வெற்றி நிச்சயம்.

 மத்திய பிரதேசத்தில் பழங்குடி இளைஞர் மீது பாஜக நிர்வாகி பர்வேஷ் குமார் என்பவர் சிறுநீர் கழித்த விவகாரத்தில் கண்டனம் வலுத்த நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம்  செய்து அரசாணை வெளியீடு.

  • சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.

  • சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 9 மணிக்கு கூட்டம் தொடங்க உள்ளது.

  • ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பெண்களுக்கான அழகு நிலையங்களை மூடுமாறு தாலிபான் ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

  • சென்னை கோயம்பேடு மார்கெட்டில் தக்காளி விலை ரூ. 150 வரை விற்கப்பட்டு வருகிறது. தக்காளி விலை உயர்வு தொடர்ந்து நீடித்து வருகிறது.ஆப்பிளை விட உயர்வு.

  • சுவர் இடிந்து விழுந்து ஐவர் பலி

*கோவை மாவட்டம் குனியமுத்தூரை அடுத்துள்ள சுகுணாபுரம் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி செயல்பட்டு வருகிறது. 
இந்த கல்லூரி வளாகத்தின் விடுதி அருகே காம்பவுண்ட் சுவர் ஒன்று உள்ளது.
இதன் அருகில் புதிய காம்பவுண்ட் சுவர் எழுப்ப திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. புதிய காம்பவுண்ட் சுவர் எழுப்ப பழைய கருங்கல் காம்பவுண்ட் சுவர் அருகில் குழி தோண்டப்பட்டுள்ளது.

இந்த பணியில் ஆந்திராவை சேர்ந்த 3 தொழிலாளர்களும், மேற்கு வங்கத்தை சேர்ந்த 2 தொழிலாளிகள் என மொத்தம் 5 பேர் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
 அப்போது, எதிர்பாராத விதமாக சுற்றுச்சுவர் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்தது.
 இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 
பரூன் கோஸ் என்பவர் படுகாயமடைந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டார். 
தற்போது அவரும் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
-----------------------------------------------


தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகிலுள்ள கீழக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் மணித்துரை. 
இவர், 2015-ம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வந்திருக்கிறார்.  

ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றி வந்த  நிலையில், மணித்துரை கடந்த 1-ம் தேதி பாதுகாப்புப்  பணியில் இருந்தபோது திடீரென துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு, தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட மணித்துரைக்கு கடந்த ஒன்றை ஆண்டுக்கு முன்புதான் உதயசுருதி என்பருடன் திருமணம் ஆகியிருந்தது. 
இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. 

மணித்துரை பணியிலிருந்தபோது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இது குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கின்றனர். 
விசாரணையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக அளவு பணத்தை இழந்த காரணத்தினால், மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. 

மணித்துரை தற்கொலை செய்துகொள்ளும் சில நிமிடங்களுக்கு முன்பு, கீழக்கரந்தை கிராமத்திலுள்ள தன்னுடைய தாய் கனகவேலம்மாளை செல்போனில் அழைத்துப் பேசியிருக்கிறார்.

அப்போது, ”ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துவிட்டேன். ஆன்லைனில் விளையாட பலரிடம் பணம் வாங்கியதில், கடனாளியாகிவிட்டேன்.  
ஊருக்கு வரவே விருப்பம் இல்லை, இனி நான் வாழ விரும்பவில்லை.அம்மா நீ என்னிடம் பேசிக் கொண்டேயிரு.இரண்டு முறை துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டால் நான் உங்களைவிட்டு,உலகைவிட்டுப் போய்விட்டேன் என்று தெரிந்து கொள்” எனப் பேசிக்கொண்டே இருக்கும்போது, துப்பாக்கியால் சுடும் சத்தம் இரண்டு முறை கேட்டிருக்கிறது.

அதற்குப் பிறகு மணித்துரை பேசவில்லை என்றதும், அவர் தாயும் அதிர்ச்சியில் உறைந்து கதறி அழுதிருக்கிறார்.

பின்னர், மணித்துரை தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட தகவலை ராணுவ அதிகாரிகள் மணித்துரையின் குடும்பத்தினருக்குக் கூறியிருக்கின்றனர். 

இந்த நிலையில்,  தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர் மணித்துரையின்  உடல், இன்று அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு எரியூட்டப்பட்டது.

