கலைஞர்-100

கலைஞர்-100

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. 


..நகப்பட்டின் மாவட்டத்தில் திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924ஆம் ஆண்டு ஜூன் 3-ல் முத்துவேலர்- அஞ்சுகம் அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

  • வளர்த்தெடுத்த ஊர் திருக்குவளை என்றாலும், கருணாநிதியை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்த ஊர் திருவாரூர்.
  • தனது 14ஆவது வயதில் சமூக இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
  • 1941: தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார் கருணாநிதி.
  • 1944 பேபி டாக்கீஸ் என்று அழைக்கப்பட்ட திருவாரூர் கருணாநிதி திரையரங்கில் தன்னுடைய முதல் நாடகமான ‘சாந்தா (அல்லது) பழனியப்பன் ‘ நாடகத்தை அரங்கேற்றினார்.

  • 1946: முதல் திரைப்படமான ‘இராஜகுமாரி’ க்கு கதை வசனம் எழுதினார்.
  • 1949: சென்னை ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை அறிஞர் அண்ணா துவங்கினார். அண்ணாவின் படைத்தளபதியாக விளங்கிய கருணாநிதி திமுகவின் பொதுக்குழு மற்றும் பிரச்சாரக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • 1950: கருணாநிதி கதை-வசனம் எழுதிய, எம்.ஜி.ஆர். நடித்த "மந்திரிகுமாரி" திரைப்படம் வெளியானது.
  • 1951: திரைப்படப் பணி , கட்சிப்பணி ஆகியவற்றிற்கு இடையேயும் பத்திரிக்கைத்துறையில் ‘மாலைமணி’ இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றார்.
  • 1952: கருணாநிதிக்கு அழியாப் புகழைத் தேடித்தந்த, சிவாஜி கணேசனை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய 'பராசக்தி' திரைப்படம் வெளியானது.

  • 1953 ஜூலை 14, 15: "டால்மியா" புரம் என்ற பெயரைக் கல்லக்குடி என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனக் கோரியும், குலக் கல்வி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக போராட்டம் நடத்தியது. தண்டவாளத்தில் படுத்து கருணாநிதி போராட்டம் நடத்தினார்.
  • 1957: குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்எல்ஏ ஆனார்.
  • 1961: திமுகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
  • 1962: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக பதவியேற்றார் கருணாநிதி.

  • 1967: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி பொதுப் பணித்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
  • 1969 பிப்ரவரி 10: அண்ணாவின் மறைவுக்குப் பின் , தி.மு.க.வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதலமைச்சராக முதன்முறையாகப் பதவியேற்றார்.
  • 1971: இரண்டாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சரானார் கருணாநிதி.
  • 1989: தமிழ்நாட்டின் முதலமைச்சராக 3-வது முறையாக பொறுப்பேற்றார்.
  • 1996: தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான்காவது முறையாக பதவிநடைபெற்றது

  • நாகப்பட்டின் மாவட்டத்தில் திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924ஆம் ஆண்டு ஜூன் 3-ல் முத்துவேலர்- அஞ்சுகம் அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
  • வளர்த்தெடுத்த ஊர் திருக்குவளை என்றாலும், கருணாநிதியை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்த ஊர் திருவாரூர்.
  • தனது 14ஆவது வயதில் சமூக இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

