 கோடி ரூபாயும் வீட்டை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறைக்குச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேபோல தொடர்ச்சியாக சிவ அரவிந்தன் முதியவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. முதியவர் பவானி கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கறிஞர் சிவ அரவிந்தனை போலீசார் மீண்டும் கைது
செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அரவிந்தன் எத்தனை முதியவர்களிடம் , இது போல் மோசடி செய்துள்ளார் என தீவிர விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி சிறையில் அடைத்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம் மேற்கொள்கிறார். அங்கு மறைந்த பிரபல பின்னணி பாடகர் கலைமாமணி டி.எம். சௌந்தரராஜனின் முழு திருவுருவச் சிலையை திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் சென்ற கார், நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இந்த காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தஜகிஸ்தானில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் பிரபு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹவுரா திருச்சி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி ஹவுரா இடையே ஆகஸ்ட் 18,22,25 ம் தேதிக
சந்திராயன் -3 விண்கலத்தில் உள்ள லேண்டர் கேமரா மூலம் எடுக்கபப்ட்ட நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மதுரையில் பாடகர் டிஎம்.சௌந்தராஜனின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக -கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர் வரத்து விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக உயர்வு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி அனைத்து எம்.எல்.ஏக்களையும் அழைத்து சென்று பிரதமரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன் - புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி . திருநெல்வேலி, கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 2 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.. நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், நீட் ஆதரவாக தனது பதவிக்குரிய கண்ணியத்தை மறந்து மூன்றாந்தர அரசியல் செய்யும் ஆளுநர் ஆர்.யன்.ரவியையும் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம்
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் . செந்தில் பாலாஜியிடம் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இன்று முதல் விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் மோடி பேச வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று முதல் 2 நாட்கள் தொடர் விவாதம் தொடங்க உள்ளது. சின்ன சேலம் அருகே புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். "ஆம் ஆத்மியை சேர்ந்த ராகவ் சத்தா எம்.பி. அளித்த தீர்மானத்தில் எனது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது என ராஜ்ய சபா சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளேன். அதில் எனது பெயர் எப்படி சேர்க்கப்பட்டது என தெரியவில்லை. தீர்மானத்தில் நான் கையெழுத்து போடாமலேயே தனது பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால் எனது கைய