மணித்துரையின் தந்தை வேலுப்பிள்ளை கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது மணித்துரையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தக் குடும்பத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
உயிரிழந்த மணித்துரை, விடுமுறைக்காக கடந்த 1-ம் தேதி  சொந்த ஊருக்கு வரவிருந்த நிலையில், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
-------------------------------------------

வெற்றி நிச்சயம்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, தெலுங்கானா கட்சியின் தலைவராக எம்.பி.யும், மத்திய அமைச்சருமான ஜி.கிஷன் ரெட்டியை நியமித்தார். 

தெலுங்கானாவில் பாஜகவின் தேர்தல் நிர்வாகக் குழுவின் தலைவராக எடெலா ராஜேந்தரை கட்சி நியமித்தார்.

பஞ்சாப் மற்றும் ஜார்கண்டில் முறையே சுனில் ஜாக்கரும், ஜார்கண்டில் பாபுலால் மராண்டியும் பாஜக தலைவர்களா நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

மேலும், டி.புரந்தேஸ்வரி ஆந்திராவின் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். 
கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, பிஜேபி தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்தில் இந்த நியமனங்கள்ச செய்யப்பட்டுள்ளன.

மேலும் பல ஆயிரங்கோடிகள் எதிர்கட்சிகளை ,ஒற்றுமையை சீர்கெடுக்க மாநில பா.ஜ.க,தலை.மைகளுக்கு வழங்கப்படுள்ளதாகவும் தெரிகிறது.இதற்காகவே கட்சித்தலைவர்கள் ஒவ்வொரு மாநிலமாக இந்தியா முழுவதும் சென்று பணப்பட்டுவாடாவை செய்கிறார்கள் எனவும் தெரிபிறது.பா.ஜ.க வுக்கு உதவ தேர்தல் ஆணையம்,வருமானவரித்துறை,,அமுலாக்கத்துறை போன்றவைகளும் களமிறக்கப் பட்டுள்ளன.

-----------------------------------------------
எல்லாம் எங்களுக்கே

தெலங்கானாவில் 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து எம்பிபிஎஸ் சீட்டுகளையும் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஆண்டுக்கு 1,820 எம்பிபிஎஸ் சீட்டுகள் தெலங்கானா மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, தெலங்கானா மாநில மருத்துவ சேர்க்கை விதிமுறையின்படி, மருத்துவக் கல்லூரிகளில் உள்ளூர் இடஒதுக்கீட்டில் 85 சதவிகித சீட்டுகள் தெலுங்கானா மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மருத்துவ சேர்க்கை விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு உள்ளூர் இடஒதுக்கீட்டில் 100 சதவிகித எம்பிபிஎஸ் சீட்டுகளையும் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கி செவ்வாய்க்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முன்னதாக தொடங்கப்பட்ட 20 மருத்துவக் கல்லூரிகளில் 2,850 எம்பிபிஎஸ் சீட்டுகள் உள்ளன. இதில், 1,895 சீட்டுகள் உள்ளூர் இடஒதுக்கீட்டின் கீழ் இருக்கும் நிலையில், அதில் 15 சதவிகித சீட்டுகளை  ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாணவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பொதுவாக வழங்கப்பட்டு வந்தன. 

இதில், பெரும்பாலான சீட்டுகள் தெலங்கானா மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இந்நிலையில், 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு தெலங்கானாவில் தொடங்கப்பட்ட 36 புதிய மருத்துவ கல்லூரிகளில் உள்ளூர் இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள 100 சதவிகித எம்பிபிஎஸ் சீட்டுகளையும் தெலங்கானா மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டுக்கு பிறகு தெலங்கானா மாநிலத்தில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5,490 எம்பிபிஎஸ் சீட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீட் என்ற பெயரில் ஒன்றிய அரசு எல்லா மருத்துவ இடங்களையும் பறித்து வருகிறது.இந்நிலையில் தெலுங்கானா அரசின் ஆணை எப்படி செல்லுபடியாகும்.ஒருவேளை  அவர்கள் நீட் கையெழுத்திடவில்லையோ?
--------------------------------------------
பாம்பு கடித்தால்.

 நல்ல பாம்பு, விஷ பாம்பு என்ற எல்லா வகையான பாம்புகளும் கிராமம் மற்றும் நகர் பகுதிகளில் இருப்பதினால் பாம்புகள் கடித்து உயிர் இழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகின்றது.

