இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவசியம் என்ன?

படம்
  'ஒன்றிய' நிதிநிலை அறிக்கை?   தமிழ்நாட்டிற்கான திட்டங்களுக்கு நிதி வழங்காமல் வஞ்சிப்பதும், ஒன்றிய நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிப்பதும், ஒன்றிய பா.ஜ.க அரசின் வழக்கமான நடவடிக்கையாக உள்ளது. இந்தியாவின் முன்னோடி மாநிலமாக இருந்து, பல துறைகளில் பல்லாயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வரும் வேலையில், தமிழ்நாட்டை தகர்க்கும் வகையில் பெயர் குறிப்பிடப்படாத ஒன்றிய நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதனை கண்டிக்கும் வகையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X வலைதளப் பக்கத்தில், “ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து தகவல் சேர்க்க மனம் வரவில்லை? நெடுஞ்சாலைகள் - இரயில்வே திட்டங்கள் - கோவை, மதுரை மெட்ரோ இரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது? பொருளாதார ஆய்வறிக்கை, உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை அறிக்கை, நிதி ஆயோக் அறிக்கை என ஒன்றிய அரசின் அனைத்...

என்னச் செய்யப் போகிறாரோ?

படம்
  ஜனவரி 31ஆம் தேதி அன்று ஆதவ் அதிமுகவில் இணைய உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அவர் தவெகவில் இணையச் சென்றிருக்கிறார்.   தவெகவில் அவருக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் பணிகள் பார்க்க இருக்கிறார்.   இதற்காக அவருக்கு 240 கோடி ரூபாய் பேசப்பட்டிருக்கிறது.  பிரசாந்த் கிஷோரை அதிமுகவுக்குள் கொண்டு வந்ததே லாட்டரி அதிபர் மார்ட்டின் தான் என்று கூறப்படுகிறது.   அப்படி இருக்கும்போது ஆதவ் அர்ஜூனா ஏன் அதிமுகவில் இணையாமல் தவெகவில் இணைகிறார்.  பழனிசாமியுடனான பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. விசிகவில் கட்சி தலைமையை மீறி பல விசயங்களில் மூக்கை நுழைத்தது மாதிரியே அதிமுகவில் பேச்சுவார்த்தையிலேயே தலைமைக்கு அதிருப்தி தரும்படியாக வார்த்தைகள் விட்டிருக்கிறார் ஆதவ்.   இதில் எரிச்சல் அடைந்த எடப்பாடி,  இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்று முடிவெடுத்து, நிர்வாகிகளிடம் சத்தம் போட, ஆதவ் அதிமுகவில் இணையும் பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிவுக்கு ...

சிதைந்து வரும் பிம்பம்

படம்
  தமிழ்நாட்டில் கோனோ கார்பஸ் மரங்களை இனி வளர்க்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் சார்பில் கடந்த வாரம் உத்தரவிடப்பட்டது. பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களைக் கருத்தில்கொண்டு, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக, அந்த உத்தரவில் துறையின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் அந்நியத் தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு கொள்கையின்படியும், தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் பரிந்துரையின்படியும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோனோ கார்பஸ் என்பது அமெரிக்காவில் கடற்கரைப் பகுதிகளில் குறிப்பாக சதுப்பு நிலப்பகுதிகளில் வளரும் ஒரு வித அலங்கார மரமாகும். மிக வேகமாகவும், அடர்த்தியாகவும் வளரும் இந்த மரம், இந்த காரணங்களுக்காகவே பல்வேறு நாடுகளிலும் வளர்க்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இந்த மரங்கள் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகங்களால் வளர்க்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் நகரை அழகுபடுத்தும் முயற்சியாக, பூங்காக்கள் மற்றும் சாலை...