மம்தாவின் டாட்டா,,,,!

நந்திகிராம்,சிங்கூரில் தொழில் துவக்க டாடாவை மே..வங்கஅம்மா மம்தா அழைத்துள்ளார்.இரண்டாண்டுகளுக்கு முன்னர்.இடதுசாரிகள் ஆட்சியின் போது டாடாவை விவசாயிகள்,மாவோயிஸ்டுகளை தூண்டிவிட்டு போராடி விரட்டிய அதே மம்தா ,தனது ஆட்சி ஏற்பட்டவுடனே டாடா வை அழைக்கிறார்.இப்போது மக்கள் நலன்,விவசாயிகள் நலன் என்னவானது.? கருணாநிதி கொண்டுவந்த சமச்சீர்கல்வி சரியில்லை,நான் தனியே குழு அமைத்து சமச்சீரைக் கொண்டுவருகிறேன் எனும் ஜெ,,,,,யும்,மம்தாவும் எப்படித்தான் ஒரே அலைவரிசையில் யோசிக்கிறார்களோ? தான் உடைத்தால் மண்சட்டி கதைதாங்க,,,==========================================================================  தயாநிதிக்கும்  ஆப்பா,,,,
ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் தொலைதொடர்பு நிறுவனத்திற்கு விற்றவிவகாரத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ  வழக்கு பதிவு செய்ய உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளது.
 ஏர்செல் நிறுவனத்தை வெளிநாட்டு வாழ் இந்தியரான சிவசங்கரன் என்பவர் நடத்தி வந்தார்.
இந்த ஏர்செல் நிறுவனத்திற்கு அலைக்கற்றை உரிமம் வழங்க அப்போதைய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் மறுப்பு தெரிவித்ததாக பரவலான கருத்து இருந்து வருகின்றது.
இதனால் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற தொலைதொடர்பு நிறுவனத்திற்கு விற்க சிவசங்கரன் முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 2006-ம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் விலைக்கு வாங்கியது.



இலங்கை தமிழர் வம்சாவழியைச் சேர்ந்த, மலேசிய தொழிலதிபரான டி.அனந்தகிருஷ்ணன் என்பவர் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸை நிர்வகித்து வருகிறார்.
கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை உள்ள 6 ஆண்டுகளில் தொலைதொடர்புத் துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இதன் அடிப்படையில் அடுத்து முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) ஒன்றை வரும் ஜூலை மாதம் முன்பு, அதாவது உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலம் முடிந்து மீண்டும் திறந்த பிறகு தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த முதல் தகவல் அறிக்கையில் தான் அப்போதைய தொலைதொடர்புத் துறை அமைச்சரும் இப்போதைய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறனின் பெயரை சேர்க்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முதல் தகவல் அறிக்கையில் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் கம்பெனியின் பெயரையும் சேர்க்க சிபிஐ திட்டமிட்டுள்ளது என்றும் தெரிகின்றது.
மொத்தத்தில் கலைஞர் குடும்பத்தை பழிவாங்க ஜெயலலிதாவைவிட காங்கிரசு-சோனியா தான் தீவிரமாக இருப்பதாகத் தெரிகிறது. அடுத்து கெடுப்பது இதுதானா,,?
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?