இதற்கு எல்லாம் காரணம் பாம்புகள் கடித்தால் என்ன மாதிரியான முதலுதவி சிகிச்சை செய்ய வேண்டும் என்ன மாதிரியான உதவி சிகிச்சை செய்யக்கூடாது என்பதை பற்றி மக்களுக்கு போதுமான விழிப்புணர்வை இல்லாததே காரணம் என்கிறார், பாம்பு பிடிப்பதில் வல்லவரான மதுரையைச் சேர்ந்த ஸ்நேக் சகா.

பொதுவாகவே பாம்புகளில் நல்ல பாம்பு, விஷப்பாம்பு என்று இரு வகைகள் இருக்கின்றன. அதில் விஷப்பாம்பு கடித்தால் கடித்த இடம் சிவந்தும், சற்று வீக்கமாகவும் இருக்கும். இப்படி இருந்தால் மட்டும் விஷப்பாம்பு கிடைத்துள்ளது என்பது முதல் அறிகுறி.

பிறகு பாம்பு கடித்தால் முதலுதவி சிகிச்சை என்று தவறாக சிகிச்சை செய்கின்றோம். அது என்னவென்றால், கடித்த இடத்தில் கயிறை வைத்து கட்டுவதோ அல்லது வாயை வைத்து ரத்தத்தை உறிஞ்சி எடுப்பதோ அல்லது பிளேடால் அந்த இடத்தை கிழித்து ரத்தத்தை பிதுக்குவது அல்லது ஏதேனும் மருந்துகளை வைப்பது தான்.

இதன் மூலமாக அந்த உறுப்பு செயலிழந்தோ அல்லது ரத்தம் வீணாக வெளியேறுமே தவிர அதிலிருந்து விஷம் வெளியேறாது ஆகையால் இந்த தவறான முதல் உதவி சிகிச்சையை பாம்பு கடித்த நபருக்கு எப்பொழுதுமே செய்யக்கூடாது.

முதலுதவி சிகிச்சை என்னவென்றால், பாம்பு கடித்தால், கடித்த அந்த நபரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி விட வேண்டும் ஏனென்றால் மீண்டும் பாம்பு அவரை நெருங்கவோ கடித்து விடவோ கூடாது. 

கடித்த அந்தப் பாம்பை தேடிச் சென்று நேரத்தை வீணாக்க கூடாது உடனடியாக பாம்பு கடித்த நபருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.

பாம்பு கடித்த நபருக்கு விஷப்பாம்பு கடித்திருந்தால் அவரிடம் நாம் உங்களுக்கு விஷப்பாம்பு கடிக்கவில்லை என்ற மன தைரியத்தையும், பயத்தையும் போக்கக்கூடிய வகையில் பேச வேண்டும். ஏனென்றால் அந்த நபருக்கு உயிர் பயம் வராத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். 

இதுபோக பாம்பு கடித்த நபரை கைதாங்களாக தூக்கிக்கொண்டு தான் செல்ல வேண்டும். கடிப்பட்ட இடத்தில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் சீராக இருக்கும் படி அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல வேண்டும்.

மேலும் பாம்பு கடித்த உடனே அவருக்கு அதிகமாக தண்ணீர் கொடுக்க வேண்டும். மேலும் அவர் அணிந்திருக்கும் மோதிரம் வளையல் போன்றவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

 ஏனென்றால் பாம்பு கடித்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டால் அந்தப் பொருட்கள் மூலமாக உறுப்புகளை எடுக்கும் அளவிற்கு கூட அபாயங்கள் நேரிடலாம். இறுதியாக அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் குறிப்பாக பாம்பு கடித்த ஒரு மணி நேரத்தில் அவரை அழைத்துச் செல்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று .

இந்த மாதிரியான சிகிச்சை வழிமுறைகளை பாம்பு கடித்த நபருக்கு நாம் பின்பற்றினால் விஷப் பாம்பே கடித்திருந்தாலும் அவரை முழுமையாக குணப்படுத்த முடியும்.

குறிப்பாக இந்தியாவில் எத்தனையோ பேர் பாம்பு கடித்து உயிர் இழக்கின்றார்கள். பாம்பு கடியை எவ்வாறு கண்டறிவது, அதற்கு எவ்வாறு முதல் உதவி சிகிச்சை செய்ய வேண்டும், என்ன சிகிச்சை செய்யக்கூடாது என்பதை அனைவரும் தெளிவாக தெரிந்து கொண்டிருந்தால் பாம்புகளினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிகவும் குறையும்.என்பது ஸ்நேக் சகாவின் கருத்தாக உள்ளது.

-------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?