நான் அவனில்லை!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவரின் முகத்தில் வேறு நபர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது.

பிரவேஷ் சுக்லாவின் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரது வீடு விதிகளை மீறி கட்டப்படுள்ளதாக கூறி உள்ளூர் நிர்வாகத்தால் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது.
பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லாவின் குடும்பத்திற்கு உதவ அகில இந்திய பிராமின் சமாஜ் என்ற அமைப்பு நிதி திரட்டியதுடன், வீடு இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அறிவித்தது.
இதற்கிடையே சிறுநீர் கழிக்கப்பட்டதாக கூறப்படும் ஷமத் ராவத்தை நேரில் அழைத்த அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் அவரது கால்களை கழுவியதுடன் அவருடன் சேர்ந்து மரங்களையும் நட்டார். இத்துடன் நிறுத்தாமல் தஷ்மத் ராவத் தனது நண்பர் என்றும் பேட்டி அளித்து இருந்தார்.
இதற்கு இடையே இச்சம்பவம் குறித்து பேசிய தஷ்மத் ராவத், சிறுநீர் கழித்ததாக கூறப்படும் நபர் நான் இல்லை என்று கூறியுள்ளார்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி பிரவேஷ் சுக்லாவை நான் பார்த்தது கூட கிடையாது. எனது உறவினர் ஒருவர் மோசடியாக பிரமான பத்திரத்தை என்னை கையெழுத்திட வைத்துவிட்டார் என்று கூறி உள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட சுக்லாவை விடுதலை செய்ய வேண்டும் என தாவது வேண்டுகோள் விடுத்த நிலையில் சிறையில் உள்ள சுக்லாவை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக ஜோடிக்கப்பட்ட நாடகம் என்று கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.