சொந்த காசில் சூனியம் வச்சக்கதை,,,,?

 “ஆவூனா எதுக்கு காசு எடுக்கு

றீங்க, நடிகர் ஜீவாவோடு பேசுனேன் னு சொல்லி நேத்து 15 ரூபா எடுத்திருக் கீங்க. நான் எதுக்கு அவரு கூட பேச ணும், என்ன என் குடும்பத்தில குழப் பம் பண்றீங்களா”...

“இப்படித்தான் போன மாசம் முழுக்க வேல்டு கப் மெசேசுனு சொல்லி தினமும் மூன்றுரூபா, மூன்றுரூபா எடுத்தீங்க. உங்க மனசுல என்ன நெனச்சுட்டு இருக்கீங்க”

இது கோவை அவினாசி சாலை லட்சுமி மில்லில் உள்ள தனியார் தொலைபேசி நிறுவன மையத்தில் (வாடிக்கையாளர் மையம்) காரசார

மாக வெடித்த ஒரு பெண்மணியின் குரல். அநேகமாய் பல தனியார் தொலைபேசி நிறுவன மையத்தில் வாடிக்கையாளர்களின் மேற்கண்ட ஆவேச குரலை கேட்க முடியும்.

உலகளவில் சீனாவிற்கு அடுத்த

படியாக அதிக செல்போன் சேவை யை பயன்படுத்தும் நாடு இந்

தியா தான். இத்தகைய மிகப்பெரும் சந்தையை கொண்டுள்ள இந்தியா

வில் தனியார் தொலைப்பேசி நிறுவ

னங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சேவை(?) செய்து கொண்

டிருக்கிறது. இன்னும் சில ஆண் டுகளில் அதிக தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடாக இந்தியா இருக்குமென்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்நிலையில் தொ லைக்காட்சியிலும்,தெருக்களிலும்வாடிக்கை

யாளர்களை தங்கள் பக்கம் இழுத்து வரும் போட்டியில் பல தனியார் தொலைப்பேசி நிறுவனங்கள் பல விதங்களில் விளம்பரங்கள் செய்து புதுப்புது வாடிக்கையாளரை கவர்ந்து வருகிறது.

தனியார் துறையின் மீது ஒரு மோகத்தை முதலாளித்துவ ஊடகங்

கள் திட்டமிட்டு பரப்பியதன் விளை

வாக அரசு துறையை விட தனியார் துறைகள்தான் சிறந்தது என்ற சமுக பொதுபுத்தியை மனித மூளைக்குள் உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக தனியார் தொலைப்பேசி நிறுவனம் மூலம் இணைப்பு பெற்றவர்கள் “ஏன்டா இத வாங்கி தொலைச்

சோம்னு இருக்கு” என மனம்நொந்து புலம்பிடும் நிலை தற்பொழுது நிலவு

கிறது. இந்த புலம்பலுக்கு காரணம் வாடிக்கையாளருக்கு தெரியாம

லேயே அவர்களின் பணத்தை சுரண்டு

வது என்பது தனியார் தொலைப்பேசி நிறுவனங்களின் வாடிக்கையாகி

விட்டது என்பதே ஆகும்.

இத்தனியார் தொலைப்பேசி நிறு

வனங்களின் இத்தகைய நவீன திருட்

டின் காரணமாக அதிகளவில் பாதிக்

கப்படுவது “ப்ரிபெய்டு” வாடிக்கை

யாளர்தான். முதல் நாள் வாடிக்கை

யாளர் பேசுவதற்காக பண ஏற்றுதல் செய்திருப்பார், மறுநாள் ஏற்றப்

பட்ட தொகையில் ( வரி உட்பட பிடித்தம் போக) பாதிதானிருக்கும் . பல நேரங்களில் பூஜ்ஜியமாக கூட பாக்கி தொகையை காண்பிக்கும்.

வாடிக்கையாளர் கொதித்துப் போய் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டால் 99 சதவீதம் நிச்சயமாய் இணைப்பு கிடைக்காது (அப்புறம் தெரியுமில்லே நீங்க எதுக்கு கூப்பிடு

றீங்கேனு). அப்படியே தொடர்பு கிடைத்தாலும் “ சார்! நீங்க நடிகை

யோட பேச டயல் பண்ணி இருக்கி

றீங்க, அதனாலதான் சார் அதற்குண்

டான கட்டணத்தை சார்ஜ் பண்ணி

ருக்கோம் சார்! வேற ஏதாவது தகவல் தெருஞ்சுக்கனுமா சார்.” என வாய் கூசாமல் பொய் பேச அடிமைகளாக நவீனயுகத்தில் படித்த நபர்களை பணி

யில் அமர்த்தியுள்ளார்கள்.

