இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

களவுபோனக் கழிப்பறை?

படம்
ஏ.ஐ. பெண்ணிடம் ஏமாந்தவர்.   தாங்கள் விரும்பும் அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் சேவைகளுக்குச் செலவிட போதுமான வருமானம் இல்லாமல் 100 கோடி தனிநபர்கள் தவிப்பதாக Blume Ventures நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.அடிப்படைத் தேவைகளுக்கு அப்பாற்பட்டதாக பார்க்கப்படும் OTT தள பயன்பாடு, கேமிங், கல்வி நுட்பவியல், ஆடம்பர வீடுகள், பிரீமியம் போன்கள் உள்ளிட்டவைகளை வாங்கும் வர்க்கம் இந்தியாவில் வெறும் 10% பேர் மட்டுமே எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதி கொடுத்து எடப்பாடி ஏமாற்றியதாக திண்டுக்கல் சீனிவாசன், தூத்துக்குடியில் பரபரப்பு பேச்சு. ஏ.ஐ,(செயற்கை)பெண்ணிடம் ஏமாந்தவர் . செய்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஆக்கப்பூர்வமான பல வேலைகளுக்கு உதவினாலும், அதனால் உபத்திரவமும் உண்டு என்பதற்கு, சீனாவில் நடந்துள்ள ஒரு சம்பவம் எடுத்துக்காட்டாகியுள்ளது. ஆம், சீன இளைஞர் ஒருவர், ஏஐ காதலியிடம் லட்சங்களை இழந்துள்ளார். ஆம், ஷாங்காயை சேர்ந்த இளைஞர் ஒருவர், ஜியாஓ என்ற பெண்ணிடம் சமூக வலைதளம் மூலமாக பழகி, அவளிடம் மனதை பறிகொடுத்துள்ளார். ஆனால், அது ஒரு மோசடி கும்பலால் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பெண் என்பது அவரு...

தீ பரவுகிறது!

படம்
  இந்தியாவில் தற்போது மொழி பிரச்சனை உச்சத்தில் உள்ளது.  தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. முக்கியமாக ஆளும் திமுக இதை கடுமையாக எதிர்த்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டங்களில் கையெழுத்து போடாததால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கடிதம் எழுதி இருந்தார். இருந்தாலும் தமிழக அரசு தரப்பில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று பதில் கடிதம் அமைச்சர் அன்பில் மகேஷ் மூலமாக அனுப்பப்பட்டது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் இதை கடுமையாக எதிர்த்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு அரசு பற்ற வைத்த இந்த மொழிப்போர் தீ சர்வதேச அளவில் பரவ தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை எதிர்க்கப்படுவதை கன்னட மக்கள் பலரும் வரவேற்று உள்ளனர். கர்நாடகாவில் தேசிய கல்விக்கொள்கை ஏற்கனவே ஏற்கப்பட்டு விட்ட நிலையில்.. கன்னட மக்கள் இதை டிரெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் மக்கள் மீது எனக்கு எப்போதும் பொறாமை.. நம்ம கன்னடிக மக்களுக்கு...

சர்க்கரை அதிகமா?

படம்
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது என்றால், அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால், சிறுநீரகம் சர்க்கரையை வெளியேற்ற உதவும். ஸ்வீட் சாப்பிட்ட பிறகு, அது பற்களின் ஈறுகளில் ஒட்டிக் கொள்கிறது. இது பல் அரிப்பு ஏற்பட்டு, நாளடைவில் பல் விழ செய்கிறது. அதனால், ஸ்வீட் சாப்பிட்டபிறகு, பல் துலக்குங்கள். இரவில் பல் துலக்குங்கள். இதனால், குளுகோஸ் அளவு குறைக்க முடியும். ஸ்வீட் சாப்பிட்ட பிறகு, புரதம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டியது முக்கியம். பருப்பு வகைகள், சுண்டல் வகைகள் எடுத்துக்கொள்ளலாம். சாப்பிட்ட உடன் தூங்கக்கூடாது. அப்படி தூங்கினால், சாப்பிட்ட உணவில் இருக்கும் குளுகோஸ் கொழுப்புகளாக மாறி வயிற்றின் அடிப்பகுதியிலும், கல்லீரலிலும் படிந்துவிடுகிறது. அதனால், ஸ்வீட் சாப்பிட்ட பிறகு, 20 நிமிடம் நடைபயிற்சி செய்யுங்கள்.  சுவீட் சாப்பிட்ட பிறகு, நார்ச்சத்து, நீர்ச்சத்து மிகுந்த பழங்கள், காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். வெள்ளரிக்காய், டிராகன் பழம், தயிர், எலுமிச்சை சாறு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். உடலுக்கு பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் சத்துகள் கிடைப்பதற்கு, பாதம், ...

தொகுதி. வரையறை அச்சம்.

