• 9 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு பாஜக நிறைவேற்றிய திட்டங்களைப் பட்டியலிட தயாரா?
சென்னை வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
• பாஜகவின் செல்வாக்கு சரிவதால், நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பு என்ற பேச்சு எழுந்துள்ளது. எனவே தேர்தலுக்கு தற்போதே திமுகவினர் தயாராக வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
• தமிழகத்தில் 9 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிட தாண்டியது வெப்பம். இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
• பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே தருமபுர ஆதின மடத்தில் பட்டின பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றது. சிவிகை பள்ளக்கில் ஆதீனத்தை அமரவைத்து தோளில் பக்தர்கள் சுமந்து சென்றனர்.
பீகார் மாநகராட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்னும் சிறிது நேரத்தில் துவங்கவுள்ளது. இந்த தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை காலை 7 முதல் மாலை 6 மணி வரை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்.
இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்டைந்தார். அவரை திரைத்துறை பிரபலங்கள், தொழில் துறையினர் உள்பட பல்வேறு தரப்பு பிரமுகர்களை சந்தித்தார்.
வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத பெரும் முதலாளிகள் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று சேலத்தில் நடைபெற்ற கனரா வங்கியின் ஊழியர்கள் சங்க மாநாட்டில் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
• கோடியக்கரை அருகே படகு கவிழ்ந்ததால் 5 மணி நேரம் வேதாரண்யம் மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். அந்த 4 மீனவவர்களையும் சக மீனவர்கள் மீட்டனர்.
தேர்தல் ஏற்பாடுகள்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக உள்துறை செயலாளர் அமுதா உள்ளிட்டோர் உள்துறை அமைச்சரை வரவேற்றனர்.
பின்னர் சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. ஹோட்டலுக்கு சென்ற அமைச்சர் அமித்ஷாவை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்றார்.
இதனை தொடர்ந்து அரசியல் சாராத பிரபலங்களுடன் அமைச்சர் அமித்ஷா சுமார் இரண்டரை மணிநேரம் ஆலோசனை நடத்தினார். திரைத்துறை, விளையாட்டு, கல்வி, மருத்துவம், தொழிலதிபர்கள் என பல்வேறு துறையை சேர்ந்த 24 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் ஏ.ஆர்.ராஜசேகரன், தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன்நல்லி குப்புசாமி, வின் தொலைக்காட்சி தேவநாதன், விளையாட்டு துறையைச் சேர்ந்த லக்ஷ்மண் சிவராம கிருஷ்ணன், பாஸ்கரன், அனிதா பால்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொழில்துறையில் இருந்து இந்திய சிமெண்ட்ஸ், செட்டிநாடு சிமெண்ட்ஸ், தாஜ், ஆர்காட் நவாப், டேப்லட்ஸ் இந்தியா, பி.கே.எஃப் குழுமத்தினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
2024 மக்களவைத் தேர்தல் காலத்தில் பாஜக வை திரையுலக,தொழிற் பிரமுகர்கள் ஆதரவாக இருக்கின்றனர் எனக் காட்டவே இது போன்ற சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்கிறது பாஜக.
அந்த பிரமுகர்களும் பாஜக ஆதரவாக இல்லை என்றாலும் வருமானவரித்துறை,அமுலாக்கத் துறை போன்றவை பாஜக கையில் இருப்பதாலும்,அதை அவர்கள் உபயோகிக்பும் முறை பற்றி அறிந்திருப்பதாலும் இந்த கூட்டங்களில் வேறு வழியின்றி கலந்து கொள்கின்றனர்.
முன்னதாகசென்னை விமானநிலையத்தில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கார் வெளியே வந்த போது, சாலையின் இருபுறங்களிலும் இருந்த மின் விளக்குகள் அணைந்தன.
இந்நிலையில், காரில் இருந்து இறங்கிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தொண்டர்களை பார்த்து கையசைத்தார். அமைச்சர் புறப்பட்டு சென்றதும், மின் தடையை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்த மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, போரூர் துணை மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பேட்டி அளித்த அவர், காற்று காரணமாக, மின்தடை ஏற்பட்டது என்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம் மேற்கொள்கிறார். அங்கு மறைந்த பிரபல பின்னணி பாடகர் கலைமாமணி டி.எம். சௌந்தரராஜனின் முழு திருவுருவச் சிலையை திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் சென்ற கார், நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இந்த காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தஜகிஸ்தானில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் பிரபு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹவுரா திருச்சி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி ஹவுரா இடையே ஆகஸ்ட் 18,22,25 ம் தேதிக
சந்திராயன் -3 விண்கலத்தில் உள்ள லேண்டர் கேமரா மூலம் எடுக்கபப்ட்ட நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மதுரையில் பாடகர் டிஎம்.சௌந்தராஜனின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக -கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர் வரத்து விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக உயர்வு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி அனைத்து எம்.எல்.ஏக்களையும் அழைத்து சென்று பிரதமரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன் - புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி . திருநெல்வேலி, கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 2 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.. நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், நீட் ஆதரவாக தனது பதவிக்குரிய கண்ணியத்தை மறந்து மூன்றாந்தர அரசியல் செய்யும் ஆளுநர் ஆர்.யன்.ரவியையும் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம்
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் . செந்தில் பாலாஜியிடம் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இன்று முதல் விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் மோடி பேச வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று முதல் 2 நாட்கள் தொடர் விவாதம் தொடங்க உள்ளது. சின்ன சேலம் அருகே புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். "ஆம் ஆத்மியை சேர்ந்த ராகவ் சத்தா எம்.பி. அளித்த தீர்மானத்தில் எனது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது என ராஜ்ய சபா சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளேன். அதில் எனது பெயர் எப்படி சேர்க்கப்பட்டது என தெரியவில்லை. தீர்மானத்தில் நான் கையெழுத்து போடாமலேயே தனது பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால் எனது கைய