அவரைப் பிடித்து நாம் வாங்கு ! வாங்கென வாங்கினாலும் பொறு

மையாக பதிலளிக்க வேண்டும் என்ற கட்டளையின் அடிப்படையில் கூனிக்குறுகி பதிலளிப்பார். (வாடிக்

கையாளர் கோபத்தில் எவ்வளவு மோசமாக பேசினாலும் பொறுமை கடைபிடிக்க வேண்டும். தவறும்பட்

சத்தில் அந்த ஊழியர் உடனே பணி நீக்கம் செய்யப்படுவார்.அவருக்கு வரு

மானமும் கிடையாது என்ற நவீன விஞ்ஞான உழைப்பு சுரண்டல்)

இத்தகைய “ப்ரீபெய்டு” இணைப்பில் மட்டும் ஏன் இவ்வளவு சுரண்டல் என்றால் வாடிக்கையாளர் யாரோடு பேசினார். எவ்வளவு நேரம் பேசினார் என்ற அடிப்படையான எந்த தகவல்களையும், ஆவணங்க

ளையும் இந்த இணைப்பில் பெற முடியாது.மேலும் தனியார் நிறு

வனங்கள் அவர்களின் தொழில் நுட்ப அறிவை பயன்படுத்தி அவர்

களே ஏதேனும் ஒரு வெளிநாட்டு தொலைப்பேசி எண்ணிற்கு அழைப்பு விடுத்தது போல் டயல் செய்து திருடும் முறையும் உண்டு . நாம் எந்த அழைப்பும் செய்திருக்க மாட்டோம். விடிந்து எழுந்து பார்த்

தால் நமது செல்பேசியிலிருந்து ஏதே

னும் வெளிநாடு எண்ணிற்கு அழைப்பு செய்யப்பட்டிருக்கும்
. நான் அத்தகைய அழைப்பை செய்ய

வில்லை என வாடிக்கையாளர் நிரு

பிக்க முடியாது. அதற்காக வழக்கும் தொடுக்க முடியாது. காரணம் நமக்கு எந்த ஆவணமும் கையில் கிடைக்

காது. அப்படியே நீதிமன்றம் உத்தர

வின் மூலம் ஆவணங்களை அத்

தொலைப்பேசி நிறுவனங்களிடமி

ருந்து வர வழைத்து பெற்றாலும், அதில் வெளிநாட்டு அழைப்பு செய்யப்பட்டதாக பதிவாகி இருக்

கும். இப்படியாக நவீன முறையில் சுரண்டும் இத்திருட்டு கும்பல்கள் ஒரேயடியாக பத்து ரூபாய், இருபது ரூபாய் என திருடுவதில்லை.அத்த

கைய நடவடிக்கையால் வாடிக்கை

யாளருக்கு சந்தேகம் ஏற்படுத்தும் என ஒரு ரூபாய், ஒரு ரூபாயாக கொஞ்

சம் கொஞ்சமாக இருக்கும் மீதத் தொகையை கழித்து விடுவார்கள். இப்

படியாக சுரண்டி எடுக்கப்பட்ட தொகையின் செயல்பாட்டால் பொறுமையின் உச்சம் தீர்ந்து வாடிக்

கையாளர் இணைப்பில் தொடர்பு கொண்டு கண்ட படி பேசினால் சார்! மறு படியும் இந்த பிராப்பளம் வராது சார். நாங்க எடுத்த பணத்தை திருப்பி கொடுத்திடுறோம் சார்! உங்க

ளுக்கு கொடுத்த சிரமத்திற்கு மன்னிக்

கனும் சார்! என ஒரு வருத்தம் தெரி

விக்க ஓராயிரம் முறை சார் போட்டு வாடிக்கையாளரை குளிரச் செய்

திடுவார். இரண்டு மூன்று நாட்கள் சரி

யாகயிருக்கும் அத்தனியார் நிறுவனம் பின்னர் மீண்டும் தனது பழைய ஜக

ஜலா கில்லாடி வேலையை ஆரம்

பித்து விடும்.

