அக்னிபாத் படை?

காவிரி விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க அமைச்சர் துரைமுருமன் இன்று டெல்லி பயணம்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் மின்னனு வாக்கு இயந்திரங்கள்  ஆய்வு.

 நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் ,இது வழமையான மருத்துவ பரிசோதனைதான் என அம்மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை மெய்நிகர் காட்சி வழியே இன்று நடத்த உள்ளது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோருடன் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த பல தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் மாநாட்டில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இஸ்ரேலிய பாலஸ்தீனிய  ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. நூற்றுக்கணக்கான வீரர்களை கோட்டைக்குள் அனுப்பியது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்க உள்ளது.

விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் இன்று முதல் நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

இடுக்கி மாவட்டத்தில் இன்று அதி தீவிர கன மழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்’ கொடுத்துள்ளது. பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

-------------------------------------

கொடூர ரெயில் விபத்து காரணம்

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்துக்கான காரணம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2ஆம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.

 இந்த கோர விபத்தில் 291 பேர் உயிரிழந்ததுடன், 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

 விபத்து எப்படி நடந்தது, அதற்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின. சிக்னல் கொடுப்பதில் ஏற்பட்ட குறைபாடு, அதி வேகமாக ரயில்கள் இயக்கப்பட்டதே ரயில் விபத்துக்கு காரணம் என தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. .

இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்கு காரணம். 

ரயிலின் தடத்தை மாற்றக்கூடிய மின்னணு இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்கு காரணம் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்திருந்தார்.

இதனிடையே ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ அதிகாரிகள்  விசாரணையை நடத்தி வருகின்றனர். ஒடிசா ரயில் விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தவறான சிக்னலே ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

 தவறான சிக்னல் கொடுக்கப்பட்டதால் தான் மெயின் லைனில் செல்ல வேண்டிய கோரமண்டல் விரைவு ரயில் லூப் லைனில் சென்று சரக்கு ரயிலின் பின்னால் வேகமாக மோதியது என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ளது.

--------------------------------------வாக்னர்,அக்னிபாத் 

மோடி அரசிடம் ராணுவத்துக்கு பணம் இல்லை! ஆயிரக்கணக்கான மேஜர்-கேப்டன் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, ராணுவத்தில் மேஜர் மற்றும் கேப்டன் ரேங்க் அதிகாரிகளின் பற்றாக்குறை, ராணுவத்தில் மருத்துவப் படை மற்றும் ராணுவ பல் மருத்துவப் படைஉட்பட 8,129 அதிகாரிகள் பற்றாக்குறையாக உள்ளது. அதே நேரத்தில் கடற்படை மற்றும் விமானப்படையில் 1,653 மற்றும் 721 அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது.

மேலும் கடந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியே தேர்தல் களத்தில் ராணுவம் என்ற பெயரில் ஓட்டு கேட்டு வந்தார். 

ஆனால் மறுபுறம் நாட்டைப்பாதுகாக்கும் ராணுவ அதிகாரிகளின் பற்றாக்குறை குறித்த செய்திகள் வெளிவருகின்றன.

“இந்த நாடு எப்படி இயங்குகிறது என்ற செய்தியைப் பாருங்கள். சீனா எறும்புப் பாய் போல தலையில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்திய ராணுவத்தில் கேப்டன்கள் மற்றும் மேஜர்கள் பற்றாக்குறை உள்ளது.

Godi மீடியாவில் இராணுவத்தில் முதலீடு செய்யப்படுவதாக ஒத்து ஊதுகிறார்கள். நவீன மற்றும் சக்திவாய்ந்ததாக உருவாக்ககுகிறார்கள். 

ஆனால் இங்கே முன்னணியில் போரிடும் மேஜர்கள் மற்றும் கேப்டன்களுக்கு பற்றாக்குறை உள்ளது.

மேஜர் மற்றும் கேப்டனை மீண்டும் பணியில் அமர்த்தும் வரை, அரசாங்கம் ஒன்றுசெய்ய வேண்டும் என்று ரவீஷ் குமார் மேலும் எழுதியுள்ளார். 

எல்லையில் ஒரு டிவியை நிறுவி அதை எதிரி நாட்டின் முகமாக மாற்றி ஒலியை அதிகரிக்க வேண்டும். 

நம் கோடி ஊடக அறிவிப்பாளர்களின் கர்ஜனையைக் கேட்டு எதிரிகளின் படையும் சிதறத் தொடங்கும்." என்று கிண்டலாகசாடுகிறார் பத்திரிக்கையாளர் ரவீஷ்குமார்.

நாட்டின் ராணுவத்தில் இவ்வளவு பெரிய தட்டுப்பாடு ஏற்பட்ட பிறகு, மக்கள் பல கேள்விகளைக் கேட்கிறார்கள். பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களால் நாட்டின் பாதுகாப்பு ஏன் புறக்கணிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள், எப்படியிருந்தாலும்,

தேர்தல் மன்றங்கள் மூலம் நாட்டு மக்களை எவ்வாறு தவறாக வழி நடத்துகிறீர்கள், மேலும் PoK ஐ இந்தியா எளிதாகக் கைப்பற்றும் என்று கூறுகிறீர்கள், 

மேலும் சீன இராணுவத்தை வலுவாக எதிர்கொள்ள இந்திய இராணுவம் தயாராக உள்ளது என்று கூறுகிறீர்கள். 

இது நம்பத் தகுந்ததா ?

அதனால்தான் வாக்னர் கூலிப்படை போன்று அக்னிபாத் படையை உருவாக்கியுள்ளார் மோடி.

----------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?