  • 1941: தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார் கருணாநிதி.
  • 1944 பேபி டாக்கீஸ் என்று அழைக்கப்பட்ட திருவாரூர் கருணாநிதி திரையரங்கில் தன்னுடைய முதல் நாடகமான ‘சாந்தா (அல்லது) பழனியப்பன் ‘ நாடகத்தை அரங்கேற்றினார்.
  • 1946: முதல் திரைப்படமான ‘இராஜகுமாரி’ க்கு கதை வசனம் எழுதினார்.
  • 1949: சென்னை ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை அறிஞர் அண்ணா துவங்கினார். அண்ணாவின் படைத்தளபதியாக விளங்கிய கருணாநிதி திமுகவின் பொதுக்குழு மற்றும் பிரச்சாரக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • 1950: கருணாநிதி கதை-வசனம் எழுதிய, எம்.ஜி.ஆர். நடித்த "மந்திரிகுமாரி" திரைப்படம் வெளியானது.
  • 1951: திரைப்படப் பணி , கட்சிப்பணி ஆகியவற்றிற்கு இடையேயும் பத்திரிக்கைத்துறையில் ‘மாலைமணி’ இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றார்.
  • 1952: கருணாநிதிக்கு அழியாப் புகழைத் தேடித்தந்த, சிவாஜி கணேசனை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய 'பராசக்தி' திரைப்படம் வெளியானது.
  • 1953 ஜூலை 14, 15: "டால்மியா" புரம் என்ற பெயரைக் கல்லக்குடி என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனக் கோரியும், குலக் கல்வி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக போராட்டம் நடத்தியது. தண்டவாளத்தில் படுத்து கருணாநிதி போராட்டம் நடத்தினார்.
  • 1957: குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்எல்ஏ ஆனார்.
  • 1961: திமுகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
  • 1962: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக பதவியேற்றார் கருணாநிதி.
  • 1967: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி பொதுப் பணித்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
  • 1969 பிப்ரவரி 10: அண்ணாவின் மறைவுக்குப் பின் , தி.மு.க.வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதலமைச்சராக முதன்முறையாகப் பதவியேற்றார்.
  • 1971: இரண்டாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சரானார் கருணாநிதி.
  • 1989: தமிழ்நாட்டின் முதலமைச்சராக 3-வது முறையாக பொறுப்பேற்றார்.
  • 1996: தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான்காவது முறையாக பதவியேற்றார்.
  • 1996-2001 ஆண்டு காலத்தில் அவர் முதலமைச்சராக இருந்தபோது சமத்துவத்தை முன்னிறுத்தவும் சாதி, மத பேதங்களைக் களையவும் தமிழ்நாட்டில் சமத்துவபுரங்களை உருவாக்கினார்.
  • 2006: தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்தாவது முறையாக பொறுப்பேற்றார் கருணாநிதி.
  • 2008: தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு நாள் என சட்டம் நிறைவேற்றம்.
  • பிப்.11, 2009: கருணாநிதிக்கு முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
  • மே 19, 2016: திருவாரூர் தொகுதியில் 68 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று 13 முறையாக வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
  • டிச.1, 2016: உடல் நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.
  • டிச.23, 2016: உடல் நலம் தேறி இல்லம் திரும்பினார்.

  • டிச.16, 2017: ஓராண்டுக்கு பிறகு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்றார்.
  • ஜூலை 27, 2018: நள்ளிரவுக்கு பிறகு உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டார்.
  • டிச.16, 2017: ஓராண்டுக்கு பிறகு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்றார்.
  • ஜூலை 27, 2018: நள்ளிரவுக்கு பிறகு உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டார்.
  • ஆகஸ்ட் 7, 2018: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மு.கருணாநிதி மாலை 6.10 மணியளவில் காலமானார்.
  • ஆகஸ்ட் 8, 2018: 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் திமுகவின் தலைவர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.

மோசமான ரெயில் விபத்து

 1999க்குப் பின்னர் இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்தாக ஒடிசா பாலசோர் ரயில் விபத்து பதிவாகியுள்ளது. தற்போது வரை 233 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 1999ல் அசாமின் கைசால் பகுதியில் 2,500 பேர் பயணம் செய்த 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 285க்கும் மேற்பட்ட பயணிகள் பலியானார்கள். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

ரயில் விபத்தை தொடர்ந்து ஒடிசாவில், இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஒரிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹநாகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது நேற்று இரவு 6:45 மணியளவில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் கிட்டத்தட்ட 10 முதல் 12 பெட்டிகள் தடம்புரண்டு பக்கத்து தண்டவாளத்தில் விழுந்தன. 