இத்தகைய அவல நிலையில் இருந்து வெளியேற தற்போது மத்திய அரசு அதே எண்ணை வேறு பிடித்த தொலைப்பேசி நிறுவனத்திற்கு மாற்

றிக் கொள்ள வழி வகை செய்துள்

ளது. இந்த சேவையை வேண்டு

மென கொண்டு வர நிர்ப்பந் தத்தை ஏற்படுத்தியதே இத்தகைய தனியார் தொலைப்பேசி நிறுவனங்கள் தான். இவர்களின் திட்டமே பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லி

லிருந்து பெருமளவு வாடிக்கையா

ளர்கள் தங்களை தேடி வருவார்கள் என்பதுதான். இதற்காக விளம்பரங்

கள் செய்தல் போன்ற ஏற்பாடுகளுக்

காக பல கோடிக்கணக்கான தொகை

களை செலவு செய்தனர். ஆனால் அது சொந்த காசுல சூன்யம் வச்ச கதையா தனியார் நிறுவன வாடிக்கை

யாளர் பலரும் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் -லை நோக்கி படை

யெடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதை சற்றும் எதிர்பார்த்திராத தனி

யார் நிறுவனங்கள் வாடிக்கையாள

ரைத் தக்க வைத்துக் கொள்ள அல்

லோலப்பட்டு வருகிறது.அத்தனியார் நிறுவனத்திலிருந்து வெளியேற நினைக்கும் வாடிக்கையாளருக்கு பல்

வேறு வகைகளில் சிறப்பு சலுகை

களை வாரி வழங்கிவருகிறது.மேலும் தங்கள் நிறுவனத்திலிருந்து மாற விருப்பமனு அளித்துள்ள வாடிக்

கையாளர்களை பல முறை அழைத்து உங்களின் குறைபாட்டை நீக்குகிறோம். எங்களது நிறுவனத்தி

லிருந்து இணைப்பை துண்டித்துக் கொள்ளாதீர்கள் என மன்றாடுகிறார் கள். இத்தகைய மயக்கும் பேச்சிற்கு பிறகும் இணைப்பை மாற்ற முயலும் வாடிக்கையாளர்களின் இணைப்பை துண்டிக்காமல் இழுத்தடிக்கும் பணியை தனியார் நிறுவனங்கள் மேற்

கொள்கின்றன. இவ்வாறு இணைப் பை மாற்ற வேண்டுகோள் அளித்த தொலைப்பேசி எண்ணிலிருந்து வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகினால் தொடர்பு கிடைப்பதே யில்லை. வேறு ஒரு தொலைப்பேசி எண்ணிலிருந்து அழைத்தால் இணைப்பை இணைக்கும் இந்நிறு வன சேவை மைய ஊழியர்கள் தொலைப்பேசி என்னை சொன்ன வுடன் துண்டித்து விடுகிறார் கள்.(ஏற்கனவே அந்த எண் குறித்து கணினியில் பதிவு செய்து வைத்துக் கொள்ளப்படுகிறது)

இத்திட்டத்தால் வாடிக்கையா

ளர் பயனடைய வேண்டும் என எதற்

காக மத்திய அரசு கொண்டு வந்ததோ அந்த திட்டம் மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை.இத்தகைய வாடிக்கையாளர்களை சுரண்டும் தனியார் நிறுவனங்களையும் ஒரு போதும் மத்திய அரசு கண்டித்தது கிடையாது. இவ்வாறு அரசுகளால் அறிவிக்கப்படுகிற தங்களது திட்டங்

களை பற்றி ஆய்வு செய்து பரிசீலிப்

பது கிடையாது என்பதற்கு இந்த திட்

டமும் ஓர் உதாரணம்.

சாதாரண கூலி வேலைக்கு செல்

லும் தொழிலாளிகளுக்கும், பாமரமக்

களுக்கும் இச் சுரண்டல் கும்பலின் இத்தகைய திருட்டைப் பற்றி அறிந்

தும் யாரிடம் போய் புகார் செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி வருகி

றார்கள். தனது உழைப்பின் ஊதி

யத்தை இத்தகைய தனியார் தொலை

பேசி நிறுவனங்களிடம் இழந்து கொண்டிருக்கிறார்கள். திருடும் தொகையானது தினசரி பல கோடி ரூபாய் என்பது மறுக்கமுடியாத, மறைக்க முடியாத உண்மை. மக்களின் அறியாமையை பயன்படுத்தி நடை

பெறும் கொள்ளையைத் தடுத்து நிறுத்திட சமூக அக்கறை கொண்டுள்ளோர் முன்னின்று குரல் கொடுத்திட வேண்

டும். இத்தகைய தனியார் நிறுவனங்

களின் மாய முகத்தை கிழித்திட வேண்டும்.
         நன்றி:தீக்கதிர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?