படம்
  தொகுதி மறுவரையறை தொடர்பாக விவாதிக்க மார்ச் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார், தொகுதி மறுவரையறை தென் மாநிலங்கள் மீது கத்தி போல் தொங்குவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். குடும்பக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் தமிழகத்திற்கு நாடாளுமன்ற இடங்கள் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறிய இரண்டு நாட்களுக்குப் பிறகு ஸ்டாலினின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொகுதிகளின் எல்லைகளை வரையறுத்து அதன் எண்ணிக்கையை தீர்மானிக்கும் மறுவரையறை, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைக்குப் பிறகு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த நடவடிக்கை மிகவும் தாமதமானது.  முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட எல்லை நிர்ணய நாட்காட்டியின்படி, தமிழகம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் அதே ஆண்டில் 2026-க்குள் இது நடக்கும். நாடு இப்போது அடுத்த எல்லை நிர்ணயம் பற்றி பேசுகிறது. மக்கள்தொகை குறைவாக இருக்கும் இடங்களில் லோக்சபா இடங்கள் குறையும், மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இடங்களில் உயரும்... தென் மாநிலங்கள் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னே...

காலிஸதான்-பாகிஸ்தான்.

படம்
  1984 அக்டோபர் 31 அன்று பிரதமர் இந்திராகாந்தி தனது பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து போனார்.  இந்தியா கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தது. ஒரு நாட்டின் பிரதமர் அவரைப் பாதுகாக்க வேண்டிய நம்பிக்கைக்குரிய நபர்களாலேயே, அவரது வீட்டு வளாகத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டது கண்டு உலகமே அதிர்ந்தது.  இந்திரா காந்தியை சுட்டுக்கொன்ற அவரது பாதுகாவலர்களான பியாந்த் சிங், சத்வந்த் சிங் இருவரும் சீக்கிய மதத்தினர் என்பதால், இந்தப் படுகொலை இந்தியத் தலைநகரத்திலும் பிற பகுதிகளிலும் மதவெறிக் கலவரமாக மாறியது. டெல்லியில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் தாக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டின் கோவை போன்ற நகரங்கள் வரை சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அவர்களின் கடைகள் சூறையாடப்பட்டன. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், அமைச்சர்களும், எம்.பி.க்களுமே இத்தகைய வன்முறையைத் தூண்டிவிட்டனர்.  நேரடியாகப் பங்கேற்றவர்களும் உண்டு. பிரதமர் இந்திராகாந்தியைக் கொலை செய்த இருவரில் ஒருவரான பியாந்த் சிங் சம்பவ இடத்திலேயே பாதுகாப்பு படையினர...

புதிய ஆயுதங்கள்

படம்
வெற்றிக்காக நரேந்திர மோடியை மட்டுமே நம்பியிருப்பதை ஹரியானா தேர்தலிலிருந்தே பாஜக நிறுத்திவிட்டது. பிரதமர் இப்போது நட்சத்திரப் பிரச்சாரகர்களில் ஒருவர் என்பதோடு சரி. பழைய பிரச்சார உத்திகள் போய் இப்போது நுண் அளவிலான செயல்திட்டங்கள் வந்துவிட்டன. பாஜகவின் புதிய ஆயுதக் கிடங்கில் உள்ள முக்கியமான ஆயுதங்கள் இவைதான்: அமலாக்க இயக்குநரகத்தையும் மத்தியப் புலனாய்வுப் பிரிவையும் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களின் நற்பெயரைக் கெடுத்தல், லெப்டினன்ட் கவர்னர் அல்லது ஆளுநரின் தலையீட்டின் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நிர்வாகத்தை மூச்சுத் திணறச் செய்தல், ஒன்றிய  நிதியை நிறுத்தி வைத்தல் அல்லது மறுத்தல், வாக்காளர் பட்டியல்களை மாற்றுதல், பொறுப்பற்ற இலவசத் திட்டங்களை அறிவித்தல் ஆகிய செயல்திட்டங்கள் அரங்கேறுகின்றன.  இவை அனைத்தும் மாபெரும் தேர்தல் நிதிகளால் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தத் திட்டம் ஹரியானாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர் மகாராஷ்டிரத்தில் பயன்படுத்தப்பட்டது. இப்போது தில்லியில் மத்திய அரசில் மிகவும் சக்தி வாய்ந்த இரண்டாவது நபர் தனது வடக்குத் தொகுதி அலுவலகத்திலிருந்து இவ...

தொகுதி மறுசீரமைப்பு

படம்
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.  இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்,  “நிதிநிலை அறிக்கை குறித்த விளக்கங்களை அந்த துறை அதிகாரிகள் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இக்கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறோம். தமிழ்நாடு மிகப்பெரிய உரிமை போராட்டத்தை நடத்துகிற சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது.  அதனால் வரும் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.  அதாவது தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்றிருக்கக்கூடிய  40 கட்சியினரை அழைக்க முடிவு செய்து அவர்களுக்கு கடிதம் அனுப்பவுள்ளோம்.  தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இந்த அனைத்துக கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஏனென்றால் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவுக்கு மேல்  ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது.  எல்லா வளர்ச்சி குறியீடுகளிலும் முதன்மையாக இருக்கக்கூடிய தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்படவுள்ளது.  தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 39 நாடாளுமன்ற தொகு...