இதனால் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர் ரயில் பெட்டிகள் மீது மோதியதால் அந்த ரயிலும் தடம்புரண்டது.

இந்நிலையில் தற்போது வரை ரயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளதாக ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜேனா தெரிவித்துள்ளார். 

900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 18க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரயில் விபத்து எதிரொலியாக ஒடிசாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். 

ரயில் விபத்து நடந்த பாலசோர் பகுதிக்கும் முதல்வர் நவீன் பட்நாயக் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இந்த ரயில் விபத்து தொடர்பாக தொலைபேசியில் ஆலோசித்தார். 

மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு செய்யும் என ஒடிசா முதல்வரிடம் தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஒடிஷா செல்லவுள்ளார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது அரியலூரில் இருக்கும் அமைச்சர் சிவசங்கர், சென்னை வரவுள்ளார்.

 தொடர்ந்து இன்று காலை முதல் விமானத்தில் ஒடிசாவுக்கு செல்லும் சிவசங்கர் உடன் 3 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் செல்லவிருக்கின்றனர் .

-----------------------------------------------

6


டராக்குகள் இருக்கும் ழத்தடத்தில்

3ரயில்கள் ஒரே நேரத்தில் மோதி விபத்து நடந்துள்த…இந்திய ரயில்வேத்துறையின் அங்கமான Research and standards organisation (RDSO) மூன்று தனியார்களுடன் இணைந்து ஓடும் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக

National Automatic Train Protection என்ற தானியங்கி தொழில்நுட்பத்தை உருவாக்கியது.

அதற்கு KAVACH என்றும் பெயரிட்டார்கள்

23-03-22 ம் தேதியன்று 

நாடாளுமன்றத்தில், ரயில்வேதுறை மற்றும் Kavach தொழில்நுட்பம்  தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதில் அளித்திருந்தார்

KAVACH தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக செலவழிக்கப்பட்ட தொகை ரூ.16.88 கோடி ரூபாய் 

உலகின் மிகவும் மலிவான தானியங்கி ரயில் மோதலை தடுக்கும் பாதுகாப்பு அம்சம் என்றும் ரயில்வே துறை தெரிவித்தது.

Kavach தொழில்நுட்பம் தொடர்பான இறுதி திருத்தங்கள் செய்யப்பட்ட தேதி-18-01-22

அதன்படி,தொழில்நுட்ப ரீதியான சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட தேதி 14-03-22 

1957-ல் ஆண்டில் இருந்து இயங்கி வரும் அமைப்பு தான் Research and standards organisation 

RDSO நிறுவனம்Train collision avoidance system (TCAS) குறித்து 2012 ல் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டு தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறது 

ஆனால்,தனியார் பங்களிப்புடன் இணைந்து National Automatic Train Protection (ATP) என்ற தானியங்கி தொழில்நுட்பமாக மேம்படுத்தினார்கள்

ஒடிசாவில் நடந்துள்ள விபத்து “கவாச்” தொழில்நுட்பம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது

233 பேர் உயிரிழந்துள்ளனர் 

900 பேர் படுகாயமடைந்துள்ளனர் 

ஆனால் ,ரயில்வேதுறையின் செய்தித்தொடர்பாளர் அமிதாப் சர்மா என்ன கூறியுள்ளார் தெரியுமா ?

ஒடிசாவில் விபத்து நடந்த வழித்தடத்தில் 

KAVACH தொழில்நுட்பம் Not Available என்று கூறியுள்ளார் 

முழுமையாக நடைமுறைப்படுத்த இயலாத தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு நாடகம் போட்டதைத் தவிர வேற எதையும் செய்யவில்லை…

மாறாக இந்திய ரயில்வே துறையை. சர்வநாசமாக்கி வைத்திருக்கிறார்கள்.

-----------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?